Sunday, December 23, 2012

மாயா மாயா எல்லாம் மாயா

Maya-Maske

”இதெல்லாம் பேஸ்லெஸ் ஆர்க்யூமெண்ட்ஸ் கௌதம். யாரோ ஏதோ மொழியில எழுதி வச்சதை இன்னொருத்தன் படிச்சிட்டு அதுதான் அர்த்தம் இதுதான் அர்த்தம்னு சொல்றாங்க. எப்பிடி நம்புறது சொல்லு?”
சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த நெய் முந்திரியை வாயில் போட்டான் ராம். இடது கையில் ஏந்தியிருந்த கோப்பையில ஸ்காட்ச் ஆடிக்கொண்டிருந்தது. எங்களில் வழக்கமான வீக்கெண்ட் பார்ட்டி. நாங்கள் ஐந்து பேரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக்குப் பிறகு திசை மாறி வேறு வேறு துறைகளில் எங்கள் முத்திரை பதித்து கடைசியில் வந்து சேர்ந்த இடம் நியூ ஜெர்சி.


நான் கௌதம் ஸ்ரீனிவாசன். மைக்ரோபியல் ஜீன் டெக்னாலஜியில் Ph.D படித்துவிட்டு யார் யார் பரம்பரையில் யார் யாருடைய ஜீன்கள் ஓடுகிறது என்பதை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். எங்க ஜாதி ரத்தம் சுத்த ரத்தமாக்கும் என்று தொடை தட்டியவர்களின் ஜீனில் ஆப்பிரிக்க பழங்குடியினரின் ஜீன் இருப்பதையும், "we never mix with other communities you know" என்பவர்களின் ஜீனில் கிழக்கு ஐரோப்பியரின் ஜீன் கலந்திருப்பதையும் காட்டி வாயடைக்க செய்திருக்கிறேன்.


எனக்கு எதிரில் உட்கார்ந்து மாயன் கேலண்டர் உண்மையா பொய்யா என்பதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பவன் ராம். ராமச்சந்திரமூர்த்தி. பி.இ எலெக்ட்ரானிக்ஸில் தொடங்கி, ஐஐஎம்மில் எம்பிஏ படித்துவிட்டு இப்போது இங்கே ஒரு பெரிய ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வைஸ் ப்ரெசிடெண்டாக இருக்கிறான்.


கிச்சனில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருப்பவன் வினோத். அவன் வீடுதான் இது. அவன் பி.எஸ்.சி ஃபிஸிக்ஸ், ஐஐடியில் எம்.எஸ்.சி ஃபிஸிக்ஸ், கார்னெல்லில் பி.எச்.டி என்று படித்துவிட்டு ப்ரின்ஸ்டனில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறான்.


அந்தப் பக்கம் டிவிக்கு முன்பு உட்கார்ந்து ஃபுட்பால் பார்த்துக்கொண்டிருக்கும் மூர்த்தியும் சுந்தரும் சாஃப்ட்வேர் பார்ட்டிகள்.


ஐந்து பேரும் இங்கே சந்தித்த பிறகு வாரா வாரம் சனிக்கிழமை யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து சரக்கடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் எங்கள் மனைவிகள் பிள்ளைகளும் எங்காவது சந்தித்து அளவளாவிக்கொண்டிருப்பார்கள். கடந்த 11 வருடங்களாக இதுவே எங்கள் வழக்கமாகப் போய்விட்டது. அப்படி ஒரு சனிக்கிழமையில் அடுத்த வெள்ளிக்கிழமை வரப்போகும் 12-21-2012ஐப் பற்றி நானும் ராமும் கதைத்துக் கொண்டிருந்தோம்.


“ராம், நீ சொல்றது ஒரு பக்கம் சரின்னாலும், மாயன்ஸ் ஒண்ணும் கற்பனை இனமில்லையே? தே லிவ்ட் இன் திஸ் ஸேம் எர்த அ ஃப்யூ ஹண்ட்ரட் இயர்ஸ் அகோ”


“சோ வாட்டா? இப்ப அந்த ரேஸ்தான் அழிஞ்சி போச்சே?”


“அழிஞ்சி போச்சின்னு சொல்ல முடியாதுடா. அந்த ரேஸோட டிசண்டண்ட்ஸ் இன்னமும் இருக்காங்களே? பல மில்லியன் மக்கள் செண்ட்ரல் அமெரிக்கால இன்னமும் மாயன் லேங்குவேஜஸ்ல சிலதைப் பேசிட்டுத்தானே இருக்காங்க?”


“டேய் அந்த ரேஸ்ல டாமினண்ட் ஜீன் ஒண்ணு கூட கிடைக்கலைன்னு நீதான சொல்லிட்டு இருந்த?” சமைத்து முடித்திருந்த வினோத்தும் எங்களுடன் கலந்து கொண்டான்.


“ஆமாண்டா. பட் வீ ஃபவுண்ட் எ லாட் ஆஃப் ரெசெஸ்ஸிவ் ஜீன்ஸ். இன்னமும் ரிசர்ச் கண்டினியூ ஆவுது. எங்கயாச்சும் ஒரு ஜீன் கிடைக்காமலா போவப்போவுது?” கிளாஸில் இருந்த கடைசி சரக்கை வாய்க்குள் சரித்துக் கொண்டு ப்ளாட்டரை எம்ப்டி செய்ய எழுந்தேன். திரும்பிய போது மற்ற இருவரும் டேபிளில் அமர்ந்திருந்தார்கள்.


“என்னவோப்பா நம்மோட அடுத்த வீக்கெண்ட் பார்ட்டி இங்கயா சொர்க்கத்துலயான்னு மாயண்ணே தான் முடிவு பண்ணனும்” மூர்த்தி சிரித்துக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தான்.


“மவனே நீ இது வரைக்கும் கிளையண்ட்ஸ் கிட்ட சொன்ன பொய்க்கு உனக்கெல்லாம் நரகம்தாண்டி” சுந்தர் கலாய்த்துக் கொண்டிருந்தான்.


சிரித்துக்கொண்டே அவர்களுடன் இணைந்து கொண்டேன்.


*****************************************************
திங்கட்கிழமை காலை. லேப் வழக்கம்போல டல்லாக இருந்தது. எதிரில் பட்டவர்கள் எல்லாம் ஹேப்பி ஹாலிடேய்ஸ் சொல்லிக்கொண்டு போனார்கள். மாயனைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மெயில் பாக்ஸை ஓப்பன் செய்தேன். 5 டே வெதர் ரிப்போர்ட் என்று ஈமெயில் வெள்ளிக்கிழமை 1440 ஃபாரன்ஹீட் என்று காமடி செய்தது. அடுத்த மெயில் என் கவனத்தை ஈர்த்தது.


Dear Dr. Srinivasan,


We have a patient admitted in our hospital tonight, who was attacked by a predator in the jungle. He is unconscious, but a tattoo on his body resembles the signs from Native Americans, but does not match any of the local signs. We have shipped a sample of his blood to your lab overnight and should reach you by Tuesday. I guess this would be some useful information for you in your search of Races.


Thanks & Regards,
Dr. Rodriguez,


மெயிலை எனது அஸிஸ்டண்டுக்கு ஃபார்வர்ட் செய்து காலையில் ரத்தம் வந்ததும் முதல் வேலையாக டி.என்.ஏ அனாலிஸிஸ் செய்ய உத்தரவிட்டுவிட்டு வேலைகளில் மூழ்கினேன்.

****************************************************************
அடுத்த நான்கு நாட்கள் எப்படி போயின என்றே தெரியவில்லை. அடுத்த நாள் உலகம் முடிந்துவிடுமா என்ற எண்ணமும் விவாதங்களும் கேலிகளும் கொஞ்சம் வலுப்பெறத் துவங்கியிருந்தது. நியூஜெர்சி நேரப்படி காலை 6:11க்கு முடிகிறது என்று கவுண்ட் டவுன் க்ளாக் எல்லாம் துவக்கியிருந்தார்கள். என் மனைவி மதுமிதாவும் மகள் ஸ்வேதாவும் அதிசயமாக டைனிங் டேபிளில் என்னோடு அமர்ந்து உணவருந்தினார்கள். அடுத்த நாள் காலை 6:11க்கு மூவரும் ஹாலில் சந்திப்பது என்றெல்லாம் பேசிக்கொண்டு தூங்கப் போனோம்.


ஊரில் இருந்து அப்பா அழைத்துப் பேசினார். எதுவும் நேராது என்று ஆறுதல் சொல்லிவிட்டு தூங்கிப் போனேன்.


காலை 5:00 மணிக்கு வழக்கம்போல எழுந்து ட்ரெட் மில்லிலும் எலிப்டிக்கலிலும் ஒரு மணி நேரத்தை செலவு செய்துவிட்டு காஃபி மேக்கரில் இருந்து காஃபியை ஊற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். மதுவும் ஸ்வேதாவும் சோஃபாவில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.


“ஹேய், வாட்ஸ் திஸ்? நத்திங் வில் ஹேப்பன்” என்றேன்.


“அதெல்லாம் தெரியாதுங்க. கொஞ்ச நேரம் எங்க கூட உக்காருங்க. மணி 6:11ஐத் தாண்டட்டும். அப்புறம் நம்புறோம்” சிரித்துக்கொண்டே டிவியைப் போட்டுவிட்டு சோஃபாவை நோக்கிப் போனேன். இரண்டு பேரும் விலகி என்னை நடுவில் உட்கார வைத்து ஆளுக்கொரு தோளில் சாய்ந்து கொண்டார்கள். டிவியிலும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மணி 6:20 ஆனது.


“ஓக்கே, கேர்ள்ஸ். இன்னும் உலகம் அழியலை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மாயன்” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். இருவரின் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது. “ஸ்கூலுக்கு லேட்டாயிடிச்சி. கிளம்பு. ஐ வில் ட்ராப் யு டுடே”


ஸ்வேதாவை பள்ளியில் விட்டு விட்டு லேபுக்கு வந்து சேர்ந்தேன். ஈமெயில் செக் செய்துவிட்டு மேஜை மேல் இருந்த ப்ரவுன் கவரைப் பிரித்தேன். செவ்வாய்க்கிழமை வந்திருந்த ப்ளட் சேம்பிளின் டி.என்.ஏ ரிப்போர்ட். படிக்கப் படிக்க என் கண்களில் ஒளி. எதிரில் இருந்த ஃபோன் புக்கில் டாக்டர் ரோட்ரிகஸின் நம்பரைத் தேடினேன். கிடைத்ததும் வேக வேகமாக டயல் செய்தேன்.


“டாக்டர் ரோட்ரிகஸ்”


“ஹாய் டாக்டர். திஸ் இஸ் டாக்டர் ஸ்ரீனிவாசன்”


“ஹல்லோ டாக்டர். ஸ்ரீனிவசான். ஹவ் ஆர் யூ?”


“நான் நல்லா இருக்கேன் டாக்டர். நீங்க போன மண்டே ஒரு ப்ளட் சேம்பிள் அனுப்பி வச்சீங்களே? அந்த பேஷண்ட் இப்போ என்ன கண்டிஷன்?”


“தட் ப்ரிடேட்டர் அட்டாக் பேஷண்ட்? ஹீ பாஸ்ட் அவே”


“ஓ நோ. அவருக்கு யாரும் வாரிசுகள், சொந்தங்கள்?”


“யாரும் இல்லை. அவரோட பேரண்ட்ஸ் ரொம்ப நாள் முன்னாடியே இறந்துட்டாங்க. சிப்ளிங்க்ஸ் யாரும் இல்லை. இந்தாளும் கல்யாணமே செஞ்சிக்கலை. சோ ஹி இஸ் அன் ஆர்ஃபன். யாரும் பாடி க்ளெயிம் பண்ணக் கூட இன்னும் வரலை. ஆட் குடுத்துருக்கோம்”


எனக்குள் சோகம் அப்பிக்கொண்டது. என் எதிரில் இருந்த ரிப்போர்ட்டை மறுபடி மேய்ந்தேன். MATCHING MAYA GENE - DOMINANT என்ற கொட்டை எழுத்துகள் என் முகத்தில் அறைந்தன.


“அவர் எப்போ இறந்தார்னு சொல்ல முடியுமா?”


“டுடே மார்னிங். எக்ஸாக்ட் டைம் ஆஃப் டெத் - 6:11 AM"

Tuesday, December 18, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 19


ஒரு சில விநாடிகள் அப்பாவின் முகத்தையே பார்த்தேன். என் பார்வையைத் தாங்க முடியாமல் எழுந்து விட்டார். “இங்க பாருலே. நீ எவள வேணும்னாலும் கல்யாணம் செஞ்சிக்கோ. ஆனா கல்யாணம் இந்த ஊட்டுலயோ இந்த ஊர்லயே நடக்கக் கூடாது. நீ அந்தப் பொண்ணு ஊர்ல வச்சிக்கோ இல்ல பெங்களூர்ல வச்சிக்கோ. பெத்த கடனுக்கு நானும் எம்பொண்டாட்டியும் வந்துருவோம். வேற சொந்தக்காரங்களக் கூப்புடணும்னு எல்லாம் கனாக் காணாத. கல்யாணம் முடிஞ்சப் பிறகு நீ பெங்களூருலயே இருப்பியோ இல்ல அமெரிக்காவுக்கே போயிருவியோ உன் இஷ்டம். ஒம் பொண்டாட்டியக் கூட்டிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துராத. என் சாதிக் கவுரவத்தைக் கெடுத்துராத. அம்புட்டுத்தேன்”

சொல்லிவிட்டு சட்டைப் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்து பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

‘சம்மதம் சம்மதம் சம்மதம்’ என்று உச்சக் குரலில் கத்த வேண்டும் போல இருந்தது. இந்த ஊருப்பக்கம் தலையே வைக்கக் கூடாது என்பதுதானே என் லட்சியம். அதை நிறைவேற்ற அப்பாவே துணை நிற்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளையின் கையப் பற்றிக் குலுக்கினேன். “மாப்ள நீங்க மட்டும் இல்லைன்னா இது வெட்டுக் குத்துன்னு வந்து நின்னிருக்கும். ரொம்ப தேங்க்ஸ் மாப்ள”

“அட விடுங்க மச்சான். சும்மா சும்மா தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. சரி தங்கச்சிக்கிட்ட மேட்டரை சொல்லலையா?”

“அது அவங்கம்மா அங்க இருக்காங்க. நினைச்ச நேரத்துக்குப் பேச முடியாது. இமெயில் தான் அடிக்கணும்”

“வாங்க டவுனுக்குப் போய் அனுப்பிட்டு வருவோம்”

இருவரும் வண்டியில் போய் மாலாவுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு டாஸ்மாக்கில் ஒரு ஆஃபை ஆளுக்கு ஒரு குவாட்டராக அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தங்கச்சியிடம் திட்டு வாங்கினோம்.

இரவு மாலா அழைத்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாக ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

********************************************

திங்கட்கிழமை காலை. ஒரு வருடத்தில் ரொம்பவே மாறியிருந்தது பெங்களூரு. ஆங்காங்கே ரோடு வேலை நடந்துகொண்டே இருந்தது. எத்தனை பாலம் கட்டினாலும் பெங்களூரு ட்ராஃபிக்கைக் கட்டுப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே ஆட்டோவில் சென்றிறங்கினேன். வாசலிலேயே காத்திருந்தான் செந்தில். ஆட்டோவிலிருந்து இறங்கியதும் ஆரத்தழுவிக் கொண்டான்.

“ரொம்ப சந்தோஷம் டா. நீயும் மாலாவும் ஒரு வழியா ஒண்ணு சேர்ந்துட்டீங்க” கையில் இருந்த பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டே சொன்னான்.

“அடச் சும்மாருடா. முக்கால் கிணறு தான் தாண்டியிருக்கோம். இன்னும் மாலா வீட்டுல சம்மதிக்கல தெரியும்ல?”

“அதல்லாம் சம்மதிச்சுருவாங்கடே. நீ கவலைப் படாத” லிஃப்டில் ஏறி நானும் அவனும் தங்கியிருந்த ஃப்ளோரில் இறங்கி, அந்த அப்பார்ட்மெண்ட் கதவைத் தட்டினான். ஓமனா கதவைத் திறந்தாள். மேடிட்டிருந்த அவள் வயிறு ஒன்பது மாதம் என்று சொன்னது.

“டேய் சொல்லவே இல்ல. கங்க்ராட்ஸ்டா” என்று இருவருக்கும் கை கொடுத்தேன். “எப்ப டியூ”

இன்னும் ஃபோர் வீக்ஸ்லடா. புதன் கிழமை ஓமனாவோட அப்பா அம்மா வந்து கூட்டிட்டுப் போகப் போறாங்க”

“ஓ பிரசவம் உங்க ஊர்லயா?”

“ஆமா. இன்னைக்கு ராத்திரி அம்மா அப்பா வர்றாங்க”

“நல்லது”

“இன்னும் 4 மாசம் ஓமனா அங்க தான் இருப்பா. நீ இங்கயே என் கூட தங்கிக்கலாம். அதுக்குள்ள கல்யாணம் செஞ்சிக்கப் பாருங்க. என்ன?” செந்தில் கண்டிப்புடன்.

“கண்டிப்பாடா. அதுக்குதான போராடுறோம். இந்த அப்பார்ட்மெண்டை நீயே வாங்கிக்கப் போறதா சொன்னியே வாங்கிட்டியா?”

“அட்வான்ஸ் குடுத்துட்டேண்டா. இன்னமும் பத்திரம் பதியலை”

“மறுபடியும் ஒரு கங்க்ராட்ஸ்டா. எல்லாம் குழந்தை பிறக்கப் போற நேரம்”

அவர்களுக்காக யு.எஸ்ஸிலிருந்து வாங்கிவந்திருந்த ஐபேடையும் டிஜிட்டல் ஃபோட்டோ ஃப்ரேமையும் கொடுத்துவிட்டு குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினேன்.

மாலாவின் பல்சர் செந்தில் வீட்டு பார்க்கிங் லாட்டிலேயே நின்றது. அதை எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

பாதி டீம் மாறிப் போயிருந்தது. பல முறை கான்ஃப்ரன்ஸ் காலில் பேசியிருந்தாலும் அறிமுகமாயிருந்த பெயர்களுக்கு முகங்களை ஒட்டிக்கொள்ள முடிந்தது. மாட்யூல் லீடராகியிருந்ததால் பொறுப்பு கூடியிருந்தது. மானேஜரோடும் ப்ராஜக்ட் லீடரோடும் ஒரு மணி நேரம் மீட்டிங் போட்டுவிட்டு தம்மடிக்க வெளியே வந்தேன். என்னோடு ப்ராஜக்ட் லீடர் கிஷோரும்.

சிகரெட்டால் தீமைகள் அதிகம் என்றாலும் இது போன்ற நன்மைகளும் உண்டு. மிகவும் சுலபமாக நட்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். கிஷோரும் ஒட்டிக் கொண்டான். கலிஃபோர்னியாவில் நான்கு வருடங்கள் பணியாற்றிவிட்டு இங்கே வந்திருக்கிறான். அதனால் யுஎஸ்ஸில் ஆரம்பித்து சினிமாவில் முடித்தோம் குட்டி அரட்டையை.

இரண்டு நாட்களில் மிகவும் நெருங்கிவிட்டான் கிஷோர். அவன் மாமனார் ஆந்திராவில் அமைச்சராக இருக்கிறார். அவன் திருமணத்துக்கு 5000 பேர் வந்தனராம். என் தங்கையின் திருமணத்துக்கு வந்த முந்நூத்திச் சொச்சம் பேருக்கே நாக்கு தள்ளிப்போனது நினைவுக்கு வந்து போனது. எனக்கும் மாலாவுக்கு இடையில் இருக்கும் லவ் எங்கள் டீமுக்கே பரிச்சயம் ஆனதால் இவனுக்கும் தெரிந்திருந்தது. எங்கள் திட்டம் பற்றி விசாரித்தான். உதவி எதுவும் தேவைப்பட்டால் தயங்க வேண்டாம் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தான். சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கிறது என்று கொஞ்சம் தைரியம் வந்தது.

ஓமனாவை வழியனுப்பி விட்டு நானும் செந்திலும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். செந்தில் இருப்பது அதுவும் ஓமனா என்ற கமிட்மெண்ட் இல்லாமல் உடன் இருப்பது ஒரு தனி பலம் வந்தது போல இருந்தது.

***************************************
மாலாவும் வந்துவிட்டாள். அவள் கேட்ட படியே பெங்களூரு ப்ராஜெக்ட் ஒன்றிற்கு அவளை மாற்றியிருந்தார்கள். மாட்யூல் லீடர் பொசிஷனே கிடைத்திருந்தது. ஒரே காம்ப்ளக்ஸ் ஆனால் வேறு பில்டிங். எப்படியோ ஒரே டைம் ஜோன் என்பதால் இன்ஸ்டண்ட் மெசெஞ்சரிலும் தேவைப்பட்டால் இண்டர்காமிலும் பேசுக்கொள்ளும்படியான சந்தர்ப்பம். லஞ்சுக்கு சந்தித்தோம். மெரிடியனில் கம்பெனி அக்கமொடேஷனில் தங்கியிருக்கிறாள். உடன் அவள் அம்மாவும் அப்பாவும். இன்னும் கரையவில்லை அவர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. ஆனாலும் மாலாவிடம் ஒரு தெளிவு இருந்தது. எங்கள் வீட்டில் க்ரீன் சிக்னல் காட்டியதாகக் கூட இருக்கலாம். பைக்கில் அவளை மெரிடியன் பின் வாசலில் இறக்கிவிட்டு வந்தேன்.

****************************
அடுத்த நாள் செந்திலுக்கு செகண்ட் ஷிஃப்ட் என்பதால் தூங்கிக் கொண்டிருந்தான். நான் கிளம்பி அலுவலகம் வந்திருந்தேன். மீட்டிங்குக்கு நோட்ஸ் ரெடி செய்து கொண்டிருக்கும்போது செல்ஃபோன் அழைத்தது. செந்தில்.

“என்னடா? தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சேன். என்ன விஷயம்? ஒரு மீட்டிங் இருக்கு சீக்கிரம் சொல்லுடா”

“மச்சி இங்க உன்னைப் பார்க்க மாலாவோட அப்பா வந்திருக்காருடா. கூட ரெண்டு பேரும்”

“என்னது?”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

Monday, December 10, 2012

சில்வியா - இறுதி பாகம்

பாகம்-1 பாகம்-2 பாகம்-3




 Every detail is important



அருணை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனான். சத்தம் கொடுக்காமல் கிளம்பிப் போன காரையே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அருண்.


************************


ஃப்ரிட்ஜில் இருந்த ஹெய்னெக்கன் ஒன்றைத் திறந்து வாய்க்குள் கொஞ்சம் சரித்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தான். எதிரே முழங்கால் வரை நீண்ட கூந்தலுடன் குளித்துவிட்டு அன்றலர்ந்த மலர் போல நின்றிருந்த மலையாள அழகியை அழகாக வரைந்திருந்த ரவி வர்மாவின் ஓவியம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. ரவி வர்மாவே வரைந்த ஓவியமாக இருக்காது. அதன் பிரதியாக இருக்கும். பிரதியே இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே ஒரிஜினல் எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே பியரைக் காலி செய்து கொண்டிருந்தான்.


சட்டென்று ஒரு ஸ்பார்க் தோன்றியது. சௌந்தருக்கு ஃபோன் போட்டான்.


“சௌந்தர், சில்வியாவோட பேரண்ட்ஸ் எங்க இருக்காங்க?”


“எதுக்கு மாமா கேக்குற?”


“ஒரு சின்ன தியரி. அவங்களை ஷானோட கேலரிக்குக் கூட்டிட்டுப் போய் அந்த படத்தை எங்கயாச்சும் பார்த்திருக்காங்களான்னு கேக்கணும்”


“என்ன மாமா உளர்ற? அவங்க எங்க பார்த்திருக்கப் போறாங்க?”


“இல்லடா என்னோட தியரி ஒர்க் அவுட் ஆவுதான்னு பார்க்கத்தான். ப்ளீஸ் அவங்களைக் கூட்டிட்டு வாயேன்”


“சரி. நான் அவங்களைக் கால் பண்ணி வரச் சொல்றேன். நீயும் கூட வர்றியா?”


“ஆமா நானும் வர்றேன்”


இந்தத் தியரி ஒர்க்கவுட் ஆகுமா என்று தெரியவில்லை. ஆனாலும் எதுவுமே கிடைக்காமல் முட்டி நிற்பதற்கு இது முயற்சியாகப் பட்டது அருணுக்கு. ஒரு வேளை தான் நினைப்பது தவறோ? ஜான் தற்கொலை தான் செய்திருப்பானோ? சோஃபாவிலேயே படுத்துத் தூங்கியிருந்தான் அருண்.


**************************


அடுத்த நாள், சில்வியாவின் பெற்றோரைச் சந்திக்க காரை தானே ஓட்டிக் கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்தான்.


“வா மாமா. இப்பத்தான் ஜானோட அடாப்ஸி ரிப்போர்ட் வந்திச்சி. நீ நினைச்சது சரிதான். அவன் உடம்புல பாய்ஸன் ரெஸிட்யூ இருக்கு. பாய்ஸன் குடுத்துத்தான் தண்ணியில தள்ளி விட்டிருக்காங்க. நீ ஏதோ தியரின்னு இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்க. அதாவது ஒர்க் அவுட் ஆவுதான்னு பார்ப்போம்”


நான்கு பேரும் போலிஸ் வாகனத்திலேயே ஷானின் காலரிக்கு வந்தோம். கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் காலியாகி டா வின்ஸியின் லாஸ்ட் பெயிண்டிங்கும் பேக் செய்யப்பட்டு இருந்தது.


“ஷான், மே வீ சீ திஸ் பெயிண்டிங்?”


“சாரி டிடெக்டிக். ஏற்கனவே உங்கக்கிட்ட சொன்ன மாதிரி இந்த பெயிண்டிங் வித்துட்டேன்”


“ஜென்யூனிட்டி செக் ரிசல்ட் வந்துடுச்சா?”


“இன்னும் இல்லை. ஆனா வித்ததை எதுக்கு டிஸ்ப்ளே வைக்கணும்?”


“சரிதான். பட் நாங்க அதைப் பார்க்கணும். திறங்க”


ஷான் மெதுவாக படத்துக்கு வலிக்குமோ என்பது போல பாக்கேஜைத் திறந்தான். படத்தை எடுத்துக் காட்டினான்.


படத்தைப் பார்த்ததுமே சில்வியாவின் அம்மாவின் கண்களில் ஒளி. “இது எங்கம்மா வைச்சிருந்த படம். இறக்க முன்னாடி சில்வியாவுக்குக் குடுத்தாங்க. சில்வியாவும் பாட்டி நினைவுல இதை வச்சிருந்தா”


அருண் முகத்திலும் பிரகாசம். தன் தியரி ஒர்க் அவுட் ஆகியதை எண்ணி மகிழ்ந்தான்.


சௌந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அருணின் முகத்தை ‘ஏதாவது சொல்லு மாமா’ என்பது போல பார்த்தான்


“சௌந்தர். என்ன பாக்குற. கேஸ் சால்வ்ட்”


“புரியல மாமா. விவரமா சொல்லு”


“சில்வியா வச்சிருந்த படம் விலையுயர்ந்ததுன்னு அவங்க பாட்டிக்கும் தெரியலை, அவளுக்கும் தெரியலை. ஆனா ஜான் ப்ரோடியோட எம்ப்ளாயரான ஷானுக்குப் பார்த்ததும் புரிஞ்சிட்டது. சில்வியாகிட்ட கேட்டு வாங்கி வித்துக் குடுத்தா ஷானுக்கு வெறும் கமிஷன் தான் கிடைச்சிருக்கும். அதையே திருடி வித்தா? மொத்தப் பணத்தையும் ரெண்டு பாகமா பிரிச்சிக்கலாம்னு திட்டம் போட்டிருக்காங்க இவனும் ஜானும்”


“திஸ் இஸ் ரிட்டிகுலஸ். நான் எவிடென்சியல் அக்யூசேஷன்ஸ்” பேச விடாமல் குரலை உயர்த்தினான் ஷான்.


“ஒன் மினிட் மிஸ்டர். லெட் ஹிம் ஃபினிஷ்” என்று அவனை அடக்கினான் சௌந்தர்.


“திட்டப்படி சில்வியாவைக் கொன்னு தற்கொலை மாதிரி செட்டப் செஞ்சிட்டு படத்தை எடுத்துட்டு வந்துட்டாங்க. வந்த பிறகு எதுக்காக ஜானுக்கு ஒரு பங்கு குடுக்கணும்னு யோசிச்சி அவனையும் தீர்த்துட்டான் இந்த ஷான். இப்ப 20 மில்லியனும் இவன் பாக்கெட்ல. பணம் கைக்கு வந்ததும் பராகுவேக்கு ஓடிப் போகப் போறான். ஏன் பராகுவேன்னு தெரியுமா?”


“எக்ஸ்ட்ராடிக்‌ஷன் செய்ய முடியாத நாடு பராகுவே”


“கரெக்ட். அதான் அந்த நாட்டை சூஸ் பண்ணியிருக்கான். ஒரு வேளை கொலைக் கேஸ் பின்னாடி சால்வ் ஆகி இவன் மாட்டினா கூட அங்க இருந்து எக்ஸ்ட்ராடிக்ட் செய்ய முடியாதுங்கிறதால இவன் சேஃப். அரெஸ்ட் பண்ணு சௌந்தர் இவன”


“வெயிட் வெயிட். இந்தப் படம் இவங்களோடதுதாங்கிறதுக்கு என்ன ப்ரூஃப்? நான் என்னோட சோர்ஸ் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்கினேங்கிறதுக்கு நான் ப்ரூஃப் வச்சிருக்கேன்” நெஞ்சை நிமிர்த்தி தைரியமாகச் சொன்னான் ஷான்.


“ம்ம்.. இதுவே எங்க ஊரா இருந்தா அள்ளிட்டுப் போய் நாலு மிதி மிதிச்சிருப்போம். சாணியோட உண்மையும் வெளிய வந்திருக்கும். அமெரிக்காவாப் போச்சி. வாரண்ட் இல்லாம கைது கூட செய்ய முடியாது” தமிழில் சௌந்தரிடம் சொன்னான்.


ஷான் ஒன்றும் புரியாது, “வாட்” என்று குரைத்தான்.


சௌந்தர், “ஹி இஸ் ரைட். வீ டோண்ட் ஹேவ் அ ப்ரூஃப்” என்று கையைப் பிசைந்தான்.


சில்வியாவின் பெற்றோரைப் பார்த்து, “இந்த பெயிண்டிங் இருக்கிற மாதிரி எதுவும் ஃபோட்டோ இருக்கா உங்க வீட்டுல?”


“தெரியலையே வீட்டுல போய் தான் பார்க்கணும்”


“சரி நீங்க வீட்டுக்குப் போய் பார்த்துட்டு சொல்லுங்க. இவனை சும்மா விடக்கூடாது” சௌந்தர் கோபத்தை காரில் காட்டினான்.


*******************************************


காலை எழுந்து கிச்சனில் இருந்த காஃபி மேக்கரில் ஒரு காஃபி ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தான் அருண். சௌமியா மேக்கை வைத்துக்கொண்டு என்னவோ நோண்டிக்கொண்டிருந்தவள் இவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்


“என்ன டிடெக்டிவ் சார். கேஸ் சால்வ் பண்ணிட்டீங்களா?”


“ம்ப்ச்” உதட்டைப் பிதுக்கிவிட்டு அவளுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து காலை டீப்பாயின் மீது போட்டான்.


“அருண், இந்த ஃபோட்டோ நினைவிருக்கா?” மேக்கை அவனை நோக்கித் திருப்பினாள். சிறுவயதில் அவள் இந்தியா வந்திருந்த போது எடுத்த படங்கள். எம்.ஜி.எம் வந்த புதிது. அங்கே இருந்த ஒரு ராட்டினத்தில் ஏறி தலை சுற்றிக் கீழே இறங்கி வாந்தியெடுத்த கையோடு கொடுத்த போஸ். கிறக்கமும், சோர்வும் கண்களில் தெரிந்தது. “இந்த ஃபோட்டோ இன்னமுமா இருக்கு?”


“நேத்து நைட் தான் பழைய ஆல்பத்துல இருந்து எடுத்து ஸ்கேன் செஞ்சிப் போட்டேன். ஃபேஸ்புக்ல ஷேர் செய்யலாம்னு”


“ஹேய் அதெல்லாம் வேண்டாம். ஆமா நாம நயகரா போன ஃபோட்டோஸ் எல்லாம் சிஸ்டத்துல ஏத்திட்டியா?”


“ஓ. எப்பவோ”


“பாக்கலாமா?”


“ம்ம்.” ஃபோட்டோஸ் இருக்கும் ஃபோல்டரை ஓப்பன் செய்து மேக்கை என் மடியில் வைத்துவிட்டு எழுந்தாள். “பாத்துட்டு இரு, நான் குளிச்சிட்டு வந்துர்றேன்”


வரிசையாக எல்லா ஃபோட்டோக்களையும் பார்த்துவிட்டு விண்டோவை மினிமைஸ் செய்தான். பேக்ரவுண்டில் இருந்த படத்தில் கன்னத்தோடு ஒட்டிக்கொண்டு இரண்டு பக்கமும் இரண்டு நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு அவைகளைப் போலவே சிரித்துக் கொண்டிருந்தாள் சௌமியா. ஃபோட்டோஷாப் வேலையெல்லாம் செய்யப்பட்டு நன்றாக இருந்தது படம். சிறிது நேரம் அதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு மேக்கை மூடினான். டேபிளின் மீது வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து இரண்டாவது பஃப் இழுக்கும்போது, ப்ளாஷ் அடித்தது. சிகரெட்டை அணைத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, உள்ளே வந்து ஃபோனை எடுத்து சௌந்தரை அழைத்தான்.


“சௌந்தர்..”


“சொல்லு மாமா. இப்பத்தான் சில்வியா அப்பா பேசினாரு. அவங்ககிட்ட ஆதாரம் எதுவுமே இல்லையாம்”


“அவங்க ஆதாரம் தேவையே இல்லை சௌந்தர். உங்க ஆஃபிஸ்லயே ஆதாரம் இருக்கு. கேஸ் சால்வ்ட். அந்த ஷானை அரெஸ்ட் பண்ண வாரண்ட் ரெடி பண்ணு”


“என்ன மாமா சொல்ற?”


நீங்கள் சொல்லுங்களேன், அருண் எப்படி கேஸை சால்வ் செய்தான் என்று?


“ஆமா சௌந்தர். சில்வியா வீட்டுல இருந்த பி.சி இப்ப உங்க ஆஃபிஸ்ல தானே இருக்கு?”


“ஆமா எவிடென்ஸ் ரூம்ல இருக்கு. அதுல என்ன இருக்கு?”


“நான் அந்த பெயிண்டிங்கை எங்கயோ பார்த்தேன்னு சொன்னேன்ல. அது அந்த கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் பேக்ரவுண்ட்லதான். கொலை செஞ்ச ஜானோ இல்ல ஷானோ அதுல இருந்த மத்த ஃபோட்டோஸ் எல்லாம் கண்டிப்பா அழிச்சிருப்பான். ஆனா சில்வியா டெஸ்க் டாப்ல போட்டு வச்சிருக்கிற ஃபோட்டோவை விட்டிருப்பான். நீ செக் பண்ணிட்டு சொல்லு”


அன்று மாலை சௌந்தர் வந்தான்.


“என்ன சௌந்தர் என்னாச்சுன்னு அப்டேட் பண்ணவே இல்லையே?”


“நீ சொன்ன மாதிரி டெஸ்க்டாப்ல தான் இருந்திச்சி. டிஏ கிட்ட காட்டி வாரண்ட் வாங்கி ஷானை உள்ள தூக்கிப் போட்டாச்சி. இன்னைக்கு ராத்திரி பராகுவேக்கு ஃப்ளைட் ஏறியிருப்பான் படுபாவி. நல்ல வேளையா அரெஸ்ட் பண்ணிட்டோம்”


”சூப்பர்”


“அப்புறம் எங்க சீஃப் உன்னைப் பார்க்கணும்னு சொன்னார்”


“எதுக்கு?”


“பர்சனலா தேங்க் பண்ணனும்னார். ”


(முற்றும்)



Sunday, November 18, 2012

சில்வியா - 3

பாகம்-1 பாகம்-2




The difference between seeing the things and observing them is the difference between normal people and detectives



“இன்னைக்குக் காலைல ஜென்னிசி ரிவர்ல மீன் பிடிக்கப் போன ரெண்டு பேர் ஒரு டெட் பாடியப் பார்த்து ரிப்போர்ட் பண்ணியிருந்தாங்க”


“டெட் பாடியா? யாரோடது?”


“ஜான் ப்ரோடி”


“ஜான் ப்ரோடி? சில்வியாவோட எக்ஸ் பாய்ஃப்ரண்டா?”


“ஆமா மாமா. அவனே தான். சில்வியாவைக் கொன்னுட்டு கில்லர்ஸ் கில்ட்ல சூசைட் பண்ணிக்கிட்டான் போல. கேஸ் குளோஸ்ட்”


அருண் ஒரு விநாடி யோசித்தான். “இல்ல சௌந்தர். ஜான் கொலை செஞ்சிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்”


“நீதான மாமா அவனாக் கூட இருக்கலாம்னு சொன்ன?”


“அவனாக் கூட இருக்கலாம்னு தான் சொன்னேன். ஆனா, அவனுக்கு மோட்டிவ் என்ன? சில்வியாவைக் கூட இவன் தானே வெட்டி விட்டிருக்கான்? நியாயமா சில்வியாவுக்குத் தானே கோவம் வரணும்?”


“யூ ஹேவ் அ பாய்ண்ட் மாமா. இப்ப என்ன செய்யறது?”


“போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதா?”


“அப்பிடின்னா?”


“ஓ உங்க ஊர் பாஷைல சொல்லணுமா? அடாப்ஸி முடிஞ்சதா?”


“ஆக்சிடண்ட் அப்பிடிங்கிறதால ஃபுல் அடாப்ஸி போக மாட்டாங்க. நான் ஷெரீஃப்கிட்ட சொல்லி ஃபுல் அடாப்ஸி செய்ய வைக்கிறேன்”


“ஓக்கே. அவன் ரிலேட்டடா என்கொயரிக்குப் போனா என்னையும் கூட்டிட்டுப் போ”


“அட நானே கேக்கலாம்னு இருந்தேன். எங்க டிபார்ட்மெண்ட்ல எப்பவாச்சும் காண்ட்ராக்ட்ல ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் ஹயர் பண்ணுவோம். உன்னை அப்பிடி ட்ராஃப்ட் பண்ணட்டுமா?”


“டேய் நான் விசிட்டர் விசாவுல இருக்கேன். என்னால எப்பிடி வேலை செய்ய முடியும். அன் அஃபிஷியலா ஹெல்ப் பண்றேன்”


“ஓக்கே மாமா. அப்புறம் கூப்புடுறேன்”


ஃபோனை வைத்து விட்டு யோசித்தான். சில்வியாவைக் கொலை செய்துவிட்டு தற்கொலை போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது. குற்றவாளியாக இருக்கலாம் என்று கருதப்பட்டவன் ஆற்றில் பிணமாக மிதக்கிறான். இதில் வேறு யாரோ இருக்கிறார்கள். ப்ரோடியும் சம்மந்தப்பட்டிருக்கலாம். இப்போதைக்கு இந்த கேஸ் முட்டுச் சந்தில் முட்டி நிற்கிறது. எங்காவது ஒரு நூல் கிடைத்தால் தான் தொடர முடியும்.


********************


சௌமியாவும் அருணும் ஹாலில் செஸ் விளையாடிக் கொண்டிருந்த போது சௌந்தர் வந்தான்.


“மாமா! ப்ரோடி வீட்டை சல்லடை போட்டுப் பார்த்தாச்சி. எந்தத் துப்பும் கிடைக்கலை. இப்ப அவன் வேலை பார்த்த இடத்துக்குப் போய் விசாரிக்கலாம்னு இருக்கேன். நீயும் வர்றியா?”


“ஒரு நிமிஷம் இரு. ரெண்டு மூவ் தான். உன் தங்கச்சியைத் தோக்கடிச்சிட்டுக் கிளம்புவோம்”


சௌமியா முறைத்தாள். “என் ஸ்கில்லை அவ்ளோ குறைச்சலா எடை போடக் கூடாது” சொல்லிவிட்டு நைட்டால் என் கேஸ்ட்லை வெட்டினாள். பெருமையாக முகத்தை வைத்துக் கொண்டு அருணைப் பார்த்தாள். அருண் ஒரு புன்னகை சிந்திவிட்டு குயினால் அந்த நைட்டை வெட்டினான். “செக் & மேட்” கையைத் தட்டிவிட்டு எழுந்தான். சௌமியா குழப்பத்தோடு தப்பிக்க வழி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, சௌந்தரைப் பார்த்து, “கிளம்புவோமா” என்றான்.


இருவரும் போலிஸ் காரில் டவுன் டவுனில் இருந்த அந்த ஆர்ட் கேலரி வாசலில் வந்து இறங்கினார்கள்.


“இங்க தான் ஜான் ப்ரோடி வேலை பார்த்திருக்கான்”


இருவரும் உள்ளே நுழைந்தனர். கொஞ்சமே பெரிய கேலரி. சுவர்களில் சித்திரங்கள் கலை நயத்துடன் தொங்கவிடப்பட்டிருந்தன. சிலவற்றின் மேல் SOLD என்று டேப் ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே சிலைகளும், சைனா க்ளே பாத்திரங்களும் அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.


சேல்ஸ் கவுண்டரில் அமர்ந்திருந்தவன் இவர்களைப் பார்த்ததும் படித்துக் கொண்டிருந்த “Tourism & Migration to Paraguay" என்ற புத்தகத்தை மேஜை மீது வைத்துவிட்டு, எழுந்து “How may I help you" என்றான். சௌந்தர் தனது பேட்ஜை எடுத்துக் காட்டிவிட்டு, “I am Soundar, RPD's chief detective and this is Arun our private consultant" என்று அறிமுகம் செய்தான். அவன் முகத்தில் சிறிது கூட அதிர்ச்சி இல்லை. “I am Sean. Owner of this Gallery" என்று கையை நீட்டினான். கை பற்றி குலுக்கினார்கள்.


“மிஸ்டர் ஷான். ஜான் ப்ரோடி உங்க எம்ப்ளாயி தானே?”


“யெஸ். ஆனா ரெண்டு மூணு நாளா அவன் வேலைக்கே வரலை. ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறான். ஃபயர் பண்ணிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்”


“ஓ. ஜான் இனிமே வேலைக்கு வரமாட்டான். ஏன்னா இன்னைக்குக் காலையில அவன் டெட் பாடி ஜெனிசியில கிடைச்சது” அருண் ஷானின் முகத்தைக் கூர்மையாக கவனித்தான். லேசான அதிர்ச்சி தெரிந்தது.


“ஓ.. வாட் ஹேப்பண்ட்? சூசைய்ட்?”


“நோ. ஆக்சிடெண்ட்டா இருக்கலாம்னு சந்தேகப்படுறோம். கேசுவல் என்கொயரிக்காக வந்தோம்.”


“ஓ. ஓகே. ஜான் என்கிட்ட வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் தான் இருக்கும். அவன் கேர்ள் ஃப்ரண்டோட ப்ரேக் அப் ஆனதில இருந்து சரியாவே கவனம் காட்ட மாட்டேங்கிறான். கணக்குல தப்பு செஞ்சிடறான். போன வாரம் ரொம்பவே டென்ஷனா இருந்தான். ரெண்டு தடவை வார்ன் பண்ணேன். இந்த மண்டேல இருந்து ஆஃபிஸ்கே வரலை”


“ம்ம். அவனோட ஒர்க் ஸ்டேஷனைப் பார்க்கலாமா?”


“ஷ்யூர்” பின்னாலிருந்த ஒரு அறைக்கு அழைத்துப் போனான். போகும் வழியில் சுவற்றில் “Sold" என்று போட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்ததும் அருண் நின்றான்.


“என்ன மாமா?”


“இந்தப் படத்தை எங்கயோ பார்த்திருக்கேன் சௌந்தர்”


“எங்க பார்த்திருக்க?”


“அதுதான் நினைவுக்கு வரமாட்டேங்கிது. சமீபத்துல தான் எங்கயோ பார்த்த மாதிரி நினைவு.”


ஷான் இடைமறித்தான். “நோ. நீங்க இந்தப் படத்தைப் பார்த்திருக்க முடியாது. இது டாவின்ஸியோட தொலைஞ்சி போன ஒரு பெயிண்டிங். லாஸ்ட் டா வின்சி பெயிண்டிங்னு பேரு. உலகம் முழுக்க கலை ஆர்வலர்கள் இதைத் தேடிட்டே இருக்காங்க. எனக்கு சமீபத்துல தான் எதிர்பாராத இடத்துல கிடைச்சது. இண்டர்நெட்ல போட்டதும் ஒருத்தர் வாங்கிட்டாரு. ஜென்யூனிட்டி செக் அப் முடிஞ்சதும் எனக்குப் பணம் கைக்கு வந்துடும். டெலிவர் செஞ்சிருவேன்”


“ம்ம்.. ரேர் பெயிண்டிங்க்னா பெரிய தொகை கிடைச்சிருக்குமே?”


“ஆமா. மோர் தேன் 50 மில்லியன் டாலர்ஸ். இதை மட்டும் வித்துட்டா இதோட கடைய மூடிட்டு ரிட்டயர் ஆகிடப் போறேன்”


“குட் ஃபார் யு” என்றவாறு ஜானின் ஆஃபிஸ் ரூமுக்குள் நுழைந்தோம். வழக்கமான அமெரிக்க அலுவலக அறை போல குப்பையாக இருந்தது. மானிட்டர் முழுக்க போஸ்ட் இட் காகிதங்களை ஒட்டி வைத்திருந்தான். பி.சியை ஆன் செய்து உள்ளே ஒரு பார்வை பார்த்தான் சௌந்தர்.


சுவாரஸ்யம் தரும் டாக்குமெண்டுகளோ புகைப்படங்களோ இல்லை. எல்லாம் கேலரி சம்மந்தப்பட்டதாகவே இருந்தன. மேஜை ட்ராக்களையும் ஷெல்ஃபுகளையும் அலசிப்பார்த்தும் ஒன்றும் தேறவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் எதையோ தேடிக் கொண்டிருந்துவிட்டு ஷானிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.


போகிற வழியில் சௌந்தர் கேட்டான். “என்ன மாமா, இங்கயும் ஒண்ணும் கிடைக்கல? உன் லாஜிக் தப்பா இருக்குமோ? ”


“தெரியல சௌந்தர். ஆனாலும் ஒரு ஹன்ச். மூணாவது ஒரு ஆளும் இன்வால்வ் ஆகியிருக்கணும்னு”


“என்னமோ போ மாமா. நான் டி.ஏ கிட்ட நாளைக்கு ரிப்போர்ட் குடுக்கணும். எனக்கு வேற சில கேஸும் பெண்டிங் இருக்கு. ஏதாச்சும் சாலிடா தோணிச்சின்னா சொல்லு”


அருணை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனான். சத்தம் கொடுக்காமல் கிளம்பிப் போன காரையே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அருண்.


(தொடரும்)


அடுத்த பாகம்

Friday, November 16, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 18

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10
பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 பகுதி-17

“உங்க பெரியப்பந்தான் ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாருல்ல. பாப்பா மறுவீட்டுக்கு வந்துட்டுப் போவட்டும், அண்ணன வச்சிட்டுப் பேசுவோம்”

பெத்த மகளை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போன பெரியப்பாவை வச்சிக்கிட்டா?

எனக்கு அடிவயிறு கலங்கியது. தனியே நேரம் கிடைத்ததும் மாலாவுக்கு ஃபோன் செய்தேன். எடுக்கவே இல்லை. இந்தப் பாழாய்ப்போன கிராமத்தில் இண்டர்நெட்டுக்கு எங்கே போவேன். வீட்டில் சொல்லிவிட்டு திருநெல்வேலிக்குப் போய் ஒரு பிரவுசிங் செண்டரில் எல்லாவற்றையும் விவரமாக மாலாவுக்கு மெயிலடித்தேன். பதில் வருமா என்று அரை மணி நேரம் ரெஃப்ரெஷ் தட்டிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

சாப்பிடப் பிடிக்காமல் மேலே போய் படுத்துக் கொண்டேன். 10 மணிக்கு ஃபோன் வந்தது. மாலா.

“என்னடா! வீட்ல ஒத்துப்பாங்களா?”

“தெரியல மாலா. பயமா இருக்கு. எங்க பெரியப்பா அவர் மகளையே வெட்டிட்டுப் போனவரு”

“பாண்டவர் பூமி ரஞ்சித் மாதிரி திருந்தி நம்மளை சேர்த்து வச்சிட்டாருன்னா?”

“விளங்கும். இதெல்லாம் சினிமால மட்டும் தான் நடக்கும். இவிங்களும் அங்க போய் கை தட்டிட்டு வருவாங்க. தன் வீட்டுல நடக்குதுன்னா அருவாள எடுப்பாங்க. போ மாலா”

“சரிடா. தைரியமா பேசு. அப்பிடி ரொம்ப முறுக்குனாங்கன்னா நாமளா கல்யாணம் பண்ணிக்கலாம்”

“கடைசியா அதான் செய்யணும்னு நினைக்கிறேன்”

“சரி இன்னொரு முக்கியமான விசயம். இன்னும் 2 வீக்ஸ்ல எனக்கு இங்க அசைன்மெண்ட் முடியுது. புனே போக முடியாது. பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் குடுங்கன்னு கேட்டுட்டு இருக்கேன். அனேகமா கிடைச்சிடும். நீ திரும்ப யு.எஸ் வரணுமா?”

“இல்லையே. நான் தான் விஷ்வத்க்கு கே.டி குடுத்துட்டேனே. இனி இங்க தான். மண்டே ரிப்போர்ட் பண்றேன்”

“குட். நான் அப்புறம் கூப்புடுறேன். ஸ்மார்ட் ஃபோன்ல ஈமெயில் செக் பண்ண முடியாதா?”

“முடியும். ஆனா 3ஜி ஒர்க் ஆவாது”

“ஓக்கே. அப்புறம் கூப்புடுறேன்”

ஃபோனை வைத்துவிட்டாள். இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகும் கண்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டே விழித்திருந்தேன்.

*****************************************

மறுவீட்டுக்குத் தங்கையும் மாப்பிள்ளையும் வந்திருந்தார்கள். மோதிரம் போட்டு வரவேற்ற பின்னால் மாப்பிள்ளையுடன் பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. மதிய உணவுக்குப் பின்னால் வெற்றிலை போட்டுக் கொண்டு திண்ணையில் அமர்ந்தோம்.

“வாங்க மச்சான் அப்பிடியே நடந்துக்கிட்டே பேசுவோம்”

எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

“என்ன மச்சான்! அமெரிக்கா எல்லாம் எப்பிடி இருந்திச்சி?”

“ம்ம்.. நல்லா இருந்திச்சி மாப்ள. சம்மர் தான் ரொம்ப நல்லா இருந்தது. விண்டர்ல ஒரே குளிர்”

“அப்பிடியா?  ஸ்னோ ஃபால் எல்லாம் பார்த்தீங்களா?”

“ம்ம் பார்த்தேன்”

“ஆமாம் மச்சான். நீங்க லவ் பண்ற பொண்ணு அமெரிக்கால தான் இருக்காங்களா?”

அதிர்ச்சி + ஆச்சரியமாகப் பார்த்தேன்.

“அதெல்லாம் உங்க தங்கச்சி சொல்லிட்டா. சொல்லுங்க”

“ஆமா மாப்ள. இப்ப அங்க தான் இருக்கா. இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியாவுக்கு வந்திடுவா”

“மாமா கிட்ட பேசிட்டீங்களா?”

“பேசினேன். நீங்க ஊருக்குப் போன பிறகு பெரியப்பாவை வச்சிட்டுப் பேசலாம்னு சொல்லியிருக்காங்க”

“மச்சான். இவங்கள்லாம் போன ஜெனரேஷன். இன்னமும் சாதி, மதம்னு அருவாளத் தூக்கிட்டு திரியறவங்க. இது உங்களோட வாழ்க்கை. நீங்கதான் முடிவெடுக்கணும்”

“சரிதான் மாப்ள. பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறோம்”

“நினைக்கிறதெல்லாம் சரிதான் மச்சான். ஆனா இவங்க எத்தனை வருசமானாலும் மாற மாட்டாய்ங்க. நீங்க முடிவெடுங்க. நானும் உங்க தங்கச்சியும் வந்து நடத்திக்க் குடுக்குறோம் உங்க கல்யாணத்தை”

நிம்மதியாக இருந்தது. சப்போர்ட் செய்வதற்கு சொந்தத்திலும் ஒரு ஆள் இருக்கிறது என்று தெரிந்ததும்.

“தேங்க்ஸ் மாப்ள. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தைரியமா பேசுவேன் அப்பாகிட்ட”

வழக்கமான பெட்டிக்கடையில் பின்னால் ஒளிந்து ஆளுக்கொரு சிகரெட்டைப் பிடித்தோம். பாக்கு போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போனோம்.

பெண்களைப் பெற்ற இரண்டு மாமாக்கள், பெரியப்பா, அப்பா எல்லாம் உட்கார்ந்திருந்தார்கள்.

பெரியப்பாவும் மாமாக்களும் பார்த்த பார்வையே சரியில்லை.

“வாங்க பெரியப்பா. வாங்க மாமா. வாங்க மாமா” என்று வரவேற்று விட்டு நின்றுகொண்டேன். காலியாக இருந்த சேரில் மாப்பிள்ளை உட்கார்ந்து கொண்டார். தங்கையும் அம்மாவும் பின்னால் நின்றிருந்தார்கள். அப்பா தங்கையைப் பார்க்க ஒரு மடக்கு சேரை எடுத்துக் கொண்டு வந்தாள். வாங்கி விரித்து உட்கார்ந்து கொண்டேன்.

“என்னடா. என்னன்னவோ கேள்விப் படுறோம். எல்லாம் உண்மையா?” பெரியப்பா துவக்கினார்.

“அது வந்து...”

“என்ன மாப்ள நீங்க. உங்களுக்காக பொண்ணை பெத்து வச்சிட்டு ரெண்டு பேரு இருக்கோம். நியாயமா நாங்க ரெண்டு பேரும் தான் சண்டை புடிச்சிட்டு நிக்கணும். நீங்க என்னடான்னா, எந்த சாதிப் புள்ளையையோ காதல் கீதல்னு வந்து நிக்கிறீங்க?” அம்மாவோடு பிறந்த மாமா தொடர்ந்தார்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வார்த்தைகளை மனதுக்குள் சரியாக செதுக்கிக் கொண்டு ஆரம்பித்தேன். “நீங்க கேள்விப்பட்டதெல்லாம் நிஜம் தான். நான் மாலாங்கிற பொண்ணை லவ் பண்றேன். அவளை தான் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கேன். பெரியவங்க நீங்கதான் முன்னாடி இருந்து நடத்தித் தரணும்”

“எலேய் யார்கிட்ட பேசுறன்னு தெரிஞ்சிதான் பேசுறியா? கீழ் சாதி நாயைக் கல்யாணம் பண்ணினதுக்காக நாம் பெத்த மகளையே வெட்டிப்புட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனாக்கும். என் கிட்டயே கல்யாணத்தை நடத்தித் தரச் சொல்றீயே உனக்கு என்னா தைரியம் வேணும். என் தம்பி மவனாச்சேன்னு பாக்குறேன். இதுவே நான் பெத்ததா இருந்தா இந்நேரம் தலை தனியாக் கிடக்கும்”

“என்ன பெரியப்பா பேசுறீங்க? அக்காவைக் கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்குப் போயிட்டீங்க. பெரியம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நாங்க தானே பார்த்தோம். சாதி கவுரவத்தை நிலை நாட்டினதால உங்களுக்கு என்ன கிடைச்சிச்சி? 7 வருசம் ஜெயில்ல அச்சடிச்ச சோறும் அவுன்ஸ் குழம்பும் தான? இது என்னோட வாழ்க்கை. யார் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை நல்லாருக்குமுன்னு தான் நான் பார்க்க முடியும். என் பொண்டாட்டி என்ன சாதியா இருக்கணும், என்ன மதமா இருக்கணும்னு பார்க்க வேண்டியதில்ல”

மாப்பிள்ளை ஆர்ம்பித்தார். “மாமா மச்சான் சொல்றதுலையும் ஒரு பாயிண்ட் இருக்கு. அவருக்குப் பிடிக்காத கல்யாணத்தை செஞ்சி வச்சி அவரோட வாழ்க்கையையும் கெடுத்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கையயும் கெடுக்கணுமா?”

“என்ன மாப்ள சொல்றீங்க?”

“ஆமா மாமா. மச்சான் பெங்களூர்ல வேலை. திரும்பவும் அமெரிக்காவுக்குப் போனாலும் போவாரு. அவரு இருக்கிற இடத்துக்கே போய் உங்க பொண்ணை நல்லா வச்சிருக்காரான்னு பாத்துட்டே இருப்பீங்களா? இல்ல மிரட்டி மிரட்டி ஒருத்தரை குடும்பம் நடத்த வச்சிர முடியுமா? இதையெல்லாம் யோசிச்சிப் பாருங்க”

“அதெல்லாம் கட்டி வச்சிட்டா சரியாப் போயிரும் மாப்ள. ஒரு வீட்டுக்குள்ளயே ரெண்டு பேருமா இருந்தா ஒருத்தர் மூஞ்ச இன்னொருத்தர் பாத்துப் பாத்து பிடிச்சிப் போயிரும்.”

“ஐயோ மாமா. நீங்க இன்னும் உங்க காலத்துலயே இருக்கீங்க. காலம் மாறிப் போச்சி. இப்ப உங்க பொண்ணை எனக்குக் கொடுக்க முன்னாடி நல்லா விசாரிச்சிருப்பீங்க. எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணோட லவ்னு தெரிஞ்சிருந்தா பொண்ணு குடுக்க யோசிச்சிருப்பீங்களா இல்லையா?”

“அது வேற மாப்ள. இப்ப பொண்ணு குடுக்கத்தான் ரெண்டு பேரு இருக்காய்ங்களே”

மாப்பிள்ளை தாய்மாமாவின் பக்கம் திரும்பினார். “சரி சித்தப்பு நீங்க சொல்லுங்க. உங்க பொண்ணை மச்சானுக்குக் கட்டிக் குடுத்த பின்னாடி பொண்ணு சந்தோசமா இல்லைன்னா உங்களால நிம்மதியா இருந்துட முடியுமா?”

மாமா யோசித்தார்.

"சொல்லுங்க சித்தப்பு. இல்ல நீங்க தான் அருவாளோட தங்கச்சி பக்கத்துல உக்காந்து பார்த்துட்டே இருக்க முடியுமா? உங்க பொண்ணோட வாழ்க்கையும் இதுல இருக்குதுன்னு நினைச்சிப் பாருங்க”

தயக்கத்துடன் பெரியப்பாவைப் பார்த்து ஆரம்பித்தார் மாமன் - “பெரிய மச்சான், மகன் சொல்றதிலையும் ஞாயம் இருக்கத்தான செய்யுது. பெரியவங்க கூடிப் பேசுங்க. எம்பொண்ணுகூட காலையில எதுக்குன்னு லேசா இழுக்கத்தான் செஞ்சிச்சி. விருப்பமில்லாம எதுக்குக் கட்டாயப் படுத்தணும்?”

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அம்மா அப்பாவைப் பார்த்து, “நம்ம மவன்.. நீங்கதான் பார்த்து..” என்று இழுத்தாள்.

“இந்தாடி அப்ப எங்கண்ணனப் பேசக் கூடாதுன்னு சொல்றியா?” அப்பா சேரை பின்னுக்குத் தள்ளி துண்டை முறுக்கிக் கொண்டு அம்மாவை அடிக்க எழுந்தார்.

நான் எழுந்து அம்மாவை மறைத்து நின்றேன். “அய்யா, நிறுத்துங்க. இப்ப எதுக்கு அம்மாவை அடிக்கப் போறீங்க?”

“தோளுக்கு மேல வளந்துட்ட. உன்னையவா அடிக்க முடியும்?”

“ஏன் அடிங்களேன்? அடிச்சி வெட்டிப் போடுங்க. அதுக்கப்புறமாவது உங்க சாதி வெறி அடங்குதான்னு பாப்போம். நீங்க சாதியைக் கட்டிக்கிட்டு அழுங்க. நான் போறேன்” எழுந்து விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினேன்.

“மச்சான் மாப்ள அண்ணே” என்று கலவையான குரல்கள் என் முதுகில் மோதி விழுந்தன. வேக வேகமாக நடந்து பெட்டிக்கடைக்கு வந்தேன். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிக் கொண்டு கம்மாக் கரைக்குப் போனேன். ஒதுக்குப் புறமாக இருந்த கிணற்றின் உள்ளே இறங்கி தண்ணீருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். படபடப்பு அடங்கவே இல்லை.

ஒவ்வொன்றாக முழு பாக்கெட்டையும் ஊதித் தள்ளினேன். இரண்டு மணி நேரங்கள் ஆகியிருந்தது. யாரும் தேடி வரக் காணோம். செல்ஃபோனை எடுத்துப் பார்த்தேன். சிக்னல் இரண்டு கோடுகள் மட்டும் இருந்தது. நான் எடுத்துப் பார்ப்பதற்கே காத்திருந்தது போல அடித்தது. மாப்பிள்ளை.

“சொல்லுங்க மாப்ள”

“எங்க மச்சான் இருக்கீங்க?”

“இங்க பக்கத்துல தான்”

“கிளம்பி வீட்டுக்கு வாங்க. பெரியவங்களை ஒரு வழியா சம்மதிச்சாச்சி. ஒரு கண்டிசன் தான் போடுதாக”

“என்ன கண்டிஷன்?”

“நேர்ல வாங்க பேசிக்கலாம்”

மனம் குதூகலமானது. விசிலடித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். தங்கையும் வாயெல்லாம் பல்லாக “வாண்ணே” என்றாள்.

மாப்பிள்ளையும் அப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பா முகம் சிறுத்துப் போய் இருந்தது.

“வாங்க மச்சான். உக்காருங்க” கையைப் பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார் மாப்பிள்ளை.

”மச்சான் உங்களுக்காகப் பேசிப் போராடி சம்மதம் வாங்கிக் குடுத்துருக்கேன். நினைவுல வச்சிக்கிடுக. ஆமா.”

“தேங்க்ஸ் மாப்பிள்ளை. ரொம்ப தேங்க்ஸ். ஏதோ கண்டிஷன்னு சொன்னீங்களே என்ன?”

“மாமா நீங்களே சொல்லுங்க” அப்பாவைப் பார்த்தார்.

சிடுசிடுப்பு மாறாமல் அப்பா சொன்னார், “நீங்களே சொல்லுங்க மாப்ள. நான் இவங்கிட்ட பேசுறதா இல்ல”

ஒரு சில விநாடிகள் அப்பாவின் முகத்தையே பார்த்தேன். என் பார்வையைத் தாங்க முடியாமல் எழுந்து விட்டார். “இங்க பாருலே. நீ எவள வேணும்னாலும் கல்யாணம் செஞ்சிக்கோ. ஆனா கல்யாணம் இந்த ஊட்டுலயோ இந்த ஊர்லயே நடக்கக் கூடாது. நீ அந்தப் பொண்ணு ஊர்ல வச்சிக்கோ இல்ல பெங்களூர்ல வச்சிக்கோ. பெத்த கடனுக்கு நானும் எம்பொண்டாட்டியும் வந்துருவோம். வேற சொந்தக்காரங்களக் கூப்புடணும்னு எல்லாம் கனாக் காணாத. கல்யாணம் முடிஞ்சப் பிறகு நீ பெங்களூருலயே இருப்பியோ இல்ல அமெரிக்காவுக்கே போயிருவியோ உன் இஷ்டம். ஒம் பொண்டாட்டியக் கூட்டிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துராத. என் சாதிக் கவுரவத்தைக் கெடுத்துராத. அம்புட்டுத்தேன்”

சொல்லிவிட்டு சட்டைப் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்து பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

(தொடரும்)


Tuesday, November 6, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 17

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 
காஃபி கப்பை கையில் வைத்துக்கொண்டு இந்த உரையாடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாலாவை அர்த்தத்தோடு பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறினேன்.

காரில் ஏறி ஹோட்டல் அறைக்கு வந்து சேரவும் என் செல்ஃபோன் பீப் பீப் என்றடிக்கவும் சரியாக இருந்தது. எடுத்துப் பார்த்தேன். மாலாதான் டெக்ஸ்ட் அனுப்பியிருந்தாள் - “Good. You nailed it. Played as we planned" என்று ஒளிர்ந்தது வாசகம். ஆம். எங்கம்மா இப்பிடித்தான் பேசுவாங்க, அதுக்கு நீ இப்பிடித்தான் பேசணும் என்று திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தது மாலாதான். அதைத்தான் இத்தனை நாட்கள் பயிற்சி எடுத்து கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு வந்திருக்கிறேன். இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதையும் மாலா சொல்லியிருந்தாள்.

அறையின் ஜன்னலை லேசாகத் திறந்து வைத்துவிட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தேன். செல்ஃபோன் அடித்தது. மாலா, எடுத்து, “ஹலோ” என்றேன்.

எதிர்முனையில் பதில் இல்லை. மாலாவின் அம்மா குரல் கேட்டது. ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

“பாத்தியாடி எப்பிடி திமிராப் பேசிட்டுப் போறான்? அவன் ஜாதி அப்பிடிடி. நம்மளால எல்லாம் அந்தக் குடும்பத்துல போய் வாழ முடியாதுடி. அவங்க பழக்க வழக்கம் வேற நம்ம பழக்க வழக்கம் வேற”

“அம்மா. நீங்க என்ன வேணும்னா சொல்லுங்க. எனக்குக் கல்யாணம்னு ஆனா அது தேவாவோடதான். நீங்க சம்மதிச்சி நீங்களே நடத்தி வக்கணும்னு நானும் தேவாவும் விரும்புறோம். அதுக்குப் பிறகு உங்க இஷ்டம்”

“பைத்தியக்காரத்தனமா பேசாதடி. நம்ம வீட்டுல யாருக்குமே இது பிடிக்கலை”

“அம்மா அவங்களா வாழப் போறாங்க. என் லைஃப் இது. நான் தான் வாழணும்”

“உங்க தாத்தா இப்ப இருந்திருந்தா உன்னை வெட்டிப் பொலி போட்டிருப்பாரு”

“அப்பிடியெல்லாம் இல்லம்மா. தாத்தா இருந்திருந்தா என் விருப்பத்தை நிறைவேத்தியிருப்பாரு”

“என்னவோ போடி. அப்பிடி அவனை தான் கல்யாணம் செஞ்சிக்குவன்னா எங்கயாவது ஓடிப்போய் பண்ணிக்கோ. உன்னைத் தலை முழுகிட்டு நாங்க நிம்மதியா இருக்கோம்” அவள் அம்மா விசும்புவது கேட்டது. அதற்குமேல் கேட்க விருப்பமில்லாமல் காலை கட் செய்துவிட்டுப் படுத்தேன்.

********************************

கிறிஸ்துமஸ் விடுமுறை, நியூ இயர் என நாட்கள் ஓடியது. பொங்கலை நெருங்கவும் ஊரில் தங்கை கல்யாண வேலைகள் பற்றி தினமும் ஃபோனில் பேசி, அனுப்ப வேண்டிய பணத்தை அனுப்பிக் கொண்டிருந்தேன். சேமிப்பு எல்லாம் கரைந்து கொண்டிருந்தது.

ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்கியது. ஆன்சைட் அசைன்மெண்டை மொத்தமாகவே முடித்துவிட்டுக் கிளம்பிவிடச் சொல்லிவிட்டார்கள். என்னை ரீப்ளேஸ் செய்ய வந்த விஷ்வத்துக்கு கே.டி கொடுப்பதிலேயே நேரம் சரியாக இருந்தது. மாலாவிடம் அரை மணி நேரம் ஃபோனில் பேசிவிட்டு ஃபிளைட் ஏறினேன்.

******************************************

ஊருக்கு வந்து இறங்கியதும் திருமண வேலைகள். எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்க அப்பாவோடு வாடகைக்கார் எடுத்துக் கொண்டு போனது, பந்தக் கால் நடுவதிலிருந்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பது வரை இடுப்பொடிய வேலை. எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாகவே திருமணம் நடந்தது. அம்மாவிடம் மட்டும் தொட்டும் தொடாமல் மாலாவைப் பற்றிச் சொல்லிவைத்தேன். அம்மா அதிர்ச்சியடைந்தாலும் கல்யாணம் முடிஞ்சாப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

மாப்பிள்ளை வரவேற்பின்போதுதான் பார்த்தேன். ஃபோட்டோவில் பார்த்ததை விட இளமையாக இருந்தார். மாப்பிள்ளை முறுக்கு எதுவும் இல்லாமல் இயல்பாகப் பேசினார். படித்தவர் என்ற வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. எக்ஸர்ஸைஸ் செய்வார் போல கைகள் இறுகி, மார்பு விரிந்து சினிமா கதாநாயகன் போலத் தான் இருந்தார். மீசை அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் அளவாக இருந்தது. வேஷ்டி சட்டை பேண்ட் சர்ட் என எல்லா உடையும் பொருத்தமாகவே இருந்தது. பணம் காசு என்று அதிகம் எதிர்பார்த்த குடும்பமாய் இருந்தாலும் மாப்பிள்ளை தங்கையை அன்பாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை கொடுத்தது.

கல்யாணம் முடிந்து மதியச் சாப்பாடும் ஓய்ந்த பிறகு கல்யாண மண்டபத்தில் ஆட்கள் அதிகம் இல்லாது இருந்த சேர்களில் நான்கை ஒன்றாகப் போட்டு லேசாக கண்ணயர்ந்தேன். வேலம்மா பாட்டி - அம்மாவின் அம்மா - எழுப்பினார்.

“என்ன பாட்டி? சாப்ட்டீங்களா?”

வெத்திலையை வாயோரமாகக் குதப்பி கையில் இருந்த சொம்பில் சாறைத் துப்பிவிட்டு, “அதெல்லாம் சாப்புட்டாச்சி. ஆமா அம்பேரிக்காவுக்குப் போயிருந்தியே, அங்கல்லாம் சாப்பாடு எப்பிடி? நம்மூரு சோறு கிடைக்குமா?”

“கிடைக்கும் பாட்டி. ஓட்டல்ல சாப்புடுறது எப்பயாச்சும் தான். மத்தபடி நானே சமைச்சி சாப்புட்டுக்குவேன்”

“ம்ம்ம்.. இப்பத்தான் தங்கச்சிக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சில்ல. அடுத்த முகூர்த்தத்துல உனக்கு வச்சிரவேண்டியதுதான். பொண்ணு தேட வேண்டியதில்ல. அதான் உனக்குன்னு காத்துட்டு இருக்காளே வேலுச்சாமி மவ.” பாட்டி நைசாக தன் மகன் வயிற்றுப் பேத்தியை என்னோடு முடிச்சிப் போட்டாள். விடக்கூடாது.

“சும்மா இருங்க பாட்டி. சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணா பொறக்குற புள்ளைங்களுக்கு பாதிப்பு வருமாம். வேற சாதியில பொண்ணு பார்த்தாலும் பார்ப்பேனே ஒழிய சொந்தத்துல கட்டிக்க மாட்டேன்”

“டேய் இதென்ன கோட்டித்தனமா பேசிக்கிட்டு. நம்ம சாதிய விட்டு வேற சாதியில பொண்ணெடுப்பானாக்கும். தேவனை மாதிரியா பேசுற? அந்நியத்துல பொண்ணெடுப்பேன்னு மட்டும் சொல்லு. வேற சாதிக்காரிய எல்லாம் மனசுல நினைச்சிட்டு இருக்காத. அது நடக்காது. உங்கப்பனுக்குத் தெரிஞ்சா வெட்டிப்புடுவாரு. ஆமா”

அம்மா சொல்லிவிட்டாள் போலிருக்கிறது. மெதுவாக நூல்விட்டுப் பார்க்கிறாள் பாட்டி.

“சரி பாட்டி. அந்நியத்துலதான் பொண்ணெடுப்பேன். போதுமா?”

“ஆஆ. இப்பத்தான் என் பேரன் மாதிரி பேசுற.” விரல்களை மடக்கி தலையின் இரண்டு பக்கமும் வழித்து நெற்றியில் சொடக்குப் போட்டுக் கொண்டாள். “சரி அசதியா இருப்ப. படுத்துக்க” எழுந்து மெதுவாக ஆடி ஆடி தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அம்மாவை நோக்கி நகர்ந்தாள்.

நாளையே அப்பாவிடம் மாலாவைப் பற்றிச் சொல்லிவிட வேண்டும். முடிவெடுத்தவனாய் கண்ணசந்தேன்.

************************************************

பொண்ணு மாப்பிள்ளையை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு கல்யாண மண்டபத்துக்குக் கணக்குப் பார்த்து காசு செட்டில் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். அய்யா வாசலில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார்.

“அய்யா! உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசணும்”

“கல்யாண மண்டபத்துக்குக் காசு குடுத்து கணக்கு முடிச்சிட்டியாலே? பூக்காரன் ரெண்டாயர்ரூவா பாக்கி வரணும்னு சொன்னான். வா பேசிக்கிட்டே அவன்கிட்ட போய் பணத்தைக் குடுத்துட்டு வந்துருவோம்”

சிறிது தூரம் நடந்தோம். ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

“என்னலே. என்னமோ பேசணும்னு சொன்ன. இப்ப சும்மாவே வர்ற?”

“இல்லையா.. அது வந்து..”

“உங்கம்மாக்காரி சொன்னா. யாரோ ஒரு புள்ளையாமே?”

“ஆமா. கூட வேலை பாக்குறா”

“அமெரிக்காவுலையா பெங்களூருலையா?”

“பெங்களூர்லயும், அமெரிக்காவுலையும்”

“ம்ம்ம்.. என்ன சாதி?”

“நம்ம சாதி இல்ல”

என்னை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தார்.

“உங்க பெரியப்பந்தான் ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாருல்ல. பாப்பா மறுவீட்டுக்கு வந்துட்டுப் போவட்டும், அண்ணன வச்சிட்டுப் பேசுவோம்”

பெத்த மகளை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போன பெரியப்பாவை வச்சிக்கிட்டா?

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

Friday, October 26, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 16

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 


“வீக் எண்ட் என்ன ப்ளான் உனக்கு?”

“எனக்கென்ன ப்ளான். ஒண்ணுமில்லை. வீட்டுல தான்”

“கிளம்பி இங்க வா. அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொல்றாங்க”

“உங்கம்மாவா?? என்னய எதுக்கு?”

“ம்ம்.. தன் பொண்ணை லவ் பண்றவன் எப்பிடியிருக்கான்னு பாக்க.”

“மாலா. கெதக்குன்னு இருக்கு. என்ன பேசுவாங்கன்னு ஏதாச்சும் ஐடியா இருக்கா?”

“தெரியாதுடா. நீ கிளம்பி வா”

ஃபோனை வைத்ததிலிருந்து எனக்கு எதுவுமே தோன்றவில்லை. மாலாவின் அம்மா என்ன கேட்பார், எப்படி பதில் சொல்வது என்று விதவிதமாக மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு நாள் லீவ் போட்டு வீட்டில் படுத்துக்கொண்டு எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் அழைத்தாள். “எப்படா கிளம்புற?”

“நாளைக்குக் காலையில”

“லேட் பண்ணாத. நைட்டே வந்துடு. அடுத்த ஸ்ட்ரீட்ல இருக்கிற ஹாலிடே இன்ல ஸ்டே பண்ணிக்கோ. ப்ரேக்ஃபாஸ்டுக்கே வீட்டுக்கு வந்துடு. சரியா?”

“ம்ம்.. இன்னைக்கு நைட்னா ரூம் கிடைக்குமா?”

“ஏற்கனவே புக் பண்ணிட்டேன். போய் உன் பேர் சொல்லி செக் இன் பண்ணிக்கோ”

“ஓக்கே” தயாராக இருப்பாள் போல.

“அப்புறம்?”

“வீட்டுக்கு வரும்போது எதுவும் வாங்கிட்டு வரணுமா? ஜஸ்ட் டு இம்ப்ரெஸ் யுர் மாம்”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். சும்மா வந்தா போதும்”

“ஓக்கே. நான் மதியமே கிளம்பிடுறேன்”

*******************

ஹோட்டலில் செக் இன் செய்துவிட்டு மாலாவுக்கு டெக்ஸ்ட் அனுப்பினேன்.  குட் என பதில் வந்தது. எச்.பி.ஓவில் ஏதோ ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டே தூங்கிப் போனேன்.

********************

காலை எழுந்து குளித்துவிட்டு நல்ல பிள்ளை போலத் தெரிவதற்காக தயாராக எடுத்து வந்திருந்த பவுடரை விபூதி போல வைத்துக்கொண்டு கிளம்பினேன்.

பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்திவிட்டு படியேறி அப்பார்ட்மெண்ட் கதவின் முன்னால் நின்றேன். கதவைத் தட்டலாமா என்று என்று யோசித்துக்கொண்டு நின்று கொண்டே இருந்தேன். முதல்முறை வருவது போல நடிக்க வேண்டும். கதவுக்கு மேல் கையை வைத்தேன். கதவு திறந்தது. மாலா.

“உள்ள வா”

முதல் முறை வருவது போலத்தான் இருந்தது. வீடே மாறியிருந்தது. மாலா அம்மாவின் வேலையாக இருக்க வேண்டும். புதிதாக ஒரு டைனிங் டேபிள், ஹாலில் ஃபூட்டான், சுத்தமான கிச்சன், இதையெல்லாம் விட என்ன அதிர்ச்சிக்குள் ஆக்கியது ஹால் சுவற்றில் நடுநாயகமாக இரண்டு கைகளையும் விரித்து கருணைப் பார்வை பார்த்துக்கொண்டு, ஜீஸஸ் ஹரால்ட் க்ரைஸ்ட்.

ஃபூட்டானில் உட்கார்ந்தேன்.

“காஃபியா டீயா?”

“நீங்க கிறிஸ்டியனா?”

“அம்மா கிறிஸ்டியன். காஃபியா டீயா?”

“காஃபி”

கிச்சனுக்குள் போய்விட்டாள். மாலாவின் அம்மா வருவதற்கு ஒரு வாரம் முன்னாள் கழித்த இரவு நினைவுக்கு வந்தது. எழுந்து மாலாவின் பின்னால் போகலாமா என்று நினைத்த போது மாலாவின் அம்மா வந்தார்.

மரியாதைக்காக எழுந்தேன். அவர் பார்வை என் நெற்றியில் ஆணி அடித்தாற்போல நின்றது. நல்ல பிள்ளை வேஷம் போட நினைத்த என் புத்தியில் மானசீகமாக செருப்பால் அடித்துக் கொண்டேன்.

“நீ தான் தேவாவா?. உன் ஃபுல் நேம் என்ன?”

“நல்லுத் தேவன்”

“இங்க பாரு தம்பி. நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பலை. எங்க ஃபேமிலி பெரிய ஃபேமிலி. எங்க குடும்பத்துக்கு மூத்த பொண்ணு மாலா தான். எங்க பிரதர்ஸ் எல்லாருக்கும் மாலா தான் பெட். செல்லம் குடுத்து வளர்த்த பொண்ணு. என்னோட ப்ரதர்ஸ் குழந்தைங்க எல்லாம் இவளைத்தான் ரோல் மாடலா எடுத்துட்டு இருக்காங்க. இவதான் அவங்களுக்கெல்லாம் முன் மாதிரியா இருக்கணும். எங்க ஃபேமிலியில லவ் மேரேஜ், இண்டர்-காஸ்ட் மேரேஜ் எல்லாம் இதுவரைக்கும் நடந்ததில்லை. எங்க ஃபேமிலியில யாருக்கும் இது பிடிக்கவும் இல்லை. நான் ஒரு டீச்சர். உங்க வயசுப் பசங்களுக்குப் பாடம் எடுக்குறவ. இந்த வயசுல இது மாதிரி வர்றது சகஜம் தான். யோசிச்சிப் பார்த்தீங்கன்னா இது பிராக்டிக்கலி பாசிபிள் இல்லைங்கிறது உங்களுக்குப் புரிய வரும். நீங்க நல்லா படிச்சிருக்கீங்க. நல்ல வேலை பாக்குறீங்க. அமெரிக்கால டாலர்ல சம்பாதிக்கிறீங்க. உங்களுக்கு உங்க கம்யூனிட்டியிலயே மாலாவ விட நல்ல பொண்ணு கிடைக்கும். இதுவரைக்கும் உங்களுக்கும் மாலாவுக்கும் நடுவுல இருந்ததை ஒரு நல்ல ஃப்ரண்ட்ஷிப்பா மட்டும் நினைச்சிட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிடுங்க. அதுதான் உங்க ரெண்டு பேருக்கும், ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது”

நிறுத்தாமல் பேசிவிட்டு என் முகத்தைப் பார்த்தார்.

“ஆண்ட்டி - இப்பிடி கூப்புடலாம்னு நினைக்கிறேன். நான் மாலாவைப் பிடிச்சி வைக்கலை. நீங்க மாலா மனசை மாத்தி உங்க இஷ்டப்படி கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, அதுக்கு மாலா சம்மதிச்சா, அதுக்குக் குறுக்க நிக்க மாட்டேன். ஆனா.. மாலாவுக்கு விருப்பமில்லாம நீங்க இதைச் செய்யணும்னு நினைச்சா அதைப் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். எனக்கு வாழ்க்கையில கல்யாணம்னு நடந்தா அது மாலாவோட தான். மாலாவைத் தவிர வேற யாருக்கும் என்னோட வாழ்க்கையில இடம் இல்லை. இதுக்கு மேல உங்க இஷ்டம்”

என்று சொல்லிவிட்டு எழுந்தேன். காஃபி கப்பை கையில் வைத்துக்கொண்டு இந்த உரையாடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாலாவை அர்த்தத்தோடு பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறினேன்.
(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே