Friday, September 5, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - கடைசி பகுதி

அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”

ரவிச்சந்திரன் தயக்கத்துடன் அருகில் அமர்ந்திருந்த லாயரைப் பார்த்தான். அவர் கண்ணசைக்கவும், அருணின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

“மிஸ்டர் ரவி. நான் இந்தக் கேஸ்ல போலீஸ்க்குக் கன்சல்டண்டா ஒர்க் பண்றேன். உங்க மேல நாலு கொலை ஒரு திருட்டு கேஸ் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்குதுன்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா?”

லாயர் குறுக்கிட்டார். “தெரியும் மிஸ்டர் அருண். அந்தக் கேஸ்ல சரண்டர் ஆகிட்டாரு என் க்ளையன்ட். என்ன கேக்கணும்னாலும் ஆஃப்டர்னூன் ஜட்ஜ் கஸ்டடி ஆர்டர் குடுத்தார்னா கஸ்டடியில வச்சி விசாரிச்சிக்கோங்க. பட் உங்க சைட்ல கேஸ் ஸ்டிராங்கா இல்லை. கஸ்டடி கிடைக்குமாங்கிறதே சந்தேகம் தான்”

“தெரியும் மிஸ்டர்…”

“அன்பழகன். கிரிமினல் லாயர்”

“நல்லது மிஸ்டர் அன்பழகன். அது சம்மந்தமா பேசத்தான் வந்திருக்கேன். உங்க ரூம்ல போய் பேசலாமா?”

“நீங்க என் கிளையண்ட் கிட்ட எந்தக் கேள்வியும் கேக்கக் கூடாது. என் அனுமதி இல்லாம அவர் எதையுமே பேச மாட்டாரு. இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டீங்கன்னா பேசலாம்”

“அக்ரீட். சிவா நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்”

சிவா தலையசைக்க, அன்பழகன், ரவிச்சந்திரன் மற்றும் அருண் மூவரும் நடந்து ஹாலின் ஒரு மூலையில் இருந்த அறைக்குள் நுழைந்தனர். அங்கே இருந்த இரண்டு ஜூனியர்கள் அவர்களின் சீனியரைப் பார்த்ததும் எழுந்து நின்றனர். 

“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நாளைக்கு 9க்கு வந்தாப் போதும்”

அவர்கள் இருவரும் வெளியேறியதும், அன்பழகன் அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். எதிரில் இருந்த சேர்களில் ஒன்றை இழுத்து அன்பழகனின் அருகில் போட்டு அதில் ரவிச்சந்திரன் உட்கார்ந்து கொண்டான். இன்னொரு சேரில் அருண் உட்கார்ந்து அறையைச் சுற்றிப் பார்த்தான்.

பல சினிமாக்களில் பார்த்தது போல பின்னால் லைப்ரரி போல சட்டப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டாமல் சாதாரண அரசு அலுவலரின் அறை போல இருந்தது. மேஜை மேல் கேஸ் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

“சொல்லுங்க மிஸ்டர் அருண். என்ன பேசணும்?”

“ரவி, நீங்க எடுத்த பேரர் பாண்ட்ஸ் யாரோடதுன்னு உங்களுக்கு ஐடியா இருக்கா?”

“எடுத்ததா குற்றம் சாட்டப்பட்டிருக்கிறன்னு சொல்லுங்க அருண். அவர் எடுத்ததா உங்களால நிரூபிக்க முடியுமா? என் க்ளையண்டோட தாத்தா எப்பவோ வாங்கின இந்த பேரர் பாண்ட்ஸை பரண் மேல போட்டு வச்சிருந்திருக்காரு. ரீசண்டா வீடு க்ளீன் பண்ணும்போது கிடைச்சதுன்னு எங்களால ப்ரூவ் பண்ண முடியும்”

“இங்க பாருங்க அன்பழகன். எல்லாம் எனக்குத் தெரியும். கொலைக் கேஸ்ல போலீஸ்க்கு ஹோல்ட் கம்மின்னும் தெரியும். ஈஸியா ஒடச்சி உங்க கிளையண்டை வெளிய கொண்டு வந்துடுவீங்கன்னும் தெரியும். ஆனா உங்களுக்குத் தெரியாதது ஒண்ணு இருக்கு”

“என்ன?”

“இந்த பேரர் பாண்ட்ஸ் எல்லாம் ம.மு.க கட்சியோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்குச் சொந்தமானது. அவர் குடுத்த கேஸ் தான் திருட்டுக் கேஸ். அவருக்கு போலிஸ்ல இருக்கிற இன்ஃப்ளுயென்ஸ் யூஸ் பண்ணி பழைய தேதியில கேஸ் குடுத்துருக்காரு. அவரோட கம்ப்ளெயிண்ட்ல சீரியல் நம்பரோட குடுத்துருக்காரு. அதுல கொஞ்சம் பாண்ட்ஸை ரவி எக்ஸேஞ்ச் செஞ்சிருக்காரு. இந்த ஆதாரத்தை வச்சி அவரை 5 வருசம் உள்ள தள்ள முடியும்"

ரவி அன்பழகனின் தோளைப் பிடித்துத் திருப்பினான். “சார், இவர் சொல்றது நிஜமா?”

“ம்ம். திருடினதுக்கு ஆதாரம் இருக்குதுன்னா அஞ்சி வருசம் கிடைக்கலாம். மூணு வருசமாக் கூடக் கொறச்சிடலாம்"

அருண் இடைமறித்தான். “ஒரு நாள் கூட ஜெயில்ல இல்லாம வெளிய வர்றதுக்கு நான் ஒரு வழி சொன்னா செய்வீங்களா?”

அன்பழகனும் ரவிச்சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். 

“சி.எம்.சி ஆஸ்பிட்டல்ல செத்துப் போனானே கணேசன். அவன் தான் இந்த பேரர் பாண்ட்ஸைக் கொண்டு போயிட்டு இருந்தவன். அவன்கிட்ட இருந்துதான் நீங்க எடுத்தீங்க இல்லையா?”

“அ..அ.. ஆமா”

“அவன் ரயில்ல இருந்து தவறி விழுந்ததாதான் வாக்குமூலம் குடுத்துருக்கான். ஆனா நீங்க சொக்கலிங்கம் தான் தள்ளி விட்டதா வாக்குமூலம் குடுக்கணும். நாங்க, நான் இன்ஸ்பெக்டரா இருந்த காலத்துல இருந்து, ஏதாவது கேஸ்ல வசமா சிக்க வச்சிரணும்னு காத்துக்கிட்டு இருந்தோம். சாட்சியமே இருக்காது. இல்ல இருக்கிற சாட்சியத்தைக் கலைச்சிருவாங்க. இப்ப இது ஒரு நல்ல வாய்ப்பு"

“ம். சொல்லுங்க"

“இப்ப ஜட்ஜ்கிட்டப் போய் பேசலாம். ரவி இன்-காமிரா டெஸ்டிமோனி குடுத்துரட்டும். போலீஸ் எல்லாக் கேஸ்ல இருந்தும் அவர் பேரை எடுத்துடுறோம். ஒரு 5 லேக்ஸ் ஒர்த் பாண்ட்ஸ் மட்டும் அந்த டைம்ல தவறீ விழுந்ததை நீங்க எடுத்து வச்சதா சொல்லி கோர்ட்ல ஒப்படைச்சிருங்க. அது போதும் எல்லாக் கேஸ்ல இருந்தும் வெளிய வந்துடலாம். சொக்கலிங்கத்தை அரஸ்ட் பண்ணினதும் ரவி ப்ளான் பண்ணின படி வெளிநாட்டுக்குப் போயிரட்டும். அவர்கிட்ட இருந்தும் தப்பிச்சிரலாம். ஓக்கேவா?”

“மிஸ்டர் அருண். நாங்க ரெண்டு பேரும் இதைப் பத்திப் பேசிட்டு வர்றோம். நீங்க கொஞ்சம் வெளிய இருங்க"

“ஓக்கே” வெளியே வந்த அருண் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சிகரெட்களைக் கரைத்து முடித்தான். அன்பழகன் வெளியே வந்தார். 

“மிஸ்டர் அருண். உங்க ப்ரொபோசலை ஏத்துக்கலாம்னு இருக்கோம். ஜட்ஜ் இப்ப அவைலபிளா இருப்பார். நாம போய் பேசலாமா?”

“ஷ்யூர் அன்பழகன். என் ஃப்ரண்ட் கமிஷனர் கார்த்திகைப் பாண்டியனும் வந்துட்டாரு. பிபியையும் கூட்டிக்கிட்டு ஜட்ஜைப் போய்ப் பார்ப்போம் வாங்க"

கதவைத் திறந்து வெளியே வர முயன்ற ரவியிடம் அன்பழகன், “ரவி நீங்க இங்க என் ரூம்லையே உக்காருங்க. ஜட்ஜ்கிட்டப் பேசிட்டு டெஸ்டிமோனிக்கு ரெடியானதும் உங்களைக் கூப்புட்டு விடுறேன். ஓக்கேவா?”

ரவி தயக்கத்துடன் தலையசைத்து விட்டு உள்ளே சென்றான்.

ஜட்ஜ் அறைக்குப் போகும் வழியில் சிவாவைப் பார்த்து வலது கையில் கட்டை விரலையும் சுண்டுவிரலையும் நீட்டி மற்ற மூன்று விரல்களையும் மடக்கி காதின் அருகில் வைத்து ‘கால் பண்ணு' என்று வாயசைத்தான் அருண்.

ஜட்ஜ் ஏதோ வேலையாக இருக்க அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் உள்ளே அழைக்கப்பட்டனர். உள்ளே நுழையும் போது அருணின் ஃபோன் மெசேஜ் டோன் அடித்தது. எடுத்து மெசேஜ் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.

கார்த்திகைப் பாண்டியனும் வக்கீலும் நிலவரத்தை விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஜட்ஜ் கேட்கும் குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனர். அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். மனதுக்குள் எண்ண ஆரம்பித்தான்.

பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு 
ஐந்து
நான்கு
மூன்று 
ரெண்டு 
ஒன்று
சாத்தியிருந்தக் கதவைக் கிட்டத் தட்ட உடைத்துத் திறந்துகொண்டு வந்தான் ரவி. மூச்சு வாங்கியதைப் பார்க்கும்போது முழு ஹாலையும் ஓடிக் கடந்திருப்பான் போல. 

ஜட்ஜ் திடுக்கிட்டு எழுந்து, “யாரு மேன் நீ?” என்றார்.

அன்பழகனும் திடுக்கிட்டு, “என்னாச்சு ரவி? உங்களை என் ரூம்ல தானே உக்காந்திருக்கச் சொன்னேன்? ஏன் வந்தீங்க?”

ரவி இருவரையும் கண்டு கொள்ளாமல் அருணின் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினான்.

“சார், நான் தான் அந்த நாலு கொலையையும் பண்ணேன். ரெண்டு கொலையை நானே செஞ்சேன். ரெண்டு கொலையை ஆள் வச்சி செஞ்சேன். பேரர் பாண்ட்ஸ்க்காக தான் இந்தக் கொலைகளைச் செஞ்சேன். என்னை உடனே ஜெயில்ல போடுங்க. என்னைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்" 

திரும்பத் திரும்ப அதையே சொல்லி அழ ஆரம்பித்தான். 

“ரவி என்ன நீங்க, எதுக்கு இதையெல்லாம் சொல்றீங்க. கொஞ்சம் சும்மா இருங்க" என்றெல்லாம் அன்பழகன் சொன்ன ஆறுதல்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அருண் கைகளையும் கார்த்திகைப் பாண்டியனின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தான் ரவி.

ஜட்ஜ் என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தார். அருண் நிதானமாக அவரிடன் எடுத்துச் சொல்லி ரவியின் வாக்குமூலத்தைப் பதியச் செய்தான். சிவா உள்ளே வந்து ரவியின் கையில் விலங்கு பூட்டி வெளியே கூட்டிக்கொண்டு சென்றார். 

ஜட்ஜிடம் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான் அருண். 

தூரத்தில் வைத்தியால் கொடி கட்டப்பட்ட சுமோவில் ஏற்றிவிடப்பட்டுக் கொண்டிருந்த சொக்கலிங்கம் அருணின் தலை தெரிந்ததும் பற்கள் தெரியச் சிரித்தார். வலது கை மடக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். அருண் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்து ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு அவன் காரை நோக்கி நடந்தான்.

(முற்றும்).

Friday, August 29, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 11

சி.எம்.சி மருத்துவமனை.

அதிகாலை 4:00 மணி. ஜெனரல் வார்டில் கட்டில்கள் வரிசையாகப் போடப்பட்டு கொசுவலை போன்ற திரையால் தடுக்கப்பட்டிருந்தன. நோயாளிகளுக்குத் துணையாக வந்தவர்கள் கட்டில்களுக்கு நடுவில் நியூஸ் பேப்பரையோ பழைய பெட்ஷீட்டையோ விரித்துப் படுத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலரிடம் இருந்து குறட்டை ஒலி சீராக வந்து கொண்டிருந்தது. ஓரமாகப் போட்டிருந்த மேஜையின் மீது தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தார் டியூட்டி நர்ஸ். அந்த உருவம் மெதுவாக உள்ளே நுழைந்தது. ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக்கொண்டே வந்து கணேசன் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்ததும் நின்றது. கணேசனின் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை போலும். அவன் பக்கத்தில் யாரும் இல்லை.

அந்த உருவம் பையில் இருந்த சிரிஞ்சை எடுத்து அதனுள் ஒரு மருந்தை ஏற்றியது. அதை ஏறிக்கொண்டிருந்த கணேசனின் சலைன் பாட்டிலில் ஏற்றியது. சலைன் ஏறும் அளவை அட்ஜஸ்ட் செய்யும் சக்கரத்தை மேலே ஏற்றி உட்செல்லும் அளவை அதிகப்படுத்தியது. சில விநாடிகள் நின்று பார்த்துவிட்டு வேக வேகமாக வெளியேறியது.

*************************************************

கமிஷனர் அலுவலகம்.

அருணும் சிவாவும் கமிஷனர் கார்த்தியின் எதிரில் உட்கார்ந்திருந்தார்கள். அருண் விவரம் அனைத்தையும் விளக்கினான்.

“சாரி கார்த்தி. உன்கிட்ட கேக்காம டீல் பேசிட்டு வந்துட்டேன்.”

“நோ பிராப்ளம் அருண். நாம மொத்த டாகுமெண்ட்ஸையும் கைப்பத்தியிருந்தாலும் சொக்கலிங்கம் எப்பிடியாவது பூந்து அதை வாங்கிட்டுப் போயிருப்பான். டீல்னால ரவியை சீக்கிரம் நெருங்க முடியும்ங்கிறதால சந்தோசம் தான். சரி நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் என்ன?”

“பெரிய அளவுல பேரர் பாண்ட்ஸ் டீல் நடக்கணும்னா கண்டிப்பா யாராச்சும் ப்ரோக்கர் இல்லாம நடக்காது. இந்த மாதிரி டீலிங்க்ல இறங்கற ஆட்கள் எல்லாருக்கும் ஒரு நோட்டிஃபிகேஷன் அனுப்புவோம். ஆறு கோடியையும் இங்கயே மாத்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. கொஞ்சம் பணத்தை இந்தியாவுல மாத்திட்டு எங்கயாச்சும் வெளிநாடு போய் அங்க தான் மீதியை மாத்துவான்னு எதிர்பார்க்கிறேன். சோ, அவன் பாஸ்போர்ட்டை ஃப்ளாக் பண்ணிடுவோம். ஏற்கனவே சிவா அவன் கிரெடிட் கார்ட் எல்லாத்தையும் ஃப்ளாக் பண்ணியிருக்காரு. எப்பிடியாச்சும் அவனைப் பிடிச்சிரலாம்”

சிவாவின் செல்லுக்கு ஒரு கால் வந்தது. எடுத்துப் பேசினார்.

“ஓ அப்பிடியா? எப்ப?”

..

“ஓ. ஓக்கே சார். நான் அருண் சார்ட்ட பேசிட்டுக் கூப்புடுறேன்”

“சார் ஒரு அன்ஃபார்ச்சுனேட் இன்சிடெண்ட்.”

“என்ன ஆச்சி?”

“ஹாஸ்பிட்டல்ல இருந்த கணேசன் திடீர்னு செத்துப் போயிட்டானாம் சார்.”

“வாட்? நல்லா இருந்தான்னு சொன்னீங்களே? சொக்கலிங்கம் கூட அவன் நல்லாப் பேசினதா தானே சொன்னாரு?”

“ஆமா சார். என்னான்னு தெரியல. போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதும் ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காரு சார்”

“ம்ஹ்ம். கார்த்தி, திஸ் த்ரோஸ் அஸ் இன் வாட்டர். ஒரு வேளை ரவியை வளைச்சிட்டாலும், நம்மளால கேஸை ஸ்ட்ராங்கா ப்ரொட்யூஸ் பண்ண முடியுமான்னு தெரியலை. வாட் டு டூ நவ்?”

“முதல்ல ரவியை மடக்குவோம். அதுக்குப் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.”

“ஓக்கே”

*********************************************

சொக்கலிங்கம் சொல்படி தவறி விழுந்ததாகவே கணேசனும் வாக்குமூலம் கொடுத்திருந்தான். ரவியைப் பிடிப்பதற்கு எல்லா இடங்களிலும் பொறி வைத்தாகிவிட்டது. எலி சிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், சிக்கிய பின் ரவியை தகுந்த சாட்சியங்களுடன் சிறையில் அடைப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

சிவா வேகமாக உள்ளே வந்தான். “சார் பய ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கான். எங்கயுமே டிரேஸ் விடாம இருக்கான். இன்னமும் கிரெடிட் கார்ட் எதையும் யூஸ் பண்ணலை. ஏ.டி.எம்ல பணமும் வித்டிரா பண்ணலை”

“அவன் கம்பெனி பிசியை கான்ஃபிஸ்கேட் செஞ்சிங்களே அதுல எதுவும் மேட்டர் சிக்கிச்சா?”

“இல்ல சார். அதுவும் டெட் எண்ட் தான்”

“ம்ம்.. லெட்ஸ் வெயிட் அண்ட் சீ”

அருண் மேஜையின் மீதிருந்த ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.

“சிவா. ஒரு ப்ரேக்த்ரு கிடைச்சிருக்கு. 25 லட்சம் மதிப்புள்ள பேரர் பாண்ட்ஸை ரெண்டு வாரம் முன்னாடி என்கேஷ் பண்ணியிருக்கான். ஹவாலால இன்வால்வ் ஆகிற ஒரு ஏஜெண்ட் மூலமா இந்தப் பரிமாற்றம் நடந்திருக்கு. நம்பகமான காண்டாக்ட் மூலமா இந்த நியூஸ் கிடைச்சது. பணம் கிடைச்சும் பய எஸ்கேப் ஆகாம இருக்கான்னா, ஒண்ணு அவன் போலி பாஸ்போர்ட் விசா ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கணும். அல்லது அவன் லின்க் எதையாவது மிஸ் பண்ணியிருக்கணும். அதை அடைச்சிட்டு எஸ்கேப்பாவலாம்னு இருக்கணும். எது எப்பிடியோ அவன் இந்தியாவுக்குள்ள தான் இருக்கணும்”

“சார் தென் கணேசனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சி. He was poisoned. சயனைடை சலைன் பாட்டில்ல ஏத்தியிருக்காங்க. லேப் ரிப்போர்ட்ஸ் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க. சொக்கலிங்கத்துக்கும் விசயம் போயிடுச்சி. கொதிச்சிப் போய் இருக்காரு. உங்களுக்கும் பேசலாம்”

“சிவா, ஐ சஸ்பெக்ட் இந்தக் கொலையையும் ரவியே செஞ்சிருக்கலாம். அவனோட மிஸ்ஸிங் லிங்க் கணேசன் மட்டும் தான்.”

“கணேசன் அங்க அட்மிட் ஆகியிருக்கிறது அவனுக்கு எப்பிடி சார் லீக் ஆகியிருக்கும்?”

“அவன் தானே தள்ளிவிட்டது. வாட்ச் பண்ணிட்டே இருந்திருப்பான். இத்தனை நாள் ஐசியுல இருந்ததால அவனால உள்ள போக முடிஞ்சிருக்காது. கோமால இருந்து முழிச்சதும் ஜெனரல் வார்டுக்கு மாத்தியிருப்பாங்க. ஈஸியா உள்ள நுழைஞ்சிட்டான். எனிவே வி ஷுட் இன்ஃபார்ம் சொக்கலிங்கம்”

“சார் சொக்கலிங்கம் ஏற்கனவே பாண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்னு காண்டுல இருப்பார். இதுல கணேசனைக் கொன்னதும் ரவிதான்னு தெரிஞ்சா”

“தெரிஞ்சா?”

“நமக்கு முன்னாடி ரவி அவர் கையில மாட்டினா சின்னா பின்னமாகிருவான் சார்”


“ம்ம்.. நாம அதுக்கு முன்னாடி அவனைப் பிடிக்கணும்”



***************************************************



சொக்கலிங்கம் அருண் முன்னால் உட்கார்ந்திருந்தார்.

“அருண் சார், நீங்க சொன்னதால சும்மா இருந்தேன். இப்ப அவன் ஆஸ்பத்திரியேறி வந்து என் ஆளைக் கொன்னுட்டுப்போயிருக்கான். அவன் ரொம்ப விசுவாசமானவன் சார். பணத்தை எடுத்துக்கிட்டு போயிட்டான்னு நினைச்சி  அந்தத் தேவிடியாப் பய மட்டும் என் கையில கெடச்சான் இந்தக் கையாலயே அவனை நசுக்கிக் கொன்னுருவேன்”

“கூல் டவுன் சொக்கலிங்கம். டிப்பார்ட்மெண்ட் அவனைத் தீவிரமாத் தேடிக்கிட்டு இருக்கு. அரெஸ்ட் வாரண்ட் வாங்கி வச்சிருக்கோம். பாஸ்போர்ட் ஃப்ளாக் பண்ணியிருக்கு. அவன் எங்கயும் தப்பிக்க முடியாது. பிடிச்சிரலாம். கவலைப் படாதீங்க. அப்புறம் 25 லட்சத்தை அவன் ஏற்கனவே மாத்திட்டான்.”

”அவன் சிக்கினாப் போதும் அருண் சார். 25 லட்சத்தை எப்பிடி வாங்கிறதுன்னு எனக்குத் தெரியும். ரெண்டு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ள நீங்க அவனைப் பிடிக்கலைன்னா நம்ம டீல் ஓவர். புரிஞ்சதா?”

“புரிஞ்சது சொக்கலிங்கம். தூண்டில் போட்டிருக்கோம். மீன் முள்ளைக் கடிக்கிற வரைக்கும் காத்திருக்கத்தான் வேணும்”

“ஏதோ சொல்றீங்க. சரி வர்றேன்” சொக்கலிங்கம் அந்தப் பக்கம் போனதும் அருணின் செல்ஃபோன் ஒலித்தது.

“ஹலொ”

...

“வாட்?”

...

“ஓக்கே நான் உடனே வர்றேன்”

அருண் அவனது ஐ20ஐ சைதாப்பேட்டை கோர்ட் வாசலில் நிறுத்தினான். பதட்டத்துடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சிவா அருணின் தலையைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கிவிட்டு ஓடி வந்தான்.

“எங்க இருக்கான் சிவா?”

“உள்ள தான் சார். லாயர்ஸ் கூட இருக்கான்”

”ஜட்ஜ் என்ன சொன்னாரு?”

“பிபி 15 டேய்ஸ் கஸ்டடி கேட்டிருக்காரு. கிடைச்சுடும்னு நினைக்கிறேன்”

“வாங்க உள்ள போகலாம்”

இருவரும் உள்ளே நுழைந்தனர். இரண்டு வக்கீல்கள் இரண்டு பக்கமும் உட்கார்ந்திருக்க, நடுவில் நீலக் கலர் சூட் போட்டு உட்கார்ந்திருந்தான். சமீபத்தில் பணமாக்கியிருந்த 25 லட்ச ரூபாய் தந்ததா இல்லை இயல்பாகவே இருப்பதா என்று தெரியாமல் ஒரு பணக்காரக் களை அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. சிவாவின் காக்கி யூனிஃபார்மைப் பார்த்ததும் ஒரு சங்கடம் அவன் உடல்மொழியில் வெளிப்பட்டது. லாயரைப் பார்த்தான். அவர் ஆறுதலாகத் தலையசைத்து அவனை அமைதிப்படுத்தினார்.

அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”

(தொடரும்)