Thursday, August 26, 2010

கிரைம் டெஸ்ட் - 2

வாசலில் நின்றவளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் மூச்சடைத்துவிட்டது அருணுக்கு.

அந்தக் காலை வேளையிலும் லேசான மேக்கப் அவள் கன்னத்தில் தெரிந்தது. உதடுகளிலும் மெல்லிய லிப்ஸ்டிக் பூச்சு. கண்கள் அழுததினால் வீங்கியிருந்ததை கன்சீலர் போட்டு மறைக்க முயற்சி செய்திருந்தாள். லிஃப்டில் ஏறிவரும் போது போட்ட அவசர மேக்கப் என்றாலும் அதில் ஒரு ஒழுங்கு இருந்தது.

“நீ.. நீ.. நீத்தா...” அருண் அவளைப் பார்த்து இழுத்தான்.

“மே ஐ கம் இன்?” குரல் லேசாக உடைந்திருந்தது.

அருணின் உடல் அனிச்சையாகத் திரும்பி அவளுக்கு வழி விட்டது. உள்ளே வந்தவள் அருணைப் பார்த்து லேசாகப் புன்னகைக்க முயற்சித்தாள். அந்த முயற்சி தோல்வியடைந்ததை அவள் வாயே கோணிக் கேலி செய்தது.

“ஐ அம் நாட் நீத்தா. ஐ அம் ஹர் சிஸ்டர் ப்ரீத்தா. ப்ரீத்தா ஷர்மா” என்று வலது கையை முன்னால் நீட்டினாள்.

அருண் ஒரு பெருமூச்சோடு அந்தக் கையைப் பற்றி குலுக்கினான்.

“நான் நேற்று தூங்கப் போகுமுன் பார்த்த கடைசிச் செய்தி நீத்தாவின் மரணம். இன்று காலை நீத்தாவைப் போலவே நீங்கள் வந்து வாசலில் நின்றதும் அதிர்ந்துவிட்டேன்”

“யா. நிறையப் பேர் எங்கள் இருவரையும் தவறாகப் புரிந்திருக்கிறார்கள். அதனால் தான் நான் ஊரிலே இருந்து கொண்டு அப்பாவின் பிசினஸை கவனித்து வருகிறேன்”

“ஓ.. சரி என்னைப் பார்க்க வந்த விசயம்?”

“என் அக்காவின் மரணம். அது விபத்து என்று போலீஸ் சொல்கிறது”

“ம்.. இஃப் யு டோண்ட் மைண்ட்” என்று ஒரு சிகரெட்டை எடுத்து அவள் அனுமதி கேட்பது போலத் தயங்கினான். அவள் எழுந்து ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டாள். லைட்டரைக் கிளிக்கி இரண்டு சிகரெட்டுகளையும் பற்ற வைத்தான்.

“மேலே சொல்லுங்கள்” புகையை விட்டத்தை நோக்கி விட்டு விட்டு அருண் அவள் முகத்தையே பார்த்தான்.

“எனக்கு அக்காவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அது விபத்தாய் இருக்காது. கொலையாய் இருக்க வேண்டும்”

“அவ்வளவு ஆணித்தரமாய் எப்படிச் சொல்கிறீர்கள்?”

“அவளுக்கும் சர்வேஷுக்கும் காதல் இருந்தது தெரியுமா உங்களுக்கு?”

“கிசு கிசு படித்திருக்கிறேன். இருவரும் மறுத்திருக்கிறார்கள். மாடல் கிரிக்கெட் பிளேயர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போயிருக்கிறேன்”

“ஆனால் அது உண்மை. 100% உண்மை. இந்த விவரம் எனக்கு மட்டுமே தெரியும். இருவரும் திருமணம் செய்து கொள்வதாகக் கூட இருந்தார்கள்”

“அப்படியா? ம்ஹ்ம்.. அதற்கும் கொலைக்கும்...”

“நான் இன்னும் முடிக்கவில்லை. திடீரென்று சர்வேஷ் அந்த லண்டன் தொழிலதிபரின் மகளைத் திருமணம் செய்யப் போகிறான்”

“ஆம் நான் கூட செய்திகளில் வாசித்தேன். அவர்களுக்குள் பிரச்சனையா?”

“பிரச்சனை ஒன்றும் இல்லை. காசைப் பார்த்ததும் வாலாட்டிக் கொண்டு போய் விட்டது அந்த நாய்”

“மீதியை நான் சொல்கிறேன். தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் நீத்தா. மறுக்கும் பட்சத்தில் உறவுக்கான ஆதாரங்களை வெளியில் சொல்வதாக மிரட்டியிருப்பார். அதனால் சர்வேஷ் அவளைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்”

“எக்ஸாக்ட்லி”

“ஹ்ம்ம். இந்த சந்தேகம் உங்களுக்கு வராமலிருந்திருந்தால் தான் ஆச்சரியம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?”

“நீங்கள் ஒரு எக்ஸ் போலிஸ் மேன். உங்களின் துப்பறியும் திறனைப் பற்றி என் சென்னை நண்பன் சிலாகிக்கக் கேட்டிருக்கிறேன். அவனைத் தொடர்பு கொண்டே நீங்கள் இங்கே இருப்பதை அறிந்து கொண்டேன்.”

“ம்ஹ்ம்.. நான் பிரைவேட் டிடெக்டிவ் இல்லை. ஏதோ தமிழ்நாடு போலிஸ் எப்போதாவது என் உதவியைக் கேட்டால் அவர்களுக்காக செய்வேன். அங்கே நான் போலீஸுக்கு உதவி செய்வதால் கிரைம் சீனுக்குப் போவது, விசாரணை செய்வது என்று எனக்கு சுதந்திரம் அதிகம் இருக்கும். இது வேறு இடம். இங்கே எனக்கு அதே அளவு உதவிகள் இருக்குமா தெரியவில்லை. அதனால் தயக்கமாக இருக்கிறது”

“தயவு செய்து எனக்கு நீங்கள் உதவ வேண்டும். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்”

“எனக்குப் பணம் பொருட்டல்ல. சேலஞ்சுக்காகவே இதை செய்கிறேன். முதலில் போலீஸைப் போய் பார்ப்போம். அவர்களிடம் பேசிய பின் என்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம். ஓக்கே?” என்றவாரு சோஃபாவில் இருந்து எழுந்தான்.

“தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச்” என்று எழுந்து அவனைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

“கிவ் மீ டென் மினிட்ஸ்” என்று பாத் ரூமை நோக்கி நடந்தான்.

**********************************************************
டெல்லி கமிஷனர் செல்வாவின் முன்னால் அருணும் ப்ரீத்தாவும் அமர்ந்திருந்தனர். அருண் சென்னைக்குத் தொலைபேசி டெல்லியில் கமிஷனராக இருக்கும் தமிழன் செல்வாவைப் பற்றி அறிந்து கொண்டான். செல்வாவின் பேட்ச் மேட்டான சென்னை கமிஷனர் செல்வாவுக்கு அருணைப் பற்றி எல்லாமும் சொல்லிவிட்டதால் இந்தக் கேஸில் மூக்கை நுழைப்பதில் அருணுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் அருண் கமிஷனரின் முகத்தை ஏறிட்டான்.

“மிஸ்டர் அருண்”

“ஜஸ்ட் அருண்”

“ஓக்கே அருண். இந்தக் கேஸ் ஹோப்லெஸ். ப்யூர் ஆக்ஸிடெண்ட். தேவையில்லாம நீங்க மூக்கை நுழைச்சி உடைபடப் போறீங்க”

இது அருணின் ஈகோவைத் தொட்டுப் பார்த்தது.

“கேஸ் டீட்டெயில்ஸ் சொல்லுங்க செல்வா. அப்புறமா பாப்போம்”

“ஓக்கே. நீத்தாவுக்கு டிப்ரெஸ்ஸன் இருக்கிறதால அதுக்கு டேப்லட் எடுத்துக்கிறது வழக்கம். அது மாதிரி முந்தின நாள் நைட் கொஞ்சம் ஓவர்டோஸா எடுத்திருக்காங்க. ஆல்கஹாலும் எடுத்திருக்காங்க. அதுனால அதிகப்படியா தூங்கிட்டாங்க. அந்த அப்பார்ட்மெண்ட்ல பெட்ரூம்ல குளிருக்காக ஃபயர் ப்ளேஸ் இருக்கு - கேஸ் ஃபயர் ப்ளேஸ். அது முதல் நாள் போட்டது அணைஞ்சிருக்கு. பட் கேஸ் க்ளோஸ் பண்ணாததால கேஸ் ரூம் முழுக்க பரவி - ஏசி ரூம்ங்கிறதால வெளியேறாம தூக்கத்துலயே மூச்சுத்திணறி இறந்துட்டாங்க”

“எப்போ உயிர் போச்சின்னு தெரியுமா?”

தமிழ் தெரியாத ப்ரீத்தா இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அரவுண்ட் 12:30. அந்த ரூம் அளவை வச்சிப் பாக்கும்ப்போது 11:00 போல  கேஸ் லீக் ஆரம்பிச்சிருக்கணும். இதோ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்”

கையில் எடுத்துப் புரட்டிப் பார்த்தான். ப்ரீத்தாவிடம், “ஸீ ப்ரீத்தா. இட் லுக்ஸ் லைக் த கேஸ் இஸ் அன் ஆக்சிடண்ட்”

“நோ நோ அருண். ப்ளீஸ். இன்வெஸ்டிகேட் ஃபர்தர் அண்ட் டிசைட்”

செல்வாவிடம் திரும்பிய அருண் “செல்வா, யாராவது சந்தேகப்படும்படியா அந்த அப்பார்மெண்ட் காம்ப்ளெக்ஸ்க்குள்ள நடமாடினாங்களா?”

“இல்லை அருண். அது ரொம்ப செக்யூர்ட் அப்பார்ட்மெண்ட். வெளியாள் யாரும் அவ்வளவு சுலபமா உள்ள போக முடியாது. வெஹிக்கிள்ஸ்க்கு டேக் இருக்கு. டோர்ஸ் ஆட்டோமேட்டிக்கா அதை ரீட் செஞ்சி திறந்துக்கும். வேலைக்காரங்களுக்கும் செக்யூரிட்டீஸ்க்கும் உள்ளயே குவார்ட்டர்ஸ் இருக்கு. அப்பிடி யாரும் உள்ள போய் ஈஸியா கொலை செஞ்சிர முடியாது. அதோட வீடு வேற பூட்டியிருக்கு. கீ இல்லாம அந்த டோர்ஸைத் திறக்கவே முடியாது”

“ப்ரீத்தா. நீத்தா தவிர வேறு யாராவது சாவியை வைத்திருக்கிறார்களா?”

“ஹூ எல்ஸ். சர்வேஷ் ஹேஸ் எ கீ”

“பட் சர்வேஷ் அந்த நேரத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தாரே? ஐ ஃபீல் திஸ் கேஸ் இஸ் ஹோப்லெஸ்”

“நோ டோன்ட் ஸே சோ. ப்ளீஸ் டூ சம்திங்” கெஞ்சுவது போலப் பார்த்தாள்.

“ஓக்கே. செல்வா நான் அந்த கிரைம் சீன் பாக்க முடியுமா?”

“ஷ்யூர் அருண். ஐ’ல் மேக் அரேஞ்ச்மெண்ட்ஸ்”

******************************************

வெளியே இருந்த லக்சுரிக்கு கொஞ்சமும் குறையாமல் உள்ளேயும் செழிப்பாய் இருந்தது அந்த வீடு. எங்கெங்கு காணினும் ரோஸ் வுட்டடா என்பதாகத்தான் இருந்தது. நடு ஹாலில் ஒரு பெரிய டீப்பாயின் மேல் நிஜ யானையின் மினியேச்சர் போல ரோஸ்வுட்டாலான யானை. சோஃபாக்களும், திரைச்சீலைகளும் செல்வச் செழிப்பை முரசு கொட்டிக்கொண்டிருந்தன. பெரிய வீடானதால் பெரும்பாலான இடங்கள் வெற்றிடமாக இருந்தது. ஹாலில் இருந்து இடது புறம் போனால் பெட்ரூம். உள்ளே ஒரு பெரிய கிங் சைஸ் மெத்தை நடு அறையில் போடப்பட்டிருந்தது. பெரிய அப்பார்மெண்ட் காம்ப்ளெக்ஸ் ஆனதால் கேஸ் மொத்தமாக வாங்கி குழாயில் வினியோகம் செய்தார்கள். அதனால் இரண்டு பெட்ரூம்களிலும், ஹாலிலும் ஒரு ஃபயர் ப்ளேஸ் இருந்தது.

ஃபயர் ப்ளேஸில் மரம் போடப்பட்டிருப்பதைப் போன்ற ஒரு செட்டப் இருந்தாலும் எரிவதென்னவோ கேஸில் தான். அந்த ஃபயர் ப்ளேஸுக்கு இடது புறம் தரையில் ஒரு சிறு குழாயின் கைப்பிடி இருந்தது. கேஸைக் கண்ட்ரோல் பண்ணும் லிவர். காற்றில் இன்னமும் எல்.பி.ஜி வாயுவின் மணம் வீசுவது போல அருணுக்குத் தோன்றியது.

வீடு சுத்தமாக இருந்தது. தரையில் ஒரே ஒரு ரோபோ பொம்மை குப்புற விழுந்து கிடந்தது. மெத்தை நீட்டாக இருந்தது. நீத்தா படுத்திருந்த இடம் லேசாகக் குழிவாக இருந்தது. அந்த அறையின் இரண்டு ஜன்னல்களும் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தன. அதன் வழியாகவோ இல்லை வேறு வழியாகவோ யாரும் உள்ளே நுழைய முடியாது. ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்தான். தூரத்தில் இருந்த A-4 வாசலை ஒரு வேலைக்காரி கூட்டிக்கொண்டிருந்தாள்.

ஜன்னலை சுற்றி விரலை ஓட்டிப் பார்த்த அருணுக்கு எதுவும் தட்டுப் படவில்லை. ஒரு தோல்வி உணர்ச்சியோடு மீண்டும் ஒரு முறை அறை முழுக்கக் கண்களால் கழுவி விட்டு வெளியே வந்தான். இருவரும் அவன் பின்னாலேயே.

இவ்வளவு பெரிய வீட்டுக்குக் கிச்சன் கொஞ்சம் அளவில் சிறியதாகவே இருந்தது. கிச்சனில் இருந்த சாமான்கள் கூட கழுவப்பட்டு சுத்தமாக அடுக்கி வைக்கப்படிருந்தன. அதிகப் படி சாமான்கள் இருப்பது போலவும் தெரியவில்லை. ஆமாம் மாடல்கள் சாப்பிடுவதற்கு அதிகப் பாத்திரம் தேவைப்படாது என்று நினைத்துக் கொண்டான் அருண்.

“ப்ரீத்தா வாட் டு யு சே”

“எனக்கு முதல் சந்தேகம் நீத்தா படுத்திருந்ததுதான். அவள் உடை அணிந்து படுத்ததே இல்லை. நிர்வாணமாகப் படுத்துத்தான் பழக்கம். ஆனால் அவள் உடை அணிந்து படுத்திருந்தாள்”

அருண் திரும்பி செல்வாவைப் பார்த்தான். “ஆம் அருண். ஷி வாஸ்ண்ட் நேக்கட்”

ஸீ என்பது போல அருணை அர்த்தத்துடன் பார்த்தாள். “லுக் ப்ரீத்தா. அதை மட்டும் வைத்து இது கொலை என்று முடிவு கட்டிவிட முடியாது. இன்று மட்டும் அவள் உடையோடு உறங்கியிருக்கலாம் அல்லவா?”

பேசிக்கொண்டே கிச்சனில் இருந்து சரியாக கிச்சனுக்கு எதிரில் அமைந்திருந்த டைனிங் ஹாலுக்குள் வந்தான். ஒரு பெரிய டைனிங் டேபிள் 8 சேர்களுடன் அமைந்திருந்தது. அதில் நடுவில் ஒரு லேஸி சூசனும் அதன் மேல் பழங்களும் அலங்கரித்துக்கொண்டிருந்தன.

கிச்சனை ஒட்டியவாறு ஒரு சிறிய வட்ட வடிவ காஃபி டேபிளும் அதைச் சுற்றி இரண்டு நாற்காலிகளும் கிடந்தன. ஹாலில் இருந்தும், டைனிங் ஹாலில் இருந்தும் டிவியைப் பார்க்க ஏதுவாக அந்த 50 இன்ச் எல்.சி.டி டீவி சுவற்றில் மவுண்ட் செய்யப்பட்டிருந்தது.

அந்த காஃபி டேபிளின் மேல் இரண்டு கோப்பைகள் இருந்தன. ஒரு கோப்பை நீத்தா அருந்தியிருப்பாள் என்பதை அதன் மேல் படிந்திருந்த லிப்ஸ்டிக் கறை காட்டியது. அந்த இரு கோப்பைகளிலும் ஒரு விரற்கடை அளவுக்கு நீலத் திரவம் நிரம்பியிருந்தது.

(தொடரும்)

16 comments:

எல் கே said...

sarvesha illai preethava yaru antha kolaiyaali

vasu balaji said...

/LK said...
sarvesha illai preethava yaru antha kolaiyaali/

ரெண்டு பேருமில்லை. முகிலன் த கொலகார ப்ளாகர்:))

பிரபாகர் said...

தினேஷ்!...

பேசாமல் இதே போல் கிரைம் நாவல் மாதா மாதம் எழுதலாம்! அவ்வளவு பெர்பெக்ட்-ஆக இருக்கிறது.... கலக்குங்கள்...

பிரபாகர்...

பிரபாகர் said...

இன்னொரு விஷயம், நீத்தாவின் சகோதரின்னு சொல்லுவீங்கன்னு தெரியும், ஆனா சொல்லல... சஸ்பென்ஸ் போயிடும்னு...(ப்ளீஸ்... நம்புங்க)

பிரபாகர்...

senthil velayuthan said...

the one who died is not neetha ,its preetha.

Anonymous said...

@ ப்ரபாகர் - நான் சொல்லிட்டேன் :)

பிரபாகர் said...

ஆமாங்க அம்மணி... பார்த்தேன்... ரொம்ப நல்லா கதையை கொண்டு போறாரு....

பிரபாகர்...

Unknown said...

விறுவிறுப்பு..!!
அடுத்த பாகம் எப்போங்க..??

Unknown said...

Sir,
unga story superb...
Neethandrathu avala? Athuva?

sakthi said...

ராஜேஷ்குமார் ஞாபகத்துக்கு வர்றார் போங்க வாழ்த்துக்கள் தொடருங்கள்

Unknown said...

Arumai. Waiting for next episode

அது சரி(18185106603874041862) said...

நான் முதல்ல இருந்து படிச்சிட்டு சொல்றேன்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல திருப்பங்கள் முகிலன்.. நல்லா போகுது..

Chitra said...

Interesting story..... :-)

சாந்தி மாரியப்பன் said...

செம விறுவிறுப்பு...

Ramesh said...

செம விறுவிறுப்பு...கலக்கல்...