Monday, September 21, 2009

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் விடுதலை

வெற்றி வெற்றி வெற்றி..

அண்ணன் குடுகுடுப்பை இன்று விடுதலை செய்யப்பட்டார். இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரே நாளில் விசாரித்து தீர்ப்பு சொல்லப்பட்ட ஒரே வழக்கு.

சி.பி.ஐக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாததத்தை தன் சாமர்த்தியமான வாதங்களால் சிதறடித்து இந்தியாவின் விடிவெள்ளியை வெளிக்கொண்டு வந்த பழமை பேசிக்கு எங்களின் பாராட்டுகளும் வாழ்த்துக்களும். அதோடு சரியான நேரத்தில் சரியான ஆதாரத்தை கொண்டுவந்த கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் முகிலனுக்கும் எங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவரை விடுதலை செய்யக்கோரி ஆங்காங்கே டீ குடிப்புப் போராட்டங்களும், கடையடைப்பு, பஸ் மரியல் செய்யும் தொண்டர்கள் வன்முறையைக் கைவிட்டு தலைவர் விடுதலை ஆனதை வெற்றிக்களிப்புடன் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

- கு.ஜ.மு.க செயற்குழு

4 comments:

Anonymous said...

அவர் விடுதலையானதுக்கு யாராச்சும் டீ குடிச்சு போராட்டத்தை ஆரம்பிக்கறாங்களா, அவங்களுக்கு என் ஆதரவு :)

Unknown said...

சின்ன அம்மிணி said...
//அவர் விடுதலையானதுக்கு யாராச்சும் டீ குடிச்சு போராட்டத்தை ஆரம்பிக்கறாங்களா, அவங்களுக்கு என் ஆதரவு :)//

நீங்க ஆளுங்கட்சியா அம்மிணி?

பித்தனின் வாக்கு said...

அண்ணன் குடுகுடுப்பையாரின் விடுதலையை கொண்டாட தம்பீ முகிலன் அவர்கள் இன்று ஜந்து நட்சத்திர ஓட்டலில் நீர் சாரி தண்ணீர் பார்ட்டி வைக்கிறார். கிருஸ்னா, காவேரி, பெரியார் தண்ணீர் கிடைக்காதவர்கள் இதில் கலந்துகொள்ளவும், அதிக மேல்னாட்டு தண்ணீருடன் மட்டன் பிரியானியும், கோழி அறுபத்திஜந்தும்(சிக்கன் சிக்ஸிடி பைவ்) வழங்கப்படும். தங்களின் மேலான வருகைக்கு முன்பதிவு செய்யவும்.

Nathanjagk said...

சின்னதா இருந்தாலும்... சிறப்ப்ப்ப்பா குரல்வளையை கடிச்சிருக்கீங்க!