Sunday, June 6, 2010

இந்திய மருத்துவர்களே!!! ஏன் இப்படி?

நான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறேன். என் பணி எனக்குக்கீழ் உள்ள அப்ளிகேஷன்களின் நலம் பேணுவது. அந்த சிஸ்டம்ஸை உபயோகிக்கும் பயனாளர்கள் (users) அவை எதிர்பார்த்த முறையில் வேலை செய்யாத போது எங்களிடம் புகார் தெரிவிப்பார்கள். நாங்களும் அந்தக் குறைபாட்டிற்கான காரணத்தை ஆராய்ந்து, அக் குறையை நீக்குவதற்கு உள்ள வழிமுறைகளை(solution)க் கண்டறிவோம். சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் இருக்கும். அந்த வழிமுறைகளின் சாதக பாதகங்களை ஆவணப்படுத்தி (documentation) பயனாளர்களிடம் படைப்போம். அந்த வழிமுறையை செயல்படுத்துவதற்கான நேரம், செலவு ஆகிய காரணிகளைக் கொண்டு ஆராய்ந்து, சிறந்ததாக அவர்கள் தெரிவு செய்யும் வழிமுறையை பயனுக்குக் கொண்டுவருவோம்.

சாஃப்ட்வேர் துறை மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் நான் மேலே சொன்ன மாடல்தான் பின்பற்றப்படும்.

அமெரிக்காவில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும். இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாழ்க்கை நகர்த்துவது கடினம். ஆனாலும், கொடுக்கும் காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மருத்துவச் சேவை இருக்கும். நம் நோயின் காரணியை ஆராய்ந்து, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நம்மிடம் விளக்கிச் சொல்வார் மருத்துவர். ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் இருப்பின், அவற்றையும் விளக்கி அதன் சாதக பாதகங்கள் (side effects), செலவு, நேரம் ஆகியவற்றையும் விளக்குவார். அதன் பின் எந்த முறையில் நமக்கு மருத்துவம் செய்யப்பட வேண்டும் என்பது முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு வேளை இந்த மருத்துவர் சொல்லும் விஷயங்களில் நமக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் நான் இன்னொரு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்கலாம்.

ஆனால் இந்தியாவில்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவியின் பாட்டிக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மதுரையின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றில் அவரை அட்மிட் செய்திருந்தோம். அவருக்கு சர்க்கரை 250 இருந்த படியால் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு தினமும் மூன்று வேளை இன்சுலின் போட்டு அந்த சர்க்கரையின் அளவைக் குறைத்த பின் மீண்டும் அட்மிட் ஆகச் சொன்னார் அந்த சர்ஜன். இன்சுலின் இதுவரை போடாத அவருக்கு இன்சுலின் கொடுத்தால் அதுவே பழக்கமாகிவிடுமோ என்ற பயத்தை டாக்டரிடம் சொல்லி தெளிவடையலாம் என்ற எண்ணத்தில் நான் அந்த டாக்டரிடம் “சார் இன்சுலின் போடாதவங்களுக்குப் போட்டுப் பழக்கக்கூடாதுன்னு சொல்றாங்களே?” என்று கேட்டேன். அதற்கு அந்த டாக்டர் சொன்ன பதில் “நான் டாக்டரா நீங்க டாக்டரா?”

சமீபத்தில் என் மகனுக்கு வயிற்றுப் போக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவனுக்கு இரத்தப் பரிசோதனையோ இல்லை மலப்பரிசோதனையோ செய்யாமல் இன்ஃபெக்‌ஷன் என்ற முடிவுக்கு வந்து குளுக்கோஸோடு பல ஆண்டி-பயாடிக்ஸ் மருந்துகளை என் மனைவி உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கொடுத்திருக்கின்றனர். என் மனைவி ஏன் இப்படி என்று கேட்டதற்கு “you should trust us" என்று பதில் சொல்லியிருக்கிறார் அந்த டாக்டர். (இதன் விளைவாக வழக்கமாக அனைவரிடமும் சகஜமாகப் பழகும் என் மகன், இப்போது ஒரு அறைக்குள் குடும்பத்தினரல்லாத மூன்றாம் நபர் யார் வந்தாலும் நெர்வஸ் ஆகிவிடுகிறான். சிறிது நேரத்துக்கு மேல் அவர் இருப்பாராயின் அழத் துவங்கிவிடுகிறான்). சரி என்ன மருந்து கொடுக்கிறீர்கள் என்பதையாவது சொல்லுங்கள் என்று கேட்டதற்கு இப்போது சொல்ல முடியாது, டிஸ்சார்ஜ் ஆகிச் செல்லும்போது டிஸ்சார்ஜ் ஷீட்டில் எல்லாம் எழுதித் தருவோம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். (இன்று வரை டிஸ்சார்ஜ் ஷீட் கையில் வரவில்லை). அந்த டாக்டர் தனது அனுபவத்தினால் சரியாகவே கணித்திருந்து, சரியான மருந்துகளையே கொடுத்திருக்கக் கூடும். ஆனால் அதை எங்களிடம் சொல்வதற்கு ஏன் தயக்கம்?

என் தொழிலிலாவது நான் உயிரற்ற கணினியோடும் அதன் பயன்பாட்டோடும் விளையாடுகிறேன். ஆனால் டாக்டர்கள் கையாளுவது ஒரு உயிர். அந்த உயிருக்கோ அல்லது அதன் உறவினர்களுக்கோ என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுமல்லவா? மாற்றுச் சிகிச்சைக்கு வழி இருந்தால் அதையும் விளக்க வேண்டுமல்லவா? எந்த சிகிச்சை நமக்கு நல்லது என்ற முடிவில் நம் தெரிவும் இருக்க வேண்டுமல்லவா?

இந்தியாவில் செகண்ட் ஒப்பீனியனுக்குப் போகிறோம் என்று டாக்டர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போக முடியுமா? அவர்களின் ஈகோ அதை அனுமதிக்காது. அப்படி செகண்ட் ஒப்பீனியனுக்கு வேறு ஒரு டாக்டரிடம் போவதென்றால் இந்த டாக்டருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகத்தான் செல்ல வேண்டும். அதுவும் அந்த இன்னொரு டாக்டர் நமக்குத் தெரிந்தவராய் முதல் டாக்டருக்குத் தெரியாதவராய் இருக்க வேண்டும். ஒரு வேளை இன்னொரு டாக்டருக்கும் முதல் டாக்டருக்கும் ஏதாவது சொந்தப் பிரச்சனைகள் இருப்பின் இரண்டாவது டாக்டர் சொல்லும் ஒப்பீனியன் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஏன் இந்தியாவில் மருத்துவம் ஒரு தொழிலாகப் பார்க்கப் படுகிறது? அதை சேவையாக எண்ணி செய்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும். இது அவர்களாக சொல்வதில்லை. அவர்களுக்குப் பெற்றோர்களால் ஊட்டப்பட்டிருக்கும் விசயம். இப்படிப் பிஞ்சிலேயே மருத்துவம் என்பது பணம் சம்பாதிக்க என்று பதிக்கப்படும் குழந்தைகள் அதைச் சேவையாகச் செய்வார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

இந்திய மருத்துவர்கள் எப்போது திருந்துவார்கள்? அல்லது என் பெர்செப்ஷன் தவறா? பதிவுலகத்தில் இருக்கும் மருத்துவர்கள் பதில் சொல்லவும்.

டிஸ்கி: நான் அனைத்து மருத்துவர்களையும் குறை சொல்லவில்லை. பெரும்பாலான மருத்துவர்கள் நான் மேலே சொன்ன attitude உடன் நடந்து கொள்கிறார்கள்.

95 comments:

Karthick Chidambaram said...

சேவை - அது என்ன நண்பரே ? இந்த சேமியாவில் செய்வார்களே அதுவா ?
படிப்பதே சம்பாதிக்கதான். பணமே பிரதானம்.
நான் இது வரை சேவையை மிக சில இடங்களில்தான் பார்த்து உள்ளேன்.
கூலூத்தும் போது சாப்பிடறவங்க மனசும் வயரும் நிறையனும்னும் எங்க ஊரு பாட்டி சொல்லும்.
ஆனா படிக்கிற போது சம்பாதிக்கணும் அப்படிதான் சொல்லறாங்க.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சிஸ்டம் மாறுபடுகிறது இரு நாடுகளுக்கும்..

அங்கு கேள்வி என்பது தம்மீது கொள்ளப்பட்ட சந்தேகமாகப் பார்க்கப்படுகிறது.. இங்கோ உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா என்று கேட்டே வெளியே அனுப்புகின்றனர்..

நோயாளி தான் (மேஜராயிருக்கும் பட்சத்தில்) முடிவெடுக்கும் முதன்மை மனிதர் இங்கு.. இந்தியாவில், உறவினர்களே முடிவெடுக்கும் முதன்மை ஆட்கள்..

இங்கு ஊசி போடுவதற்கும் நோயாளியின் அனுமதி பெறுகிறார்கள்.. அங்கு, உங்களுக்கு ஊசி போடனும் - அவ்வளவு தான் சொல்லப்படும்..

நோயாளிக்கு தனது நோயைப் பற்றி, அதற்கான மருந்துகள் பற்றி அறிந்துகொள்ளும் உரிமைகள் உண்டென்பதை மருத்துவர்களுக்கு படிப்பின் போதே சொல்லித்தரப்பட வேண்டும்..

vasu balaji said...

என் மகளுக்கு அடிக்கடி காதில் வலி வந்துக் கொண்டிருந்தது. மிகப் பிரபலமான காது மூக்கு தொண்டை நிபுணரிடம் காட்டியதில், காதில் நீர் சேர்ந்திருப்பதாகவும், உடனடியாக லேசர் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் இல்லையேல் காது கேட்காதென்றும் அறிவுறுத்தப்பட்டது. சொட்டு மருந்துகள் இன்னும் அழுத்தம் உண்டு பண்ணுமாதலால் சர்ஜரி மட்டுமே வழியென்றார்கள். ரூ 25ஆயிரம், மற்றும் 3 நாட்களுக்கான மருத்துவ மனைச் செலவுகள் எனக்கூறப்பட்டது. ஒரு வாரத்திற்குள் செய்தாகவேண்டும் என திரும்பத் திரு்ம்பக் கூறியது சந்தேகத்தை தோற்றுவித்தது.

எங்கள் இரயில்வே மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை நிபுணரிடம் செகண்ட் ஒப்பினியன் கேட்கலாம் என்று, அவரின் நண்பர் ஒருவர் மூலம் பேசிய பின் (இல்லைன்னா அவர் பார்ப்பது மிகக்கடினம்) போய் எக்ஸ்ரே, மற்றும் இதர டெஸ்டுகளின் ரிஸல்டைக் காட்டிய போது ஒன்றும் தேவையில்லை என்றுவிட்டார். அவர் இப்படிச் சொன்னார் என்றவுடன் எக்ஸ்ரே மற்றும் இதர சீட்டுகளை வீசியெறிந்து எங்கள் மேல் நம்பிக்கை இல்லையெனில் ஏன் வரவேண்டும் என்று விரட்டிவிட்டார்.

மீண்டும் நண்பரின் மூலம் கேட்டபோது சொன்னது இது. உண்மையாகவே அந்தப் பெண்ணுக்கு சர்ஜரி தேவையேயில்லை. நான் நட்பாகச் சொல்லியிருந்தால், அந்த டாக்டரிடம் சொல்லக்கூடும். அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதல்ல. அவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்து இயந்திரங்கள் வாங்கியிருப்பார்கள். வாங்கும் காசுக்கு யார் காதை நோண்டினாலும் நீர் இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை மெடிகல் எதிக்சுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. நமக்கு அது தேவையில்லை அவ்வளவுதான். நாளை ஏதோ ஒரு கான்ஃபரன்ஸில் நாங்கள் சந்திக்க நேரிடும். அவர் என்னைத் தவராகக் கருதக்கூடும் என்றார். இப்போது எந்த மருந்துமின்றி எங்கள் மருத்துவர் கூறியது போலவே தானே சரியாகிவிட்டது:)).

Chellam A. said...
This comment has been removed by the author.
Chitra said...

மனித உயிர்களையும் கூட ATM கார்டு மாதிரி பார்க்கும் இந்த மாதிரி மருத்துவர்களை எப்படித்தான் அடையாளம் கண்டு கொள்வதோ? மற்ற நல்ல உள்ளம் கொண்ட மருத்துவர்கள் மக்களுக்கு உதவினால் என்ன?

ப.கந்தசாமி said...

இந்தியாவில் இப்போது மருத்துவம் ஒரு வியாபாரமாகிப் போனது. இந்தியர்கள் கர்மவினையில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் தலைவிதியை நம்பித்தான் வைத்தியத்துக்குப் போகிறார்கள், டாக்டரை நம்பி அல்ல. எது நடந்தாலும் விதி அப்படி என்று சொல்லிக்கொண்டு அடுத்தவேலையைப் பார்ப்பார்கள். இதனால்தான் அநேக டாக்டர்கள் இந்த மாதிரி அலட்சியப்போக்குடன் நடக்கிறார்கள்.

பிரபாகர் said...

சரியாகத்தான் எழுதியிருக்கிறீகள். நூறு சதம் உண்மை. எழுதித்தரும் மாத்திரை ஒன்று 8.00 ரூபாய். அதற்கும் இணையான மாத்திரையின் விலை வெறும் முப்பது பைசா மட்டுமே... மெடிக்கல் ஸ்டோர் வைத்திருக்கும் மாமா சொன்னது.

இங்கு சிங்கையிலும் செய்வதை தெளிவாய் சொல்லி(நமக்கு புரியாவிட்டாலும் சிரமப்பட்டாவது புரியவைத்து) நமது கருத்தினைக் கேட்டுத்தான் வைத்தியம் செய்வார்கள்.

பிரபாகர்...

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் சொன்னது நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.அமெரிக்காவிலும் தவறுகள் நடக்காமல் இல்லை, குறைந்தபட்சம் என்ன மருத்துவம் செய்யப்போகிறோம் என்பதை சொல்லி விடுவார்கள், அப்புறம் செகண்ட் ஒப்பீனியன், இன்சூரன்ஸ் டிரைவனாக வந்தது ஆனால் அனைவருக்கும் நன்மையே.

M.Mani said...

ஒரு 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு நடத்தும் மருத்துவக்கல்லுாரிகள் மட்டும் இருந்தன. அதில் படிக்க கேப்பிடேஷன் என்ற நன்கொடை ஏதும் கிடையாது. அதனால் நடுத்தரக் குடும்பத்தைச்சேர்ந்த பிள்ளைகள் மருத்துவராக வர முடிந்தது. அவர்களும் அரசின் செலவில் படித்ததால் சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்தனர். ஆனால் இன்று இலட்சக்கணக்கில் நன்கொடை மற்றும் கட்டணம் செலுத்திப் படிக்கின்றனர். எனவே அப்பணத்தை மீட்கப்பணிபுரிகின்றனர். எனவே சேவை மனப்பான்மைக்கு குட்பை சொல்லிவிடுகின்றனர்.

பின்னோக்கி said...

இதே பிரச்சினை போன வாரம் எனக்கு. பார்க்கும் டாக்டருக்குத் தெரியாமல், இன்னொருவரிடம் செல்ல, அவரும், இவரும் நண்பர்களாக இருக்க, ஒரு பிரச்சினை.

என்னது ? விளக்கமா ? சந்தேகமா ? சரியாப் போச்சு. அந்த நேரத்தில், இரண்டு பேரைப் பார்த்துவிடலாம் அவர்கள். அந்த நிலையிலேயே இருக்கிறது மருத்துவம் இப்பொழுது.

இதையும் மீறி, சிலர், விளக்கமாக ஒரு மருந்தை எதற்காக குடுக்கிறேன் என்று விளக்குகிறார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு.

பின்னோக்கி said...

அப்புறம் இந்த ஸ்பெஷலிஸ்ட்கள் தொல்லை தாங்கலை.

அவர்கள் நம்மை மனிதனாக பார்ப்பதில்லை. கண் டாக்டர், கண்னை மட்டுமே கவனிக்கிறார்.

சில வருடங்களுக்கு முன், வெவ்வேறு பிரச்சினைக்காக, 2 ஸ்பெஷலிஸ்ட்களிடம் போனேன். ஒருவர் எழுதிய மருந்து சீட்டை பார்க்காமல், இன்னொருவர், அதே மருந்தை (வேறு ப்ராண்டு) எழுத, அதற்கு முன்னே, கூகிள் புண்னியத்தில் எனக்கு அந்த மருந்தைப்பற்றி தெரிய, நான் சொல்ல “ஓ ! அவரு எழுதிட்டாரா ? அப்போ சரி ! இது வேண்டாம்” என்றார் :(. இரண்டையும் சாப்பிட்டிருந்தால் கதி ?? !!

துளசி கோபால் said...

சேவையாவது கிச்சடியாவது?

எந்த உலகத்தில் இருக்கீங்க?

எக்கச்சக்கமா கேபிடேஷன் ஃபீஸ் கொடுத்துப் படிக்கும்போது...போட்ட பனத்தை எடுக்கவேணமா? அதால் இது ஒரு தொழில் மட்டுமே. அதிலும் டாக்குட்டர் சொன்னா நாம் வாயைத் தொறக்கப்படாது.

அந்தக் காலத்துலே மருத்துவரை தெய்வமாப் பார்ப்பாங்க. அதெல்லாம் காலம் மாறிப்போச்சு.

ஒருவேளை எங்கம்மா பண்ணிய 'சேவை'தான் இப்போ என்னைக் காக்குதோ என்னமோ!

vasu balaji said...

ஆஹா மறந்துட்டனே! ஸ்டார் பதிவருக்கும் ஸ்டார் இடுகைக்கும் வாழ்த்துகள்.

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல இடுகை. பாலா சார் சொன்னதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது.

நட்சத்திர வாழ்த்துகள் முகிலன்.

Robin said...

நோய் என்னவென்றே தெரியாமல் மருந்து கொடுக்கும் டாக்டர்கள் நம் இந்திய டாக்டர்களாகத்தான் இருப்பார்கள். இதில் பலர் கொள்ளைக்காரர்களாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.

அமுதா கிருஷ்ணா said...

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு கோடி இளநிலை மற்றும் முதுநிலைக்கு கொடுத்து படித்து வருகிறார்கள். வட்டியுடன் முதலையும், அதற்கு மேலேயும் எடுக்க வேண்டும்,வரதட்சணை கொடுக்க அல்லது வாங்க வேண்டும்,வெளிநாடு போக வேண்டும்,அடுத்து டாக்டர் தன் பிள்ளைகளை டாக்டருக்கு படிக்க வைக்க பணம் கொடுக்க வேண்டும் எவ்வளவு வேலை இருக்கு...அரசு கல்லூரியில் படித்தால் கட்டாய அரசு சேவை என்ற பயமுறுத்தலுக்கு எதிர்ப்பு செய்ய வேண்டும்( யார் சார் 5 முதல் 8 வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டு கிராமத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஒத்துக் கொள்வர்)டாக்டர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. நம் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் வேண்டும். இந்திய மக்கள் டாக்டர்களை மிக மரியாதையான இடத்தில் வைத்து இருப்பதால் நோ கேள்வி..படித்தவர்களே கேள்வி கேட்க இப்பதான் ஆரம்பித்து உள்ளார்கள். டாக்டர்கள் பதில் சொல்ல கொஞ்ச நாட்கள் ஆகும்..

Sabarinathan Arthanari said...

தேவையான விழிப்புணர்வு பதிவுங்க

நன்றி

பிரபாகர் said...

எங்கள் ஸ்டார் தினேஷ் வாழ்க... மறந்துட்டேன்.... வாழ்த்துக்கள் நண்பா!

பிரபாகர்...

கண்ணா.. said...

முதலில் தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்.

//“நான் டாக்டரா நீங்க டாக்டரா?”
//

நானும் அதிகமுறை வாங்கிய பதில். நமக்கான விளக்கங்கள் தர பொறுமை இல்லாத டாக்டர்கள்தான் நானும் அதிகம் சந்தித்தது. அவர்கள் விளக்கங்கள்தான் தரவில்லையே தவிர சிகிச்சை நல்ல முறையில் அளித்தனர். நான்தான் எங்கள் உறவினர்களிடமிருந்து அதிகபிரசங்கி, பொறுமையில்லாதவன் என பட்டங்களை வாங்க வேண்டியிருந்தது.

நல்ல பதிவு, தினேஷ்

கோவி.கண்ணன் said...

இந்தியாவில் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மீது என்றுமே அலட்சியம் தான். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு

மதன் said...

Hello boss..I am also a doctor and i do agree with you. All doctors are not money minded..this sort of things happening with thise doctors having their own hospitals. they want extra money to maintain their hospitals and going greedy.. this is totally unacceptable.
People always thronging these types of hospitals.they wont go to doctors who is having a small clinic.

My opinion is doctor who is running a small clinic meant for only consultation wont be greedy and doing fair to his patients..

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள். கலக்கல் பதிவுகளை எதிர்பார்க்கிறோம் எல்லாரும்.

எல் கே said...

வேதனையான விசயம் . இதே போன்று இரண்டு சம்பவங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்தது. ஒன்று நான் சிறுவனாக இருந்தபொழுது , வயிற்று பிரச்சனைக்காக அனுமதிக்கப் பட்ட எனது பாட்டிக்கு தேவை இல்லாமல் க்ளுகோஸ் ஏற்றி அதன் பின்விளைவாக இறந்து போனார்கள். அடுத்தது எனது சகோதரிக்கு , இதே போன்று வயற்றில் வலிக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து இன்றுவரை அதன் பின்விளைவுகளை சந்திதிக் கொண்டுள்ளார்.

Anonymous said...

இப்ப யாரு சார் சேவை என்று உழைக்கறாங்க ? என்ன தான் இந்திய ஒளிர்கிறது என்று சொன்னாலும் நிறையே இடங்களில் இன்னும் ஒளி வீழலே அதில் ஒன்று தான் மருத்தவம் .

க.பாலாசி said...

மருத்துவருக்கு மருத்துவர் மாற்று கருத்துடையவர்களாக இருப்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.. தன்னலம் கருதாது நோயாளிகள் மேல் அக்கரை கொண்ட நல்மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..

நல்ல இடுகை...

நட்சத்திரப்பதிவராக தங்களின் முதல் இடுகையே சிந்தனைக்குரியது... வாழ்த்துக்கள்...

பழமைபேசி said...

ஆகா...இவ்வார விண்மீன்... வாழ்த்துகளோ வாழ்த்துகள்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பின்னூட்டம் பெரிதாக இருப்பதால் இங்கே போட்டு இருக்கிறேன்.

நசரேயன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

ரோஸ்விக் said...

வாழ்த்துகள் தினேஷ்.

அருமையான விசயத்தை இன்று அலசியிருக்கிறீர்கள்.

இங்கு மருத்துவர்கள் பலர் வியாபாரிகள் போல் செயல்படுவது மிகவும் வருந்தத்தக்கது.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்... போஸ்ட் அப்புறம் வந்து படிக்கறேன்.. நம்புங்க.. :).. இந்த வாரம் சிறப்பாக அமையும்ன்னு விருதுநகர்.. ஜோஸ்யரு சொல்றாரு..

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்... போஸ்ட் அப்புறம் வந்து படிக்கறேன்.. நம்புங்க.. :).. இந்த வாரம் சிறப்பாக அமையும்ன்னு விருதுநகர்.. ஜோஸ்யரு சொல்றாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம ஊரு டாக்டர்களுக்கு பணம் ரொம்ப முக்கியம், இமேஜும் முக்கியம், மனித உயிர்களைவிட!

சௌந்தர் said...

நான் அனைத்து அரசு மருத்துவர்களையும் குறை சொல்கிறேன்

காமராஜ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் முகிலன்.

Prathap Kumar S. said...

எக்ஸ்பரியான மருந்துகளை மருந்துக்கடைகளில் விற்பனை ஆனதை விட வேறு உதாரணம் வேண்டுமா? மருத்துவர்களின் உதவியன்று இது நடக்க சாத்தியமே இல்லை...

தமிழ்மண நட்சத்தி வாழ்த்துக்கள்.

முல்லை மயூரன் said...

மிக முக்கிய பதிவு ,,முதல் விடயம் இப்ப எல்லாம் எங்கள் நாடுகளில் சேவை செய்வதற்காக மருத்துவத்துறைக்கு யாரும வருவதில்லை ,,அதெல்லாம் அமெரிக்காவில்தான் ,,அங்கு பணம் பண்ண நிறைய வலி இறுக்கு,,,அடுத்த விடயம் அங்கு ஒரு சாதரணமாகவ ஒரு டாக்டர் என்றால் அவருக்கு தேவையானதை விட காசு கிடைக்கும் இங்கு அப்படி அல்ல கடுமையாக உழைக்க வேண்டும் மிக்கியமான விடயம் நான் ஓர் பல் வைத்தியன் ...அடுத்த எம்மக்களிட்கு 75 % வீடமனவர்களிட்கு சொல்லி புரிய வைக்க முடியாது ஒரு சின்ன உதாரணம் எங்கள் படிப்பின்படி பல் பிடுங்கும்போது வேர் இல் 1 /3 உடைந்து உளிட்குள் இருந்தால் எடுக்காமல் விட வேண்டும் அல்லது எடுக்க வேண்டிய தேவை இல்லை ,,நான் வேலைக்கு வந்த புதிதில் பிரைவேட்
)இதை சொல்லி சொல்லி பார்தேன் யாருமே கேட்பதில்லை இப்பல்லாம் சொல்வதே இல்ல

VISA said...

present sir

பாலா said...

அண்ணன் வாழ்க... வாழ்த்துக்கள்!!!

Dr.ராம் said...

//அமெரிக்காவில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும். இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாழ்க்கை நகர்த்துவது கடினம். ஆனாலும், கொடுக்கும் காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மருத்துவச் சேவை இருக்கும்.//

மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் பார்க்கவேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கு ஈடாக அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் ஆகியவற்றை நாம் இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

//நம் நோயின் காரணியை ஆராய்ந்து, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நம்மிடம் விளக்கிச் சொல்வார் மருத்துவர். ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் இருப்பின், அவற்றையும் விளக்கி அதன் சாதக பாதகங்கள் (side effects), செலவு, நேரம் ஆகியவற்றையும் விளக்குவார். அதன் பின் எந்த முறையில் நமக்கு மருத்துவம் செய்யப்பட வேண்டும் என்பது முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.//

இதுபோன்ற விளக்கங்களை எத்தனை பேர் பொறுமையாக கேட்க தயாராக உள்ளனர்..அனைத்தையும் கேட்டு முடித்தபிறகு 'ஊசி போட மாட்டீங்களா டாக்டர் " என்று கேட்கும் மக்கள் இங்கு அதிகம் நண்பரே..

பொதுவாக இங்கு மக்கள் மருத்துவரை பார்க்க வரும்போதே சில குறிப்பிட்ட சிகிச்சையை எதிர்பார்த்து வருகின்றனர்.. அதற்கு மாறாக மருத்துவர் சிகிச்சை அளித்தால் அவரிடம் தங்கள் எதிர்பார்க்கும் சிகிச்சையை நோக்கி கேள்விகள் கேட்கபடுகின்றன..இதுபோன்ற கேள்விகள் மருத்துவரை எரிச்சல்படுத்தும்.அமெரிக்காவில் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையில் விளக்கங்கள் அனுமதிக்கப்படும்..இந்தியாவில் மக்கள் தங்கள் சரி என்று நினைக்கும் சிகிச்சைக்கான கேள்விகள் அனுமதிக்க படுவதில்லை.இதுதான் வித்தியாசம்.

Mahi_Granny said...

நானும் அடிக்கடி இந்த second opinion concept இந்தியாவில் செல்லுபடியாகுமா என்று நினைப்பது உண்டு .பகிர்ந்தமைக்கு நன்றி

Dr.ராம் said...

//அவருக்கு சர்க்கரை 250 இருந்த படியால் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு தினமும் மூன்று வேளை இன்சுலின் போட்டு அந்த சர்க்கரையின் அளவைக் குறைத்த பின் மீண்டும் அட்மிட் ஆகச் சொன்னார் அந்த சர்ஜன். இன்சுலின் இதுவரை போடாத அவருக்கு இன்சுலின் கொடுத்தால் அதுவே பழக்கமாகிவிடுமோ என்ற பயத்தை டாக்டரிடம் சொல்லி தெளிவடையலாம் என்ற எண்ணத்தில் நான் அந்த டாக்டரிடம் “சார் இன்சுலின் போடாதவங்களுக்குப் போட்டுப் பழக்கக்கூடாதுன்னு சொல்றாங்களே?” என்று கேட்டேன். அதற்கு அந்த டாக்டர் சொன்ன பதில் “நான் டாக்டரா நீங்க டாக்டரா?”//

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் உடனடியாக சக்கரை அளவை குறைப்பதற்கு இன்சுலின் போட வேண்டும்..இது மருத்துவம்..இன்சுலின் போடதவங்களுக்கு இன்சுலின் போட்டு பழக்ககூடாது என்று உங்களிடம் சொன்னவர் நிச்சயமாக மருத்துவராக இருக்க முடியாது..அது உங்களின் யூகம் மற்றும் முன்முடிவு .. உங்களின் கேள்வி இன்சுலின் ஏன் போடவேண்டும் என்று இருக்கும் பட்சத்தில் உங்கள் சந்தேகம் மருத்துவரால் தீர்க்கப்பட்டு இருக்கும் .நீங்கள் கேட்ட முறையில் உங்களின் யூகத்திற்கு மருத்துவரின் விளக்கத்தை எதிர்பார்த்து உள்ளீர்கள் .. அதற்கு மருத்துவரின் பதில் நீங்க டாக்டரா என்பதாகத்தான் இருக்க முடியும்.

உதாரணமாக சொல்வதென்றால் எனக்கு சாப்ட்வேர் ப்ரோக்ராமமிங் பற்றி எதுவும் தெரியாது..உங்களுடைய படிப்பு மற்றும் அனுபவ அறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நன்றாக செயல்பட்டுகொண்டிருக்கும் ஒரு application ஐ பயனாளிக்கு கொடுக்கும்போது அதன் செயல்பாடுகளில் விளக்கம் கேட்டால் உங்களால் கொடுக்க முடியும்.. ஆனால் இந்த application பயன்படுத்தும்போது சிஸ்டம் சரியாக வேலை செய்யாது என்று சொல்கிறார்களே என்று பொதுவாக கேட்கும்போது உங்களது பதில் என்னவாக இருக்கும் நண்பரே..

Dr.ராம் said...

//அந்த டாக்டர் தனது அனுபவத்தினால் சரியாகவே கணித்திருந்து, சரியான மருந்துகளையே கொடுத்திருக்கக் கூடும். ஆனால் அதை எங்களிடம் சொல்வதற்கு ஏன் தயக்கம்?//

இங்கு பெரும்பாலான மக்கள் தமக்கு தெரிந்த அரைகுறை மருத்துவ அறிவின்படியும் யூகத்தின்படியும் கேட்கும் சில கேள்விகள் அபத்தமாகவும் மருத்துவரை எரிச்சல்படுத்தும் தொனியில் அமைந்து விடுவதால் சில நியாயமான கேள்விகள் கூட தவிர்க்கபடுகின்றன

//சமீபத்தில் என் மகனுக்கு வயிற்றுப் போக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவனுக்கு இரத்தப் பரிசோதனையோ இல்லை மலப்பரிசோதனையோ செய்யாமல் இன்ஃபெக்‌ஷன் என்ற முடிவுக்கு வந்து குளுக்கோஸோடு பல ஆண்டி-பயாடிக்ஸ் மருந்துகளை என் மனைவி உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கொடுத்திருக்கின்றனர்.//

உங்களை பொறுத்தவரை டெஸ்ட் செய்தபிறகுதான் infection என்று முடிவு செய்யப்பட வேண்டும்.வயிற்றுபோக்கு போன்ற வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காலம் மிகவும் முக்கியமானது .. தாமதம் மோசமான விளைவுகளை உருவாக்கும்.. அகவே மலம் மற்றும் urine டெஸ்ட் செய்து முடிவுக்காக காத்திருக்காமல் broad spectrum அண்டிபயொடிக்ஸ் கொடுப்பது என்பது நடைமுறை மருத்துவம் ..

இங்கு நான் முன்பே சொன்னபடி உங்களது யூகம் மற்றும் முன்முடிவு (predetermined decision ) வெளிப்படுகிறது..இதுதான் இங்கு பிரச்சினை

Dr.ராம் said...

//அந்த உயிருக்கோ அல்லது அதன் உறவினர்களுக்கோ என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுமல்லவா? மாற்றுச் சிகிச்சைக்கு வழி இருந்தால் அதையும் விளக்க வேண்டுமல்லவா? எந்த சிகிச்சை நமக்கு நல்லது என்ற முடிவில் நம் தெரிவும் இருக்க வேண்டுமல்லவா?//

முழுக்க உடன்படுகிறேன்..

//இந்தியாவில் செகண்ட் ஒப்பீனியனுக்குப் போகிறோம் என்று டாக்டர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போக முடியுமா? //

தாராளமாக போகலாம்..ஆனால் இங்கு செகண்ட் ஒபினியன் என்பது நோயாளியின் முடிவாகவோ அல்லது துணையின் முடிவாகவோ இருக்க வேண்டும்.. நமது ஊரில் செகண்ட் ஒபினியன் போவது என்பது பெரும்பாலும் சம்பந்தம் இல்லாத நபர்களால் அல்லது பொதுவாக கேள்விப்படும் விஷயங்களால் நடைபெறுகிறது.அதனால் நம்பகத்தன்மை குறைகிறது.. இங்கு செகண்ட் ஒபினியன் என்பது multiple opinion என்றுதான் நடக்கிறது.

இந்தியாவில் மருத்துவம் என்பதே நம்பிக்கை அடிப்படையில் நடக்ககூடிய விஷயம் .இங்கு மருத்துவர்களும் emotionaly bonded . .அதனால் அவர்கள் காயப்படுவதாக உணர்கிறார்கள் .

Dr.ராம் said...

//ஏன் இந்தியாவில் மருத்துவம் ஒரு தொழிலாகப் பார்க்கப் படுகிறது? அதை சேவையாக எண்ணி செய்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?//

இந்தியாவை தவிர அனைத்து நாடுகளிலும் மருத்துவம் தொழிலாகத்தான் பார்க்கபடுகிறது..சேவை என்பதன் பொருள் பணம் வாங்காமல் மருத்துவம் பார்க்கவேண்டும் என்பதுதானா .. அல்லது வேறு என்ன எதிர்பார்கிறீர்கள் என்பதனை விளக்கினால் பதில் தருகிறேன் ..

சேவை என்பது எந்த படிப்பு படித்தவரும் அவருடைய படிப்பை பயன்படுத்தி சமூகத்திற்கு செய்வது..இந்த கேள்வி ஏன் மருத்துவர்களை பார்த்து மட்டும் கேட்கபடுகிறது?..

இந்தியாவில் கணினி பயன்பாடு இன்னும் முழுக்க வராத பட்சத்தில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பயன்படக்கூடிய எத்தனையோ சாப்ட்வேர்களை சேவை நோக்கத்துடன் தர ஏன் எந்த கணினி வல்லுனரும் முன் வருவதில்லை..மன்னிக்கவும் ..இதனை உதாரணம் என்ற அளவில் எடுத்துக்கொள்ளவும் ..

Dr.ராம் said...

//அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும்.//

தாங்கள் கூறியபடி அமெரிக்காவில் மருத்துவத்தை தொழிலாக பார்ப்பதனால்தான் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பதில் வந்துள்ளது..அது உண்மைதான் .. காரணம் அங்கு மருத்துவரின் படிப்புக்கான ஊதியம் கொடுக்கப்பட்டு சேவை எதிர்பார்க்கப்படுகிறது..பணம் சம்பாதித்தால் சேவை செய்ய முடியாது என்ற பொதுவான கருத்துதான் இங்கு பிரச்சினை

..இதற்கு உங்களின் இடுகையிலேயே பதில் உள்ளது. //ஆனாலும், கொடுக்கும் காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மருத்துவச் சேவை இருக்கும்//

Dr.ராம் said...

இன்னும் மருத்துவர்களின் வேதனை புரிய வேண்டும் என்றால் தயவு செய்து இந்த இடுகைகளை பார்க்கவும்..

http://rathnesh.blogspot.com/2008/10/blog-post_14.html

http://ruraldoctors.blogspot.com/2010/06/blog-post.html

Unknown said...

வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி..

விளக்கங்கள் கொடுத்த மருத்துவர்.சுரேஷுக்கும், மருத்துவர் ராமுக்கும் நன்றி.

நான் எதிர்பார்த்தது இப்படிப்பட்ட விளக்கங்களைத் தான்.

Dr.ராம் said...

நன்றி முகிலன் ..வாழ்த்துக்கள்..

பா.ராஜாராம் said...

முகிலன்,

நட்சத்திர வாழ்த்துகள்! :-)

நல்ல இடுகை.

Unknown said...

I am a stay-at-home mom who just came across this blog. I read Dr.Rams comments. Me and my family have always had high respect for doctors, nurses and others in life-saving professions. My mother has maintained that these people are more than GOd. I totally agree with her. In my whole family tree, there has never been a doctor. No wonder either!! We all panic on sight of blood. It is amazing what doctors, policemen and politicians do to keep the country safe. But unfortunately, due to handful of bad ones, everyone in these professions are seen as corrupted or incompetent.

Bruno said...

//“சார் இன்சுலின் போடாதவங்களுக்குப் போட்டுப் பழக்கக்கூடாதுன்னு சொல்றாங்களே?” //

இந்த கேள்வி நோயாளி தொடர்பானது அல்ல.
ஒரு தவறான தகவலின் அடிப்படையில் நீங்கள் கேட்ட ஒரு கேள்வி

--

இதற்கு அந்த மருத்துவர் கூறியிருக்க வேண்டிய பதில்

”அது முட்டாள்தனமான கருத்து”

அவர் கூறிய “நான் டாக்டரா நீங்க டாக்டரா?” பதில் தவறு. ஆனால் உங்கள் கேள்வி சரியா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

--

தவறான கேள்வி கேட்டு சரியான பதில் பெறுவது எளிதல்ல

Bruno said...

அடுத்ததாக infection என்றால் அதற்கு labல் டெஸ்ட் எடுத்து விட்டு தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்

--

ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்வதேயே தவறு என்று இங்கு பலரும் கூறக்கேட்கிறோம் :) :) :)

--

உங்களுக்கு மருத்துவரை குறை கூற வேண்டும்

--

பரிசோதனை செய்யவில்லை என்றால் பரிசோதனை செய்யாமல் மருந்து கொடுத்து விட்டான் என்று கூப்பாடு போடலாம் :) :)

பரிசோதனை செய்தால் ஆய்வுக்கூடத்தில் இருந்து பணம் (கமிஷன்) வாங்க தேவையில்லாத பரிசோதனை செய்கிறார் என்று கூப்பாடு போடலாம்

--

என்ன கொடுமை சார் இது

Bruno said...

//என் தொழிலிலாவது நான் உயிரற்ற கணினியோடும் அதன் பயன்பாட்டோடும் விளையாடுகிறேன். ஆனால் டாக்டர்கள் கையாளுவது ஒரு உயிர். அந்த உயிருக்கோ அல்லது அதன் உறவினர்களுக்கோ என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுமல்லவா? மாற்றுச் சிகிச்சைக்கு வழி இருந்தால் அதையும் விளக்க வேண்டுமல்லவா? எந்த சிகிச்சை நமக்கு நல்லது என்ற முடிவில் நம் தெரிவும் இருக்க வேண்டுமல்லவா?
//

இதை முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்

அதற்கு முன்னர் நீங்கள் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்

அமெரிக்க நடைமுறை என்பது வேறு
இந்திய நடைமுறை என்பது வேறு

--

அமெரிக்காவில் மருத்துவர்களுக்கு இருக்கும் வசதிகளையும் இந்தியாவில் இருக்கும் வசதிகளையும் ஒப்பிட வேண்டும்

அமெரிக்காவில் மருத்துவர்கள் ஒரு நோயாளியை பரிசோதிக்கும் நேரம் அதிகம்
இங்கு அது குறைவு

அங்கு ஒரு நோயாளியிடம் மருத்துவர் வாங்கும் கட்டணம் மிக மிக அதிகம்.
இங்கு அது குறைவு

அதே போல் இந்திய மருத்துவர்களும் கட்டணம் வாங்க ஆரம்பித்தால் இன்சுரண்ஸ் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவம் செய்து கொள்ளும் நிலை வந்துவிடும் அதற்கு நீங்கள் தயாரா

Bruno said...

//இந்திய மருத்துவர்கள் எப்போது திருந்துவார்கள்? அல்லது என் பெர்செப்ஷன் தவறா? பதிவுலகத்தில் இருக்கும் மருத்துவர்கள் பதில் சொல்லவும்.//

திருந்த வேண்டியது அமெரிக்க மருத்துவர்கள் தான்

உங்கள் பெர்செப்ஷன் முற்றிலும் தவறு

ஏன் தவறு என்று புரியவில்லை என்றால் குறிப்பிட்டு கேளுங்கள்

விளக்கத்தயார்

Bruno said...

//
ஏன் இந்தியாவில் மருத்துவம் ஒரு தொழிலாகப் பார்க்கப் படுகிறது? அதை சேவையாக எண்ணி செய்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?//

சேவை என்றால் என்ன
தொழில் என்றால் என்ன

என்று நீங்கள் விளக்கினால் (your definition for the above terms) இது குறித்து மேலும் விவாதிக்க வசதியாக இருக்கும்

Bruno said...

//சரி என்ன மருந்து கொடுக்கிறீர்கள் என்பதையாவது சொல்லுங்கள் என்று கேட்டதற்கு இப்போது சொல்ல முடியாது, டிஸ்சார்ஜ் ஆகிச் செல்லும்போது டிஸ்சார்ஜ் ஷீட்டில் எல்லாம் எழுதித் தருவோம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.//

என்ன மருந்து கொடுக்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ள நினைத்தது ஏன் என்று நான் தெரிந்து கொள்ளலாமா

அதனால் என்ன பலன்

பலன் இருந்தால் விளக்கலாம்

--

இங்கும் நேரமே முக்கியமாகிறது

உங்களுக்கு விளக்கும் நேரத்தில் (அது எந்த வித பலனையும் தராத போது) அவர் அடுத்த நோயாளிக்கு வைத்தியம் பார்க்க செல்லலாம் அல்லவா

ஜோதிஜி said...

திருப்பூரில் மூன்று பெரிய மருத்துவமனைக்க மார்ச்சுவரி மருத்துவனை என்றே பெயர். உள்ளே போனால் அவ்வளவு தான். ரோட்டில் அடிபட்டு கிடந்தால் அவர்களை தூக்கி வந்து எவர் அனுமதியும் இல்லாமல் ஆட்டோகாரர் கொண்டு வந்து சேர்த்து விட்டு அவருடைய கமிஷன் வாங்கிக்கொண்டு போய்விடுவார். ஒவ்வொரு பகுதிக்கும் இது போன் ஆட்களை வேறு நியமித்து இருக்கிறார்கள். கேள்விகள் கேட்டால் சாகிற வரைக்கும் மறக்க முடியாத பாடத்தை வழங்கி விடுகிறார்கள்.

ஆனால் இங்கு நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள். அவர்களை மக்கள் மதிப்பது இல்லை.

கடைசியா


அண்ணன் வாழ்க... வாழ்த்துக்கள்!!!

ஹாலிவுட் பாலா ரசிகர் மன்றம்

Bruno said...

என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் நரம்பியல் துறையில் பணிபுரிகிறார்

அவர் தினமும் புறநோயாளிகள் பிரிவில் பரிசோதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 4
நான் இந்தியாவில் அதே துறையில் புறநோயாளிகள் பிரிவில் பரிசோதிக்கும் எண்ணிக்கை 40 முதல் 60 வரை

--

அவர் அறுவை சிகிச்சை தினத்தில் செய்யும் அறுவை சிகிச்சைகள் 1 மட்டும்

நான் செய்வது 4 முதல் 6 வரை

--

நானும் தினமும் 4 பேரை பரிசோத்தித்து ஒரு அறுவை சிகிச்சை மட்டும் செய்யத்தயார்

ஆனால் அப்படி செய்தால்

1. என்னிடம் பரிசோதனைக்கு வரும் முன்னரே அந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். people who die in the waiting period

2. நான் கேட்கும் பணத்தை அளிக்க முடியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் people without insurance who cannot pay me

--

இன்சுரண்ஸ் என்பது இருந்தால் மட்டுமே நீங்கள் கூறும் ஒரு நோயாளியின் அப்பா, அம்மா, அண்ணன், தாத்தா, ஒன்றுவிட்ட சித்தப்பா அனைவரின் கேள்விக்கும் பதிலளிக்கும் வண்ணம் மருத்துவரால் நேரம் ஒதுக்க முடியும்

Bruno said...

//என் தொழிலிலாவது நான் உயிரற்ற கணினியோடும் அதன் பயன்பாட்டோடும் விளையாடுகிறேன். ஆனால் டாக்டர்கள் கையாளுவது ஒரு உயிர். அந்த உயிருக்கோ அல்லது அதன் உறவினர்களுக்கோ என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுமல்லவா? மாற்றுச் சிகிச்சைக்கு வழி இருந்தால் அதையும் விளக்க வேண்டுமல்லவா? எந்த சிகிச்சை நமக்கு நல்லது என்ற முடிவில் நம் தெரிவும் இருக்க வேண்டுமல்லவா?//

இந்தியாவில் புற்றுநோய், அல்லது பெரிய அறுவை சிகிச்சைகள் என்று வரும் போது இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது

ஆனால்

வயிற்றுப்போக்கிற்கு கடைபிடிக்கப்படவில்லை

காரணம் நேரம்(இன்மை) தான்

வேறு ஒன்றும் இல்லை

Bruno said...

//சரியாகத்தான் எழுதியிருக்கிறீகள். நூறு சதம் உண்மை. எழுதித்தரும் மாத்திரை ஒன்று 8.00 ரூபாய். அதற்கும் இணையான மாத்திரையின் விலை வெறும் முப்பது பைசா மட்டுமே..//

நான் (என்னைப்போல் பலரும் உள்ளனர்) மருந்துக்களின் generic பெயர்களை மட்டுமே எழுதுகிறோம்

brand பெயர்களை அல்ல

Bruno said...

//ஒரு 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு நடத்தும் மருத்துவக்கல்லுாரிகள் மட்டும் இருந்தன.//
உண்மை

// அதில் படிக்க கேப்பிடேஷன் என்ற நன்கொடை ஏதும் கிடையாது. //

ஹி ஹி ஹி


//அதனால் நடுத்தரக் குடும்பத்தைச்சேர்ந்த பிள்ளைகள் மருத்துவராக வர முடிந்தது. //

ஆகா.... அப்படியா

//அவர்களும் அரசின் செலவில் படித்ததால் சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்தனர். //

சரி

//ஆனால் இன்று இலட்சக்கணக்கில் நன்கொடை மற்றும் கட்டணம் செலுத்திப் படிக்கின்றனர்.//

தமிழகத்தில் எத்தனை மருத்துவ இளங்கலை இடங்கள் உள்ளன
அதில் எத்தனை அரசு கல்லூரிகளில்
எத்தனை தனியார் கல்லூரிகளில் என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா

Bruno said...

//ஒருவர் எழுதிய மருந்து சீட்டை பார்க்காமல்//

நான் வேறு நோய்க்கும் மருத்துவம் பார்க்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்களா

Bruno said...

//அரசு கல்லூரியில் படித்தால் கட்டாய அரசு சேவை என்ற பயமுறுத்தலுக்கு எதிர்ப்பு செய்ய வேண்டும்( யார் சார் 5 முதல் 8 வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டு கிராமத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஒத்துக் கொள்வர்)//

இது முற்றிலும் தவறான கருத்து

உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள கட்டாய சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் மற்றும் அதை தொடர்ந்த இடுகைகளை படிக்கவும்

Bruno said...

//இந்தியாவில் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மீது என்றுமே அலட்சியம் தான். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு //

வணக்கமுங்க

அது சரி

மருத்துவர்கள் தேவையில்லாமல் பரிசோதனை செய்கிறார்கள் என்று கூறுகிறார்களே

பரிசோதனை செய்யவில்லை என்றால் அது அலட்சியமா

Bruno said...

//வயிற்று பிரச்சனைக்காக அனுமதிக்கப் பட்ட எனது பாட்டிக்கு தேவை இல்லாமல் க்ளுகோஸ் ஏற்றி அதன் பின்விளைவாக இறந்து போனார்கள்//

ஏன் தேவையில்லை என்று தெரிந்து கொள்ள ஆவல்

அதே போல் க்ளூக்கோஸ் ஏற்றியதால் தான் அவர் இறந்தார் என்று எப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்

//எனது சகோதரிக்கு , இதே போன்று வயற்றில் வலிக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து இன்றுவரை அதன் பின்விளைவுகளை சந்திதிக் கொண்டுள்ளார். //

ஏன் தேவையில்லை என்று தெரிந்து கொள்ள ஆவல்

Bruno said...

//நான் அனைத்து அரசு மருத்துவர்களையும் குறை சொல்கிறேன்//

காரணம் சொல்ல முடியுமா

அல்லது காரணம் இல்லாமலேயே குறை கூறுவது தான் உங்கள் வழக்கம் என்றால் go ahead

Bruno said...

//மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் பார்க்கவேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கு ஈடாக அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் ஆகியவற்றை நாம் இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
//

வழி மொழிகிறேன்

Bruno said...

//இதுபோன்ற விளக்கங்களை எத்தனை பேர் பொறுமையாக கேட்க தயாராக உள்ளனர்..அனைத்தையும் கேட்டு முடித்தபிறகு 'ஊசி போட மாட்டீங்களா டாக்டர் " என்று கேட்கும் மக்கள் இங்கு அதிகம் நண்பரே..
//

இதற்கு முகிலனின் கருத்து என்ன

Bruno said...

//பொதுவாக இங்கு மக்கள் மருத்துவரை பார்க்க வரும்போதே சில குறிப்பிட்ட சிகிச்சையை எதிர்பார்த்து வருகின்றனர்.. அதற்கு மாறாக மருத்துவர் சிகிச்சை அளித்தால் அவரிடம் தங்கள் எதிர்பார்க்கும் சிகிச்சையை நோக்கி கேள்விகள் கேட்கபடுகின்றன..இதுபோன்ற கேள்விகள் மருத்துவரை எரிச்சல்படுத்தும்.அமெரிக்காவில் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையில் விளக்கங்கள் அனுமதிக்கப்படும்..இந்தியாவில் மக்கள் தங்கள் சரி என்று நினைக்கும் சிகிச்சைக்கான கேள்விகள் அனுமதிக்க படுவதில்லை.இதுதான் வித்தியாசம். //

வழிமொழிகிறேன்

Bruno said...

//நானும் அடிக்கடி இந்த second opinion concept இந்தியாவில் செல்லுபடியாகுமா என்று நினைப்பது உண்டு .பகிர்ந்தமைக்கு நன்றி //

அது சரி

எனக்கு இந்த second opinion concept குறித்து ஒரு சந்தேகம்

ஏன் நீங்கள் அந்த இரண்டாவது மருத்துவரிடமே முதலில் சென்று கேட்கவேண்டியது தானே

முதல் மருத்துவரிடம் ஏன் வருகிறீர்கள்

தயவு செய்து நோயாளியின் பார்வையிலிருந்து யாராவது விளக்கவும்

--

அடுத்த கேள்வி

மருந்தினால் சரியாகிவிடும் என்றால் second opinion வாங்குகிறீர்களா

அல்லது அறுவை சிகிச்சை தேவையென்றால் மட்டும் தான் second opinion கேட்க விரும்புகிறீர்களா

second opinion குறித்த பேசியவர்களின் பதிலை இந்த இரண்டாவது கேள்விக்கு எதிர்பார்க்கிறேன்

--

ஒரு நோய்க்கு அறுவை சிகிச்சை வேண்டாம், வெறும் மாத்திரை போதும் என்று மருத்துவர் சொன்னால் நீங்கள் second opinion கேட்பீர்களா

அல்லது

அறுவை சிகிச்சை வேண்டும் என்றால் நீங்கள் second opinion கேட்பீர்களா

அல்லது

என்ன சொன்னாலும் கேட்பீர்களா

Bruno said...

//உங்களின் கேள்வி இன்சுலின் ஏன் போடவேண்டும் என்று இருக்கும் பட்சத்தில் உங்கள் சந்தேகம் மருத்துவரால் தீர்க்கப்பட்டு இருக்கும் .நீங்கள் கேட்ட முறையில் உங்களின் யூகத்திற்கு மருத்துவரின் விளக்கத்தை எதிர்பார்த்து உள்ளீர்கள்//
வழிமொழிகிறேன்

// .. அதற்கு மருத்துவரின் பதில் நீங்க டாக்டரா என்பதாகத்தான் இருக்க முடியும்.//
இன்னொரு பதிலும் உள்ளது. மேலே கூறியுள்ளேன்

Bruno said...

//இந்தியாவில் கணினி பயன்பாடு இன்னும் முழுக்க வராத பட்சத்தில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பயன்படக்கூடிய எத்தனையோ சாப்ட்வேர்களை சேவை நோக்கத்துடன் தர ஏன் எந்த கணினி வல்லுனரும் முன் வருவதில்லை..மன்னிக்கவும் ..இதனை உதாரணம் என்ற அளவில் எடுத்துக்கொள்ளவும் .. //

முகிலன் சார்

அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் மென்பொருளை இலவசமாக செய்து தர யாராவது தயாராக இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ஆவல்

பெரிதாக எதுவும் இல்லை

இரத்த குருப் வாரியாக நோயாளியின் பெயரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்து, 1. இடம் வரும் போது அந்த குருப்பில் யார் பெயர் முதலில் இருக்கிறது என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள
2. அந்த நோயாளி வேறு இடத்தில் சிகிச்சை பெற்று விட்டால் அவர் பெயரை நீக்க என்று எளிய மென்பொருள் தான்

PHPல் MySQL தரவு தளத்தில் ஒரு சிறிய மென்பொருள் தேவைப்படுகிறது

தயார் என்றால் SRS அனுப்புகிறேன்.

இலவசமாக செய்ய யாராவது தயாரா

(பின் குறிப்பு : வாரண்டி எல்லாம் வேண்டாம். ஏன் ஸ்கீரின்களை கூட நாங்கள் வடிவமைத்து கொள்கிறோம். முக்கியமான் PHP நிரல்களை அமைக்க உதவினால் போதும்)

Paleo God said...

வாழ்த்துகள் முகிலன். :-)

--

@ புரூனோ : எனக்கும் பல கசப்பான அனுபவங்கள் மருத்துவர்களிடன் நிகழ்ந்ததுண்டு. நல்ல மருத்துவர்களையும் சந்தித்ததுண்டு. அவரவர் அனுபவங்களே இங்கு பகிரப்படுகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதை ஏற்கும் அதே நேரத்தில் எல்லா மருத்துவர்களும் நல்லவர்கள் உங்கள் பார்வையில்தான் கோளாறு என்று சொல்ல மாட்டீர்கள் என்றும் கருதுகிறேன்!

Unknown said...

this is a very good blog...all doctors are not like that...but many...last week in madurai one of my relative's 2 mnths baby got admitted in very big n famous hospital for loose motion...they gave continuous trips for 20 days n took blood test every hour...doctor didnt tell anything regarding the medication..and moreover its difficult to meet the doctor even...they told its fine n can go home...immediately after coming home again he got the problem n cant have milk...so they went to another hospital in madurai...they said its difficult..have to keep him in ventilator..his bone n skin got attached...3rd day he died...like this another problem happened in coimbatore biggest hospital...they did operation for cancer to 72 years old patient by knowing that its not needed...but after operation they are saying we cant do anything after opening..moreover hepatitis b is there...if we touch he will die...so we closed...that old man is suffering from operation wounds and money loss also...why cant they say it before operation...

Sekar said...

nanbare , Naanum doctor dhaan. Neengal sonna ellaa karuththukkalum enakku udanpaadu illai. 25 varudangallaga naan maruththuvaththurayil irukkiren. naan practice aarambiththa podhu consultation rupaai 5/- mattum. 25 varudangalukku piragu ippodhu Rs 30/- mudhal 50/- rupaai mattume. Americavil group practice enbaargal. 4 allathu 5 kuzhandhai nibunargal onru sernthu practice seivadhu. consultation evvalavu theriyuma??? oru patientin councelling before surgery 75,000kkum koodudhal aagum. avargal 3 casekal mattum paarththaal podhum. inge councelling seythuthaan treatment endraal, 3 perukku Rs 150/= kidikkum.oru docterai vida koththanaar thozhil nallathaai irukkum. neengal ninaippadhai pol investigationkku pinnarthaan treatment enraal feverkku Rs 800/- investigationukkum consultation , medicine ellaam serththu Rs 1000/- kku melaaghum. yellorum oru pola maruththuvam seyya viyalaadhu. thodarven

Bruno said...

//@ புரூனோ : எனக்கும் பல கசப்பான அனுபவங்கள் மருத்துவர்களிடன் நிகழ்ந்ததுண்டு. நல்ல மருத்துவர்களையும் சந்தித்ததுண்டு. அவரவர் அனுபவங்களே இங்கு பகிரப்படுகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதை ஏற்கும் அதே நேரத்தில் எல்லா மருத்துவர்களும் நல்லவர்கள் உங்கள் பார்வையில்தான் கோளாறு என்று சொல்ல மாட்டீர்கள் என்றும் கருதுகிறேன்! //

கண்டிப்பாக இல்லை

Bruno said...

மருத்துவர்கள் தேவையில்லாமல் பரிசோதனை செய்கிறார்கள் என்று வழக்கமாக புலம்பும் பதிவர்களில் ஒருவர் கூட இங்கு வந்து முகிலனின் கருத்திற்கும் (பரிசோதனை செய்யாதது தவறு) மறுப்பு கூறாதது ஆச்சரியமாக உள்ளது !!! :) :) :)

Dr.ராம் said...

//Dr.P.Kandaswamy said...

இந்தியாவில் இப்போது மருத்துவம் ஒரு வியாபாரமாகிப் போனது. இந்தியர்கள் கர்மவினையில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் தலைவிதியை நம்பித்தான் வைத்தியத்துக்குப் போகிறார்கள், டாக்டரை நம்பி அல்ல. எது நடந்தாலும் விதி அப்படி என்று சொல்லிக்கொண்டு அடுத்தவேலையைப் பார்ப்பார்கள். இதனால்தான் அநேக டாக்டர்கள் இந்த மாதிரி அலட்சியப்போக்குடன் நடக்கிறார்கள்.//

உங்களுடைய கருத்தை பொதுவான கருத்துபோல் தோற்றம் செய்ய முயன்றுள்ளீர்கள் .. அதாவது கர்மவினையை நம்பலாம்..தலைவிதியை நம்பலாம் .. ஆனால் நமக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களை மட்டும் நம்பகூடாது..அதேபோல் நீங்கள் நம்பிக்கை வைக்க விரும்பாத மருத்துவர்கள் உங்களை அலட்சியப்படுத்தாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.. இது என்ன சார் நியாயம்..டாக்டர்கள் மீது இவ்வளவு வெறுப்பை கொண்டுள்ள நீங்கள் தங்கள் பெயருக்கு முன் Dr என்று போட்டு கொள்வதேன்?

Dr.ராம் said...

//LK said...

வயிற்று பிரச்சனைக்காக அனுமதிக்கப் பட்ட எனது பாட்டிக்கு தேவை இல்லாமல் க்ளுகோஸ் ஏற்றி அதன் பின்விளைவாக இறந்து போனார்கள். அடுத்தது எனது சகோதரிக்கு , இதே போன்று வயற்றில் வலிக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து இன்றுவரை அதன் பின்விளைவுகளை சந்திதிக் கொண்டுள்ளார். //

தேவை இல்லாமல் என்று நீங்கள் கூறியது எந்த அடிப்படையில் என்பதனை விளக்கவும்..மற்றுமொரு படித்த மருத்துவர் இதனை கூறி இருந்தால் நான் ஏற்றுகொள்கிறேன் ..உங்கள் யூகமாக இருந்தால் நீங்கள் சொல்வது தவறு..

Dr.ராம் said...

//நாஞ்சில் பிரதாப் said...

எக்ஸ்பரியான மருந்துகளை மருந்துக்கடைகளில் விற்பனை ஆனதை விட வேறு உதாரணம் வேண்டுமா? மருத்துவர்களின் உதவியன்று இது நடக்க சாத்தியமே இல்லை...//

கடுமையாக மறுக்கிறேன் ..எந்த மருத்துவரும் expiry ஆனா மருந்துகளை வாங்க சொல்வதில்லை. நீங்கள் சொன்ன நிகழ்வுகளில் போலியான லேபிள் தயாரித்து காலாவதியான மருந்துகளில் ஒருவர் ஒட்டி விற்கிறார்.. இங்கு மருத்துவர்கள்,மருந்துகடைகாரர்கள் உட்பட அனைவரும் எமாற்றப்பட்டுள்ளோம் .. இதுவரை நடந்த விசாரணையில் எந்த மருத்துவரும் இதில் சம்மந்தபடவோ ,விசாரிக்கபடவோ இல்லை.அப்படி இருக்கையில் யூகத்தின் அடிப்படையில் கூறுவது தவறு..

Dr.ராம் said...

எனது கருத்தை வழிமொழிந்த நண்பர்கள் மரு ப்ருனோ, மரு சேகர் அவர்களுக்கு நன்றி..

வவ்வால் said...

Hi...hi yen drs ellam dum katti vathaduranga? pothu janam ellam appo enna ninaikiranga? Ithula irunthe theriyume bruno!(drs matterna neenga asarama pesuvinga,vera vazhi)


Fact: 90% drs greedy for money only 10% drs service minded.

I can show more examples but now no tamil font so later will talk indetail.

Dr.ராம் said...

//வவ்வால் said...
//Fact: 90% drs greedy for money only 10% drs service minded.//

it may be viceversa

in what way u r defining greedy or service minded..what r the criteria that u can say a doctor is service minded or not?

u can teach us my dear friend

Unknown said...

service minded - give correct medication that is necessary

money minded - even though its risky giving too much medication/ for money sake admitting n giving some medicines for days together/doing operations which is not needed,...

Sekar said...

Hi,
We are not here for finding fault with each other. medical profession has become money based. for an example, a headache can be treated symptomatically with simple medicines. At the same time the same can be treated after ll investigations i.e., from routine blood investigations, Urine exam, Xray for sinuses , scan MRI..and spl investigations. Ellaam senjittu, onnum illa, intha medicinea saappidungannu solradhum oru type. verum headachethaan nnu sollittu treat panrathum oru type. correctaa sonnaa first type seyyaradhuthaan correct.. aana panaththaasai pidichcha greedy group aayiduvaar.
second type simple treatment without any investigations. but he is wrong again.simple service minded but not properly ruled out the cause. IDHULLA ENDHA DOCTER NALLAVANGANNU NEENGADHAAN SOLLANUM.
Engeyo padichchadhu just read. I will explain again.

A good surgeon is one who has, Horses legs, ladies fingers and a Lion’s heart.


While attending a surgery lecture in 3rd year, our surgery professor, Dr S D Bhomaj, FRCS, asked the students, “Who is a good surgeon?” Immediately the Students gave different types of answers. Someone said, “a surgeon who does operation with minimum scar”, another one answered, “a surgeon who operates without any complications”, one girl said, “operation with minimum bleeding”, etc…

The professor agreed with all those answers. But the most accurate answer he said was an old dictum, “A good surgeon is one who knows when not to operate the patient”.

Yes, it was a billion dollar answer told by our beloved sir. An untimely and unneeded operation can be a catastrophe. We have come across several patients getting worse after the surgery. It is true that tonsillectomy can remove tonsillitis forever. But the same patient may come with recurrent pharyngitis, which is more troublesome than the tonsillitis.

On the other hand, it is an utter foolishness to give only medical treatment for purely surgical cases such as intestinal perforation, volvulus, rupture of viscera, compound fracture etc. In order to manage such cases, surgical management is mandatory.
SILA samayam Nammudaya karuththukalum sariyaaga irukkum

--
affectionate,
Major Dr N sekar

Sekar said...

Hi,
We are not here for finding fault with each other. medical profession has become money based. for an example, a headache can be treated symptomatically with simple medicines. At the same time the same can be treated after ll investigations i.e., from routine blood investigations, Urine exam, Xray for sinuses , scan MRI..and spl investigations. Ellaam senjittu, onnum illa, intha medicinea saappidungannu solradhum oru type. verum headachethaan nnu sollittu treat panrathum oru type. correctaa sonnaa first type seyyaradhuthaan correct.. aana panaththaasai pidichcha greedy group aayiduvaar.
second type simple treatment without any investigations. but he is wrong again.simple service minded but not properly ruled out the cause. IDHULLA ENDHA DOCTER NALLAVANGANNU NEENGADHAAN SOLLANUM.
Engeyo padichchadhu just read. I will explain again.

A good surgeon is one who has, Horses legs, ladies fingers and a Lion’s heart.


While attending a surgery lecture in 3rd year, our surgery professor, Dr S D Bhomaj, FRCS, asked the students, “Who is a good surgeon?” Immediately the Students gave different types of answers. Someone said, “a surgeon who does operation with minimum scar”, another one answered, “a surgeon who operates without any complications”, one girl said, “operation with minimum bleeding”, etc…

The professor agreed with all those answers. But the most accurate answer he said was an old dictum, “A good surgeon is one who knows when not to operate the patient”.

Yes, it was a billion dollar answer told by our beloved sir. An untimely and unneeded operation can be a catastrophe. We have come across several patients getting worse after the surgery. It is true that tonsillectomy can remove tonsillitis forever. But the same patient may come with recurrent pharyngitis, which is more troublesome than the tonsillitis.

On the other hand, it is an utter foolishness to give only medical treatment for purely surgical cases such as intestinal perforation, volvulus, rupture of viscera, compound fracture etc. In order to manage such cases, surgical management is mandatory.
SILA samayam Nammudaya karuththukalum sariyaaga irukkum

--
affectionate,
Major Dr N sekar

DR.EZHILAN.M said...

indian doctor`s aalways great then us.

Unknown said...

I read the post and all 87 comments! First good post and many good replies both from common people and doctors.

I am not a doctor but closely related with medical profession. So, I do know and face those issues routinely.

On that basis I can express my opinion here.

In the outset let me says this...

1.NOT all doctors in India are bad as perceived here by many commenters. But due to so many factors like sheer size of patients, and the consequent time constraints, the lack of infrastructure - poses most of the difficulties for patients and doctors to function efficiently. This leads to the situation of blame game by both doctors and patients. But the bottom line is this, there are MORE BAD doctors and LESS good doctors in India. The reasons for that is given above. I know many doctors who personally want to be good but because of the system they do otherwise.

2. INDIA Vs USA: I agree, its human tendency to compare the supposedly apparent disparities between two countries. But its absurd and useless. I urge people to take rational view. Having said that I do want to say what happened to me personally in USA in one of the well known biggest hospital in New York, USA.

My wife was cleaning home and a table fell to the side of her neck and hit badly, no outward injuries but she had terrible pain.
She called me to work and we rushed to the emergency room of a famous hospital. This happened at 2 PM. We go in, fulfill all formalities of insurance details, etc, etc and are asked to wait. I say, what...wait in a emergence room..they say, Yes..have a seat and we will call you. That's it..we kept waiting....
You will not believe me, and I am telling you the truth, we waited full 4 hours till 6PM. After that an intern (still in training) came in and did initial physical examination and said we need a x-ray. We go for x-ray and back, waiting. The head of the emergency room comes and sees the x-ray and orders CT SCAN, as the x-ray is not conclusive enough. Off we go for CT scan and back, waiting.The head comes, sees the scan and concludes nothing wrong. Prescribes just pain medication (which I can get it from local supermarket counter).We are discharged and off we go home, the time 11 PM.

Throughout these time,
1. we were fully explained all the procedures.
2. Just plain waiting
3. My wife is having terrible pain and cursing every target possible.

At home, I say to my wife, listen I think this is just a plain case of sprain in the neck so just put that "Mooov" and all will be ok. She does that exactly and off we go sleep. Next morning my wife says...I think its getting better. In 3 days time she was fine and we forgot the whole episode and go on our duty.

we thought the pain wass behind us but who knew what was comming....

continued...

Unknown said...

..continued from above..

After two months we get a bill in the mail,

$1800 !!!

I had insurance so escaped. Imagine if otherwise. I only paid $35, emergency co-payment.

what can I say....

1. That USA is BAD or I am being exploited by the hospital for their expensive X-RAY and CT SCAN machine purchase.

2.an Indian doctor at this situation would have done what I did, apply some "Mooov" and all will be fine. And sure, he will not explain me all the procedures. May be he will do that out of time constraint, lack of facilities, or because he is money minded etc, etc.

Such is life!

@#%$&! happens!

Later I learned that this is common occurrence in USA if one goes to a emergency room. They just make the patient wait wait and wait so that they will get discouraged and not use emergency room next time. This is done to avoid treating un-insured patients. Because by law the hospitals cannot send anyone away but by making everyone wait they can avoid many cost expenses. At least they do this democratically, i mean even if you are insured no priority.


So comparison between India and USA is useless.

My advice to people...look out for obvious exploitation and misbehavior but have faith and move on!

Sorry for a long comment, but hope this helps someone!

Thanks for a good post!

Have a nice day!

Sekar said...

TO:Whats in a name
Thank you sir,If it happens here Doctor would have been beaten

tamilanbalum said...

This is no different from the system in Australia too. It's a sheer ditto. One has to pay medical insurance black hole by government insistence. Per Annam it goes to more than 2000 for a basic (no special deceases etc)and an excess for everything such as $500 to get additional expenses covered by Ins Agency. Otherwise the treatment style, explaining procedures are all same. In India it's better. All one has to do is to make money.. Black or white. Depending upon that one can have doctors-- quality-- service etc. One can even have Doctors on call too. In western countries all lives are same except for bigwig politicians and industrial magnates. So in every system there are lurking dangers.. as one wished previously in this chain that if one lives long without serious incidents then it's certainly sheer luck..

tamilanbalum said...

இங்கு எழுதியுள்ள அனைவருமே உணர்ச்சிவசப் பட்டவர்களாக இருக்கிறார்கள். வருத்தமுற்றோர் ஊசியால் வார்த்தைகளில் குத்தினாலும், மனம் வலிக்காமல், நாங்கள் ஊசி போடும்பொழுது நல்லாவே வலிக்கும்.. அதுக்குப் பணமும் கொடுப்பீர்களே.. என்று நக்கலாக சொல்லும் நம் மருத்துவர்களும் சளைக்காமல்தான் இருக்கிறார்கள். அதில் ஒரு வரி என்னை உறுத்தியது.. என்னவோ மருத்துவர்கள் மாத்திரம் உயிரோடு விளையாடுவது போலவும் மற்றவர்கள் எல்லாம் வெறும் தயிரோடு (வார்த்தைச்சிலம்பம் மாறி விட்டது பண்பு கருதி!) விளையாடுவது போலவும் எழுதியுள்ளது. என்ன கேவலம்.. மென்பொருளில் தப்பாக 'கோட்' எழுதிவிட்டால் எங்கெங்கே பாதிக்கும். ஸ்பேஸ்ஷட்டில் விபத்தில் ஒரு சிறிய தப்பில்தானே எல்லோரும் காலியானார்கள்.. சிவில் எஞ்சினியர் கட்டிடம் விழுந்தால் பாலம் விழுந்தால்.. ஹெல்த் இன்ஸ்பெக்டர் சரியாக செய்தால் ஏன் கலப்படத்தில் மக்கள் காலியாகிறார்கள்? ஆகவே அனைவரின் உயிருக்கும் அனைவர் தொழிலும் அவர்களின் உயிரையும் சேர்த்து அவரவர்களின் இன்ஷ்யூரன்ஸ் அடங்கியிருக்கிறது. அது எல்லோருடைய பொறுப்பே..

Dr.ராம் said...

இந்த வார( 16 .6 .10.) ஆனந்த விகடனில் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதும் 'சிறிது வெளிச்சம்-நோய் தீர்க்கும் சொற்கள் " கட்டுரையில் உங்கள் இடுகைக்கான பதில்கள் இருக்கின்றன..உங்கள் கருத்துக்களை கூறவும்

Dr.ராம் said...

//Kannan said...

//service minded - give correct medication that is necessary//

who will decide that a doctor is giving correct medicine or not ..it is based on knowledge of a doctor..do u agree or not?.. if so u must have faith in doctors.

if a patient or relatives think that it is not a correct medication by assumption or by common myth ,u wont call any doctor service minded..isnt it?

// money minded - even though its risky giving too much medication/ for money sake admitting n giving some medicines for days together/doing operations which is not needed,...//

the same explanation applicable here.. who will decide about what is the dose needed for a patient?,whether admission needed or not?, operation is needed or not?..

if it is a patient think that these r unnecessary then u will call a doctor money minded..isnt it?

kannan said...

நீங்கள் சொல்வதும் சரி ...டாக்டர் சொல்வதும் சரி...சொந்த மருத்துவ மனை நிறைய சிலவு செய்து யாரெல்லாம் வைதுள்ளர்களோ...அவர்கள் எல்லாம் போட்ட காசை எடுக்க தான் செய்வார்கள்...பொதுவாக இப்பொழுது எல்லாம் மருத்துவர்களுக்கு மனசாட்சியே இல்லை என்பது தான் பொது கருத்து...நான் நல்ல நிலையில் இருந்தாலும் இப்பொழுதும் அரசு மருத்துவமனைக்கு தான் செல்கிறேன்...