Thursday, October 25, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 15




அன்று மாலை மாலா ஃபோன் செய்தாள்.

“என்னாச்சி மாலா?”

“அந்தப் படுபாவி கவுத்துட்டான் தேவா”

“என்ன சொல்ற மாலா?” வீட்டில் சொல்லிவிட்டானா?

“எங்க வீட்ல போட்டுக் குடுத்துட்டான். அப்பாவும் அம்மாவும் கூப்புட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க”

“ஐயயோ. நீ என்ன சொன்ன?”

“நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டா உன்னைத்தான்னு செஞ்சிக்குவேன்னு சொல்லிட்டேன்”

“அப்புறம்?” பெருமையாக இருந்தது. பெண் ஸ்ட்ராங்காக இருந்தால் தான் எந்தக் காதலும் திருமணத்தில் முடிய முடியும்.

“என்னை உடனே கிளம்பி இந்தியாவுக்கு வரச் சொன்னாங்க”

“நாம 10000 மைல் தாண்டி இருக்கிறதும் ஒரு விதத்துல நல்லதுதான் என்ன? இதே பெங்களூர்ல இருந்திருந்தாங்கன்னா ஃபோனா பேசியிருப்பாங்க? கிளம்பி வந்திருக்க மாட்டாங்க?”

“கரெக்டுடா. நான் ப்ராஜெக்ட் இருக்கு. இப்ப நினைச்சதும் வர முடியாது. ஆறு மாசமாவது ஆகும்னு சொல்லிட்டேன்”

“குட். ஆறு மாசம் போதுமான டைம். அதுக்குள்ள தங்கச்சிக்கி கல்யாணம் ஏற்பாடு செஞ்சிட்டு நானும் வீட்டுல இந்த விசயத்தை ஓப்பன் செஞ்சிடுவேன்”

“ஆனா ஒரு சிக்கல்”

“என்ன?”

“ஆறு மாசமும் அம்மா இங்க வந்து என் கூட இருக்கப் போறாங்க. விசாவுக்கு இன்விட்டேஷன் அனுப்ப சொல்லியிருக்காங்க. இன்னும் 2-3 வீக்ஸ்க்குள்ள இங்க வந்துடுவாங்க”

“ஐயோ நேர்ல பார்த்துக்க முடியாதா?”

“ஆமாம்” அவள் குரலில் உண்மையான சோகம் எதிரொலித்தது. எனக்குள்ளும் அந்த சோகம் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்தது. வீட்டிற்கு அழைத்து தங்கையின் திருமண ஏற்பாடு பற்றி விசாரித்தேன். பார்த்துவிட்டுப் போன மாப்பிள்ளைக்கு தங்கையைப் பிடித்திருக்கிறதாம். ஸ்பிக்கில் ஆஃபிஸராக வேலை பார்க்கிறாராம். குவார்ட்டர்ஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பமாம். நகையும் வரதட்சணையும் தான் கொஞ்சம் அதிகம் எதிர்பார்ப்பார்கள் போல. கவலைப் படாமல் பேசி முடிக்கச் சொன்னேன். பேங்க் பேலன்ஸ் மொத்தத்தையும் துடைத்து எடுக்க வேண்டும். பரவாயில்லை. சமாளித்துவிடலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக வேலையில் இந்தக் கவலையைத் தொலைத்திருந்தேன். அவ்வப்போது மாலாவுக்கு ஃபோன் செய்து அவளிடம் இருந்து தைரியம் கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்றிருந்தது. வெள்ளி இரவு அல்பனியில் மாலாவின் அப்பார்ட்மெண்ட் பால்கனியில் கையில் சிகரெட் புகைய நின்றிருந்தேன். எதிரே மாலா.

“அம்மா மண்டே விசா இண்டர்வியூ போறாங்க. விசா கிடைச்சதும் புதன்கிழமை கிளம்பிடுவாங்க”

“ஓ. அப்போ இதுதான் நாம தனியா இருக்கிற கடைசி வீக்கெண்டா?”

மாலா என் கையில் இருந்த சிகரெட்டைப் பிடுங்கி கைப்பிடியில் நசுக்கி வெளியே எறிந்துவிட்டு, என்னை நெருங்கி என் தோளில் சாய்ந்து கொண்டாள். இடது கையால் அணைத்துக் கொண்டேன்.

“உன்னைப் பாக்காம எப்பிடி இருக்கப் போறேன்னு தெரியலடா. ரொம்பக் கஷ்டமா இருக்கும்”

“ஏய் என்ன. கிட்டத் தட்ட ஒரு வருசம் இந்தியாவுல இருந்தியே..”

“ம்ம்.. அது வேற வழியில்ல. 10,000 மைல் டிஸ்டன்ஸ். இது அப்பிடியா? 4 மணி நேர டிரைவ் தூரத்துல இருந்தும் பார்க்க முடியாதே”

“கொஞ்ச நாள் தானே. அதுக்குப் பிறகு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு ஒரே வீட்டுல ஒரே ரூம்ல தானே இருக்கப் போறோம். அப்ப நமக்கு நடுவுல டிஸ்டன்ஸே இல்லாம இறுக்கமாக் கட்டிப் பிடிச்சிக்கலாம்”

“இப்பவே என்னைய இறுக்கக் கட்டிப் பிடிச்சிக்கோ”

இறுக்கிக் கொண்டேன். என் கழுத்தில் முகம் புதைத்தாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். காது மடலை மூக்கால் உரசினேன். பற்களால் கவ்வினேன். அவளுக்குக் கூசியது போல. நெளிந்தாள்.

“ஏய் என்ன பண்ற நீ?” என் முகத்தில் இருந்து விலகி என்னை நோக்கிக் கேட்டாள்.

“ஒண்ணும் பண்ணலை” அவள் முகத்தை நெருங்கி என் மூக்கால் அவள் மூக்கை நசுக்கினேன். “3 இடியட்ஸ்ல சொன்ன மாதிரி கிஸ் குடுக்க வரும்போது மூக்கு முட்டுது பார்த்தியா?”

“அதான் தலைய சாச்சிக்கலாமே” தலையைச் சாய்த்து என் உதட்டைக் கவ்வினாள். முத்தம் கொடுத்துக் கொண்டே என் கையை அவள் டிசர்ட்டுக்குள் விட்டேன்.

“ஏய் என்ன பண்ற?”

“ஓ. சாரி சாரி. உணர்ச்சிவசப் பட்டுட்டேன்” கையை வேகமாக வெளியில் இழுத்தேன்.

“இப்பிடி பால்கனியில நிக்கும்போதா செய்வ? வா உள்ள போயிடலாம்”

அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தேன். “என்னடா பாக்குற? வா உள்ள” கையை இழுத்துக் கொண்டு போய் மெத்தையில் விழுந்தாள். அவள் மேல் பரவினேன். உடைகள் களைந்தோம். முயங்கத் துவங்கையில் “மாலா ப்ரொட்டெக்‌ஷன் இல்லாம..” என்று இழுத்தேன்.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்டா. நீ கண்டினியூ பண்ணு” என்று இழுத்து அணைத்துக் கொண்டாள்.

*********************************************************************************************
அடுத்த வாரம் ஒரு வியாழக்கிழமை அவள் அம்மா வந்திறங்கினார். ஆஃபிஸில் இருக்கும் நேரம் தவிர தொலை பேசுவது குறைந்து போனது. சில நாட்கள் நள்ளிரவில் அழைப்பாள். நான்கு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிடுவாள். தினமும் அவள் அம்மா நீதிபோதனைகள் வழங்கி அறுப்பதாகப் புலம்பினாள். சிரிப்பு வந்தாலும் சிரித்து வைத்தாள் திட்டுவாள். ஊரில் தங்கை திருமணத்துக்கு நாள் நிச்சயம் செய்துவிட்டதாக ஃபோன் வந்தது. ஃபிப்ரவரியில் திருமணம். ஆஃபிஸில் சொல்லி லீவ் கேட்டு வைத்தேன்.

கிறிஸ்துமஸ்க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கையில் மாலா அழைத்தாள். அதிசயமாக மாலை நேரத்தில்.

“என்ன மாலா வழக்கமா ஈவினிங் கூப்புட மாட்ட?”

“வீக் எண்ட் என்ன ப்ளான் உனக்கு?”

“எனக்கென்ன ப்ளான். ஒண்ணுமில்லை. வீட்டுல தான்”

“கிளம்பி இங்க வா. அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொல்றாங்க”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: