Tuesday, November 10, 2009

வாசலில் ஒரு பௌர்ணமி

சூரியன் சோம்பலுடன் மெதுவாக மேகப் போர்வைக்குப் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் மார்கழி மாதக் காலை நேரம். தெருவெங்கும் கன்னி(?!)ப் பெண்கள் கோலம் போடும் மும்முரத்தில் இருந்தார்கள். ஆட்டை மேச்சா மாரியும் ஆச்சு அண்ணனுக்கு பொண்ணு பாத்தா மாரியும் ஆச்சு என்பது போல பெருசுகள் காலை வாக்கிங்கையும் பால் பாக்கெட் வாங்கும் கடமையையும் ஒரு சேர செய்துகொண்டு இருந்தார்கள். பேப்பர்க்காரச் சிறுவன் ஒவ்வொரு வீடாக பேப்பரை விசிறி விட்டு போய்க்கொண்டிருந்தான்.

அவள் அந்த வீட்டின் வெளியே அழகுக்காக போடப்பட்டிருந்த அந்த சிறிய சைஸ் பாறையில் உட்கார்ந்திருந்தாள். மார்கழிப் பனியில் அவளே அவசரமாகப் போடப்பட்ட கோலம் போலத் தெரிந்தாள். அழுது அழுது சிவந்திருந்தன அவள் கண்கள். ஏனோ தானோவென்று சீவப்பட்டு ஒற்றை ரப்பர் பேண்டால் குதிரை வால் போடப்பட்டிருந்தது அவளது கூந்தல். முகத்தில் பவுடரும் உதட்டில் சாயமும் மைனஸ். தொள தொள சர்ட்டும், வெளிறிய ஜீன்ஸும் ஐ.டி ஐ.டி என்று சொல்லாமல் சொன்னது. அவள் பார்வை தெரு முனையையே பார்த்திருக்க, அவள் கை அனிச்சையாக அவள் மடியில் இருந்த கைப்பையின் வாரை தடவி விட்டுக்கொண்டிருந்தது.

அந்தச் சிவப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் தெரு முனையில் திரும்பும் போதே அவள் எழுந்து கொண்டாள். அந்த காரில் வரும் யாரையோ அவள் கண்கள் தேடின.

கார் அவளருகில் வந்து நின்றது. காரை ஓட்டிக் கொண்டு வந்த அருண் கண்ணாடியைக் கீழிறக்கி அவளை அளப்பது போல மேலும் கீழும் பார்த்தான்.

குட் மார்னிங் மிஸ்டர் அருண்

குட் மார்னிங். நீங்க...

“மை நேம் இஸ் மாயா. ஒரு முக்கியமான விசயம் உங்க கிட்ட பேசணும்”

அருண் கண்களில் ஆச்சரியத்துடன் காரை விட்டு இறங்கினான்.

“உள்ள வாங்க! ப்ளீஸ் கம் இன்” என்று கையிலிருந்த சாவியால் வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

அருண் வயது 38. பதிமூன்று வருடங்கள் காவல்துறையில் புலனாய்வுப் பிரிவில் பணி புரிந்து விட்டு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த அந்தக் கசப்பான சம்பவத்தினால் வேலையை விட்டு விட்டான். தனிக்கட்டை. பரம்பரை சொத்து இன்னும் நான்கு தலை முறைக்கு வரும். ஊரில் பல ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல விவசாயம் நடக்கும் காலங்களில் சொந்த ஊரிலும் மற்ற நாட்களில் சென்னையிலும் வாசம்.

சென்னையில் இருந்தால் தவறாமல் காலை 5:30 மணிக்கு எழுந்து மெரினாவில் நடை பழகிவிட்டு 7:30 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம். இன்றும் அப்படித்தான் மெரினா போய் விட்டு வருகிறான். வந்தால் வீட்டு வாசலில் பௌர்ணமி போல இந்த மாயா.

வீட்டின் வரவேற்பரை சோபாவில் அவளை அமரச் சொல்லி விட்டு, அவள் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

“காபி ஆர் டீ? என்ன சாப்புடிறீங்க?” என்று கேட்டான்.

“தேங்க்ஸ் ஃபர் ஆஸ்கிங்க். எனக்கு ஒண்ணும் வேண்டாம்”

“ஓகே. என்ன விசயமா என்கிட்ட பேசணும்?”


“ஒரு கொலை விசயமா?”


“என்னது கொலையா?”. அருண் புலனாய்வுப் பிரிவில் வேலை பார்த்த போது பல இடியாப்பச் சிக்கல் வழக்குகளை லாவகமாகக் கையாண்டு தீர்த்திருக்கிறான்.

“ஆமா. என் பாய் ஃப்ரண்டை ஒரு கொலை பண்ணிட்டதா போலிஸ் பிடிச்சு வச்சுருக்காங்க. அவனை ரிலீஸ் செய்யணும். அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும். ப்ளீஸ்”

“இதுல நான் என்ன செய்ய முடியும்? நான் வாலண்டரி ரிட்டயர்மென்ட் குடுத்துட்டேன். என் பேச்செல்லாம் இப்போ செல்லுபடியாகாது”

“நீங்க அதெல்லாம் செய்ய வேண்டாம். என் பாய் ஃப்ரண்ட் அந்தக் கொலையை செஞ்சிருக்க மாட்டான். நீங்க தான் அதை ப்ரூவ் பண்ண ஹெல்ப் பண்ணனும். என் ஃப்ரண்டு உங்களைப் பத்தி சொன்னாள். அதான் உங்க கிட்ட வந்தேன்”

“அய்யோ. இந்த வேலையே வேணாம்னுதான் நான் ரிசைன் பண்ணேன்.”


“நீங்க இப்பிடி சொல்லக்கூடாது. எனக்கு உங்களை விட்டா வேற வழியில்ல”


“ஓகே. கொலையப் பத்தி சொல்லுங்க. நான் என்ன விதத்துல உதவி செய்ய முடியும்னு பாக்குறேன்”


“ரெண்டு நாள் முன்னாடி ரோட்டோரமா ஒரு பெண் பிணம் கிடந்ததுன்னு பேப்பர்ல படிச்சிங்களா?”

அருண் நெற்றியைச் சுருக்கி யோசித்தான். “டெய்லி நாலு ந்யூஸ் இப்பிடி வருது. இதுல எதுன்னு நான் ஞாபகம் வச்சிக்கிறது? மேல சொல்லுங்க மாயா”

“வேளச்சேரியில இருந்து தாம்பரம் போர ரோட்டுல”

“நினைவில்ல. மேல சொல்லுங்க?”

“அந்தக் கொலைய செஞ்சது ரமேஷ்தான்னு போலிஸ் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க. அவன எப்பிடியாவது நீங்க தான் காப்பாத்தணும்”


“ரமேஷ் அந்தக் கொலைய செஞ்சிருக்க மாட்டான்னு எப்பிடி சொல்றீங்க?”


“எனக்கு நல்லா தெரியும். ரமேஷ் செஞ்சிருக்க வாய்ப்பே இல்ல”


“எப்பிடி இவ்வளவு டெஃபனிட்டா சொல்றிங்க? ரமேஷே செஞ்சிருக்கலாமே?”


“நோ மிஸ்டர் அருண். ரமேஷ் வாஸ் வித் மி தட் டே”


“சோ. யூ ஹாவ் அன் அலிபி. வொய் காண்ட் யூ டெல் திஸ் டு த போலிஸ்? இஃப் போலிஸ் இஸ் நாட் பிலிவிங் யூ, யூ மே அப்ரோச் அ லாயர். வொய் மி?”


“நோ. ஐ டோண்ட் ஹாவ் அலிபி. அவன் கொலை நடந்த நேரம்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்ற டைம்ல என் கூட இல்ல. ஆனா அதுக்கு டு ஹவர்ஸ் முன்னாடி நானும் அவனும் குரோம்பேட் நய்ஹால ஷாப்பிங்க் பண்ணிட்டு இருந்தோம்.”


“டு ஹவர்ஸ்க்குள்ள கொலை நடந்த எடத்துக்குப் போயிருக்க வாய்ப்பு இருக்கே? கொலை செய்யப்பட்ட பொண்ணு யாரு?”


“அவ ரமேஷோட எக்ஸ் கேர்ள் ஃப்ரண்ட். ஷி ப்ரோக் அப் வித் ஹிம். ஷி இஸ் கெட்டிங்க் மேரீட் இன் அ மன்த்.”


“ஸோ, அவன் அவள கொலை பண்ணியிருக்கலாம் அப்பிடிங்கிறதுக்கு போலிஸ் காட்டப்போற மோட்டிவ் இது தான்”


“ஆமா. ஆனா கொலை நடந்ததா சொல்லப்படுற டைம்ல இருந்து அரை மணி நேரம் கழிச்சு என்கிட்ட ஃபோன்ல பேசுனான். அவன் கிட்ட பதட்டம்ங்கிறது கொஞ்சம் கூட இல்லை. அதோட என் ரமேஷ் பொய் சொன்னான்னா உடனே கண்டு பிடிச்சிடலாம். அவனுக்கு பொய் சொல்லக்கூட தெரியாது”


“உங்களுக்கு ரமேஷை எத்தனை நாளாத் தெரியும்?”


“லாஸ்ட் டூ மன்த்ஸா. ஐ வாஸ் ப்ளானிங்க் டு மூவ் இன் வித் ஹிம் நெக்ஸ்ட் மன்த்”


“ஐ ஸீ. லுக் ஹியர் மிஸ் மாயா. ஐ அம் நாட் யெட் கன்வின்ஸ்ட் எனஃப் டு ஹெல்ப் யூ அண்ட் யுவர் ஃப்ரண்ட். ஐ நீட் மோர் இன்ஃபர்மேஷன். நவ் யூ கோ டு யுவர் ஹவுஸ். ஐ வில் கம் அரௌண்ட் நூன் டு மீட் ரமேஷ் அண்ட் ஐ வில் டிசைட் ஆஃப்டர்வர்ட்ஸ். வாட் டு யூ ஸே?”


“தட் சவுண்ட்ஸ் பெட்டர். இஃப் யூ டாக் டு ரமேஷ் யூ வுட் அன்டர்ஸ்டேண்ட் தட் ஐ ம் கரெக்ட்”


“எந்த போலிஸ் ஸ்டேசன்ல அவன வச்சிருக்காங்க?”


“மடிப்பாக்கம்”


“ஓக்கே தென். மீட் யூ தேர் அட் நூன்”


“தேங்க் யூ. மிஸ்டர் அருண். அட்லீஸ்ட் யூ அக்ரீட் டு மீட் ரமேஷ். ஐம் சோ ரிலீவ்ட். யூ வில் டெஃபனட்லி ஹெல்ப் அஸ். திஸ் இஸ் மை நம்பர்” என்று கைப்பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.


வாங்கிப் பார்த்து விட்டு பர்ஸுக்குள் வைத்துக் கொண்டான் அருண். மாயா கேட்டைத் திறந்து கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தாள்.

அருணின் புலனாய்வு மூளை மனோ வேகத்தில் யோசித்துக் கொண்டிருந்தது. ‘இந்தக் கேஸில் ஈடுபடுவது சரியா?’

கிச்சனுக்குள் சென்று காஃபி மேக்கரில் இருந்த டிக்காக்‌ஷனை கப்பில் ஊற்றி பாலும் சக்கரையும் கலந்து கொண்டு சிப்பிக் கொண்டே ஸ்டடி அறைக்கு வந்து கம்ப்யூட்டர் திரையை ஒளிரச் செய்தான்.

கூகுளில் மாயா சொன்ன செய்தியைத் தேடினான். வந்து விழுந்த பக்கங்களைப் படித்துப் பார்த்ததில் போலிஸ் விசாரணையில் ஏதோ ஒன்று இடரியது. ரமேஷைச் சந்திக்கும் முடிவுக்கு வந்தான்.

(தொடரும்)

5 comments:

பின்னோக்கி said...

கதை நல்லாயிருக்கு. நிறைய இங்கிலீஷ் பேசுறாங்க. அது எதாவது க்ளூவான்னு தெரியலை :). மாயா எதோ பேய் மாதிரி இருக்கு. பார்ப்போம் :)

கலகலப்ரியா said...

ஆஹா... நீங்களும் தொடரா... நடத்துங்க நடத்துங்க...!

நர்சிம் said...

முகிலன்...

மிக நல்ல நடை.நீங்கள் எழுதுவது தான் உண்மையான க்ரைம் களம் பாஸ்.

தொடருங்கள்.தொடர்வேன்.

Unknown said...

பின்னோக்கி
//கதை நல்லாயிருக்கு. நிறைய இங்கிலீஷ் பேசுறாங்க. அது எதாவது க்ளூவான்னு தெரியலை :). மாயா எதோ பேய் மாதிரி இருக்கு. பார்ப்போம் :)
//

நீங்க இன்னும் நர்சிம் கதையோட பாதிப்புல இருந்து விலகலன்னு நினைக்கிறேன். க்ளூ எல்லாம் ஒண்ணும் இல்ல சார். ஐ.டின்னு சொல்லியாச்சு அப்புறம் கொஞ்சமாவது பீட்டர் உடலன்னா எப்புடி?

கலகலப்ரியா

நீங்க எழுதுற தொடர் மாதிரி வருமா?

நர்சிம்

மனசுல ஒண்ணு நினச்சிட்டு எழுதுறேன். எப்பிடி போகுதுன்னு பாப்போம்.

அது சரி(18185106603874041862) said...

Very good start Mukilan...