Sunday, April 26, 2009

வோட்டு போட மறக்காதீர்கள்

நண்பர்களே,

இலங்கையில் போர் முடிவுக்கு வரும் தருவாயில் இருக்கிறது. விடுதலைப் புலிகள் வீழ்ந்து விடலாம். தமிழர்கள் வேலியால் சூழப்பட்ட சித்திரவதைக் கொட்டிலில் அடைக்கப் படலாம். ஹிட்லர் யூதர்களுக்கு செய்த கொடுமைகள் நம் சகோதர சகோதரிகளுக்கு நிகழ்த்தப்படுவதை தடுக்க வக்கில்லாமல் நாம் கைகளைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருக்கப் போகிறோம். நாம் செய்ய முடிந்தவற்றை எல்லாம் செய்தாகி விட்டது. இனி நம்மால் என்ன செய்து இந்த வன்கொடுமையை தவிர்க்க முடியும்?

இந்த தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இந்த நிலைக்கு காரணம் ஆனவர்களைப் பழி வாங்க முடியும் நம்மால். தயவு செய்து வாக்களிக்க செல்லுங்கள். என்ன கஷ்டப்பட்டாலும் வாக்கு போட மறக்காதீர்கள். எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லையென்றால் 49-O பிரிவில் வாக்களித்து விட்டு வாருங்கள்.

தயவு செய்து இந்த ஒரு வேண்டுகொளையாவது நிறைவேற்றுங்கள்.

No comments: