Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Friday, August 29, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 11

சி.எம்.சி மருத்துவமனை.

அதிகாலை 4:00 மணி. ஜெனரல் வார்டில் கட்டில்கள் வரிசையாகப் போடப்பட்டு கொசுவலை போன்ற திரையால் தடுக்கப்பட்டிருந்தன. நோயாளிகளுக்குத் துணையாக வந்தவர்கள் கட்டில்களுக்கு நடுவில் நியூஸ் பேப்பரையோ பழைய பெட்ஷீட்டையோ விரித்துப் படுத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலரிடம் இருந்து குறட்டை ஒலி சீராக வந்து கொண்டிருந்தது. ஓரமாகப் போட்டிருந்த மேஜையின் மீது தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தார் டியூட்டி நர்ஸ். அந்த உருவம் மெதுவாக உள்ளே நுழைந்தது. ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக்கொண்டே வந்து கணேசன் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்ததும் நின்றது. கணேசனின் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை போலும். அவன் பக்கத்தில் யாரும் இல்லை.

அந்த உருவம் பையில் இருந்த சிரிஞ்சை எடுத்து அதனுள் ஒரு மருந்தை ஏற்றியது. அதை ஏறிக்கொண்டிருந்த கணேசனின் சலைன் பாட்டிலில் ஏற்றியது. சலைன் ஏறும் அளவை அட்ஜஸ்ட் செய்யும் சக்கரத்தை மேலே ஏற்றி உட்செல்லும் அளவை அதிகப்படுத்தியது. சில விநாடிகள் நின்று பார்த்துவிட்டு வேக வேகமாக வெளியேறியது.

*************************************************

கமிஷனர் அலுவலகம்.

அருணும் சிவாவும் கமிஷனர் கார்த்தியின் எதிரில் உட்கார்ந்திருந்தார்கள். அருண் விவரம் அனைத்தையும் விளக்கினான்.

“சாரி கார்த்தி. உன்கிட்ட கேக்காம டீல் பேசிட்டு வந்துட்டேன்.”

“நோ பிராப்ளம் அருண். நாம மொத்த டாகுமெண்ட்ஸையும் கைப்பத்தியிருந்தாலும் சொக்கலிங்கம் எப்பிடியாவது பூந்து அதை வாங்கிட்டுப் போயிருப்பான். டீல்னால ரவியை சீக்கிரம் நெருங்க முடியும்ங்கிறதால சந்தோசம் தான். சரி நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் என்ன?”

“பெரிய அளவுல பேரர் பாண்ட்ஸ் டீல் நடக்கணும்னா கண்டிப்பா யாராச்சும் ப்ரோக்கர் இல்லாம நடக்காது. இந்த மாதிரி டீலிங்க்ல இறங்கற ஆட்கள் எல்லாருக்கும் ஒரு நோட்டிஃபிகேஷன் அனுப்புவோம். ஆறு கோடியையும் இங்கயே மாத்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. கொஞ்சம் பணத்தை இந்தியாவுல மாத்திட்டு எங்கயாச்சும் வெளிநாடு போய் அங்க தான் மீதியை மாத்துவான்னு எதிர்பார்க்கிறேன். சோ, அவன் பாஸ்போர்ட்டை ஃப்ளாக் பண்ணிடுவோம். ஏற்கனவே சிவா அவன் கிரெடிட் கார்ட் எல்லாத்தையும் ஃப்ளாக் பண்ணியிருக்காரு. எப்பிடியாச்சும் அவனைப் பிடிச்சிரலாம்”

சிவாவின் செல்லுக்கு ஒரு கால் வந்தது. எடுத்துப் பேசினார்.

“ஓ அப்பிடியா? எப்ப?”

..

“ஓ. ஓக்கே சார். நான் அருண் சார்ட்ட பேசிட்டுக் கூப்புடுறேன்”

“சார் ஒரு அன்ஃபார்ச்சுனேட் இன்சிடெண்ட்.”

“என்ன ஆச்சி?”

“ஹாஸ்பிட்டல்ல இருந்த கணேசன் திடீர்னு செத்துப் போயிட்டானாம் சார்.”

“வாட்? நல்லா இருந்தான்னு சொன்னீங்களே? சொக்கலிங்கம் கூட அவன் நல்லாப் பேசினதா தானே சொன்னாரு?”

“ஆமா சார். என்னான்னு தெரியல. போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதும் ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காரு சார்”

“ம்ஹ்ம். கார்த்தி, திஸ் த்ரோஸ் அஸ் இன் வாட்டர். ஒரு வேளை ரவியை வளைச்சிட்டாலும், நம்மளால கேஸை ஸ்ட்ராங்கா ப்ரொட்யூஸ் பண்ண முடியுமான்னு தெரியலை. வாட் டு டூ நவ்?”

“முதல்ல ரவியை மடக்குவோம். அதுக்குப் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.”

“ஓக்கே”

*********************************************

சொக்கலிங்கம் சொல்படி தவறி விழுந்ததாகவே கணேசனும் வாக்குமூலம் கொடுத்திருந்தான். ரவியைப் பிடிப்பதற்கு எல்லா இடங்களிலும் பொறி வைத்தாகிவிட்டது. எலி சிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், சிக்கிய பின் ரவியை தகுந்த சாட்சியங்களுடன் சிறையில் அடைப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

சிவா வேகமாக உள்ளே வந்தான். “சார் பய ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கான். எங்கயுமே டிரேஸ் விடாம இருக்கான். இன்னமும் கிரெடிட் கார்ட் எதையும் யூஸ் பண்ணலை. ஏ.டி.எம்ல பணமும் வித்டிரா பண்ணலை”

“அவன் கம்பெனி பிசியை கான்ஃபிஸ்கேட் செஞ்சிங்களே அதுல எதுவும் மேட்டர் சிக்கிச்சா?”

“இல்ல சார். அதுவும் டெட் எண்ட் தான்”

“ம்ம்.. லெட்ஸ் வெயிட் அண்ட் சீ”

அருண் மேஜையின் மீதிருந்த ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.

“சிவா. ஒரு ப்ரேக்த்ரு கிடைச்சிருக்கு. 25 லட்சம் மதிப்புள்ள பேரர் பாண்ட்ஸை ரெண்டு வாரம் முன்னாடி என்கேஷ் பண்ணியிருக்கான். ஹவாலால இன்வால்வ் ஆகிற ஒரு ஏஜெண்ட் மூலமா இந்தப் பரிமாற்றம் நடந்திருக்கு. நம்பகமான காண்டாக்ட் மூலமா இந்த நியூஸ் கிடைச்சது. பணம் கிடைச்சும் பய எஸ்கேப் ஆகாம இருக்கான்னா, ஒண்ணு அவன் போலி பாஸ்போர்ட் விசா ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கணும். அல்லது அவன் லின்க் எதையாவது மிஸ் பண்ணியிருக்கணும். அதை அடைச்சிட்டு எஸ்கேப்பாவலாம்னு இருக்கணும். எது எப்பிடியோ அவன் இந்தியாவுக்குள்ள தான் இருக்கணும்”

“சார் தென் கணேசனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சி. He was poisoned. சயனைடை சலைன் பாட்டில்ல ஏத்தியிருக்காங்க. லேப் ரிப்போர்ட்ஸ் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க. சொக்கலிங்கத்துக்கும் விசயம் போயிடுச்சி. கொதிச்சிப் போய் இருக்காரு. உங்களுக்கும் பேசலாம்”

“சிவா, ஐ சஸ்பெக்ட் இந்தக் கொலையையும் ரவியே செஞ்சிருக்கலாம். அவனோட மிஸ்ஸிங் லிங்க் கணேசன் மட்டும் தான்.”

“கணேசன் அங்க அட்மிட் ஆகியிருக்கிறது அவனுக்கு எப்பிடி சார் லீக் ஆகியிருக்கும்?”

“அவன் தானே தள்ளிவிட்டது. வாட்ச் பண்ணிட்டே இருந்திருப்பான். இத்தனை நாள் ஐசியுல இருந்ததால அவனால உள்ள போக முடிஞ்சிருக்காது. கோமால இருந்து முழிச்சதும் ஜெனரல் வார்டுக்கு மாத்தியிருப்பாங்க. ஈஸியா உள்ள நுழைஞ்சிட்டான். எனிவே வி ஷுட் இன்ஃபார்ம் சொக்கலிங்கம்”

“சார் சொக்கலிங்கம் ஏற்கனவே பாண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்னு காண்டுல இருப்பார். இதுல கணேசனைக் கொன்னதும் ரவிதான்னு தெரிஞ்சா”

“தெரிஞ்சா?”

“நமக்கு முன்னாடி ரவி அவர் கையில மாட்டினா சின்னா பின்னமாகிருவான் சார்”


“ம்ம்.. நாம அதுக்கு முன்னாடி அவனைப் பிடிக்கணும்”



***************************************************



சொக்கலிங்கம் அருண் முன்னால் உட்கார்ந்திருந்தார்.

“அருண் சார், நீங்க சொன்னதால சும்மா இருந்தேன். இப்ப அவன் ஆஸ்பத்திரியேறி வந்து என் ஆளைக் கொன்னுட்டுப்போயிருக்கான். அவன் ரொம்ப விசுவாசமானவன் சார். பணத்தை எடுத்துக்கிட்டு போயிட்டான்னு நினைச்சி  அந்தத் தேவிடியாப் பய மட்டும் என் கையில கெடச்சான் இந்தக் கையாலயே அவனை நசுக்கிக் கொன்னுருவேன்”

“கூல் டவுன் சொக்கலிங்கம். டிப்பார்ட்மெண்ட் அவனைத் தீவிரமாத் தேடிக்கிட்டு இருக்கு. அரெஸ்ட் வாரண்ட் வாங்கி வச்சிருக்கோம். பாஸ்போர்ட் ஃப்ளாக் பண்ணியிருக்கு. அவன் எங்கயும் தப்பிக்க முடியாது. பிடிச்சிரலாம். கவலைப் படாதீங்க. அப்புறம் 25 லட்சத்தை அவன் ஏற்கனவே மாத்திட்டான்.”

”அவன் சிக்கினாப் போதும் அருண் சார். 25 லட்சத்தை எப்பிடி வாங்கிறதுன்னு எனக்குத் தெரியும். ரெண்டு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ள நீங்க அவனைப் பிடிக்கலைன்னா நம்ம டீல் ஓவர். புரிஞ்சதா?”

“புரிஞ்சது சொக்கலிங்கம். தூண்டில் போட்டிருக்கோம். மீன் முள்ளைக் கடிக்கிற வரைக்கும் காத்திருக்கத்தான் வேணும்”

“ஏதோ சொல்றீங்க. சரி வர்றேன்” சொக்கலிங்கம் அந்தப் பக்கம் போனதும் அருணின் செல்ஃபோன் ஒலித்தது.

“ஹலொ”

...

“வாட்?”

...

“ஓக்கே நான் உடனே வர்றேன்”

அருண் அவனது ஐ20ஐ சைதாப்பேட்டை கோர்ட் வாசலில் நிறுத்தினான். பதட்டத்துடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சிவா அருணின் தலையைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கிவிட்டு ஓடி வந்தான்.

“எங்க இருக்கான் சிவா?”

“உள்ள தான் சார். லாயர்ஸ் கூட இருக்கான்”

”ஜட்ஜ் என்ன சொன்னாரு?”

“பிபி 15 டேய்ஸ் கஸ்டடி கேட்டிருக்காரு. கிடைச்சுடும்னு நினைக்கிறேன்”

“வாங்க உள்ள போகலாம்”

இருவரும் உள்ளே நுழைந்தனர். இரண்டு வக்கீல்கள் இரண்டு பக்கமும் உட்கார்ந்திருக்க, நடுவில் நீலக் கலர் சூட் போட்டு உட்கார்ந்திருந்தான். சமீபத்தில் பணமாக்கியிருந்த 25 லட்ச ரூபாய் தந்ததா இல்லை இயல்பாகவே இருப்பதா என்று தெரியாமல் ஒரு பணக்காரக் களை அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. சிவாவின் காக்கி யூனிஃபார்மைப் பார்த்ததும் ஒரு சங்கடம் அவன் உடல்மொழியில் வெளிப்பட்டது. லாயரைப் பார்த்தான். அவர் ஆறுதலாகத் தலையசைத்து அவனை அமைதிப்படுத்தினார்.

அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”

(தொடரும்)

Friday, March 7, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 10

கணேசன் சொல்லச் சொல்ல சொக்கலிங்கத்தின் முகம் கறுத்தது.

ஒன்றரை மாதமாக கோமாவில் இருக்கிறான். முழித்ததும் மனைவியைக் கூடக் கேட்காமல் சொக்கலிங்கத்தின் பெயர் சொல்லி கேட்கிறான். இவனை எப்படி நம்பாமல் இருப்பது?

“அவன் பேர் என்னன்னு நினைவு இருக்கா?”

“இருக்குதுண்ணே, ரவி”

“எந்தக் கோச்?”

“அண்ணே?” புரியாமல் முழித்தான் கணேசன்.

“ட்ரெயின்ல எந்தப் பொட்டியில வந்தான், எஸ்1 எஸ்2 இப்பிடி”

“ஓ, அதுவாண்ணே, எஸ்4ண்ணே. சீட் நம்பர் 64. எனக்குப் பக்கத்து சீட் தாண்ணே. அந்த விவரம் சாகுற வரைக்கும் மறக்காதுண்ணே”

“பரவாயில்லடா, தலையில அடிபட்டு கோமாவுல கிடந்தாலும் இதை எல்லாம் நினைவுல வச்சிருக்க. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்டா”

“என்னண்ணே?”

“நீ காணாமப் போயிட்டன்னதும், பாண்ட் பேப்பரை எல்லாம் எடுத்துக்கிட்டு நீதான் ஓடிப் போயிட்டியோன்னு நினைச்சி உன் பொண்டாட்டியை ரொம்பக் கொடுமைப் படுத்திட்டேண்டா. என்னை மன்னிச்சிடுடா”

“அய்யோ அண்ணே என்னண்ணே பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு. உங்க நிலமையில நான் இருந்தாலும் அப்பிடித்தாண்ணே நினைச்சிருப்பேன். காசு ஒர்ருவா ரெண்டுர்ரூவாயா? ஆறு கோடியிலண்ணே. அப்பிடி நினைக்கிறதுல என்னண்ணே தப்பு? இப்ப எம்பொண்டாட்டி எங்கண்ணே இருக்கா?”

“தெரியலைடா, ஆனா தேடிக் கண்டுபிடிச்சி இங்கக் கூட்டிட்டு வரச் சொல்றேன். இப்ப நான் அந்த ரவியைத் தேடப் போகோணும். போலீஸ் வருவாங்க. வந்து கேட்டா ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டன்னு சொல்லிடு. நம்ம பேப்பர் பத்தியோ அந்த ரவியைப் பத்தியோ மூச்சு விடவேண்டாம். என்ன?”

“சரிண்ணே” கணேசன் தொடர்ந்து பேசிய களைப்பில் கண்ணை மூடினான்.

சொக்கலிங்கம் கண்ணைக் காட்டியதும் வைத்தி செல்ஃபோனில் ஸ்டேஷன் நம்பரை அழைத்தான்.

************************************************

சுமோ சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சொக்கலிங்கம் ஃபோனில் யாரிடமோ படபடத்துக் கொண்டிருந்தார். “இந்தா பாரு, நான் இப்ப சென்னைக்கு வந்துட்டே இருக்கேன். நான் வந்து ஆஃபிஸ்ல நுழையிறதுக்குள்ள அந்த ரவியோட அட்ரஸ் என் டேபிள்ல இருக்கணும். யாரைப் பிடிப்பியோ, எவன மெரட்டுவியோ தெரியாது. எனக்கு அட்ரஸ் வேணும். ஒன்னால முடியுமா முடியாதா?”

“....”

“சரி. ஒன்னைய நம்புறேன்”

போனை வைத்துவிட்டு, வைத்தியைப் பார்த்து, “மணிகண்டண்ட்ட சொல்லிட்டேண்டா. அவன் எப்பிடியும் ரயில்வேய்ஸ்ல ரிசர்வேஷன் ஃபார்ம் பாத்து ரவியோட அட்ரஸ் எடுத்துக் குடுத்துருவான். அந்த ரவி மட்டும் கையில கிடைக்கட்டும், அவன் கொட்டைய நசுக்கிடுறேன். என்ன நினைச்சிட்டு இருக்கான்? யார் கையில வெளையாடுறோம்னு தெரிய வேண்டாம்?”

“கவலைப் படாதண்ணே, கண்டிப்பா அவனைப் பிடிச்சிரலாம்”

*****************************************************

சப்வேயில் வாங்கி வந்திருந்த ஃபுட் லாங் வெஜிட்டேரியன் சப் சாண்ட்விட்ச்சைக் கடித்துக் கொண்டே டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த அருணின் செல்ஃபோன் ஒலித்தது.

“ம்ம். சொல்லுங்க சிவா”

“சார் நீங்க சொன்ன மாதிரி மீனாகிட்ட விசாரிச்சேன். ஒன் அண்ட் எ ஹாஃப் மாசத்துக்கு முன்னாடி ஏதோ தப்பு செஞ்சதுக்காக சிவகுருவை காலேஜ்ல இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. லெட்டர் வீட்டுக்குப் போறதுக்குள்ள போய் அதைப் பிடிக்கணும்னு அன்னைக்கு நைட்டே கிளம்பி ஊருக்குப் போயிருக்கான் சிவா. மீனாவுக்கு என்ன டேட்னு கன்ஃபர்ம்டா தெரியலை. நான் காலேஜ் ரெக்கார்ட்ஸ்ல பாத்து கன்ஃபர்ம் செஞ்சிக்கிட்டேன். நமச்சிவாயம் சென்னையில இருந்து திரும்பிப் போன அதே நாள், சதாசிவம் டி.டி.ஈயா போன அதே நாள். ஸோ மூணு பேரும் ஒரே நாள்ல ஒரே ட்ரெயின்ல பிரயாணம் செஞ்சிருக்காங்க சார்.”

“குட். சோ கோ இன்சிடன்ஸ், வெறும் இன்சிடெண்டா ஆகியிருக்கிறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க?”

“எஸ் சார். ஆனா ஒரே ஒரு பிராப்ளம் என்னண்ணா, நம்ம சதாசிவம் எப்பவும் அன் ரிசர்வ்ட்ல போறவர். திடீர் ட்ராவல்ங்கிறதால சிவகுருவுக்கும் டிக்கெட் கிடைக்காம அவனும் அன்ரிசர்வ்ட்ல போனதா மீனா சொல்றா. பட் சதாசிவம், ரிசர்வ்ட் கோச்க்கு டி.டி.ஈ. அவங்க எப்பிடி மீட் பண்ணியிருப்பாங்கன்னு டவுட்டா இருக்கு”

“சிம்பிள் சிவா. நீங்க அன்ரிசர்வ்ட் டிக்கெட் எடுத்து டி.டி.இ கிட்ட காசு குடுத்து ரிசர்வ்ட் டிக்கெட் வாங்கிப் போனதே இல்லையா?”

“ம்ம். அப்போ சதாசிவம் சிவகுருவுக்கும், நமச்சிவாயத்துக்கும் ரிசர்வ்ட் கோச்ல சீட் குடுத்துருக்கலாம்னு சொல்றீங்களா?”

“எக்ஸாக்ட்லி”

“பாஸிபிள் சார். ஆனா அதைக் கன்ஃபர்ம் பண்ண இவங்க மூணு பேருமே உயிரோட இல்லையே சார்?”

“நோ பிராப்ளம் சிவா. அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வாங்கிட்டீங்களா?”

“இன்னும் இல்லை சார். காலைல முதல் வேலையா செஞ்சிடுறேன்”

“தென் அந்த டேட்ல ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் எதுவும் ரிக்கார்ட் ஆகியிருக்கான்னு விசாரிச்சீங்களா?”

“ப்ளூ மவுண்ட்டென் ரூட்ல இருக்கிற எல்லா ஸ்டேஷன்ஸ்க்கும் தகவல் குடுத்துருக்கேன் சார். ரயில்வே போலீஸ்க்கும் நோட்டிஃபிக்கேஷன் அனுப்பியிருக்கேன். நாளைக்குத் தெரிஞ்சிரும்”

“குட். நாளைக்குக் காலைல ஆஃபிஸ்ல மீட் பண்ணுவோம்”

“ஷ்யூர் சார் குட் நைட்”

ஃபோனை அணைத்துவிட்டு சாண்ட்விட்ச்சில் கவனத்தைத் திருப்பினான். இதுவரை இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடிக் கொண்டிருந்ததுபோல இருந்த கேஸில் நாளை ஒரு டைரக்‌ஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அருணுக்கு வந்தது.

*************************************************
மக்கள் முன்னேற்றக் கழக வட்ட அலுவலகம். மேஜை மேல் வைத்த டீ ஆறிப்போயிருந்தது. அடிக்காத செல்ஃபோனை வெறித்தவாறு அமர்ந்திருந்தார் சொக்கலிங்கம். “என்னடா இந்த நீலகண்டன் இன்னும் கூப்புட மாட்டேங்கிறான்?”

வாசலில் நிழலாடியது. “இந்தா நேர்லயே வந்துட்டானே”

“வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தான் நீலகண்டன். சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்தான். லேசாகச் சாயம் போன வெளிர் நீல வண்ண சட்டையும் கறுப்புப் பேண்டும் அணிந்திருந்தான். நெற்றியில் கீற்றாக திருநீர் வைத்திருந்தான். கையில ஒரு பேப்பரைச் சுருட்டி வைத்திருந்தான்.

“நல்லா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்யா. நான் கேட்ட விசயம் என்னாச்சி?”

“இந்தா கையோட கொண்டாந்திருக்கேனே சார். பேரு அட்ரஸ் எல்லாம் இருக்கு. கொஞ்சம் கஷ்டமாயிடுச்சி சார் இந்த விவரம் தேடிக் கண்டுபிடிக்க” தலையச் சொறிந்தான்.

சொக்கலிங்கம் பேப்பரை வாங்கிக் கொண்டு வைத்தியைப் பார்க்க, வைத்தி நீலகண்டனின் தோளில் கை போட்டு திருப்பிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான். நீலகண்டன் நின்று திரும்பிப் பார்த்தான், “சரி சார், எதுக்கு இதைக் கேட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“தெரிஞ்சிக்கக் கூடாது” சொக்கலிங்கத்தின் குரலில் கடுமை இருந்தது.

“இல்ல போலீஸ்ல இருந்து யாரோ வந்து இதே தேதிக்கு எஸ்.4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் கேட்டுட்டு இருந்தாங்க அதான் கேட்டேன்”

சொக்கலிங்கத்தின் முகத்தில் எந்த உணர்ச்சி மாற்றமும் இல்லை. ஆனால் கண்களில் ஒரு ஒளி வந்து மறைந்தது. “அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. நீ வைத்தி குடுக்குற காசை வாங்கிட்டு நடையைக் கட்டு”

அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த வைத்தியைப் பார்த்து சொக்கலிங்கம் குரலை உயர்த்தினார். “என்னடா நடக்குது இங்க. போலீஸ் எதுக்கு மோப்பம் புடிச்சிட்டு வர்றாய்ங்க? கணேசன் எதுவும் உளறிட்டானா?”

“அப்பிடியெல்லாம் இருக்காதுண்ணே. போலீஸ் வேற எதுக்காகவாது தேடியிருக்கும். கணேசன் அப்பிடிப்பட்டவன் இல்லை”

“ம்ம்.. நம்புவோம். எதுக்கும் கமிஷனர் ஆஃபிஸ் பக்கம் ஒரு காதைப் போட்டு வையி”

“சரிண்ணே”

பேப்பரை மேஜை மீது போட்டான். ”அந்த ரவிங்கிறவன் அட்ரஸ் இதுல இருக்கு. நம்ம பயக ரெண்டு பேரை அனுப்பி விசாரிக்க சொல்லு. கண்டிப்பா அவன் இங்க இப்ப இருக்க மாட்டான். ஆனா வீட்டுல இருக்கிறவிங்க பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட விசாரிச்சி அவன் எங்க வேலை பாக்குறான், சொந்த ஊர் எது, முடிஞ்சா அவன் சொந்த ஊர் அட்ரஸ் எல்லாம் விசாரிச்சிட்டு வரச் சொல்லு. சாயந்திரத்துக்குள்ள எனக்கு எல்லா விவரமும் வரணும். சரியா?”

“சரிண்ணே.” பேப்பரை எடுத்துக் கொண்டு அகன்றான்.

*************************************************
கமிஷனர் அலுவலகம். ரிசர்வேஷன் சார்ட் மேஜை மீது கிடந்தது.

சிவா ப்ரீஃப் செய்து கொண்டிருந்தார். “எஸ்-4 கோச்ல ரவிங்கிற பேர் வர்ற பேசஞ்சர்ஸ் ரெண்டு பேர் அன்னைக்கு ட்ராவல் பண்ணியிருக்காங்க சார். ரவிக்குமார் 14, ரவிச்சந்திரன் 64. ரெண்டு பேருமே ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணியிருக்காங்க. ரவிச்சந்திரன் குடுத்த ஃபோன் நம்பர் நம்ம டிடீஇ ஃபோன்ல இருந்த எஸ்-4 நம்பர். அட்ரஸ்ல விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கேன்.”

அருண் இடைமறித்தான். “யூஸ் இல்ல சிவா. அவன் கண்டிப்பா அங்க இருக்க மாட்டான். ஆனா அவன் கிரெடிட் கார்டை flag பண்ண ஏற்பாடு பண்ணுங்க. அவன் எங்க கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணாலும் நமக்கு உடனே தகவல் வரணும்”

“குட் ஐடியா சார். இப்பவே பேங்குக்குக் கால் பண்ணிடுறேன்.”

போன சிவா அரைமணி நேரத்தில் திரும்பி வந்தார். “சார் ரவிச்சந்திரன் பேர்ல இருக்கிற பேங்க் அக்கவுண்ட், ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்ட் எல்லாத்தையுமே ஃப்ளாக் பண்ணியாச்சு. அவன் எங்க யூஸ் பண்ணாலும் உடனே நமக்குத் தெரிஞ்சிரும்”

“குட். அவனோட வெஹிக்கிள் ஏதாவது?”

“அவன் பேர்ல ஒரு பல்சர் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. அது அவன் வீட்டுல தான் இருக்காம். நீங்க சொன்ன மாதிரி அவன் வீட்டுல இல்லை. அவன் சொந்த ஊர் கோயமுத்தூர் பக்கத்துல ஒரு கிராமம். அங்கயும் விசாரிக்க லோக்கல் போலீஸ் அனுப்பியாச்சு”

“குட் சிவா. எக்ஸ்பெக்ட் பண்ணினதை விட ஃபாஸ்ட்டா இருக்கீங்க”

“சார் இன்னொரு முக்கியமான விசயம். மக்கள் முன்னேற்றக் கழகத்தோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்தோட ஆளுங்க ரெண்டு பேரு ரவியைப் பத்தி விசாரிச்சிட்டுப் போயிருக்காங்க. என்ன காரணம்னு தெரியலை”

“விசாரிங்க. ஒரு வேளை நாம தேடிட்டு இருக்கிற ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸ்க்கு சொக்கலிங்கம் ஓனரா இருந்தாலும் இருப்பாரு”

“ஓக்கே சார் விசாரிக்க சொல்றேன்.”

“சிவா, ஆக்ஸிடெண்ட்ஸ் பத்தி விசாரிக்க சொன்னேனே. விசாரிச்சீங்களா?”

“யெஸ் சார். விசாரிச்சேன். வேலூர்ல ஒரு ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்துல வேலூர் ஸ்டேஷனுக்குக் கால் பண்ணி கேட்டுட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன் சார்.”

காலையில் போன சிவாவை மதியம் முழுக்கக் காணவில்லை. மேஜை மீது கிடந்த மற்ற கேஸ் கோப்புகளில் சிலவற்றை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். ஆனாலும் மனதில் இந்தக் கேஸே ஓடிக் கொண்டிருந்தது. ரவிச்சந்திரன் தான் குற்றவாளியாக இருக்க வேண்டும் என்று ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வந்தாயிற்று. காரணமும் காணாமல் போன ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸாக இருக்கலாம். ஒரு வேளை ரவிச்சந்திரன் அந்த டாகுமெண்ட்ஸைப் பணமாக மாற்றியிருந்தானென்றால் இந்நேரம் வெளிநாட்டுக்குத் தப்பியிருப்பான். அட்லீஸ்ட் வெளிமாநிலத்துக்காவது. மாற்றவில்லை என்ற பட்சத்தில் அவனைப் பிடிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. முதலில் அது என்ன டாகுமெண்ட்ஸ் என்று தெரிய வேண்டும்.

குழப்பத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டைக் காலி செய்திருந்த வேளையில் சிவா வந்தார். “சார் எ ப்ரேக் த்ரு”.

“ரவிச்சந்திரன் வேலை பார்க்கிற இடம் ஒரு பெரிய இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி. அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி யாருக்கு விவரம் தெரியலைன்னாலும் ரவிக்குத் தெரியாம இருக்காது. அவன் லாஸ்ட் ஃபோர் டேய்ஸா ஆஃபிஸ்க்கு வரலை. அவனோட ஆஃபிஸ் பிசியை நம்ம எவிடென்ஸாக் கொண்டு வர வாரண்ட் வாங்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதை நோண்டினா கண்டிப்பா விவரம் தெரியலாம்”

“குட் சிவா”

“தென் சார், அந்த வேலூர் ஆக்ஸிடெண்ட் கேஸ் ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டதா ஃபைல் ஆகியிருக்கு. ஆனா ஒரு விசயம். அந்த விக்டிம் பேரு கணேசன். அவனுக்கும் வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. நேத்துக் காலையில சொக்கலிங்கம் போய் அவனைப் பாத்துட்டு வந்திருக்கார்”

“சிவா, அந்த கணேசனுக்கும் ரவிக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கு. இல்லைன்னா சொக்கலிங்கம் ரவியை எதுக்குத் தேடணும்? நான் சொக்கலிங்கத்தைப் பார்க்கணுமே. ஏற்பாடு செய்ங்க.”

“ஓக்கே சார்”

***************************************************************************************************

சொக்கலிங்கத்தின் முன்னால் இருந்த சேரில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு சொக்கலிங்கத்தின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். சொக்கலிங்கம் எதுவும் பேசாமல் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தார்.

“சொல்லுங்க சொக்கலிங்கம் சார். நீங்க எதுக்காக ரவிச்சந்திரனைத் தேடுறீங்க?”

“யார் ரவிச்சந்திரன்?”

“மறுபடி மறுபடி அதையே சொல்லாதீங்க சொக்கலிங்கம். நான் போலீஸா வரலை. போலீஸும் இல்லை. ஜஸ்ட அ கன்சல்டண்ட். நீங்க சொல்ற எந்த விவரமும் போலிஸ் ரெக்கார்ட்ல போகாமப் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இன் ஃபேக்ட் நீங்களும் ரவி வச்சிருக்கிற அந்த டாகுமெண்ட்ஸைத்தான் தேடுறீங்கன்னு கூட எனக்குத் தெரியும்” சொல்லிவிட்டு சொக்கலிங்கத்தின் கண்களையே உற்றுப் பார்த்தான். அதில் தெரிந்த அதிர்ச்சியை சரியாகக் கண்டுகொண்டான்.

“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலைங்க அருண். நீங்க ட்யூட்டில இருக்கும்போது நாம ரெண்டு பேரும் கொஞ்சம் உரசியிருக்கோம். உண்மைதான். இப்ப எங்க ஆட்சியில்லைங்கிறதால என்னைப் பழிவாங்க நினைக்கிறீங்க. இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியாது. நீங்க என்னோட லாயரைப் பாருங்க”

“பாருங்க மிஸ்டர் சொக்கலிங்கம். உங்களை என்னால நேரடியா எதுவும் செய்யமுடியாது. ஆனா உங்க ஆள் கணேசனைக் கஸ்டடியில எடுத்து விசாரிச்சேன்னா, அவன் உண்மையச் சொல்லிடுவான். அவ்வளவு தூரம் போகவேண்டாமேன்னு பார்க்கிறேன். எனக்கு ரவியைப் பிடிக்க ஹெல்ப் பண்ணுங்க. உங்க டாகுமெண்ட்ஸ் உங்களுக்குக் கிடைக்க நான் ஹெல்ப் பண்றேன்” சொக்கலிங்கம் யோசிக்க ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. அடுத்த வலையை வீசினான்.

“போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு அந்த டாகுமெண்ட்ஸ் அவ்வளவு முக்கியமில்லை. ரவி மூணு கொலை கேஸ்ல பிரைம் சஸ்பெக்ட். அதுக்காகத்தான் போலிஸ் அவனைத் தேடுது. மோட்டிவ்க்கான எவிடென்ஸ் தான் அந்த டாகுமெண்ட்ஸ். அதோட மொத்த மதிப்பு 4ல இருந்து 6 கோடி வரைக்கும் இருக்கலாம்ங்கிறது எங்க எஸ்டிமேட். ஆனா எதுவுமே இன்னும் ரெக்கார்ட்ல ஏறலை. நீங்க அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணாம ப்ரைவேட்டா தேடுறதுல இருந்து அது செகண்ட் அக்கவுண்ட்னு புரியுது. டாகுமெண்ட்ஸைக் கைல வாங்கினதும் அதுல ஒரு 5 அல்லது 10 லட்சம் மதிப்புள்ளதை மட்டும் கோர்ட் கணக்குல காட்டி ரவிக்கு தண்டனை வாங்கிக் குடுத்துட்டு அதை உங்கக்கிட்டக் குடுத்துரலாம். மீதியை நீங்க செகண்ட் அக்கவுண்டாவே வச்சிக்கலாம். உங்களால மட்டும் ரவியைக் கண்டுபிடிக்க முடியாது. டீல் ஓக்கேன்னா சொல்லுங்க. சேர்ந்து தேடலாம்” மீன் கொக்கியைக் கடித்துவிட்டது என்பதை சொக்கலிங்கத்தின் விரிந்த கண்களின் மூலமாகத் தெரிந்து கொண்டான்.

“ஓக்கே அருண். நீங்க ஜெண்டில்மேன். சொன்ன வார்த்தையக் காப்பாத்திடுவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு. ஆனா நான் ஜெண்டில்மேன் இல்லை. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்தலைன்னா நான் என்ன செய்வேன்னு உங்களுக்குத் தெரியும்”

அருண் மையமாகத் தலையை ஆட்டினான்.

“இப்ப நான் என்ன செய்யணும்?”

“முதல்ல அது என்ன டாகுமெண்ட்னு தெரியணும். அப்போதான் அது சம்மந்தமான ட்ரான்ஸாக்‌ஷன் எதாவது நடந்தா உடனே எங்களுக்குத் தகவல் தெரிய வரும். அதை வச்சித் தான் ரவியைப் பிடிக்கணும்”

சொக்கலிங்கம் மேஜையைத் திறந்து ஒரு ஜெராக்ஸ் காப்பியை எடுத்து அருணின் முன்னால் போட்டார். அருண் அதை எடுத்துப் பார்த்தான். “ பேரர் பாண்ட். யார் பெயரும் போடாத இந்த பாண்டைப் பணமாக்குவது எளிது. ஆனாலும் பிடித்துவிடலாம்.

“தேங்க்ஸ் சொக்கலிங்கம். நீங்க உங்க இன்ஃப்ளுயென்ஸ் வச்சி பணம் காணாமப் போன அன்னைக்கே போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணின மாதிரி ஏற்பாடு செஞ்சிக்கோங்க. உங்க கம்ப்ளெயிண்ட்ல இருக்கிற மதிப்புப் போக மீதி உங்கக் கைக்கு வர வைக்க வேண்டியது என் பொறுப்பு. ரவி கிடைச்சதும் உங்களுக்குத் தகவல் சொல்றேன்.”

“அருண் உங்களை நம்பித்தான் சொல்லியிருக்கேன். விசயம் வெளிய வந்தாலோ இல்லை அந்த ரவி தப்பிச்சிட்டாலோ நீங்கதான் பதில் சொல்லணும். அப்பக் கேள்வியை நான் இப்பிடி உக்காந்துட்டுக் கேக்க மாட்டேன். தெரிஞ்சிக்கோங்க”

“கண்டிப்பா சொக்கலிங்கம். நான் குடுத்த வாக்கை மீற மாட்டேன்”

அந்த ஃபோட்டோகாப்பியோடு வெளியே வந்தான் அருண். இதை வைத்துப் பிடித்துவிடலாம். வெளியே ஜீப்பில் சிவா காத்திருந்தான். சொக்கலிங்கத்துக்கும் தனக்கும் நடுவில் நடந்த டீலை சிவாவுக்கு ப்ரீஃப் செய்ய ஆரம்பித்தான்.

(தொடரும்)

Thursday, January 16, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 9

முந்தைய பாகம்

கமிஷனர் அலுவலகம். 

அருணின் சீட்டின் எதிரில் சிவா உட்கார்ந்திருந்தார். 

"சார் நீங்க சொன்ன மாதிரி டி.டி.இயோட ட்யூட்டி ரோஸ்டர், நமச்சிவாயத்தோட ட்ராவல் டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்துட்டேன். சிவகுருவோட பேரண்ட்ஸ் பையனோட அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போயிருக்காங்க. அவங்களைப் பிடிக்க முடியலை. சோ, சிவகுரு ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணி ட்ராவல் பண்ண டேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.

"நமச்சிவாயம் ரொம்ப ரேரா ட்ராவல் பண்றவர். அவர் கொள்முதல் பண்ற சரக்கை லாரியில போட்டுவிட லேட்டாயிருச்சின்னா அவரே ரயில்ல போட்டுக்கிட்டு சென்னை போறவர். கடைசி நிமிஷத்த்துல தான் பிரயாணம் உறுதியாகுங்கிறதால எப்பவுமே அன் ரிசர்வ்ட் தான். அவர் சென்னை வந்துட்டுத் திரும்பிப் போன நாள்ல எஸ்-1, 2, 3, 4 இந்த கோச்சஸ்ல சதாசிவம் டி.டி.ஈயா போயிருக்காரு. பட் அந்த டேட்ல சிவகுரு பிரயாணம் பண்ணலை. அதோட அது வீக் டே வேற. சிவகுரு வீக் எண்ட்ல தான் ட்ராவல் பண்றவன். சோ, இந்த ஆங்கிள் ஒர்க் அவுட் ஆகும்னு தோணலை சார்"

"சிவகுரு பேரண்ட்ஸ் இல்லைன்னா பரவாயில்லை. அவன் கேர்ள் ஃப்ரண்ட் மீனா இருக்காளே? அந்தப் பொண்ணுகிட்ட கேளுங்க. அன் யூசுவலா வீக் டேய்ஸ்ல ட்ராவல் பண்ணியிருந்தான்னா கண்டிப்பா நினைவுல இருக்கும்."

"ஓக்கே சார் விசாரிக்கிறேன்"

"அதோட எனக்கு அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வேணும். ஏற்பாடு பண்ணுங்க. அப்புறம் அந்த டேட்ல இந்த ரூட்ல ஏதாச்சும் ஆக்ஸிடண்ட்ஸ் ஆர் இன்ஸிடெண்ட்ஸ் நம்ம போலீஸ் அல்லது ரயில்வே போலீஸ்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கான்னும் விசாரிங்க. ஜஸ்ட் அ ஹன்ச்"

"ஷ்யூர் சார். ஈவினிங் எல்லா டீட்டெயில்ஸோடவும் உங்களை மீட் பண்றேன்"

********************************************* 

வேலூர் அரசு மருத்துவமனை. மரத்தடியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த முத்து தூரத்தில் கொடி கட்டிய சுமோ வந்ததைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு காலால் அணைத்தான். சுமோ நிழலாகப் பார்த்து பார்க் செய்த உடன், சுமோவை நோக்கி நகர்ந்து கதவைத் திறந்தான்.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த சொக்கலிங்கத்தைப் பார்த்ததும் "வணக்கம் தல. ட்ராவல் கஷ்டமா இல்லையே?"

"அதான் நம்ம ஆட்சியில நாலு ரோடு போட்டு வச்சிருக்கோமே. கார் வெண்ணை மாதிரி வழுக்கிக்கிட்டு வந்திருச்சி"

அதற்குள் வைத்தி வீல் சேரை விரித்து வைத்திருக்க, முத்து இரண்டு கைகளையும் நீட்டி சொக்கலிங்கத்தை வீல் சேரில் இறக்கி வைத்தான். மருத்துவமனையின் மருந்தும் பினாயிலும் கலந்த நெடி மூக்கைத் துளைத்தது. ஹால்வேயில் ஒரு புறம் அவுட் பேஷண்டுக்கு வந்தவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

"எங்கடா இருக்கான் கணேசன்?"

"ஐ சி யுல தல. ஒன்ர மாசமா கோமால இருக்கான். இன்னும் முழிக்கலை. நேத்துத்தான் கண்டு பிடிச்சேன். ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்தானாம். போலிஸ் கேஸ் ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க. இவன் முழிக்காததால இன்னும் க்ளோஸ் பண்ணாம வச்சிருக்காங்க. லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்துருக்காங்க. சென்னை பதிப்புல விளம்பரம் வரலை. இங்க நம்ம சகா ஒருத்தன் பேப்பர் பாத்துட்டுக் கூப்புட்டான். வந்து பார்த்து கன்ஃபர்ம் பண்ணதும் உங்களுக்கு சொல்லி விட்டுட்டேன்."

"எந்த போலீஸ் ஸ்டேஷன்னு விசாரிச்சியா? இவன் விழுந்து கிடந்தப்போ பக்கத்துல எதுனா இருந்துச்சான்னு கேட்டியா?"

"கேட்டேன் தல. நர்ஸ் வார்ட் பாய்க்கு ஒண்ணும் தெரியலை. போலீஸ் ஸ்டேஷன்ல தான் விசாரிக்கணும்."

ஐசியு வின் ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டு மூக்கில் மேல் பொருத்தப்பட்டிருந்த ட்யூபின் மூலமாக சுவாசித்துக் கொண்டிருந்தான். உயிர் இருக்கிறது என்பதை பக்கதில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஹார்ட் மானிட்டரில் அலையலையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த இதயத் துடிப்பை வைத்துத்தான் கண்டுகொள்ள வேண்டியிருந்தது. 

"நல்லா அடி பட்டிருக்கும் போல. ரயில்ல தான போயிட்டு இருந்தான். இவனா விழுந்துட்டானா இல்லை வேற எவனும் தள்ளி விட்டுட்டானான்னு தெரியலையே. சரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம்"

போகும் வழியிலேயே லோக்கல் கட்சிப் பிரமுகர்களிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் தேவையான மரியாதை கிடைக்க வழி செய்துவிட்டு போய் இறங்கினார்கள். உள்ளே நுழைந்ததும் ரைட்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து கும்பிடு போட்டார். "எஸ் ஐ உள்ளதான் இருக்காரு சார். போய்ப் பாருங்க". 

எஸ்ஐ எழுந்து கை கொடுத்தார். "அந்தப் பேஷண்ட் பேர் என்ன சொன்னீங்க சார்?" 

"கணேசன்"

"ம் கணேசன். நீங்க சொல்லித்தான் அந்தாளோட பேரே தெரியும். ஒன்ர மாசத்துக்கு முன்னாடி ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்ததா அங்க இருக்கிற ஸ்லம் ஆட்கள் 108 ஃபோன் பண்ணி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருந்தாங்க. நாங்களும் ஒரு பேருக்கு கேஸ் ஃபைல் பண்ணிட்டு லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்து தேடுனோம். அவன் கண் முழிக்கிற வரைக்கும் இந்த கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்லன்னு நினைச்சிட்டு இருந்தோம். நல்ல வேளையா நீங்க ஒரு லின்க் குடுத்திருக்கீங்க. அவனைப் பத்திச் சொல்லுங்க"

"அவன் என் கிட்ட வேலை பாக்குறான். ஒரு விசயமா அவனை கோயமுத்தூருக்கு அனுப்பி வைச்சேன். அவன் அங்கயும் போய்ச் சேரலை. இத்தனை நாளா எங்க எங்கயோ தேடுனோம். இப்பத்தான் இங்க இருக்கான்னு விசயம் தெரிஞ்சி வந்தோம்"

"எந்த ட்ரெயின்ல வந்தாருன்னு தெரியுமா?"

"ப்ளூ மவுண்டன். சார் அவன் விழுந்து கிடந்த எடத்துல எதுவும் பெட்டி பைன்னு கிடைச்சதா?"

"எதுவும் கிடைக்கலை. அதான் இவர் ட்ரெயின்ல வந்திருப்பாருன்னு நாங்க கெஸ் பண்ணவே இல்லை"

பேசிக் கொண்டிருந்த போதே ரைட்டர் உள்ளே வந்தார். 

"சார் ஹாஸ்பிட்டல்ல இருந்து ஃபோன் வந்திருக்கு. அந்த பேஷண்ட் கண் முழிச்சிட்டானாம். விசாரிக்க வரணும்னா வரலாம்னு சொன்னாங்க"

"ஓ கிரேட்." மேஜை மீதிருந்த தொப்பியையும் லட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்தார்.

சொக்கலிங்கம் இடை மறித்தார். "எஸ். ஐ சார் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நாங்க முதல்ல பாத்து விசாரிச்சிட்டு வர்றோம். அதுக்குப் பிறகு நீங்க வர்றீங்களா?"

"ம்ம்… ஓக்கே சார். உங்களுக்காக இது கூட செய்யலைன்னா எப்பிடி? நீங்க பேசிட்டு எனக்குக் கூப்புடுங்க அதுக்குப் பிறகு வர்றேன்"

சுமோ மீண்டும் ஜி.எச்க்குப் போனது. 

ஐ.சி.யுவுக்கு வெளியே நர்ஸிடம் விசாரித்தார்கள். 

"ஆமாங்க கண்ணு முழிச்சிட்டாரு. முழிச்சதும் வட்டம், சொக்கலிங்கம்னு கேட்டாரு. உங்கள்ல யாரு சொக்கலிங்கம் அவரு மட்டும் உள்ள போய்ப் பாருங்க"

சொக்கலிங்கத்திற்கு மனதைப் பிசைந்தது. 'இவனைப் போய் தப்பா நினைச்சிட்டோமே' என்ற எண்ணம் தலை தூக்கியது. 

வைத்தி வீல் சேரை உருட்டிக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வெளியே போனான். 

கணேசனின் காதருகே குனிந்து, "கணேசா.. கணேசா.." என்று அழைத்தார் சொக்கலிங்கம்.

குரல் கேட்டதும் கண் திறந்த கணேசன், ஒரு முறை நன்றாக சொக்கலிங்கத்தைப் பார்த்துவிட்டு, "அண்ணே.. வந்துட்டீங்களா?"

"என்னடா ஆச்சி? ஏன் இப்பிடிக் கிடக்க?"

"அண்ணே நீங்க சொன்னாமேரி ரயில்ல ஏறி வந்திட்டு இருந்தேன், அப்ப…"

*************************************

ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ஸ்டேஷனின் பத்தாவது ப்ளாட்ஃபார்மில் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. கையில் ஹெல்மெட், தோளில் தொங்கிய பையுடன் ஓடி வந்தான் சிவகுரு. இடது கையில் ஒரு அன்ரிசர்வ்ட் டிக்கெட். எஸ்-1 அருகில் வரும்போது ஓரமாக நின்றுகொண்டிருந்த டி.டி.இ.ஐயைப் பார்ததும் நின்றான். ஒரு சில விநாடி தயக்கத்திற்குப் பிறகு மெதுவாக அவரை நெருங்கினான். 

"சார், அவைலபிளிட்டி ஏதாச்சும் இருக்குமா சார்? லாஸ்ட் மினிட் ப்ளன் பண்ணதால அன் ரிசர்வ்ட் தான் எடுக்க முடிஞ்சது. கொஞ்சம் பாருங்களேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சார்"

கையில் வைத்திருந்த சார்ட்டில் பார்வையைப் பதித்திருந்த சதாசிவம் குரல் வந்த திசையை நோக்கித் தலையைத் திருப்பினார். இளைஞன். கழுத்தில் திக்கான செயின், கையில் விலையுயர்ந்த வாட்ச், ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் துருத்திக்கொண்டு தெரிந்த செல்ஃபோன் இதையெல்லாம் பார்க்கும் போது இவனுக்கு ஏசிக்குக் குறைந்து எதிலும் பயணம் செய்து பழக்கமே இருந்திருக்காது என்று தோன்றியது. 

சார்ட்டை மீண்டும் ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்தவர், 

"கேன்சலேஷன் எதுவும் இல்லை. நோ ஷோ இருந்தாக்கூட ரெண்டு ஆர்.ஏ.சி இருக்கு. அவங்களுக்குத்தான் பெர்த் தரவேண்டியிருக்கும். ஒண்ணும் பண்ண முடியாதுப்பா"

"சார் சார் அப்பிடிச் சொல்லாதீங்க சார். அன் ரிசர்வ்ட்ல போனதே இல்லை. பஸ்ல போறது ஒத்துக்காது. அதான் இங்கயே வந்துட்டேன். கொஞ்சம் பாருங்க சார்" இப்போது சிவகுருவின் கையில் ஒரு ஐநூறு ரூபாய் முளைத்திருந்தது. 

ஐநூறு ரூபாயைப் பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்தார். கையை நீட்டி நோட்டைப் பிடுங்கிக் கொண்டு, "சரி எஸ்3, 51ல உக்காருங்க. அரக்கோணம் வர்றதுக்குள்ள மாத்தி விடுறேன்" கோட்டுக்குள் பணத்தைத் திணித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். 

சிவகுரு திரும்பி நடக்கவும் இருட்டில் நின்று கொண்டிருந்த நமச்சிவாயம் சதாசிவத்தை நெருங்கினார். தலையைச் சொறிந்துகொண்டே "சார் அப்புடியே நமக்கும் கொஞ்சம் பாருங் சார்" 

"ஐநூறு ஆவும், பரவாயில்லயா؟"

"சார் அவ்ளோ இல்லீங்க். பாத்து சொல்லுங்க்"

"எவ்வளவு வச்சிருக்க؟'

"முந்நூறு இருக்குதுங்க்"

"முந்நூறெல்லாம் பத்தாது. கெளம்பு கெளம்பு"

"காலைல எறங்கின பிற்பாடு பஸ் டிக்கெட்டுக்கு ஒரு அம்பது இருக்குதுங்க். அத வேண்னாலும் வாங்கிக்ங். கக்கூச வாசம் புடிச்சிட்டே போய் வெறுத்துப்போச்சிங்க். ஒரு தரமாட்டு படுத்துட்டே போகோணொம்னு கொள்ள ஆசைங்க். பாத்து செய்யுங்க்" 

கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் சொல்லவும், சதாசிவம் மனமிறங்கினார். 

"சரி சரி. காசை எடு". வாங்கிப்பையில் வைத்துக்கொண்டு, "எஸ் 3ல 52ல உக்காரு. வந்து பெர்த் குடுக்குறேன்". 

சொன்னது போலவே அரக்கோணம் வருவதற்குள் இருவருக்கும் எஸ்3யிலேயே பெர்த் ஒதுக்கிக் கொடுத்தார் சதாசிவம். சிறிது நேரம் மீனாவுடன் எஸ்.எம்.எஸ்ஸில் உரையாடிவிட்டு பாத்ரூம் போவதற்காக எழுந்தான் சிவகுரு. பாத்ரூம் போகும் வழியில் டி.டி.ஈக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சத்தம் கேட்கவே எட்டிப்பார்த்தான். அங்கே சதாசிவம், நமச்சிவாயம் இன்னும் இருவர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாத்ரூம் போய்விட்டு தானும் உள்ளே நுழைந்தான். 

அவனைப் பார்த்ததும் சதாசிவம் புன்னகைத்தார். 

நமச்சிவாயம், "வாங்க தம்பி. சீட்டு விளையாடுவீங்களா?"

ஆம் என்பதாகத் தலையசைக்கவும், "அப்ப உக்காருங்க ஒரு கை குறையுது" என்று சதாசிவம் சொன்னார்.

மற்ற இருவரில் ஒருவன் வேட்டி சட்டையில் இருந்தான். அதிகமாகப் படித்திருக்க மாட்டான் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. இன்னொருவன் ஜீன்ஸ் பேண்ட் ஏரோபோஸ்ட்ல் சட்டை போட்டு மாடர்னாக இருந்தான். அவன் அருகில் சிவகுரு அமர்ந்ததும் கையை நீட்டி "ரவி" என்றான். 

"சிவா. __ காலேஜ்ல பிஇ படிக்கிறேன்"

"நான் ____ல வேலை பார்க்கிறேன்"

மற்றவர்கள் சீட்டு விளையாட்டில் மும்முரமாக இருந்தார்கள். 

"அடிச்சாண்டா கணேசன் டிக்கு" என்று ஒரு சீட்டைக் கவிழ்த்துப் போட்டு மீதி சீட்டை மற்றவர்கள் முன்னால் ஷோ வைத்து விட்டு வலது கை ஆட்காட்டி விரலாலும் நடுவிரலாலும் மீசையை நீவி விட்டுக்கொண்டான். 

சிவா பொதுவாக, "240ஆ 320ஆ" கேட்டான்.

"ரெண்டும் இல்ல தம்பி. ஆட்டத்துக்கு 10 ரூவா. ஜெயிக்கிறவன் முழுக்க எடுத்துக்கலாம். என்ன சரியா?"

ஒரு விநாடி யோசித்துவிட்டு, "ம்ம் சரி" 

நமச்சிவாயம் சீட்டுக்களைப் பொறுக்கி கலைத்து ஆளுக்கொரு சீட்டாக ஒரே சீரான வேகத்தில் போட்டார். சிவாவும் எடுத்து விளையாட ஆரம்பித்தான். அடுத்தடுத்த ஆட்டங்களில் சிவா, ரவி, சதாசிவம், நமச்சிவாயம், மாறி மாறி ஜெயிக்க சதாசிவமும் கணேசனும் தொடர்ந்து பணத்தை இழந்து கொண்டே வந்தார்கள். 

கையில் வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்து போகவும் பக்கத்தில் வைத்திருந்த நகைக்கடைப் பையைத் திறந்து பணம் தேடினான் கணேசன். உள்ளே இருந்த சில பேப்பர்களை வெளியே எடுத்து வைத்தான். 
அந்தப் பேப்பர் ரவியின் கவனத்தை இழுக்கவே, ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்தான். அவன் உதடுகள் அன்னிச்சையாக வாவ் என்றது. 

"கணேசன் இது உங்களோடதா?” கணேசனைப் பார்த்துக் கேட்டான்.

“இல்லண்ணே, இது எங்க முதலாளியோடது. இதை எடுத்துக் கொண்டுபோய் கோயமுத்தூர்ல ஒரு எடத்துல குடுக்கச் சொல்லி அனுப்பி விட்டாரு”

“இது என்னன்னு தெரியாமலே கொண்டு போறீங்க. அப்பிடித்தான?”

கணேசன் பதில் சொல்லாமல் ரவியின் முகத்தையே பார்த்தான்.

“இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா கணேசன்?”

“எவ்வளவா இருந்தா என்னண்ணே. முதலாளி கொண்டு போய் குடுக்கச் சொன்னாரு. கொண்டு போறேன். அவ்வளவுதான்”

கையில் இருந்த காகிதங்கள் அத்தனையையும் எண்ணினான். “பேக்ல இன்னும் ஏதாச்சும் இருக்கா?” 

இல்லை என்பதாகத் தலையாட்டினான் கணேசன்.

“மொத்தம் ஆறுகோடி. கமிஷன் போக எப்பிடியும் 5 3/4 கோடியாவது வரும்”

“இந்தப் பேப்பருக்கு அவ்ளோ மதிப்பா?” நமச்சிவாயம் வாய் திறந்தார்.

“ஆமாங்க. இதுக்குப் பேரு பேரர் பாண்ட்ஸ்னு (Bearer Bonds) சொல்லுவாங்க. இதுல ஒருத்தர் பேரும் இருக்காது. யாரு கையில இது இருக்கோ அவங்க இதைப் பணமாக்கிக்கலாம். கேள்வி கேக்காம காசு வந்துரும். வெளி நாட்டுல இது ரொம்ப ஃபேமஸ். இங்க இப்பத்தான் நான் பார்க்கிறேன்”

கணேசன் சட்டென்று காகிதங்களைப் பிடுங்கி பைக்குள் வைத்தான். “எத்தன கோடியா வேணும்னா இருக்கட்டும். உங்களுக்கென்ன. சீட்டாடுனோமா போனமான்னு இருங்க”

பையைப் பத்திரமாக தொடைக்கடியில் சொருகி வைத்துக் கொண்ட கணேசன் ஆட்டத்தைத் தொடர்ந்தான். மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு பாத்ரூம் போவதற்காக எழுந்த கணேசன் வாசல் வரை போய்விட்டுத் திரும்பி வந்து அந்தப் பையை எடுத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டு திரும்பி நடந்தான்.

கணேசன் தலை மறைந்ததும், சீட்டுக் கடை முன்னால் போட்ட நமச்சிவாயம், ரவியைப் பார்த்து, “ஏந்தம்பி நெசமாலுமே அந்தக் காகிதத்துக்கு அம்புட்டு மதிப்பா?”

“ஆமாங்க”

“யார் கொண்டு போய் குடுத்தாலும் கேள்வி கேக்காம பணத்தைக் குடுத்துருவாளா?” சதாசிவம்.

“ஆமா சார். உண்மைதான்.”

சீட்டுக்கட்டை எடுக்க இருந்தவன் ஒரு விநாடி யோசித்தான். “டி.டி.இ சார். இப்பப் போனானே கணேசன், அவன் ரிசர்வ்ட் டிக்கெட்டா அன் ரிசர்வ்டா?”

“அன் ரிசர்வ்ட் தான். இந்தா இவா ரெண்டு பேருக்கு போட்ட மாதிரிதான் அவனுக்கும் சீட் போட்டேன்”

“குட். எனக்கு ஒரு யோசனை. இங்க இருக்கிற நாலு பேரும் அதுக்கு சம்மதிச்சாதான் செய்யமுடியும். இல்லைன்னா முடியாது. சம்மதம்னா சொல்லுங்க”

“என்ன யோசனைன்னே சொல்லாம சம்மதமான்னு கேட்டா எப்பிடி?” சிவகுரு.

“அந்த பேகை நாம எடுத்துக்கிட்டா 6 கோடி ரூபா நாலு பங்கு. ஆளுக்கு 1 1/2 கோடி. சம்மதமா?”


மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். “நாம எடுத்திக்கிறதுன்னா, அவன் சும்மா விட்ருவானா? ஆளைப் பாக்க ரவுடி மாதிரி இருக்கான். நம்ம நாலு பேரையும் அவன் ஒருத்தனே அடிச்சிருவான் மாதிரி இருக்கானே?”

“அவனை கஷ்டப்பட்டு அமுக்கி ரயில்ல இருந்து தூக்கிப் போட்டுட்டா யாருக்குத் தெரியும்? அவன் அன்ரிசர்வ்ட்ல வந்ததால எந்த ரிகார்ட்லயும் இருக்காது. அவன் ட்ரெயின்ல வந்தவனா இல்லை வேற எங்கருந்தாவது கொன்னு தூக்கிப் போட்டாங்களான்னு கூட போலீஸால கண்டு பிடிக்க முடியாது”

“ம்ம்.. கொஞ்சம் சொதப்புனாலும் நாம தொலைஞ்சோம்.”

“கவலைப் படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு சார்?”

வாட்சைப் பார்த்த சதாசிவம், “அட்லீஸ்ட் அரைமணி நேரம் இருக்கு”

“ஓக்கே” சொல்லிவிட்டு எழுந்தான் ரவி. ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த போர்வைகளில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டான். “சிவா நீயும் என் கூட வா”

இருவரும் பாத்ரூமை நோக்கி நடந்தனர். ரயில் கதவைத் திறந்தான் ரவி. காற்று பலமாக முகத்தில் அறைந்தது. வெளியில் கும்மிருட்டு. “இங்க நின்னுக்கோ” என்று வாஷ்பேசினுக்கும் கதவுக்கும் இடையில் இருந்த இடததைக் காட்டினான். கையில் போர்வையைக் கொடுத்தான். 

பாத்ரூமில் இருந்து பெர்த்துக்குப் போகும் வழியை மறைத்துக் கொண்டு நின்றுகொண்டான் ரவி. பாத்ரூமில் தண்ணீர் பைப்பைத் திறக்கும் சத்தம் கேட்டது. தண்ணீர் சத்தம் நின்றதும் சிவாவிடம் சைகை காட்டினான். சிவா போர்வையை விரித்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். தாழ்ப்பாள் விலகும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து கொண்டு கைகளை வேட்டியில் துடைத்தபடி வந்தான் கணேசன். பெர்த்தை நோக்கி நடக்கத் திரும்பியவன் எதிரே நின்ற ரவியைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.

“என்னண்ணே இங்க நிக்கிறீங்க”

“எல்லாம் உங்களுக்காகத்தான் கணேசன்” பேசிக் கொண்டே முஷ்டியை மடக்கி கணேசனின் வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். எதிர்பாராமல் வந்து விழுந்த குத்தினால் லேசாக நிலை குலைந்த கணேசன் கக்கத்தில் இறுக்கிப் பிடித்திருந்த பை நெகிழ்தது. இடதுகையால் அந்தப் பையைப் பிடித்துக் கொண்டு முன்னால் லேசாக சாய்ந்திருந்த கணேசனின் தாடையில் வலதுகையால் இன்னொரு குத்தை இறக்கினான். தன்னிச்சையாக அவன் கையைப் பிடிக்க இரண்டுகைகளையும் நீட்டியவாறே பின்னால் சாய்ந்தான் கணேசன். பை இலகுவாக ரவியின் கைக்கு மாறியது. பின்னால் சாய்ந்த கணேசனின் முகத்தின் மீது விரித்துப் பிடித்த போர்வையால் மூடி இறுக்கிப் பிடித்துக் கொண்டான் சிவா.

முகத்தை மூடினாலும் பையைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் இரண்டு கைகளையும் காற்றில் வீசியவாறு வெறிகொண்ட மாதிரி திமிர ஆரம்பித்தான் கணேசன். 

“சிவா ஓரமா ஒதுங்கிக்கோ, போர்வையை இறுக்கமா பிடிச்சிக்கோ. விட்ராத” சொல்லிவிட்டு வலது காலை ஓங்கி கணேசனின் நெஞ்சில் உதைத்தான் ரவி. உதையின் வேகம் தாங்காமல் தள்ளாடி இரண்டடி பின்னால் போன கணேசன் கண் தெரியாமல் வாசல் பக்கம் திரும்பினான். 

“போர்வையை விட்றாத சிவா” குரலை உயர்த்தி கத்தி மறுபடியும் காலை உயர்த்தி கணேசனின் முதுகில் உதைத்தான். வாசல் வழியாக வெளியே விழுந்த கணேசன் வெளியே இருந்த போஸ்ட் மரத்தில் மோதி கீழே விழுந்தான். கணேசனைச் சுற்றியிருந்த போர்வை உருவிக் கொண்டு சிவாவின் கைக்கே வந்தது. கீழே விழுந்தவன் இழுத்த விசையில் சிவாவும் விழப் போக ரவி தாவி சிவாவின் கைகளைப் பிடித்து இழுத்தான். கதவை மூடிவிட்டு இருவரும் டி.டிஆரின் அறைக்குத் திரும்பினார்கள். 

ரவியின் கையில் இருந்த பையைப் பார்த்ததும் சதாசிவம் வேகமா எழுந்தார். கதவைச் சாத்திவிட்டு, “கணேசன் எங்க?”

“இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பான். நாலு பேரும் செத்தாக்கூட யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சரியா?”

“இந்த பேப்பரை என்ன செய்யறது?”

“ஆறு கோடி ரூவா. ஒரே நேரத்துல வித்தோம்னா கவர்ன்மெண்டு மோப்பம் பிடிச்சிருவாங்க. எனக்குத் தெரிஞ்ச சிலர் இருக்காங்க. ஹவாலால எல்லாம் விளையாடுறவங்க. இந்த பேப்பர் எல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன். காசாக்கினதும் உங்க பங்கை உங்களைத் தேடி வந்து தர்றேன்”

”நோ நோ. நீங்க எடுத்துட்டுப் போயிட்டீங்கன்னா? இதுல இருக்கிற பாண்ட்ஸ் எல்லாம் நாலா பிரிச்சிருவோம் அவங்க அவங்க பங்கை அவங்கவங்க எடுத்துட்டுப் போகட்டும். உங்க காண்டாக்ட்ஸ் மூலமா பாண்ட்ஸ் விக்க ஏற்பாடு செஞ்சதும் எல்லாருக்கும் தகவல் குடுங்க. மீட் பண்ணி வித்துக் காசாக்கிட்டு அவங்க அவங்க டைரக்‌ஷன்ல போயிடலாம். எப்பிடி ஐடியா?”

“என்னை நம்பலையா நீ?”

“ஆமா. நம்பலை”

ரவியின் முகம் இறுகியது. ”ஓக்கே. உன் ஐடியாவையே ஃபாலோ பண்ணுவம்”

நான்கு கூறாகப் பிரித்தான் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய பங்கை எடுத்துக் கொண்டார்கள்.

“எல்லாரும் எல்லார் ஃபோன் நம்பரையும் வாங்கிப்போம். பாண்ட்ஸ் விக்க ஆள் கிடைச்சதும் காண்டாக்ட் பண்ணலாம்” சிவா சொன்னான்.

“வேண்டாம். ஒருத்தர் மாட்டினாலும் மீதி மூணு பேரும் மாட்டிக்குவோம். அதனால சிவா நம்பர் என்கிட்ட, நமச்சிவாயம் நம்பர் சிவாக்கிட்ட, சதாசிவம் சார் நம்பர் நமச்சிவாயம்கிட்ட, என் நம்பர்  சதாசிவம் சார்கிட்ட. வேற யாரும் மத்தவங்களோட நம்பரை உங்க ஃபோன்ல ஸ்டோர் செய்யாதீங்க. இவ்வளவு ஏன் டயல்கூட செய்யாதீங்க. ஒருத்தர் போலீஸ்ல மாட்டினா அவங்களோட போயிடணும் ஓக்கே?”

“நல்ல ஐடியாதான். ஓக்கே”

அனைவரும் ஃபோன் நம்பர்களை ஷேர் செய்து கொண்டார்கள். 

(தொடரும்)

Tuesday, September 17, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 8



மாநிலத்தின் முந்நாள் ஆளுங்கட்சி இந்நாள் எதிர்க்கட்சி மக்கள் முன்னேற்ற கழகத்தின் வட்ட அலுவலகம். வாசலின் ஐந்தாறு பேர் கரை வேட்டியுடன் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு நின்றிருந்தார்கள். காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வெள்ளை நிற சுமோவை கைலி கட்டியிருந்த ட்ரைவர் ஒருவர் கழுவிக் கொண்டிருந்தார். 

அந்தக் கட்சி அலுவலகத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாமல் வெள்ளை சட்டை கறுப்புப் பேண்ட் அணிந்து கழுத்தில் நீல நிற டை கட்டியிருந்த அந்த இளைஞன் தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய ஹால். அந்த ஹாலின் இரண்டு பக்கமும் போட்டிருந்த மர பெஞ்சில் நானகைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த இளைஞனை வித்தியாசமான பிராணீயைப் பார்ப்பது போல பார்த்தார்கள். ஓரமாக ஒரு மூலையில் ஒரு டேபிள் போட்டு அதற்குப் பின்னால் ஒல்லியாக, 50 வயதை ஒத்த ஒருவர் மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வெளிறிய பச்சைச் சட்டை அணிந்து தோளில் கொடிக்கரை போட்ட துண்டைப் போட்டிருந்தார். முகத்தில் ஒரு வார தாடி. 

“என்ன தம்பி? யாரைப் பாக்கணும்?”

“சொக்கலிங்கம் சாரைப் பாக்கணும்?”

“வட்டமா? அவரை எதுக்குப் பாக்கணும்?”

“எக்ஸ் மினிஸ்டர் பழனிச்சாமி பாக்கச் சொன்னாரு”

“பழனிச்சாமி அண்ணனா? சரி இங்க ஒரு நிமிஷம் உக்காரு. வட்டத்துக்கிட்ட கேட்டுட்டு வர்றேன்.”

கதவை இரண்டு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். வட்டம் என்றழைக்கப்பட்ட சொக்கலிங்கம் மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தார். கரிய நிறம். முன்னந்தலையில் தொடங்கியிருந்த வழுக்கை. லேசாக முறுக்கி விடப்பட்ட மீசை. மேஜைக்கு எதிரில் இரண்டு பேர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தெவையில்லாமல் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். முன்னால் இருந்த ப்ளேட்டில் இருந்து நெய்யில் வறுத்த முந்திரியை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் உள்ளே வந்தவரைப் பார்த்ததும்,

“என்ன தலைவரே”

“வட்டம், பழனிச்சாமி அண்ணே அனுப்பி வச்சதா சொல்லிக்கிட்டு ஒரு பய வந்திருக்கான். வரச்சொல்லட்டுமா?”

“வரச்சொல்லுங்க, வரச்சொல்லுங்க. அண்ணன் ஃபோன் பண்ணி சொன்னாரு”

தலைவர் என்றழைக்கப்பட்டவர் வெளியே போனதும் இளைஞன் உள்ளே வந்தான்.

“சொல்லு தம்பி. என்ன பிரச்சனை?”

“வணக்கம் சார். நான் எக்ஸ் மினிஸ்டர் பழனிச்சாமி சாரோட பால் பண்ணைல மார்க்கெடிங் மேனேஜரா வேலை பார்க்குறேன்”

“சொன்னாரு தம்பி. அமைச்சரு கூப்புட்டு சொன்னாரு. பிரச்சனை பண்றவன் யாரு?”

“விஜயபவன் ஹோட்டல்ல பால் வாங்க ஆர்டர் பிடிக்கப் போயிருந்தேன் சார். அவங்க ஏற்கனவே அமுதம் பால் வாங்கறாங்களாம். நம்மக்கிட்ட வாங்க மாட்டேங்கிறாங்க. சார் உங்களைப் பாக்கச் சொன்னாரு”

“அப்புடியா.. எந்த ப்ராஞ்ச்?”

“மவுண்ட்ரோடு ப்ராஞ்ச் சார்.”

முன்னால் இருந்த ஆட்களைப் பார்த்து, “நம்ம சேகரு கார்ப்பரேஷன்ல தான இருக்கான்?”

“எந்த சேகரு? சந்திரசேகரா?”

“அவந்தான்”

“ஆமா. அங்க தான் இருக்கான்”

“அவனுக்கு ஃபோனைப் போடு”

மேஜை மேல் இருந்த செல்ஃபோனை எடுத்து ஃபோன் நம்பரை அடித்தான் ஒருவன். 

“அல்லோ, சந்திரசேகரா?”

“ஆமா, நீங்க யாரு?”

“நம்ம வட்டம் உங்கிட்ட பேசணும்னு சொன்னாரு, ஒரு நிமிசம் இருங்க”

போனை வாங்கிய சொக்கலிங்கம், ”என்ன சேகரு, எப்பிடியிருக்க?”

“நல்லா இருக்கேன் தலைவரே. என்ன மேட்டர் சொல்லுங்க”

“மவுண்ட்ரோடு விஜயா பவன் இருக்குதுல்ல”

“ஆமா”

“அவன் கொஞ்சம் மொரண்டு பிடிக்கிறான். நீ என்ன பண்ணு” என்று ஆரம்பித்து விவரித்தார்.

ஃபோனை அணைத்துவிட்டு, “தம்பி ஒரு ரெண்டு மணி நேரம் நம்ம ஆஃபிஸ்ல இருங்க. அதுக்குள்ள மேட்டரை முடிச்சிரலாம்”

அந்த இளைஞன் சிறிது நேரம் உள் ஹாலில் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். வெளியே போய் டீகுடித்தான். அங்கே நடக்கும் பஞ்சாயத்துகளை வேடிக்கப் பார்த்தான். 

சொல்லி வைத்தது போல இரண்டு மணி நேரத்தில் வாசலில் ஒரு அம்பாசிடர் வந்து நின்றது. விஜயபவன் மேனேஜர் ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தார். 

“வட்டம் இருக்காரா?”

இளைஞனைக் கவனிக்காமல் சேர் போட்டு உட்கார்ந்திருந்த பெரியவரைப் பார்த்துக் கேட்டார். 

“நீங்க யாரு?”

“மவுண்ட் ரோடு விஜயபவன் மேனேஜர்”

“வட்டம் கொஞ்சம் பிஸியா இருக்கார். இன்னைக்குப் பாக்க முடியாது. நாளைக்குக் காலைல 9 மணிக்கு மேல வாங்க”

“தலைவரே அப்பிடிச் சொல்லாதீங்க. ரொம்ப அர்ஜெண்ட்”

“சரி உள்ள போங்க”

உள்ளே நுழைந்தவரை கண்டுக்காதது போல அல்லக்கைகளுடன் சுவாரசியமாக நடிகைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.

“அண்ணே, அண்ணே..”

ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, “வாய்யா, என்ன இவ்வளவு தூரம்?”

“அண்ணே. ஹோட்டல்ல இருந்து போற ட்ரெயினேஜ் பைப்பை அடைச்சிட்டாங்கண்ணே.. கார்ப்பரேஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்டா, உங்களப் பாத்துட்டு வரச் சொன்னாங்க. அதான்...”

”வைத்தி, போய் அந்தத் தம்பிய வரச் சொல்லு”

வைத்தி வெளியே போய் இளைஞன் உள்ளே வந்தான். 

“நம்ம ஓட்டலுக்கு இனிமே இந்தத் தம்பிக்கிட்டயே பால் வாங்கிக்கோங்க. சரியா?”

மேனேஜர் தயக்கம் அப்பிய முகத்தோடு அந்த இளைஞனை ஒரு முறை பார்த்துவிட்டு, “சரிங்க”

“தம்பி, சார் கூட ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் எடுத்துக்கோ. அமைச்சரைக் கேட்டதா சொல்லு. சரியா?”

“சரிங்கண்ணே”

”அண்ணே, அந்த ட்ரெயினேஜ்...”

“அதெல்லாம் நீங்க ஹோட்டலுக்குப் போறதுக்குள்ள சரியாயிடும்” வைத்தியை அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்ததும் ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

சிறிது நேரம் கழித்து அவன் உள்ளே வந்தான். ஒல்லியான உருவம். பீடியும் கஞ்சாவும் இழுத்து இழுத்து ஒடுங்கிய கன்னங்கள். கண்கள் இரண்டும் உள்ளே போயிருந்தன. எண்ணை காணாமல் வறண்ட தலை. கோடு போட்ட பனியனும் உடலை ஒட்டிய வெளுத்த ஜீன்ஸும் அணிந்திருந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் சொக்கலிங்கம் மற்ற இருவரையும் ஒரு பார்வை பார்த்தார். இருவரும் வெளியெறினர்.

அவன் பல நாள் தாடியைச் சொறிந்தவாறு இருவரும் வெளியேறக் காத்திருந்தான்.

“என்னடா? என்ன விசயம்? அவ வாயத் தொறந்தாளா இல்லையா?”

“இல்லண்ணா, என்ன செஞ்சாலும் தெரியாது தெரியாதுன்னு தான் சொல்றா.. அவ புருசனைத் தேடிப் போன முத்துகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லை. இப்ப இன்னா செய்யலாம்னு நீங்கதான் சொல்லணும்”

”நா வந்து பேசிப் பாத்தா எதும் நடக்குமா?”

“ஒரு வாட்டி செஞ்சி பாக்கலாம்ணா”

“சரி வெளிய இருக்கிற வைத்திய வரச் சொல்லு”

பாதிக் கதவைத் திறந்து வைத்தியை வரச் சொல்ல, வைத்தி உள்ளே வந்தான். அறையின் மூலையில் மடக்கி வைத்திருந்த சக்கர நாற்காலியைப் பிரித்தான். மேஜைக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு சொக்கலிங்கம் உட்கார்ந்திருந்த சேரைப் பிடித்து இழுத்து மேஜைக்கும் சேருக்கும் இடைவெளியை அதிகப் படுத்தினான். இரண்டுகைகளால் சொக்கலிங்கத்தை அலேக்காகத் தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்தான். இடுப்புக் கீழே சொக்கலிங்கத்தின் கால்கள் இரண்டும் சூம்பித் தொங்கின. சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வர சுமோ சரியாக வாசலில் நின்றது. சொக்கலிங்கத்தைத் தூக்கி சுமோவில் உட்கார வைத்துவிட்டு நாற்காலியை மடக்கி பின்னால் ஏற்றினான். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் சொக்கலிங்கம் உட்கார்ந்துகொள்ள வைத்தியும் புதிதாய் வந்தவனும் பின்னால் ஏறிக் கொண்டார்கள்.

***********************************************

பேச்சிலர்ஸ் பேரடைஸ் என்றழைக்கப்படும், மேன்ஷன்களால் நிரம்பி வழியும் திருவல்லிக்கேணியில், ஒரு சுமோ நுழைந்தால் சைக்கிள் கூட எதிரே வர முடியாத ஒரு சந்துக்குள் சொக்கலிங்கத்தின் சுமோ நுழைந்தது. முன்னொரு காலத்தில் பேச்சிலர்கள் சிலர் தங்கியிருந்திர்ப்பார்கள் போல. இப்போது ஒண்டுக் குடித்தனங்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருந்தது அந்தக் கட்டிடம். பல இடங்களில் பாதிப் படிக்கட்டுகளாக இருந்த மாடிப் படியில் ஒரு குழந்தையைத் தூக்கி வருவது போல வைத்தி சொக்கலிங்கத்தைத் தூக்கிக்கொண்டு ஏறி வந்தான். முன்னால் ஜீன்ஸ் பேண்ட் நடந்தான். ஒரு கையை வைத்தியைச் சுற்றி வளைத்துப் பிடித்து இன்னொரு கையால் கோர்த்துக் கொண்டு பேலன்ஸ் செய்து வந்தான் சொக்கலிங்கம். மூன்றாவது மாடியான மொட்டை மாடிக்குள் நுழைந்ததும் கதவை அடைத்து ஜீன்ஸ் பேண்ட் ஒரு கம்பியால் வளைத்துப் பூட்டினான். 

மொட்டை மாடி மழையாலும் பலர் நடையாலும் கருப்படைந்து போயிருந்தது. மூலையில் ஒரு சிறிய அறை. இரண்டு பேர் தங்கலாம். சொக்கலிங்கம் தன்னை இறக்கிவிடச் சொல்லிவிட்டு தவழ்ந்தே அந்த அறையை நோக்கி நகர்ந்தார். மற்ற இருவரும் அவருக்குப் பின்னால் மெதுவாக நடந்தார்கள். கதவுக்கு அருகே போய் ஒரு கையால் கதவைத் தள்ளித் திறந்து விட்டு உள்ளே நுழைந்தார். அறைக்குள் ஒரு பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு தரையில் உட்கார்ந்திருந்தாள். சித்ரவதை செய்யப்பட்டிருப்பதற்கான காயங்கள் முகம் மற்றும் கைகளில் தெரிந்தது. உதடுகள் உலர்ந்து ஓரிரு வெடிப்புகளில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் சொருகி இருந்தன. எத்தனை நாட்களாக சாப்பிடவில்லையோ தெரியவில்லை. 

அந்தப் பெண்ணின் அருகில் தவழ்ந்து போன சொக்கலிங்கம் அவள் அருகே அமர்ந்து அவள் முகவாயைத் தூக்கி முகத்தின் அருகில் போய் உற்றுப் பார்த்தார்.

“என்னடா சோறு போடவே இல்லையா நீங்க?”

“இல்லைங்க்ணா. தேவிடியா முண்ட என்ன கேட்டாலும் எனக்குத் தெரியாது தெரியாதுன்ட்டே சொல்றாண்ணா. அதான் சோறு போடாம பட்டினி போட்டாலாச்சும் வாயத்தொறக்குறாளான்னு பாப்போம்னு”

“டேய் சோறு திங்காம செத்துப் போயிட்டான்னா? போய் முக்குல பாய் கடையில ஒரு பிரியாணி வாங்கிட்டு வா”

அவன் பதில் பேசாமல் வெளியேறிப் போனான். 

“வைத்தி, தண்ணி ஒரு கிளாஸ் எடுத்துக் குடு” 

அறையின் மூலையில் ஒரு ப்ளாஸ்டிக் குடத்தின் மூது ஒரு டம்ப்ளர் சாய்வாக உள்ளே விழுந்துவிடாத வண்ணம் வைக்கப் பட்டிருந்தது. அந்த டம்ப்ளரில் நீரை நிரப்பிக் கொண்டு வந்து சொக்கலிங்கத்திடம் நீட்டினான் வைத்தி.

தண்ணீரை வாங்கி கையில் ஊற்றி அவள் முகத்தில் விசிறியடித்தார் சொக்கலிங்கம். தண்ணீரின் குளுமை பட்டதும் சற்றே கண் திறந்து பார்த்தாள். “இந்தா குடி” என்று டம்ப்ளரை வாய்க்கு முன் நீட்டினார். வேகவேகமாக குடித்தாள். 

“உன் பேரு என்ன?”

“பா.. பார்வதி” கழுத்தை இறுக்கிப் பிடித்த பின் பேசினால் கேட்பது போல குரல் நசுங்கிக் கேட்டது. 

“கணேசனுக்கு நீ ஒருத்திதான் பொண்டாட்டியா? இல்ல வேற யாரும் கூத்தியா வச்சிருக்கானா?”

“அதெல்லாம் இல்லீங்க. நான் ஒருத்திதான்”

“அவப் எங்க இருக்கான்னு தெரியுமா?”

“சத்தியமா தெரியாதுங்கயா.. தெரிஞ்சா சொல்லிரமாட்டேனா? உங்க கையில அடி வாங்கணுமா?”

கதவைத் திறந்து கொண்டு ஜீன்ஸ் பேண்ட் உள்ளே நுழைந்தான். கையில் ஒரு பொட்டலம். 

“கட்ட அவுத்து விட்டுட்டு குடு”

கையில் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தை வாங்கிப் பிரித்து வேக வேகமாக உண்ண ஆரம்பித்தாள். அவள் வேகத்தை தொண்டை ஒத்துக் கொள்ளாததால் விக்கல் எடுத்தது. சொக்கலிங்கம் திரும்பி வைத்தியைப் பார்க்க அவன் ஓடிப்போய் அந்த டம்ப்ளரில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வந்து நீட்டினான். வாங்கி ஒரு வாய் குடித்தவள் மீண்டும் பிரியாணிக்குத் திரும்பினாள். 

சாப்பிட்டு முடித்து மீதம் இருந்த தண்ணீரில் தரையிலேயே கை கழுவி விட்டாள். அவள் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தது போல சொக்கலிங்கம் இடது கையால் அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து வலது கையால் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.

அடித்த அடியில் பொறிகலங்கிப் போனாள். கண்களில் கண்ணீர் கட்டியது. "சொல்லுடி பார்வதி. உன் புருசன் கணேசன் இப்ப எங்க?"

"அய்யா அதான் சொன்னேனேய்யா எனக்குத் தெரியாதுய்யா"

"சிறுக்கி முண்ட. உம் புருசன் ஒரூவா ரெண்டுரூவா திருடிட்டு ஓடலடி. ஆறு கோடி ரூவா. முழுசா ஆறு கோடி ரூவாவோட ஓடிப் போயிருக்கான். உலகத்துல எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுருவேன். கண்டுபிடிச்சேன். அப்புறம் நீ முண்டச்சிதான். புரியுதா. உன் புருசன் உசுரோட உனக்கு வேணும்னா ஒழுங்கு மரியாதையா சொல்லு. எங்க போகணும்னு திட்டம் போட்டீங்க?"

"அய்யா சத்தியமா சொல்றேனுங்க. அந்த பேப்பருக்கு அம்புட்டு மதிப்புன்னு எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாதுங்க. அவரு இம்புட்டு நாளு எவ்வளவு விசுவாசமா இருந்தாரு. உங்களுக்குப் போய் துரோகம் செய்ய மாட்டாருங்கய்யா. நம்புங்கய்யா. அந்த மனுசன் எங்க இருக்காருன்னு எனக்குத் தெரியாதுய்யா?"

தொடர்ந்து தலையை சுவற்றில் முட்டி அவள் அழுது கொண்டிருக்க ஜீன்ஸ் பேண்டில் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசியவன் முகம் வெளிச்சமானது.

"அண்ணா, கணேசன் கிடைச்சிட்டாண்ணா"

"அப்பிடியா? எங்க இருக்கான்?"

"வேலூர் ஜி.எச்ல"

"கிளம்புங்கடா உடனே போவோம்"

"இவளை?"

"இவ எதுக்கு இனிமே அவுத்து விட்டுரு. பொழச்சிப் போவட்டும்"

வைத்தி தூக்கிக் கொள்ள மூவருமாக கீழே இறங்கினார்கள்

Monday, August 26, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 7


“மர்டர் விக்டிமோட ஃபோனா? இங்கயும் ஒரு மர்டர் விக்டிமோட ஃபோன்ல இருந்த நம்பர் தான் அது.”

“என்ன சார் இது ஆச்சரியமா இருக்கு. இது கோ இன்சிடன்ஸா இல்ல ரெண்டு கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?”

அருணும் குழப்பத்தில் ஆழ்ந்தான். 

“பை த வே என் பேரு அருண். எக்ஸ் காப். இப்ப கன்சல்டிங் மட்டும் பண்றேன்.”

“சார் என்னை நினைவில்லையா சார்? மதுரையில அந்த ரெட்டைக் கொலைக் கேஸ்ல நீங்க ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆஃபிசரா வந்தப்ப நான் தான் உங்களுக்கு அஸிஸ்ட் பண்ணேன் சார். அப்ப எஸ்.ஐயா இருந்தேனே”

“அட காரியாபட்டி பரமசிவம். எப்பிடி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார். ஈரோட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கேன். வந்த உடனே ரெண்டு கொலைக் கேஸ் டீல் பண்ணிட்டு இருக்கேன். அதுல ஒண்ணு தான் இந்தக் கேஸ்”

“பரமசிவம், இந்தக் கேஸைப் பத்திக் கொஞ்சம் டீட்டெயில்ஸ் சொல்லுங்க”

“சார் விக்டிம் பேரு நமச்சிவாயம். ப்ரிஸம் எக்ஸ்போர்ட்ஸ்ங்கிற பனை ஓலை பொம்மை செய்யற கம்பெனியில ஃபீல்ட் ஏஜெண்ட். ஊர் ஊரா போய் பொம்மைகளைச் செய்ய ஆள் பிடிச்சி ஆர்டர் குடுத்து, வாரா வாரம் ஐட்டம்ஸை சென்னைக்கு லாரியில போட்டு அனுப்புற வேலை. இந்த வாரமும் அப்பிடி செஞ்சிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது வழியில யாரோ அருவாளால வெட்டிட்டாங்க. யூஸுவல் கிரிமினல்ஸோ இல்லை லோக்கல் ரவுடிஸோ செஞ்ச மாதிரி தெரியலை. வெட்ட முன்னாடி இந்த செல்ஃபோனுக்கு ஒரு கால் அடிச்சிப் பார்த்து வெரிஃபை செஞ்சிருக்காங்க. அதனால இது கூலிப்படை வேலையா இருக்கலாம். கால் வந்த ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது. ஹெட் கான்ஸ்டபிளை ஃபோன் கம்பெனியில விசாரிக்கச் சொல்லியிருக்கேன். அப்புறம் அவரு ஒரு கைப்பை வச்சிருந்திருக்காரு. ரொம்பப் பாதுகாப்பா வச்சிட்டு இருந்தாராம். அதுல பணம் எதுவும் இல்லைன்னு வீட்டுக்காரம்மா சொல்லியிருக்காங்க. ஆனாலும் ரொம்பப் பத்திரமா வச்சிருந்தாராம். இப்ப அதைக்காணலை. அந்த கைப்பைக்காகக் கொலை நடந்திருக்கலாம்னு ஒரு கோணத்துல விசாரணை செய்யலாம்னு இருக்கேன் சார்”

“பரமசிவம். இங்க நான் இப்பப் பாத்துட்டு இருக்கிற கேஸும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்...” என்று ஆரம்பித்து முழுக் கேஸ் கதையையும் சொல்லி முடித்தான். 

“சார் ரெண்டு கேஸுக்கும் சம்மந்தம் இருக்கும் போலருக்கே சார்?”

“கரெக்ட் பரமசிவம். ரெண்டு கேஸ் மட்டும் இல்லை மூணு கேஸ்”

“மூணா?”

“ஆமா.. “ டிடிஈ கேஸையும் சொல்லி முடித்தான். 

“இண்ட்ரஸ்டிங் சார்”

“ஓக்கே. பரமசிவம். நான் இங்க கமிஷனர்கிட்ட பேசிட்டு மூணு கேஸையும் ஒரே கேஸா மாத்த முடியுதான்னு பார்த்துட்டு உங்களுக்குச் சொல்றேன். உங்க நம்பர் என்ன?”

சொன்ன நம்பரைக் குறித்துக் கொண்டு ஃபோனை அணைத்தான். செல்ஃபோனில் சார்ஜ் தீரப் போனது. கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு ஃபோனை சார்ஜ் போட்டு எவிடென்ஸ் ரூமில் வைக்கச் சொல்லிவிட்டு யோசித்தான். 

டி.டி.ஈ கோயமுத்தூர் போகும் ரயிலில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். அவர் வைத்திருந்த எதுவோ காணாமல் போய்விட்டது.
சிவகுரு சென்னையில் கழுத்தறுபட்டு உயிரிழக்கிறான். அவன் வைத்திருந்த எதுவோவும் காணாமல் போய்விட்டது.
நமச்சிவாயம் ஈரோட்டில் அருவாளால் வெட்டப்பட்டு உயிரிழக்கிறார். அவர் வைத்திருந்த எதுவோவும் காணாமல் போய்விட்டது. 

டி.டி.ஈ, சிவகுரு, நமச்சிவாயம் - இந்த மூவரையும் இணைப்பது எது? அதைக் கண்டுபிடித்துவிட்டால் கேஸ் பாதி தீர்ந்துவிடும். 

சட்டென்று ஒரு யோசனை வந்தது. பரமசிவத்தின் எண்ணை அழைத்தான்.

“ஹலோ”

“பரமசிவம். நான் அருண்”

“சொல்லுங்க சார்”

“கொஞ்ச நேரம் முன்னாடி நான் கூப்பிட்டேனே, அந்த நமச்சிவாயத்தோட செல்ஃபோன். நான் கூப்பிட்டப்ப ஏதும் பேர் வந்திச்சா, இல்ல ஃபோன் நம்பர் தான் வந்ததா?”

“ஃபோன் நம்பர் தான் வந்தது சார். இருந்தாலும் செக் பண்ணிட்டு சொல்றேன். நீங்க வச்சதும் பேட்டரி டை ஆகிடுச்சி. சார்ஜ் போட்டு பார்த்துட்டு உங்களுக்குக் கூப்புடுறேன் சார்”

“ஓக்கே பரமசிவம்”

ஃபோனை வைத்துவிட்டு யோசித்தான். சிவகுரு செல்ஃபோனில் நமச்சிவாயத்தின் நம்பர் S3 என்று ஸ்டோராகியிருக்கிறது. சாகும் முன்பு S4RAV என்று எதையோ எழுத முனைந்திருக்கிறான். இண்டர்காமில் ரைட்டரை அழைத்தான். 

“மகேஷ்னு ஒரு பையன் அவங்கப்பா சாவுல மர்மம் இருக்குதுன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தானே இன்னைக்குக் காலைல, அவன் ஃபோன் நம்பர் எதுவும் குடுத்தானா?”

”குடுத்திருக்காரு சார். நோட் பண்ணிக்கிறீங்களா?”

மகேஷின் நம்பரை அழைத்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அப்பாவின் கடைசி சடங்குகளைச் செய்துகொண்டிருப்பானே என்பது நினைவுக்கு வந்தது. So near and yet so far என்று சொல்வார்களே அது போல இருக்கிறது. மூன்று கொலைகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், கேஸ் தீர்ந்துவிடும். ஆனால் அதைக் கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது. 

கார்த்தியின் அறைக்குப் போய் மூன்று கொலைகளைப் பற்றியும் ரிப்போர்ட் செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். வழியிலேயே சாப்பிட்டு விட்டு, ஷெல்ஃபில் இருந்த ஸ்காட்ச்சைக் கொஞ்சம் சரித்துக் கொண்டு, இரண்டு சிகரெட்டுகளை நுரையீரலுக்குக் கொடுத்துவிட்டு தூங்கிப் போனான்.

*******************************************************

காலை வழக்கம்போல ஜிம்மையும் ஸ்விம்மிங்கையும் முடித்து விட்டு ஒன்பதரை மணிக்கெல்லாம் கமிஷனர் ஆஃபிஸில் நின்றான். இன்ஸ்பெக்டர் சிவா ஏதோ வேலையாக இருந்தார். இவனைப் பார்த்ததும், “சார் காலேஜ்ல என்கொயர் பண்ணதுல ஒரு ப்ரேக் கிடைச்சிருக்கு சார். இந்த வேலையை முடிச்சிட்டு உங்க சீட்டுக்கு வர்றேன்”

“நோ பிராப்ளம் சிவா. இங்கயும் இன்னும் கொஞ்சம் இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. நானும் உங்களுக்கு ப்ரீஃப் பண்ணனும்”

அரை மணி நேரம் கழித்து வந்த சிவா, கையில் ஒரு புகைப்படம் வைத்திருந்தார். சிசிடிவியின் வீடியோவை ஃப்ரீஸ் செய்து புகைப்படமாக ஆக்கியதைப் போல இருந்தது. 

“சார் நீங்க சொன்ன மாதிரி என்கொயர் பண்ணதில, ஒரு ஸ்டூடண்டும், அந்த செக்யூரிட்டியும் இந்தப் படத்துல இருக்கிறவன் அந்தட் டயத்துல வந்திருக்கலாம்னு சொல்றாங்க சார். ஒரு வைல்ட் கெஸ் தான் சார். அக்யூரேட்டா சொல்ல முடியலைன்னுட்டாங்க”

அருண் அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தான். டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ. தொப்பி அணிந்திருந்தான். முகத்தில் பாதியை தொப்பி மறைத்திருந்தது. கையில் நோட்டு புத்தகம் என்று எதுவுமே இல்லை. கோடு போட்ட டிஷர்ட் அணிந்திருந்தான். ஜீன்ஸ் பேண்ட். கழுத்தில் டேக் தொங்கியது. 

“சிவா, காலேஜ் டேக் போட்டிருக்கானே? அதை ஜூம் பண்ண முடிஞ்சதா?”

“நானும் நினைச்சேன் சார். அந்த டேக் ரிவர்ஸ் ஆகியிருக்கு. ஃபோட்டோ எதுவும் தெரியலை”

“ம்ம்.. பின்னாடி பக்கத்தை வச்சி அது சிவகுருவோட டேகான்னு கண்டுபிடிக்க முடியலை?”

“இல்ல சார். பின்னாடி காலேஜ் பேரு & அட்ரஸ் தான் இருக்கு”

“ஓக்கே”

“சார் நீங்க ஏதோ ப்ராக்ரஸ் இருக்குதுன்னு சொன்னீங்களே?”

“ஓ அதுவா” ஈரோடு கொலையையும் பரமசிவத்துடன் நடந்த உரையாடலையும் பற்றி சிவாவிடம் சொன்னான். 

“சார் இந்த மூணு கொலைக்கும் தொடர்பு கண்டுபிடிச்சிட்டா கேஸ் சால்வ் ஆகிடும் போலயே சார்?”

“கரெக்ட் சிவா”

அருணின் ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். மகேஷின் நம்பர்.

“ஹலோ அருண் ஹியர்”

“சார் நான் மகேஷ் பேசுறேன். நேத்து ஈவினிங் நீங்க கூப்புட்டுருந்தீங்க போல.”

“ஆமா மகேஷ். அப்பாவோட செல்ஃபோன் இப்ப யார்கிட்ட இருக்கு? ரயில்வே போலீஸா? இல்ல உங்கக்கிட்டயா?”

“என் கிட்ட தான் சார் இருக்கு. கொண்டு வந்து குடுக்கட்டுமா?”

“கொண்டு வாங்க மகேஷ். எந்த நம்பரையும் அழிச்சிட வேண்டாம். அப்பிடியே கொண்டு வாங்க”

“ஓக்கே சார். காலைல கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் லஞ்ச் அப்போ கொண்டு வரட்டுமா?”

“சரி மகேஷ். ஒண்ணும் அவசரம் இல்லை”

உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த சிவா, “எதுக்கு சார் இப்ப அந்த டி.டி.ஈயோட ஃபோன்?”

ஒரு வேளை அதுல இந்த சிவகுரு அல்லது நமச்சிவாயத்தோட ஃபோன் நம்பர் எதுவும் இருக்குதான்னு பார்க்கத்தான்”

*******************************************************

மதியம் மூன்று மணி போல ஃபோனைக் கொண்டு வந்து கொடுத்தான் மகேஷ். “ஏதாவது ப்ராக்ரஸ் இருக்குதா சார்?”

“இன்னும் ரெண்டு கொலைகள், ஒண்ணு சென்னையில இன்னொண்ணு ஈரோட்ல, அதுகளுக்கும் உங்கப்பா மர்டர்க்கும் சம்மந்தம் இருக்கலாம்னு ஒரு டவுட் வந்திருக்கு மகேஷ். கன்ஃபர்ம் ஆனதுன்னா சொல்றேன்”

“தேங்க்யூ சார்”

“தென், உங்கப்பா பேக்ல ஏதோ ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ் பார்த்தேன்னு சொன்னீங்கள்ல? என்ன டாக்குமெண்ட்னு நினைவிருக்கா?”

“மறுபடி பார்த்தா அதுதானான்னு கரெக்டா சொல்ல முடியுமே தவிர அது என்ன டாகுமெண்ட்னு தெரியலையே சார்”

“ஓக்கே மகேஷ். ஏதாச்சும் வேணும்னா கூப்புடுறேன்”

மகேஷ் அந்தப் பக்கம் போனதும், அவன் தந்துவிட்டுப் போன சதாசிவத்தின் ஃபோனை எடுத்தான். அட்ரஸ் புக்கைத் திறந்து சிவகுருவின் நம்பர் அல்லது நமச்சிவாயத்தின் நம்பர் இரண்டில் ஒன்றாவது இருக்கிறதா என்று பார்த்தான். இரண்டு எண்களுமே இல்லை என்றதும் வருத்தமுற்றான். 

எதற்கும் முயற்சி செய்வோம் என்று நமச்சிவாயத்தின் ஃபோனுக்கு அழைத்தான்.

ஐந்து ரிங்குக்குப் பிறகு, பரமசிவம் ஃபோனை எடுத்தார்.

“ஹல்லோ ஈரோடு போலிஸ் ஸ்டேஷன்”

“பரமசிவம், நான் அருண் பேசுறேன்”

“சார். என்ன சார். வேற நம்பர்ல இருந்து கூப்புடுறீங்க?”

“இது தான் அந்த டி.டி.இ நம்பர். அங்க எதுவும் பேர் வந்ததா?”

“யெஸ் சார். டிடின்னு வந்திச்சி”

“ம்ம்.. ஸோ, டிடீஇயோட நம்பர் நமச்சிவாயத்துக்கிட்ட இருக்கு. நமச்சிவாயம் வீட்டுல டி.டி.ஈ சதாசிவம் பத்தி விசாரிங்க. தெரிஞ்சவங்களா, பழக்கமான்னு விசாரிங்க. விசாரிச்சிட்டு எனக்குக் கூப்புடுங்க”

“ஓக்கே சார்.”

இண்டர்காமில் சிவாவை அழைத்தான். “சிவா, இந்தக் கேஸ்ல ஒரு ப்ரேக் கிடைச்சிருச்சின்னு நினைக்கிறேன். நீங்க உடனே இங்க வர முடியுமா?”

“வாவ் சூப்பர் சார். ஃபைவ் மினிட்ஸ்ல வர்றேன்”

ஐந்து நிமிடத்தில் வந்தான். 

“சிவகுருகிட்ட நமச்சிவாயத்தோட நம்பர். நமச்சிவாயத்துக்கிட்ட டி.டி.ஈயோட நம்பர். ஆனா டி.டி.இ ஃபோன்ல இவங்க ரெண்டு பேரு நம்பரும் இல்லை. நமச்சிவாயம் ஃபேமிலிக்கு டி.டி.ஈயைத் தெரியுமான்னு கேக்கணும். அதே போல டி.டி.ஈ ஃபேமிலி கிட்ட நமச்சிவாயம் பத்தி விசாரிக்கணும். அது மட்டுமில்லாம சிவகுரு ஃபேமிலிக்கிட்ட நமச்சிவாயத்தைத் தெரியுமான்னு விசாரிக்கணும்.”

“சார் அதுக்கு எப்பிடியும் ரெண்டு மூணு நாளாகிடுமே சார்”

“கரெக்ட். ஆகிடும். ஆனா அதுக்குள்ள மர்டரர் தப்பிச்சிருவான். அதனால என்னொட இன்ஸ்டிக்ட் சொல்றதைக் கேக்கப் போறேஎன். இன் த மீன் டைம் டிப்பார்ட்மெண்ட் என்கொயரி நடத்தட்டும்”

“உங்க இன்ஸ்டின்க்ட் என்ன சொல்லுது சார்?”

“இந்த மூணு பேரும் சம்மந்தப்பட்ட நாலாவது ஆள் ஒருத்தன் இருக்கான். அவன் தான் இந்த மூணு கொலையையும் செஞ்சிட்டு அந்த ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸைத் திருடிட்டுப் போயிருக்கணும்”

“ஆனா மூணு பேரையும் லின்க் பண்ற மாதிரி எவிடென்ஸ் எதுவுமே இல்லையே சார். செயின் ரியாக்‌ஷன் மாதிரி இவனை அவன், அவனை அவன்னு தானே இருக்கு?”

“கரெக்ட். லெட் மி கம்ப்ளீட்”

“அந்த ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ்கு ஏதாவது வேல்யூ இருக்கணும். அல்லது யாரோ ஒரு முக்கியமான ஆளோட டாகுமெண்ட்ஸை வச்சி இவங்க மூணு பேரும் சேர்ந்து ப்ளாக் மெயிலிங் மாதிரி ஏதாவது செஞ்சிருக்கணும்”

“பட் சார். இவங்க மூணு...”

“வெயிட் சிவா. இவங்க மூணு பேரும் சந்திச்சிருக்க வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறீங்களா?”

“அப்படி இல்லை சார். எங்க மீட் பண்ண வாய்ப்பு இருக்கும்னு யோசிக்கிறேன்.”

“சிவா... இட்ஸ் ஆப்வியஸ். டி.டி.ஈ, கோயமுத்தூரை சொந்த ஊராக் கொண்ட சென்னை பையன், ஈரோட்டு டாய் ப்ரோக்கர். இந்த மாதிரி வேரீட் க்ளாஸ் பீப்புள் எங்க மீட் பண்ண முடியும்?”

“ட்ரெயின்?”

“கரெக்ட். நம்ம சிவா என்ன எழுத ட்ரை பண்ணான்? S4 RAV இல்லையா? டிடீஇ எஸ் 4 ரெண்டையும் சேத்துப் பார்த்தேன். ரயில் ரிசர்வேஷன் கோச்சா இருக்கலாம்னு ஒரு ஸ்பார்க். என் இன்ஸ்டிக்ண்ட் என்னன்னா, இவங்க மூணு பேரு + நம்ம சஸ்பெக்ட், நாலு பேரும் ஏதோ ஒரு நாள் ஒரே ட்ரெயின்ல வந்திருக்கணும். அப்ப நடந்த ஏதோ ஒரு சம்பவத்துல மூணு பேர்கிட்டயும் இந்த டாகுமெண்ட்ஸ் கிடைச்சிருக்கணும். அதை வச்சிப் பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கிற நேரத்தில நாலாவது ஆள் மூணு பேரையும் ஒவ்வொருத்தரா போட்டுத் தள்ளிட்டு அந்த டாகுமெண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்”

“கிரேட் சார்”

“சோ, நம்ம மர்டர் விக்டிம், எஸ்4 கோச்ல வந்த RAVனு ஆரம்பிக்கிற பேர் வச்ச ஒருத்தன். சிவகுரு சென்னை-கோயமுத்தூர் அல்லது கோயமுத்தூர் - சென்னை எஸ்-4 கோச்ல என்னைக்கு ரீசண்டா ட்ராவல் பண்ணான்னு அவங்க வீட்டுல தெரிஞ்சிட்டு அந்த தேதியில ரிசர்வேஷன் சார்ட்ல RAVனு பேர் வச்சவங்களை எல்லாம் ஃபில்டர் பண்ணி விசாரிச்சா நம்ம மர்டரரைப் பிடிச்சிரலாம்னு எனக்குத் தோணுது”

“குட் சார். இந்த டைரக்‌ஷன்லயும் நாம விசாரிச்சிப் பார்க்கலாம்”

“சிவகுரு பேரண்ட்ஸ்கிட்ட விசாரிக்கும்போது அவன் ட்ராவல் பண்ண டேட்ஸ் & ட்ரெயின் பத்தி விசாரிங்க. அதே போல நமச்சிவாயம் பத்தியும்” 

பேசிக் கொண்டே சதாசிவத்தின் ஃபோனைப் பார்த்தவன், சட்டென்று நின்றான்.  ஏதோ யோசித்தவனாக ஃபோன் புக்கை மறுபடி தேடினான்.  அவன் தேடியது கிடைத்தது. “S4"

“சிவா, ஐ தின்க் ஐ காட் அவர் சஸ்பெக்ட்” ஃபோனை சிவா முகத்தின் நேராக நீட்டினான். 

“எஸ் 4” 

“யெஸ்.” ஒரு குழந்தையின் குதூகலத்தோடு அந்த நம்பரை அழைத்தான். 

“த ஸப்ஸ்க்ரைபர் இஸ் நாட் ரீச்சபிள் அட் திஸ் மொமண்ட். ப்ளீஸ் ட்ரை யுவர் கால் லேட்டர்”


Thursday, August 22, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 6


வழியிலேயே ஃபோன் செய்து சொல்லியிருந்ததால் கல்லூரி பிரின்ஸ்பல் தயாராக இருந்தார். கோல்ட் ஃப்ரேம் போட்ட கண்ணாடி. வெள்ளை சட்டை கருப்பு பேண்டுடன் நீல நிற டை அணிந்திருந்தார். கோட் உள்ளே இருக்கலாம். எங்காவது ப்ரொஃபசர் வேலை பார்த்து ரிட்டயரானவராக இருக்கலாம். தலையில் இருந்த நரை அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கலாம் என்று காட்டியது. 

இருவரையும் வாசலிலேயே சந்தித்த பிரிஸ்பல் பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின்னர், 

“வாங்க சார், நாம லாக்கர் ரூமுக்குப் போயிடலாம்”

கல்லூரி அலுவலகத்துக்கு அருகிலேயே கல்லூரியின் செல்வத்தைப் பறை சாற்றும் வகையில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது லைப்ரரி. அதன் அடித்தளத்தில் தான் லாக்கர் ரூம் இருந்தது. வகுப்பு வாரியாக, பாலின வாரியாக பிரிக்கப்பட்டு அருமையாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது லாக்கர் ரூம். ரூம் வாசலில் ஒரு செக்யூரிட்டி கார்ட் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தார். பிரின்ஸியைப் பார்த்ததும் எழுந்து ஒரு சல்யூட் வைத்தார். மேஜை மேல் இருந்த சாவிக் கொத்து ஒன்றை எடுத்து நீட்டினார். 

பெற்றுக் கொண்ட பிரின்ஸி. “எங்க காலேஜ்ல செல்ஃபோன் க்ளாஸ்க்கு எடுத்துட்டுப் போகக் கூடாது சார். ஆனா காலேஜ் கேம்பஸ்ல யூஸ் பண்ண தடை எதுவும் இல்ல. செல்ஃபோன் மாதிரி காஸ்ட்லி ஐட்டம்ஸ், கால்குலேட்டர், லேப் கோட் மாதிரி ஐட்டம்ஸ் எல்லாம் காலேஜ்லயே பத்திரமா வச்சிக்கிறதுக்காக கட்டினதுதான் சார் இந்த லாக்கர்ஸ். ஒவ்வொரு ஸ்டூடண்டுக்கும் ஒவ்வொரு லாக்கர். பணம் அதிகம் கட்டுற ஸ்டூடன்ஸ்க்கு பெரிய லாக்கரும் உண்டு.”

பேசிக்கொண்டே `1437 லாக்கர் அருகில் வந்து நின்றார்கள். சாவிக் கொத்துக்குத் தேவையே இல்லாமல், லாக்கர் திறந்தே கிடந்தது. உள்ளே சுத்தமாகத் துடைக்கப்பட்டு இருந்தது. 

சிவாவும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அருண் தரையை பார்வையால் ஸ்கேன் செய்தான். மூலையில் குனிந்து எதையோ எடுத்தான். ஒரு சிறிய சாவி. அதை பிரின்ஸிபாலின் முன்னால் நீட்டினான். “இதுதான் லாக்கர் சாவியா பாருங்க”

வாங்குவதற்காக கையை நீட்டிய பிரின்ஸியிடம், “கை ரேகை இருக்கலாம் சார். அப்பிடியே பாருங்க” 

குனிந்து சாவியைப் பார்த்துவிட்டு, ”இதுதான் சார்.”

சிவா அந்த சாவியை வைத்து சிவகுருவின் லாக்கரைத் மூடிப் பார்த்தான். “இதேதான்”. சிவா தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்த பாலித்தீன் கவரில் சாவியைப் போட்டு சிவாவின் கையிலேயே கொடுத்தான். 

“வெளிய ஒரு செக்யூரிட்டி உக்காந்திருந்தாரே, கம்ப்யூட்டரோட அவர் வேலை என்ன?”

“லாக்கர் ரூமுக்குள்ள வர்ற ஸ்டூடண்ட்ஸ் ஐடி கார்ட் செக் பண்ணுவாரு. யாராச்சும் சாவி தொலைச்சிட்டாங்கன்னா, சிஸ்டம்ல எண்ட்ரி போட்டுட்டு திறந்து விடுவாரு. வேற லாக் மாத்த ஒர்க் ஆர்டர் போயிடும். சார்ஜ் பையனோட ஃபீஸ்ல சேர்ந்துடும்.”

“ஐடி கார்ட் வெரிஃபிக்கேஷன் எப்பிடி மேனுவலா செக் பண்றதா?”

“உள்ள வர்ற ஸ்டூடண்ட்ஸ் ஐடி கார்ட் ஸ்கேன் பண்ணுவாங்க, ஸிஸ்டம்ல அவங்க டீட்டெயில்ஸ் வரும். எக்ஸ்பயர்ட் கார்ட், இன்வேலிட் கார்ட்னா ரெட் அலர்ட் வரும். அந்த ஸ்டூடண்ட்டை டெயில் கேட் பண்ண விடமாட்டாரு. ஸ்டூடண்ட்ஸ் ஃபீஸ் கட்டலைன்னா இந்த மாதிரி அக்ஸஸ் எல்லாம் ரிவோக் பண்ணிடுவோம்.”

“ஓ. அப்போ எவ்ரி டைம் உள்ள வரும்போதும் ஒரு எண்ட்ரி விழும். இல்லையா? அந்த எண்ட்ரியை லாக்(log) பண்ற மாதிரி இருக்கா உங்க சாஃப்ட்வேர்?”

“ஹ்ம்ம். எனக்குத் தெரியலையே சார். ஒரு நிமிஷம் இருங்க” 

மூவரும் வெளியே வந்தனர். செக்யூரிட்டி மறுபடி எழுந்து சல்யூட் வைத்தார். அவரின் சட்டையில் குத்தியிருந்த பெயரைப் பார்த்துவிட்டு, “சண்முகம், யார் யாரெல்லாம் உள்ள வர்றாங்கங்கிற லிஸ்ட் கம்ப்யூட்டர்ல ஸ்டோர் ஆவுமா?”

தலையைச் சொரிந்தார். “தெரியலையே சார். ஒவ்வொருக்கா ஸ்கேன் பண்ணும்போது ஸ்க்ரீன்ல டீட்டெயில்ஸ் விழும் சார். ரெட் அலர்ட் வந்தா மட்டும் தான் சார் நோட்டிஸ் பண்ணுவேன். மத்தபடி ஸ்டோர் ஆவுமான்னு தெரியலையே?”

அருண் பிரின்ஸியைப் பார்த்தான். “யாருக்குத் தெரியும் பிரின்ஸிபல் சார்?”

செக்யூரிட்டி “சார், சிஸ்டம்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா கால் பண்ணச் சொல்லி ஒரு நம்பர் குடுத்துருக்காங்க சார். அவங்களுக்கு ஃபோன் பண்ணிக் கேட்டாத் தெரியலாம்”

*****************************************************************
பிரின்ஸியின் அறையில் உட்கார்ந்திருந்தார்கள். அகலமான அறை. மூலையில் மேஜை போட்டு முதுக்குப் பின்னால் சுவற்றில் ஏசி போட்டு வைத்திருந்தார்கள். மேஜையின் மேல் ஒரு மூலையில் ஃபைல்கள் சிலவும் இன்னொரு மூலையில் ஒரு ஆப்பிள் ஐமேக்கும் உட்கார்ந்திருந்தன. நடு நாயகமாக இரண்டு தொலை பேசிகள். பக்கத்திலேயே பிரின்ஸியில் செல்ஃபோன். தினமும் துடைப்பதால் மேஜை பள பள என்றிருந்தது. ஒரு பக்கம் கண்ணாடி போட்ட ஷெல்ஃபில் கல்லூரி மாணவர்கள் வென்று வந்த ஷீல்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒரு 40 இன்ச் ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி. பியூன் வைத்துவிட்டுப் போன ஜூஸை சன்னமாக உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். 

“மே ஐ கமின் சார்?” வாசலில் சத்தம் கேட்டதும் அருணும் சிவாவும் திரும்பினார்கள். தோளில் தொங்கிய லேப்டாப்புடன் ஆக்ஸிஸ் செக்யூரிட்டி சிஸ்டம் என்ற ப்ளூ கோடு போட்ட வெள்ளை சட்டையும் பிரவுன் பேண்டும் அணிந்த அந்த இளைஞன் நின்றிருந்தான். 

“உள்ள வாங்க”

“சார் என் பேர் திவாகர். ஆக்ஸிஸ்ல இருந்து வர்றேன். ஆக்ஸஸ் லாக் எடுக்கணும்னு சொன்னீங்க. அதான் வந்திருக்கேன்”

“உட்காருங்க திவாகர்”

“தேங்க்யூ சார். சார் நான் என்னோட லேப்டாப் செட் அப் பண்ணனும், 5, 10 மினிட்ஸ் ஆவும். நீங்க உங்க வேலை எதாச்சும் இருந்தா பாருங்க சார். ரெடி ஆனதும் சொல்றேன்”

தன் லேப்டாப்பை 40 இன்ச் டிவி ஸ்க்ரீனுடன் இணைத்து தான் ஓப்பன் செய்த லாகை அனைவருக்கும் தெரியுமாறு செய்தான் திவாகர். 

“இதுதான் சார் நீங்க கேட்ட லாக்கர் ரூம்ல நேத்து ஈவினிங்ல இருந்து அக்ஸஸ் ஆன எண்ட்ரீஸ். என்ன தேடணும்னு சொன்னீங்கன்னா ஈஸியா இருக்கும் சார்”

“சிவகுருவோட ஐடி கார்ட் எப்ப அக்ஸஸ் செஞ்சிருக்குதுன்னு சொல்ல முடியுமா திவாகர்?” அருண் கேட்டான்.

“ஸ்டூடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ன சார்?”

அருண் பிரின்ஸியைப் பார்க்க,  லாக்கர் நம்பர் தான் சார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரும். 1437”

“1437 இன்னைக்குக் காலைல 11 மணிக்கு எண்ட்ரியாகியிருக்கு சார்”

“எக்ஸாக்ட் டைம் சொல்லுங்க”

“11:04 AM"

"அந்த டைம் அரவுண்டா, மே பி 10:30ல இருந்து 11:30 வரைக்கும் யார் எல்லாம் லாக்கர் ரூமை அக்ஸஸ் செஞ்சிருக்காங்கங்கிற லிஸ்ட் எடுத்துக் குடுக்க முடியுமா?”

“முடியும் சார்.”

“சிவா நீங்க அந்த லிஸ்ட்ல இருக்கிற ஸ்டூடண்ட்ஸ் கிட்ட எல்லாம் விசாரிங்க. யாராவது புது ஆளை உள்ள பாத்திருக்கலாம்.”

“குட் ஐடியா சார்”

“பிரின்ஸிபல் சார். உங்க காலேஜ்ல சிசிடிவி எங்கயாச்சும் இருக்கா?”

“எல்லா ஹால்வேயிலயும் இருக்குது மிஸ்டர் அருண்”

“குட். சிவா நீங்க அந்த ரெக்கார்டிங்க்ஸயும் வாங்கி அந்த ஸ்டூடண்ட்ஸ்க்குப் போட்டுக் காட்டி நம்ம அக்யூஸ்ட் எங்கயாச்சும் சிக்குறானான்னும் பாருங்க. நான் ஆஃபிஸ்க்குப் போயிடுறேன்”

“நீங்க ஜீப் எடுத்துட்டுப் போய் அங்க யாராவது டிரைவர்கிட்ட குடுத்து விடுங்க சார். நான் என்கொயரி முடிச்சிட்டு வர்றேன்”

“சூப்பர் சிவா. நாம ஆஃபிஸ்ல மீட் பண்ணலாம்”

***********************************************************

ஈரோடு காவல் நிலையம். இன்ஸ்பெக்டர் தொப்பியைக் கழற்றி மேஜைமேல் விசிறியபடி வந்து உட்கார்ந்தார். 

“ஏய் ஃபேனைப் போடு”

கான்ஸ்டபிள் ஓடிச் சென்று ஃபேனை ஆன் செய்தார். கர்ச்சீப்பை எடுத்து கழுத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், சட்டை மேல் பட்டன் மூன்றை கழட்டி சட்டையை விலக்கி காற்றை வாங்கிக் கொண்டார். “என்ன எளவு இது. இந்த எளவு ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கியாந்த நேரம் என் தாலியருக்காய்ங்க. எளவு எங்கன பாத்தாலும் வெட்டுக் குத்துன்னு ஓடிட்டு இருக்கு. ஈரோட்டுக்காரய்ங்க காசத் தான் ஏமாந்து போவாய்ங்கன்னா இப்பிடி வெட்டுக் குத்துன்னா அடிச்சிக்குவாய்ங்க.”

“மதுர அளவுக்கு இல்லை சார்”

“சரிதான். இந்த எளவு வேண்டாம்னுதான் மதுரையில இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தேன். இங்கயும் இப்பிடியா? எல்லாம் என் ராசி”

ரைட்டர் வந்து ஒரு ஃபைலை மேஜை மேல் வைத்தார். “சார் அந்த நமச்சிவாயம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு சார்” 

“எந்த நமச்சிவாயம்வே”

“அதான் சார் அருவா வெட்டுக் கேஸ்.”

“ஓ அதுவா” ஃபைலை எடுத்து திறந்து மேலோட்டமாக மேய்ந்துவிட்டு, “வழக்கமான கதையத்தான் எழுதியிருக்காய்ங்க. ஆமா பக்கத்துல விசாரிச்சிங்களா? யாரும் எதிரி, பகை ஏதும் துப்புக் கிடைச்சிதா?”

ஹெட் கான்ஸ்டபிள் தலையைச் சொறிந்த வாறே, “இல்லிங் சார். இந்தாள் எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகாத ஆளாம். எதிரின்னு யாரும் இருக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்க. வேற யாரையோ வெட்ட வந்து இவனைத் தப்பா வெட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்”

பக்கத்தில் இருந்த எவிடென்ஸ் பையைத் திறந்து மேஜை மேல் கொட்டினார். உள்ளே இருந்து ஒரு செல்ஃபோன், ஒரு கர்ச்சீஃப், கொஞ்சம் சில்லரை, சில நூறு ரூபாய்த் தாள்கள், கொரியர் ரசீது விழுந்தன. 

சட்டென நினைவுக்கு வந்தவராக, ஏட்டு, “சார், இந்தாள் ஒரு கைப்பை வச்சிட்டு இருப்பாராம். ஏதோ நகைக்கடை பையாம். அதைக் காணல சார்”

“அதுல பணம் எதாச்சும் வச்சிருப்பானா?”

“இல்லிங் சார். பணமெல்லாம் அண்ட்ராயர்லதான். கொஞ்ச நாளாவே அதை ரொம்ப பத்திரப்படுத்தி வச்சிட்டிருந்தானாம். இவனுக்கு ட்ரைசைக்கிள் ஓட்டுற பையன் சொன்னான்.” 

“ம்ம்ம்ம்”

செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். நோக்கியா 1100 ஃபோன். பேட்டரியில் இரண்டு கோடுகள் இருந்தது. 3 மிஸ்ட் கால் என்றிருந்தது. பட்டனை அழுத்திப் பார்த்தார். wife என்ற நம்பரிலிருந்து இரண்டு கால். 98434 28738 நம்பரிலிருந்து ஒரு கால். கால் வந்த நேரத்தைப் பார்த்தார். எதோ பொறிதட்டியது போல ஃபைலைத் திறந்து பார்த்தார். டைம் ஆஃப் டெத்தும் அந்த கால் வந்த நம்பரும் ஒரே நேரமாக இருந்தது. 

“யோவ். இது நீர் சொன்ன மாதிரி வேற எவனையோ வெட்ட வந்து இவனைப் போட்ட மாதிரி தெரியலை. இவனுக்காகவே வந்திருக்காய்ங்க. இவன் தானான்னு தெரிஞ்சிக்க கால் பண்ணியிருக்காய்ங்க பாருங்க. இந்த நம்பருக்குக் கூப்புட்டுப் பாருங்க”

ஹெட்கான்ஸ்டபிள் தன் செல்ஃபோனில் அந்த நம்பரை அடித்து அழைத்துப் பார்த்தார். ‘திஸ் நம்பர் இஸ் கரெண்ட்லி ஸ்விட்ச்ட் ஆஃப்’. “ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது சார்”. 

“ஃபோன் கம்பெனியில குடுத்து யார் பேர்ல வாங்கியிருக்குன்னு விசாரிங்க. முக்காவாசி வேற எவன் பேர்லயாவதுதான் இருக்கும். இருந்தாலும் விசாரிச்சிருங்க”

“சரிங் சார்”

**************************************************************

ஜீப் ஓட்டிச் செல்லும் வழியெங்கும் அருணுக்கு இரண்டு கேஸ்களைப் பற்றியும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. சதாசிவம், டி.டி.ஆர். சூதாடி. கடனில் மூழ்கிக் கொண்டிருப்பவர். கையிருப்பு எதுவுமில்லாமல் திடீரென்று வாலண்டரி ரிட்டயர்மெண்ட் தருகிறார். சந்தேகப்பட்ட பையன் அவர் பையில் எதோ ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸைப் பார்க்கிறான். அடுத்தநாள் ரயிலில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். சிவகுரு காலேஜ் ஸ்டூடண்ட். அவனும் காதலியிடம் கோடிக்கணக்கில் பணம் வரும் என்று சொல்கிறான். அதற்கான விசயம் தனது லாக்கரில் இருப்பதாகச் சொல்லிய அன்றே கழுத்தறுபட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறான். இரண்டு பேரும் வைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட எதோ இப்போது இல்லை. ஆக, கொலை அந்த விசயத்திற்காக நடந்திருக்கலாம். இரண்டு கொலைகளுக்கும் எதோ தொடர்பிருக்க வேண்டும். அல்லது வெறும் கோ -இன்சிடெண்டாகக் கூட இருக்கலாம். ஒரு வேளை இரண்டு கொலைக்கும் தொடர்பிருந்தால், இரண்டையும் இணைக்கும் இழை எதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது. சிவா கல்லூரி மாணவர்களிடம் நடத்தும் என்கொயரியில் ஏதாவது ஃப்ரூட்ஃபுல்லாகக் கிடைத்தால் தான் உண்டு. 

அலுவலகத்தில் நுழைந்ததும் கார்த்தியிடம் நடந்ததை ரிப்போர்ட் செய்துவிட்டு டேபிள் முன்னல் சென்று அமர்ந்தான். இப்போது அருணுக்கு கமிஷனர் ஆஃபிஸிலேயே ஒரு டேபிள் கொடுத்துவிட்டார்கள். டேபிளின் மேல் சிவகுரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இருந்தது. எடுத்துப் பார்த்தான். ஓரமாக வைத்துவிட்டு கிரைம் ஸ்பாட் ஃபோட்டோஸ் என்றிருந்த கவரைப் பிரித்து புகைப்படங்களைப் பார்த்தான். சுரத்தில்லாமல் பார்த்துக்கொண்டே வந்தவன் சிவகுரு சாகும் முன் எழுதியிருந்த புகைப்படம் பார்த்ததும் நிறுத்தினான். ஃபோட்டோவைக் கையில் எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் ரூமுக்குச் சென்றான். உள்ளே இருந்தவர் அருணைப் பார்த்ததும் எழுந்து சல்யூட் வைத்தார். “ரமேஷ், இந்த பிக்சரை என்லார்ஜ் பண்ணிப் பாக்கணுமே” 

“எந்தக் கேஸ் சார்?”

“சிவகுரு மர்டர் கேஸ். இன்னைக்கு காலைல ஆச்சே. அதுதான்”

“சாஃப்ட் காப்பியே இருக்கு சார். ஒரு நிமிஷம்”

கம்ப்யூட்டரில் எங்கெங்கோ போய் அந்த புகைப்படங்களை எடுத்தார். வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்து குறிப்பிட்ட ஃபோட்டோ வந்ததும் நிறுத்தினார். ஜூம் செய்தார். 

“ரெண்டாவது இருக்கிற Aவை ஜூம் பண்ணுங்க.” 

அந்த ஏயில் இடது பக்கம் இருக்கும் கால் நேராக இல்லாமல் லேசாக இழுத்து விட்டதுபோல் தெரிந்தது. “இன்னொரு மானிட்டர்ல ரெண்டாவது ஏயை ஜூம் பண்ணி வைங்க” பெரிது படுத்திப் பார்க்கும் போது இரண்டு ஏக்களுக்கும் பெருத்த வித்தியாசம் தெரிந்தது.

“சார் ஃபர்ஸ்ட் ஏ, திடீர்னு பாத்தா ஏ மாதிரி தெரிஞ்சாலும், இப்பிடி மேக்னிஃபை பண்ணிப் பார்க்கும்போது நம்பர் 4 மாதிரி இருக்கு.”

“கரெக்ட் ரமேஷ். எனக்கும் அதுதான் தோணுது. இந்த கேஸ்ல ஒரு செல்ஃபோன் கிடைச்சதுல? அது எங்க இருக்கு?”

“எவிடென்ஸ் ரூம்ல இருக்கும் சார்”

“தேங்க்யூ ரமேஷ்”

எவிடென்ஸ் ரூமில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஃபோனை ஆன் செய்து கொண்டே சீட்டுக்குத் திரும்பினான். அட்ரஸ் புக்கில் எஸ் 4 என்ற எண்ணைப் பார்த்த நினைவு இருந்ததால் அட்ரஸ் புக்கில் தேடினான். எஸ் 3 தான் இருந்தது. ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அந்த எண்ணை அழைத்தான். 

எதிர்முனையில் ரிங் போனது.

“அலோ”

“ஹலோ. சென்னை போலிஸ் கமிஷனர் ஆஃபிஸ்ல இருந்து பேசறோம். அங்க யாரு பேசுறது?”

“இது ஈரோடு போலிஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் பரமசிவம் தான் பேசுறேன்”

“ஈரோடு போலிஸ் ஸ்டேஷனா? இது உங்க ஃபோனா?”

“இல்ல சார். ஒரு மர்டர் விக்டிம் ஃபோன். இந்த நம்பர் உங்கக்கிட்ட எப்பிடி?”

(தொடரும்)