Monday, November 30, 2009

ப்ளாக்கர் - தொடர் பாகம் நான்கு

அத்தியாயம் - 3

அத்தியாயம் - 2

அத்தியாயம் - 1



அருணின் கார் கமிஷனர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது. காரில் இருந்து இறங்கிய அருண் குளிர் கண்ணாடியைக் கழற்றி விட்டு வாசலில் இருந்த போலீஸ்காரரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தான். அவர் அடித்த சல்யூட்டைத் தலையசைப்பில் ஏற்றுக் கொண்டான். 


கார்த்திகைப் பாண்டியன் - காவல்துறை ஆணையாளர் என்று போர்டு மாட்டியிருந்த அந்த அறையின் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தான். 


“ஹே வாடா..” என்றவாறு இருக்கையிலிருந்து எழுந்து வந்து அருணைத் தழுவிக் கொண்டார்.


“என்ன கார்த்தி எப்பிடி இருக்க?”


“நல்லா இருக்கேன், கோம்”


“சுஜாதா ஸ்டைல்ல பதில் சொல்றத இன்னும் விடலியா”


“அது எப்பிடி முடியும்”


“ஓக்கே நான் ஃபோன்ல சொன்ன விசயம் என்னாச்சு?” இரண்டு சிகரெட்டுக்களை ஒன்றாகப் பற்ற வைத்து ஒன்றை கார்த்தியிடம் நீட்டினான் அருண்.


“நோ டா. நான் க்விட் பண்ணி மூணு மாசமாச்சி”


“என்னடா திடீர் ஞானோதயம்?”


“பானுவோட அப்பா ஹார்ட் அட்டாக்ல போனதுல இருந்து.”


“ஹேய் அது எப்போ நடந்தது? எனக்கு ஏண்டா தகவல் சொல்லல”


“ரிலேடிவ்ஸ் தவிர வேற யாருக்கும் சொல்லலடா. நீயும் நிறுத்திடறது நல்லது”


“ட்ரை பண்றேன். அப்புறம் அந்த சுஷ்மா மர்டர் விசயம்?”


“காலைலயே கருப்பையாவைப் பிடிச்சிக் காச்சிட்டேன். பொலிட்டிக்கல் ப்ரஷர் எல்லாம் எதுவுமில்ல. இனி அந்தக் கேஸ் என்னோட ஆஃபீஸ்லயே ஹாண்டில் பண்ணப்போறோம். அதாவது அன் - அஃபிஷியலா நீயே ஹாண்டில் பண்ணப் போற”


“சூப்பர் டா.”


“அஃப்ஃபிஷியல் ரெக்கார்ஸ்க்காக ஒரு எஸ்.ஐ அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். அவர் உனக்கு எல்லா விதத்துலயும் ஹெல்ப் பண்ணுவார். வெரி யங் கை. இன் ஃபாக்ட் திஸ் இஸ் ஹிஸ் ஃபர்ஸ்ட் கேஸ்”


“வாவ் லவ்லி. நான் அவரை மீட் பண்ணலாமா?”


கார்த்தி மேஜை மீதிருந்த மணியை அழுத்தவும் ஆர்டர்லி ஒருவர் உள்ளே வந்து சல்யூட் அடித்தார். 


“எஸ் ஐ சிவாவ வரச் சொல்லுங்க”


“யெஸ் சார்”


ஆர்டர்லி போய் சரியாக அரை நிமிடத்தில் அடர்த்தியான மீசை வைத்த அப்பாஸ் போல ஒருவன் உள்ளே நுழைந்து விரைப்பாக சல்யூட் வைத்தான்.


“சிவா, இவர்தான்..”


“தெரியும் சார். மிஸ்டர் அருண். நீங்க காலைல என்கிட்ட விசயத்த சொன்ன உடனே நான் ரெக்கார்ட்ஸ் பாத்து இவரப் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன் சார். ஐ அம் ப்ளீஸ்ட் டு ஒர்க் வித் அ லெஜெண்ட் லைக் ஹிம்”


“தாங்க்ஸ் சிவா. அருண் இட்ஸ் யுர் கேஸ் நவ்”


“தாங்க்ஸ் கார்த்தி. ஐல் கீப் யூ போஸ்டட் ஆஃப் தி ப்ராக்ரஸ்”


அருண் எழுந்து சிவாவின் கையைப் பிடித்துக் குலுக்கினான். இருவரும் வெளியே நடந்தனர்.


############################################################################################


அருணின் கார் சுஷ்மா தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டை நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. 


“சிகரெட்?” என்று ஒரு சிகரெட்டை உதட்டால் கவ்விக்கொண்டு சிவாவை நோக்கி நீட்டினான். 


“தாங்க்ஸ் சர் என்றபடி ஒரு சிகரெட்டை உறுவிக்கொண்டான். காரின் சிகரெட் லைட்டரை எடுத்து பற்ற வைத்துக் கொண்ட அருண்,


“சிவா நான் சம்பவ இடத்த நேத்துக் காலைல போய் பார்த்தேன். கொலை அங்க நடந்திருக்க வாய்ப்ப்பு இல்ல. ஒண்ணு அங்க ரத்தம் அவ்வளவா சிந்தல. ரெண்டாவது 11 மணிக்கு கூட அங்க ட்ராஃபிக் இருக்குது. அந்த ட்ரஃபிக்ல கொலை செய்யறது கஷ்டம். சோ வேற எங்கயாவது கொலை பண்ணிட்டு இங்கக் கொண்டு வந்து போட்டிருக்கணும். அந்தப் பக்கம் இது மாதிரி வேற எப்பயாவது இப்பிடி நடந்திருக்கா?”


“இதே இடத்துல இல்ல சார். பட் அந்த ரோட்டுல இதுக்கு முன்னாடி 4 கேஸ் நடந்திருக்கு சார். முதல்ல ஒரு கால் செண்டர் எம்ப்ளாயிய செண்டரோட வேன் ட்ரைவரே ரேப் பண்ணி கொன்னு போட்டுட்டு போயிருக்கான் சார். அப்புறம், மூணு கேஸ் அடையாளம் தெரியாத நபர்கள்னு கேஸ் மூடப்பட்டிருக்கு சார். இந்த மூணு கேஸுமே மடிப்பாக்கம் லிமிட்ல தான் சர் வருது.”


“ஓக்கே. ஒரு வேளை ஏதாவது கூலிப்படை இல்லைன்னா ரவுடிஸ் கேங்க் இந்த ரோட்ட இது மாதிரி டம்பிங்ஸ்க்கு யூஸ் பண்ணியிருக்கலாம்.”


“அதே ஆங்கிள் தான் சர் எனக்கும் தோணுது.”


பேசிக்கொண்டிருக்கும்போதே சுஷ்மாவின் அப்பார்ட்மெண்டுக்குள் கார் நுழைந்தது. வாட்ச்மேனிடம் விபரம் சொல்லி சுஷ்மா அப்பார்ட்ம்ர்ண்ட் நம்பரை வாங்கிக் கொண்டு லிஃப்ட் ஏறி அடைந்தனர்.


“சர் சுஷ்மாவோட இன்னொரு பொண்ணு தங்கியிருக்கா. அவ பேரு வைஷ்ணவி”


“ஓக்கே!” என்று சுவற்றில் பொறுத்தியிருந்த அழைப்பு மணியை அழுத்தினான் அருண்.


யாரோ நடந்து வரும் சத்தம் முதலில் மெல்லியதாக அருகில் வர வர சத்தமாகக் கேட்டது. கதவில் பொறுத்தப்பட்டிருந்த மேஜிக்-ஐயின் வழியாகக் கசிந்து கொண்டிருந்த வெளிச்சம் தடைப் பட்டதும் “போலீஸ்” என்று சற்று உரத்தக் குரலில் சொன்னான் அருண்.


கதவு திறந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். ரோஜாவையும் நமீதாவையும் தப்பான விகிதத்தில் கலந்தது போல இருந்தாள்.


“ப்ளீஸ் கம்மின்” 


உள்ளே நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்தான் அருண். பெரிய ஹால். அதில் மூன்று பேர் உட்காரக்கூடிய சோஃபா ஒன்றும் அதன் சைடில் ஒரு ஆள் உட்காரக்கூடிய சோஃபாவும் போடப்பட்டிருந்தன. அந்த சோஃபாவுக்கு முன் ஒரு சிறிய டீப்பாய். அதன் மீது ஃபெமினா, ரீடர்ஸ் டைஜஸ்ட். எதிரில் ஒரு 32 இன்ச் எல்.சி.டி டீவி. அதன் மேல் ஆணி அடித்து மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தில் சுஷ்மாவும் வைஷ்ணவியும்.


“மிஸ்.வைஷ்ணவி. நீங்க சம்பவம் நடந்த அன்னிக்கு ஊர்ல இல்லைன்னு போலீஸ் விசாரணைல சொல்லி இருக்கீங்க. எங்க போயிருந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” 


“சொந்த ஊருக்கு”


“என்ன விசயமா?”


“எனக்கு நிச்சயதார்த்தம்.”


“ஐ சீ”


“எப்பிடி செத்துப் போனது சுஷ்மா தான்னு உங்களுக்குத் தெரியும்?”


“சுஷ்மாவோட ப்ளாக் ஃபாலோயர் ஒருத்தர் வீட்டுக்கு ஃபோன் பண்ணி பேப்பர் நியூஸ் பாத்ததாவும், அதுல இருக்குற பொண்ணு சுஷ்மா மாதிரி இருக்குறதாவும் சொன்னார். அப்புறம் தான் நான் போலீசுக்குப் போய் மார்ச்சுவரில பாடி பார்த்து கன்ஃபிர்ம் பண்ணேன்”


“ஓ சுஷ்மா ப்ளாக் எழுதுவாளா?”


“ஆமா. எப்போ பாத்தாலும் லாப்டாப்பக் கட்டிட்டே தான் அழுவா”


“ஐ சீ. அப்புறம் சுஷ்மாவோட ஸ்கூட்டி இப்போ எங்க இருக்கு?”


“தெரில. கொலை பண்ணவங்க அதை திருடிட்டுப் போயிருக்கலாம்”


“மே பி”


“ரமேஷ உனக்குத் தெரியுமா?”


“தெரியும். சுஷ்மாவும் அவனும் ப்ரேக்-அப் ஆனதும் குடிச்சிட்டு வந்து ஒரே கலாட்டா பண்ணான். போலீஸ்ல சொல்லிடுவேன்னு மிரட்டுனாப்புறம் தான் போனான்”


“ஐ சீ. சுஷ்மாவுக்கு வேற யாராவது எதிரிகள் உண்டா?”


“அப்பிடி யாரும் இல்ல. அவ எல்லார் கூடயும் ஃப்ரண்ட்லியாத்தான் பழகுவா”


“சுஷ்மாவோட ப்ளாக் யூ.ஆர்.எல் தெரியுமா?” 


“publikservent.blogspot.com அவ அனானிமஸ் நேம்தான் யூஸ் பண்றா. அதன் மூலமா யாரும் எதிரிகள் உருவாக வாய்ப்பு இல்ல”


“அனானிமஸ் நேம்னா எப்பிடி ஃபால்லோயர்க்கு சுஷ்மாவோட முகம் தெரியும்?”


“இந்த ஃபால்லோயர் சுஷ்மாவுக்கு ரொம்ப க்ளோஸ். வீட்டுக்குக் கூட 2 டு த்ரீ டைம்ஸ் வந்திருக்கார்”


“அவரோட காண்டாக்ட் நம்பர் இருக்கா?”


ஒரு பேப்பரை எடுத்து செல்ஃபோனில் நம்பர் பார்த்து எழுதிக்கொடுத்தாள்.


“ஓக்கே. தாங்க்ஸ் ஃபர் யுர் கோ-ஆப்பரேஷன் மிஸ் வைஷ்ணவி. அண்ட் விஷ் யூ அ ஹாப்பி மேரீட் லைஃப்”


“தாங்க் யூ”


இருவரும் லிஃப்ட்டில் வரும்போது சிவா ஆச்சரியத்துடன் கேட்டான் “சார் சுஷ்மாக்கிட்ட வெஹிக்கிள் எதுவும் இருக்குறதா போலீஸ் ரெக்கார்ட்ஸ்ல இல்ல. நீங்க எப்பிடி கரக்டா கேட்டீங்க?”


“சிம்பிள் சிவா. உள்ள வரும்போது இவங்க அப்பார்ட்மெண்ட்டுக்கான பார்க்கிங் லாட்டுல ஒரே ஒரு ஹோண்டா தான் நின்னுட்டு இருந்தது. உள்ள இருந்த ஃபோட்டோல ரெண்டு பேரும் ஆளுக்கொரு வண்டியில உக்காந்துட்டு போஸ் குடுத்துட்டு இருந்தாங்க. சரினு ஒரு கல்லு விட்டுப் பாத்தேன்”


“சிவா. நான் உங்கள ஆஃபிஸ்ல ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்குப் போறேன். நீங்க ரெண்டு விசயம் பண்ணனும். யூஸ் யுர் போலீஸ் ஃபோர்ஸ்.”


“என்ன பண்ணனும் சர்”


“ஒண்ணு சுஷ்மாவோட ஸ்கூட்டிய ட்ராக் பண்ணுங்க. திருடுனவன் எங்க விப்பான், வித்தா அது எங்க எப்பிடி எப்பிடி போகும் அப்பிடிங்கிறது நம்ம டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களுக்கே தெரியும். ரெண்டாவது, இதுவரைக்கும், சுஷ்மாவோட செல்ஃபோன் என்ன ஆச்சுன்னும் தெரியல. அவ செர்விஸ் ப்ரொவைடரை அப்ரோச் பண்ணி ஐ.எம்.இ.ஐ நம்பர் வச்சி ட்ராக் பண்ண முடியுமான்னு பாருங்க. நாளைக்கு பதினோரு மணிக்கு உங்க ஆஃபிஸ்க்கு வர்றேன்.”


“இல்ல சர். நானே உங்க வீட்டுக்கு வந்திடுறேன்”


“ஓக்கே. என் வீட்டு அட்ரஸ் தெரியுமா?”


“உங்க செல்ஃபோன் நம்பர் கூட தெரியும் சர்.”


“குட்”


சிவாவை கமிசனர் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு வீட்டை நோக்கிக் காரை செலுத்தினான். வீட்டை நெருங்கும் போதுதான் பார்த்தான். வாசலில் இருவர் நின்றிருந்தனர்.


(தொடரும்)

9 comments:

கலகலப்ரியா said...

இன்னும் எத்தன பாகம்..? =))...

Unknown said...

// கலகலப்ரியா said...
இன்னும் எத்தன பாகம்..? =))...
//

தெரியலையேப்பா..

டண்ட்டு டண்ட்டு டண்ட்டடாய்ங்க்

Unknown said...

// கலகலப்ரியா said...
இன்னும் எத்தன பாகம்..? =))...
//

ஆர்வமா இல்ல போரடிக்குதா??

vasu balaji said...

முகிலன் said...

// கலகலப்ரியா said...
இன்னும் எத்தன பாகம்..? =))...
//

தெரியலையேப்பா..

டண்ட்டு டண்ட்டு டண்ட்டடாய்ங்க்

கொலையவே கண்டு பிடிக்கிற அருண் இது கண்டு பிடிக்க மாட்டாரா? கேட்டு சொல்லுங்க முகிலன்.

புதியவன் said...

very good thriller story

கலகலப்ரியா said...

//முகிலன் said...

// கலகலப்ரியா said...
இன்னும் எத்தன பாகம்..? =))...
//

தெரியலையேப்பா..

டண்ட்டு டண்ட்டு டண்ட்டடாய்ங்க்//

இதுக்கு மெகா சீரியல் விளம்பரமே போட்டிருக்கலாம்...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

// கலகலப்ரியா said...
இன்னும் எத்தன பாகம்..? =))...
//

ஆர்வமா இல்ல போரடிக்குதா??//

ஆமாம் போரடிக்குது.... வித்யாசமா ஏதாவது படிக்கலாமேன்னுதான்...! (நம்மள பார்த்தா எப்டி இருக்கு... கடனேன்னு படிக்கிறவா நாம இல்லீங்... சொல்லிப்புட்டேன்..)

Karthick said...

நண்பரே -

உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com/

Unknown said...

என்னோட ப்ளாக்கர் எலோரும் பார்க்க வேண்டும் என்ன செய்வது ?
கூகிள் தேடுபொறியில் வரவில்லை

உதவி செய்யுங்கள்