Monday, August 26, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 7


“மர்டர் விக்டிமோட ஃபோனா? இங்கயும் ஒரு மர்டர் விக்டிமோட ஃபோன்ல இருந்த நம்பர் தான் அது.”

“என்ன சார் இது ஆச்சரியமா இருக்கு. இது கோ இன்சிடன்ஸா இல்ல ரெண்டு கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?”

அருணும் குழப்பத்தில் ஆழ்ந்தான். 

“பை த வே என் பேரு அருண். எக்ஸ் காப். இப்ப கன்சல்டிங் மட்டும் பண்றேன்.”

“சார் என்னை நினைவில்லையா சார்? மதுரையில அந்த ரெட்டைக் கொலைக் கேஸ்ல நீங்க ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆஃபிசரா வந்தப்ப நான் தான் உங்களுக்கு அஸிஸ்ட் பண்ணேன் சார். அப்ப எஸ்.ஐயா இருந்தேனே”

“அட காரியாபட்டி பரமசிவம். எப்பிடி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார். ஈரோட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கேன். வந்த உடனே ரெண்டு கொலைக் கேஸ் டீல் பண்ணிட்டு இருக்கேன். அதுல ஒண்ணு தான் இந்தக் கேஸ்”

“பரமசிவம், இந்தக் கேஸைப் பத்திக் கொஞ்சம் டீட்டெயில்ஸ் சொல்லுங்க”

“சார் விக்டிம் பேரு நமச்சிவாயம். ப்ரிஸம் எக்ஸ்போர்ட்ஸ்ங்கிற பனை ஓலை பொம்மை செய்யற கம்பெனியில ஃபீல்ட் ஏஜெண்ட். ஊர் ஊரா போய் பொம்மைகளைச் செய்ய ஆள் பிடிச்சி ஆர்டர் குடுத்து, வாரா வாரம் ஐட்டம்ஸை சென்னைக்கு லாரியில போட்டு அனுப்புற வேலை. இந்த வாரமும் அப்பிடி செஞ்சிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது வழியில யாரோ அருவாளால வெட்டிட்டாங்க. யூஸுவல் கிரிமினல்ஸோ இல்லை லோக்கல் ரவுடிஸோ செஞ்ச மாதிரி தெரியலை. வெட்ட முன்னாடி இந்த செல்ஃபோனுக்கு ஒரு கால் அடிச்சிப் பார்த்து வெரிஃபை செஞ்சிருக்காங்க. அதனால இது கூலிப்படை வேலையா இருக்கலாம். கால் வந்த ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது. ஹெட் கான்ஸ்டபிளை ஃபோன் கம்பெனியில விசாரிக்கச் சொல்லியிருக்கேன். அப்புறம் அவரு ஒரு கைப்பை வச்சிருந்திருக்காரு. ரொம்பப் பாதுகாப்பா வச்சிட்டு இருந்தாராம். அதுல பணம் எதுவும் இல்லைன்னு வீட்டுக்காரம்மா சொல்லியிருக்காங்க. ஆனாலும் ரொம்பப் பத்திரமா வச்சிருந்தாராம். இப்ப அதைக்காணலை. அந்த கைப்பைக்காகக் கொலை நடந்திருக்கலாம்னு ஒரு கோணத்துல விசாரணை செய்யலாம்னு இருக்கேன் சார்”

“பரமசிவம். இங்க நான் இப்பப் பாத்துட்டு இருக்கிற கேஸும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்...” என்று ஆரம்பித்து முழுக் கேஸ் கதையையும் சொல்லி முடித்தான். 

“சார் ரெண்டு கேஸுக்கும் சம்மந்தம் இருக்கும் போலருக்கே சார்?”

“கரெக்ட் பரமசிவம். ரெண்டு கேஸ் மட்டும் இல்லை மூணு கேஸ்”

“மூணா?”

“ஆமா.. “ டிடிஈ கேஸையும் சொல்லி முடித்தான். 

“இண்ட்ரஸ்டிங் சார்”

“ஓக்கே. பரமசிவம். நான் இங்க கமிஷனர்கிட்ட பேசிட்டு மூணு கேஸையும் ஒரே கேஸா மாத்த முடியுதான்னு பார்த்துட்டு உங்களுக்குச் சொல்றேன். உங்க நம்பர் என்ன?”

சொன்ன நம்பரைக் குறித்துக் கொண்டு ஃபோனை அணைத்தான். செல்ஃபோனில் சார்ஜ் தீரப் போனது. கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு ஃபோனை சார்ஜ் போட்டு எவிடென்ஸ் ரூமில் வைக்கச் சொல்லிவிட்டு யோசித்தான். 

டி.டி.ஈ கோயமுத்தூர் போகும் ரயிலில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். அவர் வைத்திருந்த எதுவோ காணாமல் போய்விட்டது.
சிவகுரு சென்னையில் கழுத்தறுபட்டு உயிரிழக்கிறான். அவன் வைத்திருந்த எதுவோவும் காணாமல் போய்விட்டது.
நமச்சிவாயம் ஈரோட்டில் அருவாளால் வெட்டப்பட்டு உயிரிழக்கிறார். அவர் வைத்திருந்த எதுவோவும் காணாமல் போய்விட்டது. 

டி.டி.ஈ, சிவகுரு, நமச்சிவாயம் - இந்த மூவரையும் இணைப்பது எது? அதைக் கண்டுபிடித்துவிட்டால் கேஸ் பாதி தீர்ந்துவிடும். 

சட்டென்று ஒரு யோசனை வந்தது. பரமசிவத்தின் எண்ணை அழைத்தான்.

“ஹலோ”

“பரமசிவம். நான் அருண்”

“சொல்லுங்க சார்”

“கொஞ்ச நேரம் முன்னாடி நான் கூப்பிட்டேனே, அந்த நமச்சிவாயத்தோட செல்ஃபோன். நான் கூப்பிட்டப்ப ஏதும் பேர் வந்திச்சா, இல்ல ஃபோன் நம்பர் தான் வந்ததா?”

“ஃபோன் நம்பர் தான் வந்தது சார். இருந்தாலும் செக் பண்ணிட்டு சொல்றேன். நீங்க வச்சதும் பேட்டரி டை ஆகிடுச்சி. சார்ஜ் போட்டு பார்த்துட்டு உங்களுக்குக் கூப்புடுறேன் சார்”

“ஓக்கே பரமசிவம்”

ஃபோனை வைத்துவிட்டு யோசித்தான். சிவகுரு செல்ஃபோனில் நமச்சிவாயத்தின் நம்பர் S3 என்று ஸ்டோராகியிருக்கிறது. சாகும் முன்பு S4RAV என்று எதையோ எழுத முனைந்திருக்கிறான். இண்டர்காமில் ரைட்டரை அழைத்தான். 

“மகேஷ்னு ஒரு பையன் அவங்கப்பா சாவுல மர்மம் இருக்குதுன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தானே இன்னைக்குக் காலைல, அவன் ஃபோன் நம்பர் எதுவும் குடுத்தானா?”

”குடுத்திருக்காரு சார். நோட் பண்ணிக்கிறீங்களா?”

மகேஷின் நம்பரை அழைத்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அப்பாவின் கடைசி சடங்குகளைச் செய்துகொண்டிருப்பானே என்பது நினைவுக்கு வந்தது. So near and yet so far என்று சொல்வார்களே அது போல இருக்கிறது. மூன்று கொலைகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், கேஸ் தீர்ந்துவிடும். ஆனால் அதைக் கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது. 

கார்த்தியின் அறைக்குப் போய் மூன்று கொலைகளைப் பற்றியும் ரிப்போர்ட் செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். வழியிலேயே சாப்பிட்டு விட்டு, ஷெல்ஃபில் இருந்த ஸ்காட்ச்சைக் கொஞ்சம் சரித்துக் கொண்டு, இரண்டு சிகரெட்டுகளை நுரையீரலுக்குக் கொடுத்துவிட்டு தூங்கிப் போனான்.

*******************************************************

காலை வழக்கம்போல ஜிம்மையும் ஸ்விம்மிங்கையும் முடித்து விட்டு ஒன்பதரை மணிக்கெல்லாம் கமிஷனர் ஆஃபிஸில் நின்றான். இன்ஸ்பெக்டர் சிவா ஏதோ வேலையாக இருந்தார். இவனைப் பார்த்ததும், “சார் காலேஜ்ல என்கொயர் பண்ணதுல ஒரு ப்ரேக் கிடைச்சிருக்கு சார். இந்த வேலையை முடிச்சிட்டு உங்க சீட்டுக்கு வர்றேன்”

“நோ பிராப்ளம் சிவா. இங்கயும் இன்னும் கொஞ்சம் இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. நானும் உங்களுக்கு ப்ரீஃப் பண்ணனும்”

அரை மணி நேரம் கழித்து வந்த சிவா, கையில் ஒரு புகைப்படம் வைத்திருந்தார். சிசிடிவியின் வீடியோவை ஃப்ரீஸ் செய்து புகைப்படமாக ஆக்கியதைப் போல இருந்தது. 

“சார் நீங்க சொன்ன மாதிரி என்கொயர் பண்ணதில, ஒரு ஸ்டூடண்டும், அந்த செக்யூரிட்டியும் இந்தப் படத்துல இருக்கிறவன் அந்தட் டயத்துல வந்திருக்கலாம்னு சொல்றாங்க சார். ஒரு வைல்ட் கெஸ் தான் சார். அக்யூரேட்டா சொல்ல முடியலைன்னுட்டாங்க”

அருண் அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தான். டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ. தொப்பி அணிந்திருந்தான். முகத்தில் பாதியை தொப்பி மறைத்திருந்தது. கையில் நோட்டு புத்தகம் என்று எதுவுமே இல்லை. கோடு போட்ட டிஷர்ட் அணிந்திருந்தான். ஜீன்ஸ் பேண்ட். கழுத்தில் டேக் தொங்கியது. 

“சிவா, காலேஜ் டேக் போட்டிருக்கானே? அதை ஜூம் பண்ண முடிஞ்சதா?”

“நானும் நினைச்சேன் சார். அந்த டேக் ரிவர்ஸ் ஆகியிருக்கு. ஃபோட்டோ எதுவும் தெரியலை”

“ம்ம்.. பின்னாடி பக்கத்தை வச்சி அது சிவகுருவோட டேகான்னு கண்டுபிடிக்க முடியலை?”

“இல்ல சார். பின்னாடி காலேஜ் பேரு & அட்ரஸ் தான் இருக்கு”

“ஓக்கே”

“சார் நீங்க ஏதோ ப்ராக்ரஸ் இருக்குதுன்னு சொன்னீங்களே?”

“ஓ அதுவா” ஈரோடு கொலையையும் பரமசிவத்துடன் நடந்த உரையாடலையும் பற்றி சிவாவிடம் சொன்னான். 

“சார் இந்த மூணு கொலைக்கும் தொடர்பு கண்டுபிடிச்சிட்டா கேஸ் சால்வ் ஆகிடும் போலயே சார்?”

“கரெக்ட் சிவா”

அருணின் ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். மகேஷின் நம்பர்.

“ஹலோ அருண் ஹியர்”

“சார் நான் மகேஷ் பேசுறேன். நேத்து ஈவினிங் நீங்க கூப்புட்டுருந்தீங்க போல.”

“ஆமா மகேஷ். அப்பாவோட செல்ஃபோன் இப்ப யார்கிட்ட இருக்கு? ரயில்வே போலீஸா? இல்ல உங்கக்கிட்டயா?”

“என் கிட்ட தான் சார் இருக்கு. கொண்டு வந்து குடுக்கட்டுமா?”

“கொண்டு வாங்க மகேஷ். எந்த நம்பரையும் அழிச்சிட வேண்டாம். அப்பிடியே கொண்டு வாங்க”

“ஓக்கே சார். காலைல கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் லஞ்ச் அப்போ கொண்டு வரட்டுமா?”

“சரி மகேஷ். ஒண்ணும் அவசரம் இல்லை”

உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த சிவா, “எதுக்கு சார் இப்ப அந்த டி.டி.ஈயோட ஃபோன்?”

ஒரு வேளை அதுல இந்த சிவகுரு அல்லது நமச்சிவாயத்தோட ஃபோன் நம்பர் எதுவும் இருக்குதான்னு பார்க்கத்தான்”

*******************************************************

மதியம் மூன்று மணி போல ஃபோனைக் கொண்டு வந்து கொடுத்தான் மகேஷ். “ஏதாவது ப்ராக்ரஸ் இருக்குதா சார்?”

“இன்னும் ரெண்டு கொலைகள், ஒண்ணு சென்னையில இன்னொண்ணு ஈரோட்ல, அதுகளுக்கும் உங்கப்பா மர்டர்க்கும் சம்மந்தம் இருக்கலாம்னு ஒரு டவுட் வந்திருக்கு மகேஷ். கன்ஃபர்ம் ஆனதுன்னா சொல்றேன்”

“தேங்க்யூ சார்”

“தென், உங்கப்பா பேக்ல ஏதோ ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ் பார்த்தேன்னு சொன்னீங்கள்ல? என்ன டாக்குமெண்ட்னு நினைவிருக்கா?”

“மறுபடி பார்த்தா அதுதானான்னு கரெக்டா சொல்ல முடியுமே தவிர அது என்ன டாகுமெண்ட்னு தெரியலையே சார்”

“ஓக்கே மகேஷ். ஏதாச்சும் வேணும்னா கூப்புடுறேன்”

மகேஷ் அந்தப் பக்கம் போனதும், அவன் தந்துவிட்டுப் போன சதாசிவத்தின் ஃபோனை எடுத்தான். அட்ரஸ் புக்கைத் திறந்து சிவகுருவின் நம்பர் அல்லது நமச்சிவாயத்தின் நம்பர் இரண்டில் ஒன்றாவது இருக்கிறதா என்று பார்த்தான். இரண்டு எண்களுமே இல்லை என்றதும் வருத்தமுற்றான். 

எதற்கும் முயற்சி செய்வோம் என்று நமச்சிவாயத்தின் ஃபோனுக்கு அழைத்தான்.

ஐந்து ரிங்குக்குப் பிறகு, பரமசிவம் ஃபோனை எடுத்தார்.

“ஹல்லோ ஈரோடு போலிஸ் ஸ்டேஷன்”

“பரமசிவம், நான் அருண் பேசுறேன்”

“சார். என்ன சார். வேற நம்பர்ல இருந்து கூப்புடுறீங்க?”

“இது தான் அந்த டி.டி.இ நம்பர். அங்க எதுவும் பேர் வந்ததா?”

“யெஸ் சார். டிடின்னு வந்திச்சி”

“ம்ம்.. ஸோ, டிடீஇயோட நம்பர் நமச்சிவாயத்துக்கிட்ட இருக்கு. நமச்சிவாயம் வீட்டுல டி.டி.ஈ சதாசிவம் பத்தி விசாரிங்க. தெரிஞ்சவங்களா, பழக்கமான்னு விசாரிங்க. விசாரிச்சிட்டு எனக்குக் கூப்புடுங்க”

“ஓக்கே சார்.”

இண்டர்காமில் சிவாவை அழைத்தான். “சிவா, இந்தக் கேஸ்ல ஒரு ப்ரேக் கிடைச்சிருச்சின்னு நினைக்கிறேன். நீங்க உடனே இங்க வர முடியுமா?”

“வாவ் சூப்பர் சார். ஃபைவ் மினிட்ஸ்ல வர்றேன்”

ஐந்து நிமிடத்தில் வந்தான். 

“சிவகுருகிட்ட நமச்சிவாயத்தோட நம்பர். நமச்சிவாயத்துக்கிட்ட டி.டி.ஈயோட நம்பர். ஆனா டி.டி.இ ஃபோன்ல இவங்க ரெண்டு பேரு நம்பரும் இல்லை. நமச்சிவாயம் ஃபேமிலிக்கு டி.டி.ஈயைத் தெரியுமான்னு கேக்கணும். அதே போல டி.டி.ஈ ஃபேமிலி கிட்ட நமச்சிவாயம் பத்தி விசாரிக்கணும். அது மட்டுமில்லாம சிவகுரு ஃபேமிலிக்கிட்ட நமச்சிவாயத்தைத் தெரியுமான்னு விசாரிக்கணும்.”

“சார் அதுக்கு எப்பிடியும் ரெண்டு மூணு நாளாகிடுமே சார்”

“கரெக்ட். ஆகிடும். ஆனா அதுக்குள்ள மர்டரர் தப்பிச்சிருவான். அதனால என்னொட இன்ஸ்டிக்ட் சொல்றதைக் கேக்கப் போறேஎன். இன் த மீன் டைம் டிப்பார்ட்மெண்ட் என்கொயரி நடத்தட்டும்”

“உங்க இன்ஸ்டின்க்ட் என்ன சொல்லுது சார்?”

“இந்த மூணு பேரும் சம்மந்தப்பட்ட நாலாவது ஆள் ஒருத்தன் இருக்கான். அவன் தான் இந்த மூணு கொலையையும் செஞ்சிட்டு அந்த ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸைத் திருடிட்டுப் போயிருக்கணும்”

“ஆனா மூணு பேரையும் லின்க் பண்ற மாதிரி எவிடென்ஸ் எதுவுமே இல்லையே சார். செயின் ரியாக்‌ஷன் மாதிரி இவனை அவன், அவனை அவன்னு தானே இருக்கு?”

“கரெக்ட். லெட் மி கம்ப்ளீட்”

“அந்த ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ்கு ஏதாவது வேல்யூ இருக்கணும். அல்லது யாரோ ஒரு முக்கியமான ஆளோட டாகுமெண்ட்ஸை வச்சி இவங்க மூணு பேரும் சேர்ந்து ப்ளாக் மெயிலிங் மாதிரி ஏதாவது செஞ்சிருக்கணும்”

“பட் சார். இவங்க மூணு...”

“வெயிட் சிவா. இவங்க மூணு பேரும் சந்திச்சிருக்க வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறீங்களா?”

“அப்படி இல்லை சார். எங்க மீட் பண்ண வாய்ப்பு இருக்கும்னு யோசிக்கிறேன்.”

“சிவா... இட்ஸ் ஆப்வியஸ். டி.டி.ஈ, கோயமுத்தூரை சொந்த ஊராக் கொண்ட சென்னை பையன், ஈரோட்டு டாய் ப்ரோக்கர். இந்த மாதிரி வேரீட் க்ளாஸ் பீப்புள் எங்க மீட் பண்ண முடியும்?”

“ட்ரெயின்?”

“கரெக்ட். நம்ம சிவா என்ன எழுத ட்ரை பண்ணான்? S4 RAV இல்லையா? டிடீஇ எஸ் 4 ரெண்டையும் சேத்துப் பார்த்தேன். ரயில் ரிசர்வேஷன் கோச்சா இருக்கலாம்னு ஒரு ஸ்பார்க். என் இன்ஸ்டிக்ண்ட் என்னன்னா, இவங்க மூணு பேரு + நம்ம சஸ்பெக்ட், நாலு பேரும் ஏதோ ஒரு நாள் ஒரே ட்ரெயின்ல வந்திருக்கணும். அப்ப நடந்த ஏதோ ஒரு சம்பவத்துல மூணு பேர்கிட்டயும் இந்த டாகுமெண்ட்ஸ் கிடைச்சிருக்கணும். அதை வச்சிப் பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கிற நேரத்தில நாலாவது ஆள் மூணு பேரையும் ஒவ்வொருத்தரா போட்டுத் தள்ளிட்டு அந்த டாகுமெண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்”

“கிரேட் சார்”

“சோ, நம்ம மர்டர் விக்டிம், எஸ்4 கோச்ல வந்த RAVனு ஆரம்பிக்கிற பேர் வச்ச ஒருத்தன். சிவகுரு சென்னை-கோயமுத்தூர் அல்லது கோயமுத்தூர் - சென்னை எஸ்-4 கோச்ல என்னைக்கு ரீசண்டா ட்ராவல் பண்ணான்னு அவங்க வீட்டுல தெரிஞ்சிட்டு அந்த தேதியில ரிசர்வேஷன் சார்ட்ல RAVனு பேர் வச்சவங்களை எல்லாம் ஃபில்டர் பண்ணி விசாரிச்சா நம்ம மர்டரரைப் பிடிச்சிரலாம்னு எனக்குத் தோணுது”

“குட் சார். இந்த டைரக்‌ஷன்லயும் நாம விசாரிச்சிப் பார்க்கலாம்”

“சிவகுரு பேரண்ட்ஸ்கிட்ட விசாரிக்கும்போது அவன் ட்ராவல் பண்ண டேட்ஸ் & ட்ரெயின் பத்தி விசாரிங்க. அதே போல நமச்சிவாயம் பத்தியும்” 

பேசிக் கொண்டே சதாசிவத்தின் ஃபோனைப் பார்த்தவன், சட்டென்று நின்றான்.  ஏதோ யோசித்தவனாக ஃபோன் புக்கை மறுபடி தேடினான்.  அவன் தேடியது கிடைத்தது. “S4"

“சிவா, ஐ தின்க் ஐ காட் அவர் சஸ்பெக்ட்” ஃபோனை சிவா முகத்தின் நேராக நீட்டினான். 

“எஸ் 4” 

“யெஸ்.” ஒரு குழந்தையின் குதூகலத்தோடு அந்த நம்பரை அழைத்தான். 

“த ஸப்ஸ்க்ரைபர் இஸ் நாட் ரீச்சபிள் அட் திஸ் மொமண்ட். ப்ளீஸ் ட்ரை யுவர் கால் லேட்டர்”


3 comments:

vasu balaji said...

sema

டிபிஆர்.ஜோசப் said...

இதுவரைக்கும் நீங்க பதிவிட்ட எல்லா பகுதிகளையும் இப்போதுதான் படித்து முடித்தேன். நன்றாக கொண்டு செல்கிறீர்கள். இனி முடிவு எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆவல்.

இடைவெளிவிடாமல் எழுதினால் நன்றாக இருந்திருக்கும். இடையில் சுமார் மூன்று மாத காலமாக எழுதாமல் விட்டுவிட்டீர்களே!

தோழி said...

when is the next post sir?