Friday, October 22, 2010

கம்பரும் மல்டி டாஸ்கிங்கும்

தலையில் கை வைத்து உக்கார்ந்திருந்தேன். முன்னால் இருந்த கம்ப்யூட்டரில் நான் திறந்து வைத்திருந்த காலண்டரின் 27 ஆம் தேதி என்னைப் பார்த்துப் பரிகசித்தது. தலை முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

முகத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டு கண்களை மறைத்துக் கொண்டிருந்த விரல்களிடையே ஸ்க்ரீனைப் பார்த்தேன். அப்படியாவது போய் விடாதா என்று. என் இம்சையைப் புரிந்திருப்பார் போல. தங்கமணி என் அருகே வந்தார்.

"ஹேய் என்னப்பா ஆச்சு. பேயறஞ்ச மாதிரி உக்காந்துருக்க?"

"அதை ஏன் கேக்கற. 27 ந்தேதி டெட்லைன். இன்னும் இவனுங்க கோடிங் முடிக்கலை. எல்லாம் என் தலைல வந்து விடிஞ்சிடும் போல"

"விடிஞ்சா என்ன நீயே கோடிங் எழுதிட வேண்டியதுதான. டெவெலப்பரா இருந்து தான ப்ராஜக்ட் மானேஜர் ஆன?"

நான் மானிட்டரிலிருந்து கண்ணை எடுத்து தங்கமணியை முறைத்தேன். "ஏன் சொல்ல மாட்ட? இந்த ப்ராஜக்ட்ல ஒரு மாட்யூல் வெப் டெக்னாலஜி, இன்னொரு மாட்யூல் மெயின்பிரேம். இன்னொரு மாட்யூல் டேட்டா வேர்ஹவுசிங்"

"அதுனால என்ன. கம்பர் ஒரே ராத்திரியில கம்ப ராமாயணத்தை எழுதின மாதிரி நீயும் கோட் பண்ணிட வேண்டியதுதான?"

"என்னது கம்பர் ஒரே ராத்திரியில ராமாயணம் எழுதுனாரா? இன்ரஸ்டிங்கா இருக்கே” லேப்டாப்பை மூடினேன்.

"அதான. கதைன்னா கேக்க வந்துடுவியே. உனக்கு ஓட்டக் கூத்தர் தெரியுமா?"

"ஓ தெரியுமே. அம்பிகாபதி படத்துல நம்பியார் நடிச்சிருப்பாரே. அந்த காரக்டர் தான?" முகிலன் என் ஷார்ட்சைப் பிடித்து இழுத்து 'அப்பா ஃபோனி எந்திமா' என்று சொல்ல ஐ-ஃபோனை அவனிடம் கொடுத்து விட்டு தங்கமணியின் முகத்தையே பார்த்தேன்.

சோபாவில் நன்றாக சாய்ந்து கொண்ட தங்கமணி, போர்வையால் நன்றாக சுற்றிக் கொண்டு, "அவருக்கு ஏன் ஓட்டக் கூத்தன்னு பேர் வந்துச்சு தெரியுமா?"

"தெரியாதே?"

"ஒட்டம்னா பெட். அவரு எதுக்கெடுத்தாலும் பெட் கட்டிட்டே இருப்பாராம். அதான் அவருக்கு அந்தப் பேர்"

"அப்பா அவரு சீக்கிரமாவே 'ஓட்ட'க்கூத்தர் ஆயிருப்பாருன்னு சொல்லு"

என்னை முறைத்த தங்கமணி "அவருக்கும் கம்பருக்கும் ஒரு பெட். யாரு முதல்ல ராமாயணத்தைத் தமிழ்ல எழுதுறதுன்னு”

“ஓக்கே. என்ன பெட்?”

“அதெல்லாம் ராஜா முடிவு பண்ணுவாருன்னு விட்டுட்டாங்க. ஒட்டக்கூத்தர் சின்சியரா எழுதிட்டு இருந்தாரு. கம்பரோ ஓ.பி அடிச்சிட்டு இருந்தாரு”

“ப்ளாக் எழுதாத சாஃப்ட்வேர் எஞ்சினியரும் ப்ளாக்கரான சாஃப்ட்வேர் எஞ்சினியரும் மாதிரின்னு சொல்லு”

மீண்டும் முறைத்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அரிமா அரிமா பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த முகிலனைப் பார்த்தேன்.

தங்கமணி தொடர்ந்தார். “அப்ப ஒரு நாள் ஒட்டக்கூத்தர் கம்பர்கிட்ட என்னப்பா ராமாயணம் எவ்வளவு தூரத்துல இருக்குனு கேக்க, கம்பர் நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலைன்னு உண்மையச் சொல்லிட்டார்”

“அடப் பாவமே? ஒட்டக் கூத்தர் ராஜாக்கிட்ட பத்த வச்சிருப்பாரே?”

“ஒட்டக்கூத்தர் மாதிரியே யோசிக்கிறியே?? ஆமா. அவர் ராஜாகிட்ட போய், ராஜா ராஜா ராமாயணத்தை உங்க முன்னாடி படைக்கிறது இருக்கட்டும். எதுவரைக்கும் எழுதியிருக்கோம்னு பாக்கலாம்னு சொன்னார். ராஜாவும் ரெண்டு பேர்கிட்ட கேக்கவும், ஒட்டக்கூத்தர் நான் கடல்ல அணை கட்டுற வரைக்கு வந்துட்டேன்னு சொன்னார். உடனே கம்பரும் நான் அதையும் தாண்டி போர்க்காட்சிகள் வரைக்கும் வந்துட்டேன்னு சொன்னார்”

“அய்யய்ய பொய்யா சொல்லிட்டார்? எனக்கு இந்த பொய் சொல்றவங்களைக் கண்டாலே பிடிக்காது”, மறுபடியும் தங்கமணி முறைக்க. “சரி சரி மேல சொல்லு”

“உடனே ஒட்டக்கூத்தர் வேகமா. ‘அப்பிடின்னா அதுல ஒரு பாட்டை சொல்லு’ன்னு கேக்க, கம்பரும் இந்தப் பாட்டை எடுத்து விடுறாரு”

“செம் புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்
வெம்பு பொன் தேரில் தோன்றும் சிறப்பினும், அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கிறான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால். ”

“அப்பிடின்னா என்னான்னு தமிழ்ல கொஞ்சம் சொல்லேன்” கெஞ்சலாக தங்கமணியைப் பார்த்தேன்.

பட் பட் என்று தலையில் அடித்துக் கொண்டு “இந்திரஜித்தையும் சூரியனையும் ஒண்ணாப் பாக்குறார் கம்பர் இதுல. அதாவது போரால இந்திரஜித் உடம்பெல்லாம் ரத்தம் சொரிந்து சிவப்பா இருக்கிறது மாதிரி கீழ் வானம் சிவந்து இருக்கறதாலயும், இந்திரஜித் உடம்பெல்லாம் லட்சுமணன் விட்ட அம்பு குத்தியிருக்கிறது மாதிரி சூரியனோட ஆயிரம் கதிர்கள் இருக்கறதாலயும், ரெண்டு பேரும் வெம்புகின்ற தங்கத் தேரில வர்றதாலயும், இந்திரஜித் உடம்போட மேலோகம் போற மாதிரி சூரியன் கிழக்கில இருந்து உதிக்கிறானாம்.”

“ஓ, இதுக்கு இப்பிடி அர்த்தமா?”

‘ரோபோ’ என்று சொன்ன ரஜினியைப் போல வாயைச் சுழித்து “ஆமா” என்றார் தங்கமணி.

“சரி மேல சொல்லு”

“இதைக் கேட்டதும் ஒட்டக்கூத்தர் வாயடைச்சுப் போயிட்டாரு. என்னடா வில்லனொட மகனையே சூரியனோட கம்பேர் பண்ணி வர்ணிக்கிறாரே? அப்பிடின்னா ராமனை எப்பிடியெல்லாம் வர்ணிச்சிருப்பாரு? இது கூட சேத்து வச்சிப் பாக்கும்போது நாம எழுதுறதெல்லாம் பாட்டே இல்லையேன்னு நொந்து போய் வீட்டுல தான் எழுதி வச்சிருந்த ஓலைச் சுவடிய எல்லாம் நெருப்புல போட்டுட்டார்”

“அய்யய்யோ அப்புறம்?”

“அந்த வழியா வந்த கம்பர் அதைப் பாத்துட்டு ஓடி வந்து அவரைத் தடுத்து தான் ஒன்னும் எழுதலை சும்மா கதையடிச்சேன்னு சொன்னார். மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிட்டாரு ஒட்டக் கூத்தர்”

“அவரு எதுக்கு முருங்கை மரத்துல எல்லாம் ஏறுனாரு?”

“டேய்ய்ய்ய்ய்.. வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சின்னா என்னான்னு தெரியுமா?”

“தெரியுமே. ராத்திரியெல்லாம் இனிமே புளிக் குழம்பு வைக்க மாட்டேன்னு சொல்லிட்டு காலைல எழுந்ததும் புளியை ஊறப்போடுவியே அதுதான?”

‘நங்’

தலையைத் தடவிக்கொண்டே கேட்டேன், “சரி மேல சொல்லு”

“ராஜா ராஜா, கம்பர் தான் யுத்த காண்டம் வந்துட்டாரே. பேசாம அவரை நாளைக்கே சபையில ராமாயணத்தை அரங்கேற்றச் சொல்லுங்கன்னு சொல்லிட்டார். ராஜாவும் ஆமா கம்பரே உங்க தமிழை கேட்க நானும் காத்திருக்க முடியாது, நாளைக்கே செய்யுங்கன்னு சொல்லிட்டார்”

“ஆஹா டெட்லைனை ப்ரிப்போன் செஞ்சிட்டாய்ங்களா? என்ன செஞ்சாரு கம்பர்”

“கம்பர் என்ன பண்ணாருன்னா, தன்னோட சிஷ்யப் புள்ளைங்க ஆறு பேரை உட்கார வச்சி அவங்க கையில சுவடியையும் எழுதாணியையும் குடுத்துட்டு ஆளுக்கொரு காண்டத்தில இருந்து ஒவ்வொரு பாட்டா parallel ஆ சொல்லிட்டே வர விடியிறதுக்குள்ள கம்பராமாயணம் ரெடி”

“அடேங்கப்பா. கம்பர் பெரியாளா இருந்திருப்பார் போல. ஆறு பேருக்கும் ஆளுக்கொரு பாட்டு சொல்லிட்டே முழுக் கதையையும் முடிக்கணும்னா சான்ஸே இல்லை”

“பாத்தியா அந்தக் காலத்துலயே எப்பிடி மல்டி ப்ராசஸிங் செஞ்சிருக்காருன்னு?”

“ஆமா”

“நீ ஏன் அது மாதிரி மூணு லேப்டாப் வச்சிக்கிட்டு ஒண்ணுல மெயின்ஃப்ரேம் கோடிங், ஒண்ணுல ஜாவா இன்னொண்ணுல டேட்டா வேர்ஹவுசிங்க்னு செய்யக் கூடாது?”

“ம்ஹ்ம். கம்பருக்கு ஆறு சிஷ்யப்புள்ளைங்க இருந்தாங்க. நானே எல்லாத்தையும் செய்ய முடியுமா? அதோட அவருக்கு பாட்டு எழுதத் தெரியும் செஞ்சிட்டாரு. எனக்கு கோடிங் செய்யத் தெரியாதே?”

“அது சரி. சட்டியில இருக்கிறது தான அகப்பையில வரும்” என்று சொல்லிவிட்டு ஆடிக் கொண்டிருந்த முகிலனைத் தூக்கிக் கொண்டு மாடி ஏற படியை நோக்கிப் போனார்.

என் கண்களில் ஒளி மின்ன நான் லேப்டாப்பைத் திறந்தேன்.

“என்ன கண்ணு பளிச்னு எரியுது? கோடிங் செய்யப் போறியா?”

“ம்ஹூம். நீ சொன்னதை ப்ளாக்ல ஏத்தப் போறேன்”

தங்கமணி தலையில் அடிக்கும் சத்தம் மட்டும் கேட்க, www.blogger.com என்று டைப்ப ஆரம்பித்தேன்.

19 comments:

புதிய மனிதா. said...

நீங்க ரஜினி fanனா தல ...

Mrs. Krishnan said...

Very interesting

நசரேயன் said...

சுட சுட செய்தியா ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படித்தான் கடமையில் கண்ணா இருக்கனும்.. :)

Anisha Yunus said...

//“தெரியுமே. ராத்திரியெல்லாம் இனிமே புளிக் குழம்பு வைக்க மாட்டேன்னு சொல்லிட்டு காலைல எழுந்ததும் புளியை ஊறப்போடுவியே அதுதான?”

‘நங்’//

ஹல்லோவீனுக்காக அங்கங்க மாறுவேடம் விக்கிறாங்க இப்போ. அதுல கவசம் இருக்கற டிரெஸ்ஸா பாத்து வாங்கி வெச்சுக்கங்கண்ணா... உடம்புக்கு நல்லது!! வீட்டிலேயும் ஹெல்மெட் போட்டா தலைக்கு நல்லது. :))

vasu balaji said...

/“உடனே ஒட்டக்கூத்தர் வேகமா. ‘அப்பிடின்னா அதுல ஒரு பாட்டை சொல்லு’ன்னு கேக்க, கம்பரும் இந்தப் பாட்டை எடுத்து விடுறாரு”/

ப்ச்! ஸ்க்ரீன்ஷாட் கேட்டிருக்கணும்.:(

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ம்ஹூம். நீ சொன்னதை ப்ளாக்ல ஏத்தப் போறேன்//

:))

//நங்//

nice metallic sound :)

Deepan Mahendran said...

Sooppperr....sema interstingaa ezhuthi irukkeenga....

அது சரி(18185106603874041862) said...

இன்ட்ரஸ்டிங். :))

இது புனைவா இல்லை நிஜமாவே கம்ப ராமாயணம் அப்படி தான் எழுதினாங்களா? அதுவும் அந்த பேரலல் ப்ராஸசிங் உண்மைன்னா அது பெரிய சாதனை.

குடுகுடுப்பை said...

பொனைவு நல்லா இருக்கு, புரியவும் செய்யுது.நல்லவேளை நான் வந்தண்ணிக்கு மாங்காய் சாதம், புளி சாதமா இருந்திருந்தா நானும் பெண்ணியவாதியா மாறி இருப்பேன்.

Philosophy Prabhakaran said...

அருமையான புனைவு... எழுத்துநடை சிறப்பாக இருந்தது... உதாரணம்:- அப்ப அவரு சீக்கிரமாவே 'ஓட்ட'க்கூத்தர் ஆயிருப்பாருன்னு சொல்லு

Unknown said...

@புதிய மனிதா - உங்களுக்கேங்க அந்த டவுட்டு.. :))

@மிஸஸ் கிருஷ்ணன் - நன்றி

@நசரேயன் - ஆமுங்க

@முத்துலெட்சுமி - நன்றிங்க ஹி ஹி

@அன்னு - வாங்கி வச்சிருக்கேன் தங்கச்சி.. சில நேரம் மாட்ட மறந்துடுறேன்..

@வானம்பாடிகள் - Screenshot = சுவடிஷாட்

@எல் போர்ட்.. பீ சீரியஸ் - நன்றி

@சிவன் - நன்றி

@அதுசரி - உண்மையான்னு தெரியலை. செவிவழிச் செய்திதான். ஸ்கூல்ல தமிழ் வாத்தியார் சொன்னது. ஆனா ஒட்டக்கூத்தரும் கம்பரும் சம காலத்தவங்களா இருக்க முடியாதுன்னு சில ஆராய்ச்சிக் குறிப்புகள் சொல்லுது..

@குடுகுடுப்பை - நல்ல வேளையா மாங்கா சாதம் செஞ்சேன்..

@பிலாசஃபி பிரபாகரன் - நன்றிங்க்ண்ணா

இளங்கோ said...

:)

கவிநா... said...

டைமிங் காமெடி நிறைய இருக்குங்க அண்ணா.... நகைச்சுவைக் கலக்கல் சூப்பர்.... ஒரே இரவுல கம்பர் ராமாயணம் எழுதுன புதிய செய்தி (எனக்கு) ஆச்சரியம் கொடுத்துச்சு..

ம.தி.சுதா said...

வித்தியாசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

Paleo God said...

ஆக விடிய விடிய ராமாயணம் கேட்டு கோடிங் எழுதல. ஹும்ம்..

Mrs. Krishnan said...

Happy Diwali Friend

geetha santhanam said...

கம்பரின் இந்தக் கதை உண்மையா?
நீங்கள் (நகை)சுவையோடு எழுதியிருக்கும் விதம் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

பாத்தியா அந்தக் காலத்துலயே எப்பிடி மல்டி ப்ராசஸிங் செஞ்சிருக்காருன்னு?”//உற்சாகமான பதிவுக்கு அச்சாரம் போட்ட தங்கமணிக்கு வாழ்த்துக்கள்.