Saturday, August 28, 2010

கிரைம் டெஸ்ட் - 3

அந்த டைனிங் டேபிளில் இருந்த இரண்டு கோப்பைகளையும் நோக்கி கைகாட்டிக்கொண்டே அருண் சொன்னான் - “இட் லுக்ஸ் லைக் ஷி ஹேட் எ கெஸ்ட் த டே பிஃபோர்”

செல்வாவும் ப்ரீத்தாவும் டேபிளிலிருந்து அருணுக்கு பார்வையை பேன் செய்தார்கள். அருண் தொடர்ந்தான், “அண்ட் ஐ நோ ஹூ ஹி குட் பி”

இருவரும் பேசாமல் ஒரு கேள்விக்குறியோடு அருணின் முகத்தை ஏறிட்டார்கள். “நான் யூகிப்பது சரியாயிருந்தால் அது சர்வேஷ்”.

ப்ரீத்தா உடனே சந்தோசமாக, “ஐ நியூ இட்” என்று கத்தினாள்.

செல்வா - “எப்பிடி அருண் சொல்றீங்க?”

“நான் இந்த ட்ரிங் குடிச்சிருக்கேன் செல்வா. நேத்துத்தான் ப்ளேயர்ஸ் பார்ட்டியில. இது சர்வேஷ் இன்வெண்ட் செஞ்ச ட்ரிங்க். மார்ட்டினியையும் மார்கரெட்டாவையும் மிக்ஸடிச்சது. லேப்ல குடுங்க. கன்ஃபர்ம் பண்ணிடலாம்”

“ஆனா அருண், இதை மட்டும் வச்சி சர்வேஷ் தான் கொலை செஞ்சார்னு சொல்ல முடியாதே? அவர் வந்ததாவே வச்சிக்கிட்டாலும் அவர் வந்தது ஈவினிங் தானே? ஆனா நீத்தா இறந்து போனது மதியம் பன்னெண்டு மணிக்கில்லையா?”

“கரெக்ட் தான் செல்வா. நான் இன்னும் சர்வேஷ்தான் கொலைகாரன்னு சொல்லலையே?”

“அப்ப இது கொலைங்கிற முடிவுக்கு வந்துட்டீங்களா?”

“இன்னும் இல்லை செல்வா. அதுக்கு முன்னாடி, ஒரு கேள்வி. அதைக் கேக்குறதுக்கு முன்னாடி நீத்தா இறந்து கிடந்த பெட்ரூமுக்குள்ள போவோம்”

அருண் பையிலிருந்து இரண்டு சின்ன பாட்டில்களை எடுத்து இரண்டு கோப்பைகளிலும் இருந்த திரவத்தை நிரப்பினான். அந்த பாட்டில்களை பத்திரமாக சீல் செய்து தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

“செல்வா உங்க ஆஃபிஸ் போனதும் இதை லேப்ல குடுத்து அனலைஸ் செய்ய சொல்லணும்”

“ஓக்கே அருண்” அருணைப் பின் தொடர்ந்து இருவரும் அந்த பெட்ரூமுக்குள் நுழைந்தனர்.

தலையை ஒரு ரேடாரைப் போல இடம் வலதாய் திருப்பி கண்களால் அந்த அறையை மீண்டும் துழாவினான். அருணின் பார்வை ஃபயர் ப்ளேஸுக்கு அருகில் தரையில் இருந்த குழாயின் கைப்பிடியில் நிலை கொண்டது.

“செல்வா நேத்து நீங்க இந்த அறைக்குள்ள வரும்போது இந்த குழாய் திறந்திருச்சா இல்லை மூடியிருந்துச்சா?”

“எதுக்குக் கேக்குறீங்க?”

“இல்லை. இது வழியாத்தான் கேஸ் லீக் ஆனதா இல்லை வேற எங்கயாவது லீக் இருந்ததாங்கிறதுக்காகத்தான்”

“திறந்துதான் இருந்தது அருண். வேற லீக்கேஜ் எதுவுமில்லை. உள்ள போட்டிருக்கிற மரம் எல்லாம் எரிஞ்சி வேற எதுவும் எரிக்க இல்லாததால தீ அணைஞ்சிருக்கணும். கேஸ் லீக் ஆகியிருக்கணும்”

“நோ செல்வா. தட் டஸ்ண்ட் சீம் லைக் எ பாஸிபிளிட்டி. இந்த ஃபயர் ப்ளேஸை நல்லா பாருங்க. உள்ள இருக்கிறது மரம் மாதிரி ஒரு செட்டப்தான். அது எரியாது. கேஸ்தான் எரியும். அந்த மரம் மாதிரி இருக்கிறது தீயில செவப்பு கலரா மாறி மரம் எரியிற மாதிரி ஒரு ஃபீல் குடுக்கும். ஒரு நிமிசம்”

அருண் சுற்றும் முற்றும் பார்த்து அந்த ஃபயர் ப்ளேஸின் மேல் இருந்த தடுப்பில்  ஒரு லைட்டரை எடுத்து, கேஸ் குழாயைத் திறந்து பற்ற வைத்தான். குப்பென்று பற்றிய தீயில் அந்த மரம் மாதிரியான செட்டப் உண்மையான மரம் எரிவதைப் போல தோற்றமளித்தது.

“ஸீ. நான் சொன்னேனே. இந்த தீ அணைய வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறேன்”

“ம்ஹ்ம்... லுக்ஸ் லைக் தட்” செல்வா முகவாய்க்கட்டையை சொறிந்தான்.

“உங்க ஆஃபீஸ்க்கு ஃபோன் செஞ்சி யாரையாவது விட்டு இந்த ஃப்யர் ப்ளேஸ் மேனுஃபாக்ச்சரர்கிட்ட எரியிற தீ தானா அணைஞ்சி போக வழி எதுவும் இருக்கான்னு கன்ஃபர்ம் பண்ண சொல்லுங்க”

“ஓக்கே அருண்” என்ற செல்வா செல்ஃபோனை எடுத்து நம்பரை ஒத்தி மராத்தி கலந்த இந்தியில் ஆணைகளைப் பிறப்பித்தான்.

மூவரும் மீண்டும் ஹாலுக்குச் சென்றனர். அங்கே இருந்த சோஃபாவில் உட்கார்ந்த அருண், சிகரெட் பாக்கெட் எடுத்து நீத்தாவிடம் நீட்டினான். செல்வா ஜாக்கிரதையாக, “இங்க வேணாம் அருண். இன்னும் காத்துல கேஸ் வாசம் இருக்கு. வெளிய போயிடலாம்”

மூவரும் எழுந்து வெளியே வந்தனர். ஆளுக்கு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து நுரையீரலை நிரப்பி நிக்கோட்டினால் கோட்டிங் கொடுத்தனர். அப்போது வீட்டு வாசலின் அருகில் ஒரு பச்சை எழுத்துகள் நிரம்பின காகிதம் ஒன்று கீழே கிடந்ததைப் பார்த்தான் அருண்.

சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே வாசலை நோக்கி நடந்து அந்த காகிதத்தை கையில் எடுத்துப் பார்த்தான். செல்வா அருண் எதையோ பார்ப்பதைப் பார்த்துவிட்டு  “என்ன அருண் அது?” என்று கேட்ட வண்ணம் வாசலுக்கு நடந்தான்.

“FEDEX டோர் டேக். நேத்து பதினோரு மணிக்கு வந்திருக்கான். இது எப்பிடி விசாரணையில விட்டுப் போச்சி?”

செல்வா பதட்டமானான். “இந்த டேக் நேத்து எங்க கண்ணுல படவே இல்லை. அதோட இதை ஒரு விபத்துங்கிற கண்ணோட்டத்துலயே இருந்ததால நாங்க யாரும் வேற எதையும் யோசிக்கலை. இது கண்ணுல பட்டிருந்தா கண்டிப்பா நான் யோசிச்சிருப்பேன்” செல்வாவின் குரலில் குற்ற உணர்ச்சி மேலோங்கியிருந்தது.

“எனி வே. லெட்ஸ் நாட் வேஸ்ட் திஸ் லீட் நவ். பெட்டர் லேட் தேன் நெவர்” என்றவாறு அந்த டேக்கோடு வாசலில் இருந்த செக்யூரிட்டியை நோக்கி நடந்தான்.

*****************************
“நமஸ்தே சாப்” வாசலில் இருந்த செக்யூரிட்டி செல்வாவின் யூனிஃபார்மைப் பார்த்ததும் எழுந்து நின்று சல்யூட் ஒன்றைப் பிரயோகித்தான். ஹிந்தி அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் செக்யூரிட்டியிடம் விசாரிப்பதை செல்வாவிடம் விட்டு விட்டான் அருண்.

“அருண், FEDEX காரன் நேத்து வந்தானாம். லெட்டர்ஸ் எல்லாம் குடுத்துட்டு ரெண்டு பார்சல் மட்டும் ஹேண்ட் ஓவர் டு அட்ரஸீன்னு இருந்ததால அப்பார்ட்மெண்டுக்கே போய் குடுக்கப் போயிட்டானாம். இது சகஜமா நடக்கிறது தானாம். அப்பிடி வாங்க யாருமில்லைன்னா இந்த மாதிரி டோர் டேக் விட்டுட்டுப் போவாங்களாம். மூணு அட்டெம்ப்டுக்கு அப்புறம் அந்த பார்சலை அனுப்பினவங்களுக்கே திருப்பி அனுப்பிருவாங்களாம்”

“இன்னைக்கி FEDEX டெலிவரி வந்தாங்களான்னு கேளுங்க?”

“இன்னைக்கி இன்னும் வரலியாம்”

“ஓ.. நேத்து எந்த எந்த வீட்டுக்கு டெலிவரி குடுக்க போனாங்கன்னு எதுவும் இவங்க லாக் பண்ணியிருக்காங்களா?”

“இல்லை. ஆனா சிசிடிவியில ரெகார்ட் செய்வாங்களாம்”

“குட் சிசிடிவி இருக்கா? அப்பிடின்னா முந்தின நாள் சர்வேஷ் வந்திருந்தா அதுவும் சிசிடிவியில ரெக்கார்ட் ஆகியிருக்குமே?”

“இல்லை அருண். இவங்க எல்லா நேரமும் ரெக்கார்ட்/மானிட்டர் செய்யறதில்லை. நைட்ல மட்டும்தான். இந்த மாதிரி கொரியர், பிட்ஸா மாதிரி டெலிவரி பாய்ஸ் வரும்போது சிசிடிவி ஆன் செஞ்சி மானிட்டர் செய்வாங்களாம். முன்னது ப்ரைவசிக்காக. பின்னது செக்யூரிட்டிக்காக”

“ஓ.. எனி வே. அந்த கொரியர் டெலிவரி பாய் என்ன செஞ்சான்னு பாப்போமே”

மூவரும் ரெக்கார்ட் ஆகியிருந்த கேசட்டை ரீவைண்ட் செய்து பார்த்தனர்.

முதலில் A-7க்குப் போய் வாசலில் பெல் அடித்து திறந்து எட்டிப் பார்த்த பெரியவரிடம் அந்தப் பார்சலைக் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு, நீத்தாவின் B-4க்கு நடந்து வந்தவன் வாசலில் நின்று பெல்லடித்தான். மூன்று முறை முயற்சித்துவிட்டு பையில் இருந்து டோர் டேக் எடுத்து எழுதி கைப்பிடியில் மாட்டிவிட்டு திரும்பி நடந்தான். வேறு எதுவும் நடக்கவில்லை.

பார்த்து முடித்த மூவரின் முகத்திலும் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அருண் செக்யூரிட்டியிடம், விசிட்டர் லாக் என்று எதாவது இருக்கிறதா என்று கேட்டான். செக்யூரிட்டி எடுத்துக் கொடுக்க, அதில் இன் டைம் மட்டும் இருந்தது. அவுட் டைம் இல்லை. என்ன விவரம் என்று விசாரிக்க, விசிட்டர் யாராவது வந்தால் அப்பார்மெண்டுக்குத் தகவல் தருவோம் என்றும், அங்கிருந்து யாராவது வந்துதான் விசிட்டரை அழைத்துப் போகவேண்டுமென்றும் சொன்னான். அதனால் திரும்பிப் போவோரை கணக்கெடுப்பதில்லை என்றும் சொன்னான். நீத்தாவின் அப்பார்மெண்டுக்கு முந்தின நாள் யாரும் வந்ததாக எதுவும் லாக் இல்லை. அப்பார்மெண்ட் ரெசிடெண்டே யாராவது கெஸ்டை காரில் அழைத்து வந்தால் அவர்களை லாக் செய்வதில்லை என்றும் சொன்னான்.

இந்த சந்தும் முட்டுச் சந்தாகப் போய் விடவே ஏமாற்றத்தோடு அப்பார்மெண்டை நோக்கி நடை போட்டனர்.

ஹாலில் இருந்த சோஃபாவில் அயர்ச்சியாக விழுந்த அருணின் முகத்தில் கவலைக் கோடுகள். “எல்லாம் டெட் எண்டாவே இருக்கே”

“அதான் சொன்னே அருண். இது ஆக்சிடெண்ட் தான்”

“ஆனாலும் எனக்குள்ள ஒரு இண்ட்யூஷன் இது கொலையா இருக்கலாமோன்னு சொல்லுது”

பேசிக்கொண்டேயிருக்கையில் செல்வாவின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசிய செல்வா அருணிடம், “அருண் யுவர் கெஸ் இஸ் கரெக்ட். அந்த ஃப்யர் ப்ளேஸ் ஃப்யர் அணைஞ்சி போக வாய்ப்பே இல்லையாம். கேஸ் கட் ஆனாத்தான் அணையுமாம்”

“ஐ கெஸ்ட் சோ. அப்ப இது முதல் நாள் ராத்திரி திறந்து விட்ட பைப் இல்லை. சம்பவத்தன்னிக்கு 11:00 மணிக்கு மேலதான் யாராவது திறந்து விட்டிருக்கணும். இல்லையா?”

“அப்பிடித்தான் தெரியுது”

“ஆனா பூட்டியிருக்கிற வீட்டில யாரு வந்து திறந்து விட்டிருக்க முடியும்?”

“ஒரு வேளை இப்பிடியிருக்குமோ அருண்?”

“எப்படி?”

“நீத்தாவே திறந்து விட்டுட்டுப் படுத்திருந்தா? சூசைட்?”


(அடுத்த பாகத்தில் முடியும்)

12 comments:

பிரபாகர் said...

முதல்ல கமெண்ட்ட போட்டுட்டு படிக்கிறேன்...

பிரபாகர்...

பிரபாகர் said...

இன்வெஸ்டிகேசன் எல்லாம் அருமையா இருக்கு... அடுத்து முடிச்சிடறீங்களா? :-(

பிரபாகர்...

VISA said...

engeyoa poaguthu kadhai

Chitra said...

mmmmm..... appuram....

vasu balaji said...

சார்! நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார்:))

Anonymous said...

ரைட்டு , அடுத்தது என்ன

Unknown said...

waiting for climax

பெசொவி said...

இன்றுதான் தங்கள் வலைத்தளத்துக்கு வந்தேன், மூன்று பாகமும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன், முடிவுக்கு காத்திருக்கிறேன்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நேர்ல இருந்து பாக்கற மாதிரி உணர்வைத் தருது கதை நடை... இன்னிக்கு முடிவ போட்டுடுங்க :))

பத்மா said...

waiting>>>

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு...வாழ்த்துகள்

Ramesh said...

பயங்கரமான இன்வெஸ்டிகேசனா இருக்கே...அருமை..