Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Friday, June 15, 2012

போக்கர் விளையாடலாம் வாங்க!!




முன்குறிப்பு-1: போக்கர் (Poker) ஒரு சூதாட்டம். சூதாடுவது எங்க பரம்பரையில யாருக்குமே பழக்கம் இல்லைன்னு நினைக்கிறவங்க அப்டிக்கா லெஃப்ட் எடுத்து போயிட்டே இருங்க.
முன்குறிப்பு-2: ஏற்கனவே போக்கர் விளையாடத் தெரிஞ்சவங்க ரைட் எடுத்துப் போய்க்கிட்டே இருங்க.

  1. போக்கர் ஒரு சீட்டாட்டம். ஒரே ஒரு கட்டு வச்சிட்டு ஆடுற ஆட்டம். இந்த ஆட்டம் ஆட என்ன என்ன தேவைன்னு முதல்ல பார்க்கலாம்.
  2. விளையாட ஆட்கள். குறைந்தது 4 பேராவது இருந்தாத்தான் சுவாரசியமா இருக்கும்.
  3. ஒரே ஒரு சீட்டுக்கட்டு. அதுல இருக்கிற ஜோக்கர் எல்லாம் எடுத்து எறிஞ்சிடுங்க. புதுக் கட்டா இருக்கிறது நல்லது. அட்டையோட பின் பக்கத்தை வச்சி என்ன கார்டுனு கண்டுபிடிக்கிற அளவுக்கு பழைய கட்டுகள் கதைக்காவாது.
  4. சிப்ஸ். சைட் டிஷா வச்சிக்கிற சிப்ஸ் இல்லை. சில பல ஹாலிவுட் படங்கள்ல பார்த்திருப்பீங்களே. வட்ட வட்டமா ப்ளாஸ்டிக் வில்லைகளை ஒரு கையில சரக்க வச்சிக்கிட்டு டேபிள்க்கு நடுவுல வீசி வீசி எறிவாங்களே. அதுதான் சிப்ஸ். இதை ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு மதிப்பு (காசு மதிப்பு) வச்சிக்கணும்.
  5. பணம். இதை Buy-Inனு சொல்லுவாங்க. மொத்த ஆட்டத்துக்கும் எவ்வளவு buy-inஅப்பிடின்னு முதல்லயே முடிவெடுத்துடுங்க. அந்தப் பணத்தை பொறுப்பா ஒருத்தர் வசூல் பண்ணி வச்சிக்கிட்டு (சிட் ஃபண்ட் நடத்துற நண்பர்கள் இருந்தா அவங்க கையில குடுத்துறாதீங்க) அதுக்கு சமமான சிப்ஸ் அவங்களுக்குக் குடுத்திரணும். எந்த ரவுண்ட் வரைக்கும் buy-in செய்யலாம்ங்கிறதையும் முடிவெடுத்துடுங்க.
  6. டீலர். இது வழக்கமா ஃப்ரண்ட்ஸா விளையாடும்போது ரம்மில ஒவ்வொருத்தரா கலைச்சிப் போடுற மாதிரி செஞ்சிக்கலாம். கேஸினோவுக்கெல்லாம் போய் விளையாண்டிங்கன்னா அங்க டீல் செய்ய ஒருத்தர் இருப்பாங்க. அவங்க தான் ரூல்ஸ்படி நடக்கறீங்களான்னும் பார்த்துக்குவாங்க.
  7. ஒரு ஆட்டத்துக்கு மினிமம் பெட் எவ்வளவுங்கிறதையும் முடிவு செஞ்சிக்கணும்.


இதெல்லாம் போக சரக்கு வச்சிக்கிறதும் வச்சிக்காததும் அவங்க அவங்க இஷ்டம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை ராத்திரி வீட்டம்மணிங்க எல்லாம் தூங்கின பிற்பாடு சரக்கை சரிச்சிக்கிட்டே விளையாட ஏத்த விளையாட்டு போக்கர்.

இப்ப எப்பிடி விளையாடுறதுன்னு பார்ப்போம். முதல்ல சீட்டுக்கட்டை விரிச்சி வைச்சி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சீட்டு எடுக்கணும். யார் பெரிய சீட்டு எடுக்கறாங்களோ அவங்க தான் ஃபர்ஸ்ட் ரவுண்டுல டீலர். எடுத்த சீட்டு வரிசைப்படி உக்காந்துக்கணும். டீலருக்கு அடுத்து இருக்கிற ஆள் ஸ்மால் ப்ளைண்ட்(Small blind), அவருக்கு அடுத்து இருக்கிறவர் பிக் ப்ளைண்ட் (Big Blind).

ஸ்மால் ப்ளைண்ட்: ஒரு ஆட்டத்துக்கு மினிமம் பெட் எவ்வளவோ அதுல பாதியை இவர் கண்டிப்பா கட்டியே ஆகணும். சீட்டு என்னன்னு பார்க்கிறதுக்கு முன்னாடியே இவர் கட்டியாகணும்.
பிக் ப்ளைண்ட்: மினிமம் பெட் முழுக்க இவர் கண்டிப்பா கட்டியே ஆகணும். இவரும் சீட்டைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே கட்டணும்.

இப்ப டீலர் ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு ரெண்டு சீட்டு போடுவாரு. ரம்மி மாதிரியே ஒவ்வொரு சீட்டாத்தான் போட்டுட்டு வருவார். ஸ்மால் ப்ளைண்ட்ல ஆரம்பிச்சி, டீலர்ல முடிக்கணும். இப்பவே எல்லாரும் அவங்களுக்கு வந்திருக்கிற சீட்டைப் பார்த்துக்கலாம்.

அடுத்ததா, பிக் ப்ளைண்டுக்கு அடுத்து இருக்கிற ஆட்டக்காரர், இந்த ரவுண்டுல கலந்துக்கிறதா இல்லையான்னு முடிவெடுப்பாரு. கலந்துக்கிறதா இருந்தா குறைந்த பட்சம் மினிமம் பெட்டைக் கட்டணும். அதுக்கு மேலயும் கட்டலாம். விளையாட விரும்பலைன்னா ஃபோல்ட் (fold)னு சொல்லி கார்டைக் காட்டாமலே டீலர்கிட்ட குடுத்துரணும்.
இது மாதிரி ஒவ்வொருத்தரா செஞ்சிட்டே வருவாங்க. ஒரு வேளை யாராவது மினிமம் பெட்டுக்கு மேல (இது குறைந்த பட்சம் மினிமம் பெட் அளவுக்கு இருக்கணும்) கட்டினா (அதை raiseனு சொல்லுவாங்க) அடுத்த ஆட்டக்காரர்ல இருந்து முந்தின ஆட்டக்காரர் வரைக்கும் அந்தத் தொகையை மேட்ச் பண்ணனும்.

இப்ப யாரும் ரெயிஸ் பண்ணலைன்னு வச்சிக்குவோம். பிக் ப்ளைண்ட் (இவர் தான் முதல்லயே மினிமம் பெட் கட்டினவர்)க்கு ரெண்டு சாய்ஸ் உண்டு. ஒண்ணு தொகையை ரெய்ஸ் பண்ணலாம். அல்லது செக் (Check) அப்பிடின்னு சொல்லலாம். செக்னு சொன்னா, டீலருக்கு வேலை.

இப்ப டீலர் என்னா செய்யணும்னா, எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு சீட்டு போட்டது போக மீதி இருக்கிற சீட்டுக்கட்டுல மேல இருக்கிற சீட்டை எடுத்து கடைசியில வச்சிக்கிட்டு – இதை burnனு சொல்லுவாங்க, அதாவது எரிக்கிறது – அடுத்த மூணு கார்டை திருப்பிப் போடுவார் . இதுதான் ஃப்ளாப் (flop). இப்ப நம்ம கையில இருக்கிற ரெண்டு சீட்டையும் டேபிள் மேல இருக்கிற மீதி மூணு சீட்டையும் மேட்ச் செஞ்சி பாத்துட்டு வின்னிங்க் காம்பினேஷன் (இதை அப்புறம் பார்ப்போம்) வரும்னு நினைச்சா மேல பெட் கட்டலாம். அதாவது ரெய்ஸ் பண்ணலாம்.

முதல் ரெய்ஸ் பண்ற வாய்ப்பு ஸ்மால் ப்ளைண்டுக்கு (அவர் தானப்பா ஃபர்ஸ்ட் சீட்டை வாங்கினாரு). ரெய்ஸ் பண்ண விரும்பலைன்னா செக்னு சொல்லிடலாம். வேற யாராவது ரெய்ஸ் பண்ணா அதை எல்லாரும் மேட்ச் பண்ணனும். இது கதைக்காவாதுன்னா ஃபோல்ட் பண்ணிடலாம். ஆனா இதுவரைக்கும் கட்டின பெட் வடை போச்சுதான்.

எல்லோரும் மேட்ச் பண்ணதும், அடுத்த கார்டை burn செஞ்சிட்டு, அதுக்கு அடுத்த கார்டை திருப்பிப் போடுவாரு. இதுக்குப் பேரு டர்ன் (turn). மறுபடி மேல சொன்ன மாதிரி எல்லாருக்கும் இன்னுமொருமுறை ரெயிஸ் செய்யவோ இல்லை checkனு இருக்கிற தொகையையே தொடரவோ வாய்ப்பு.

நிற்க. இடையிலயே எல்லாரும் ஃபோல்ட் செஞ்சிட ஒருத்தர் மட்டும் மிச்சமிருக்கவும் வாய்ப்பு இருக்கு. அந்தக் கட்டத்துல மிச்சமிருக்கிற ஆள் ஜெயிச்சவராகிடுவார்.
மண்டை சுத்துதா? எத்தனை பேரு மங்காத்தாவே ஆடிக்கிறோம் சாமின்னு கிளம்பிட்டீங்கன்னு தெரியலை. யாராவது இன்னும் இருந்தீங்கன்னா தொடர்றேன்.

இந்த ரவுண்ட் பெட் கட்டினதும், அடுத்த கார்டை burn செஞ்சிட்டு, அதுக்கு அடுத்த கார்டை திருப்புவாரு. இதுக்குப் பேரு ரிவர் – rivar. இதுக்குப் பிறகு இன்னொரு ரவுண்டு ரெயிஸ், செக்னு ஓடும்.

கடைசியா எல்லாரும் கார்டை திருப்பிக் காட்டணும். யாரு ஜெயிச்சாங்கன்னு பார்த்து அவங்க பெட் கட்டின (இதை பாட் மணின்னு சொல்லுவாங்க) எல்லா காசையும் (சிப்ஸாத்தான்) வழிச்சிக்குவாங்க.

இப்ப யாரு ஜெயிச்சான்னு எப்பிடி கண்டு பிடிக்கிறது. (அடங்கொன்னியா நான் ஜெயிப்பேனான்னு தெரியாம எப்பிடிடா பெட் கட்டுறது? இதையில்லடா மொதல்ல சொல்லியிருக்கணும்ங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது). நம்ம கையில இருக்கிற ரெண்டு கார்டு (அல்லது ரெண்டுல ஒரு கார்ட்) + டேபிள்ல இருக்கிற அஞ்சுல மூணு கார்ட் (அல்லது நாலு கார்ட்) சேர்த்து வின்னிங் காம்பினேஷன்ல ஒண்ணா இருக்கணும். அதுலையும் ஒரு காம்பினேஷன் இன்னொரு காம்பினேஷனை பீட் பண்ணும். ஆக இருக்கிறதுலையே கூடின காம்பினேஷனா இருந்தா நாம தான் வின்னர்.

என்ன என்ன வின்னிங் காம்பினேஷன்னு பார்க்க முன்னாடி, suit அப்பிடின்னா, ஒரே பூ( அதாவது க்ளாவர், ஹார்ட்ஸ், ஸ்பேட், டைஸ் இது நாலுல ஒண்ணு).
ஃப்ளஷ் – Flush – அப்பிடின்னா ஒரே பூவுல 5 கார்ட்னு அர்த்தம்.
ஸ்ட்ரெயிட் – Straight – அப்பிடினா ஒரு வரிசையில (2,3,4,5,6 அல்லது 9,10,J,Q,K) இந்த மாதிரி இருக்கிற 5 கார்ட்ஸ். (JQKA2 அப்பிடின்னு wrap around பண்ணக்கூடாது. கரெக்ட் ரம்மி மாதிரியே தான்).
பெர் – pair – ஒரே நம்பர்ல ரெண்டு கார்ட்.
Three of a kind – ஒரே நம்பர்ல மூணு கார்ட்
Four of a kind – ஒரே நம்பர்ல நாலு கார்ட்
இதெல்லாம் புரிஞ்சதா? இப்ப எது பெரிய கை எது சின்ன கைன்னு பார்ப்போம்.

1.    ராயல் ஃப்ளஷ் – Royal Flush – அதாவது ஒரே பூவுல 10 J Q K A னு வச்சிருக்கிறது.
2. ஸ்ட்ரெயிட் ஃப்ளஷ் – Straight Flush – அதாவது ஒரே பூவுல அஞ்சு நம்பர் வரிசையா வர்றது.
3.    Four of a kind
4.  Full House – அதாவது ஒரு நம்பர்ல மூணு கார்டும், இன்னொரு நம்பர்ல ரெண்டு கார்டும் (ஒரு pairம் ஒரு three of a kindம்)
(என்னது அஞ்சும் ஒரே நம்பரா?? பாஸ் நீங்க போய் பாதியில விட்டுட்டு வந்த தட்டாங்கல்லை கண்டினியூ பண்ணுங்க ப்ளீஸ்)
5.  Flush
6.  Straight
7.  Three of a kind (இதுல ரெண்டு பேரு three of a kind வச்சிருந்த பெரிய நம்பர் யார் வச்சிருக்காங்களோ அவங்க தான் ஜெயிச்சவங்க)
8. Two pairs (ரெண்டு நம்பர்ல ரெண்டு ரெண்டு கார்ட். இதுலையும் ரெண்டு பேரு Two pairs வச்சிருந்தா பெரிய நம்பர் தான் ஜெயிக்கும்)
9. Pair – இதுலையும் ரெண்டு பேரு ஜோடி வச்சிருந்தா பெரிய ஜோடி தான் ஜெயிக்கும்.
10. High Card  யாருமே மேல இருக்கிற 9 காம்பினேஷன்ல எதுவுமே வச்சிருக்கலைன்னா, இருக்கிறதுலையே பெரிய கார்டு யார் கையில இருக்கோ அவங்க தான் ஜெயிச்சவங்க. (இது ரொம்ப அரிதாத்தான் நடக்கும்).

இப்ப ஒரு எக்ஸாம்பிள் பார்ப்போம். நாலு பேரு இருக்காங்க. அவங்க அவங்க கையில கார்ட் இருக்கு.
          முதல் ஆள் கையில  2§ 2©
          ரெண்டாவது ஆள் கையில 8¨ 8§
          மூணாவது ஆள் கையில A© 8©
          நாலாவது ஆள் கையில 4ª 5ª
         டேபிள் மேல Aª 2ª 3ª A¨ 8ª
இப்போ முதல் ஆள் – ஃபுல் ஹவுஸ் மூணு 2 & ரெண்டு A.
இரண்டாவது ஆள் – ஃபுல் ஹவுஸ் – மூணு 8 & ரெண்டு A 8, 2ஐ விட பெருசுங்கிறதால முதல் ஆள் அவுட்டு
மூணாவது ஆள் – ஃபுல் ஹவுஸ் – மூணு A & ரெண்டு 8. A, 8ஐவிட பெருசுங்கிறதால ரெண்டாவது ஆளும் அவுட்டு.
நாலாவது ஆள் – ஸ்ரெட்யிட் ஃப்ளஷ் – A, 2, 3, 4, 5 இந்த வரிசை, ஒரே ஸூட் ல இருக்கிறதால மூணாவது ஆளும் அவுட்டு. இவர் தான் ஜெயிக்கிறார்.
(குறிப்பு: மேல உள்ள கேம் Casino Royale படத்துல வர்ற போக்கர் டோர்னமெண்ட்டோட கடைசி  கேம். பாண்ட் கையில Straight Flush தான் இருக்கும்)

இதுல எல்லாரும் இப்பிடி உண்மையா விளையாடணும்னு அர்த்தம் இல்லை. யாராவது ரெண்டாவது ரவுண்ட்லயே Bluff செய்வாங்க. அதாவது, அவங்க கையில பெரிய கார்ட் எதுவும் இருக்காது. ஆனாலும் மத்தவங்களை பயமுறுத்த பெரிய தொகையைக் கட்டுவாங்க. மத்த ப்ளேயர்ஸ் பயந்து ஃபோல்ட் செஞ்சிட்டுப் போயிருவாங்க. அப்ப எல்லாரும் அதுவரைக்கும் கட்டுன பெட் எல்லாம் இவங்களுக்குத்தான். இப்படி எல்லாரும் ஃபோல்ட் செஞ்ச பிறகு ஜெயிச்சோம்னா நம்ம கையில இருக்கிற கார்டைக் காட்ட வேண்டியதில்லை. நீங்க ஒரு வேளை Bluff செஞ்சிருந்தீங்கன்னா காட்டாம இருக்கலாம். காட்டினீங்கன்னா அடுத்த வாட்டி bluff பண்ணும்போது நம்ப மாட்டாங்க. (bluff செஞ்ச பிறகு காட்டுறதிலையும் ஒரு அட்வாண்டேஜ் இருக்கு. அடுத்த வாட்டி நிஜமாவே நல்ல கார்ட் வச்சிருக்கும்போது நீங்க Bluff செய்யறதா நினைச்சி உங்களை மடக்க பெட்டை நல்லா ஏத்தி விடுவாங்க. நீங்க double bluff செய்யலாம்)

இந்த விளையாட்டுல எதிராளிகளோட ரியாக்‌ஷன்ஸை கவனிக்க வேண்டியது முக்கியம். நம்மில பலருக்கு பொய் சொல்லும்போது வியர்க்கும், அல்லது கை லேசா நடுங்கும், இல்ல மத்தவங்களை கண்ணோட கண் பார்க்க பயப்படுவாங்க. இதையெல்லாம் நோட் பண்ணனும். உண்மையிலேயே நல்ல கை வந்திருச்சின்னா, அவங்களை அறியாமலே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாங்க (excited). அதிகப்படியா பெட் கட்டுவாங்க. அப்ப ஜாக்கிரதையா ஃபோல்ட் செஞ்சிட்டோம்னா நம்ம காசு பொழைக்கும். நாமும் பெரும்பாலும் நம்ம ரியாக்‌ஷனைக் காட்டிக்காம இருக்கிறது நல்லது. எப்பவும் ஒரே அளவுல பெட் கட்டுறது, அடிக்கடி ஃபோல்ட் பண்றது இதெல்லாம் நம்மை ஒரு ஜென்யூன் ப்ளேயராக் காட்டும். அப்பப்ப bluff செஞ்சிக்கலாம்.

சரி ஃப்ரண்ட்ஸ் இல்லை, இருந்தாலும் காசு கட்டி ஆட விரும்பலைன்னு சொல்றவங்களும் இருப்பாங்க. உங்களுக்காகத்தான் Facebook மாதிரி சமூகத் தளங்கள்ல இலவசமா poker விளையாட்டுகள் நடத்துறாங்களே? பிற நண்பர்களோட சேர்ந்து அங்க போய் போக்கர் விளையாடுங்க.

கடைசியா, போதையோ சூதோ, உங்களை சுலபமா அடிமைப் படுத்திடும். கார்டை கையில பிடிக்கிறது எப்பிடின்னு உங்களுக்குத் தெரியிறது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் கார்டை எப்பக் கீழ போடுறதுன்னு தெரிஞ்சிக்க வேண்டியது. ஆகவே விளையாடுங்க, எஞ்சாய் பண்ணுங்க. ஆல் த பெஸ்ட். 

Saturday, January 29, 2011

இலங்கையைப் புறக்கணிப்போம் #tnfisherman

விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று நம்பிக்கொண்டிருந்தவன்தான் நான்.

என்னைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பார்த்துப் பதைத்து, கவலை கொண்டு, கண்கள் கலங்கி, கண்ணீர் விட்டு அழுது அதன் பின் அதனை மறந்தும் போனவன் நான்.

2010 ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இலங்கை வீரர்கள் திலன் துஷாரவையும், பெரேரவையும் ஏலத்தில் எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்டித்து சென்னை அணியின் வலைமனையில் நம் எதிர்ப்பைப் பதிவோம் என்று மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்த நண்பர்களிடம் விளையாட்டையும் அரசியலையும் சேர்க்காதீர்கள் என்று சண்டை போட்டவன் நான்.

இயக்குநர் ராமின் எழுதும் காட்சி வலைப்பூவில் சக்தி எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்த பின்னும் தொடர்ந்து ஐ.பி.எல் பற்றி எழுதியவன் நான்.

நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.

2010 ஐ.பி.எல் துவங்குமும் ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்தும் எந்த அணி முதலாளிகளும் அவர்களில் ஒருவரைக் கூட எடுக்காமல் அவர்களைக் கேவலப்படுத்தினர். உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஐ.பி.எல் நிர்வாகத்தைக் கண் துடைப்புக்காகக் கண்டித்தார்.

ஆனால், இலங்கை அரசின் சம்பளம் பெறும், இலங்கையின் பாதுகாப்புக்கு பணி புரியும் இலங்கைக் கடற்படை என் மீனவச் சகோதரர்களை தினம் தினம் சித்ரவதை செய்தும் கொல்லாமல் கொன்றும், கொன்றே கொன்றும் வந்தும், அவற்றைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கை கட்டி வேடிக்கைப் பார்க்கிறது அதே இந்திய ஏகாதிபத்ய அரசு.

இரண்டு வாரங்களில் இரண்டு மீனவர்களை சுட்டும் கழுத்தை நெறித்தும் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஃபாசிச சிங்கள கடற்படை.
பெரும்பாலான கொலைகள் நம் எல்லைக்குள் வந்தே செய்திருக்கிறது சிங்கள் கடற்படை. அப்படி எல்லை மீறுபவர்களையும் சுடும் உரிமையை இந்த நாய்களுக்கு யார் கொடுத்தது? மற்ற நாடுகளில் இதைத்தான் செய்கிறார்களா? நம் எதிரி நாடு என்று அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் கூட மீனவர்களை எச்சரித்து விட்டுவிடுகிறதே? பாகிஸ்தான் எதிரி நாடா இல்லை இலங்கை எதிரி நாடா? 

சென்னையில் சிங்கள புத்த விகாரம் ஒன்று தாக்கப்பட்டவுடன், இனி மீனவர்கள் மேல் தாக்குதல் நடக்காது என்று சொல்லியிருக்கிறது சிங்கள அரசு. ஆக இதுவரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களுக்கு என்ன பதில்?
இலங்கை அரசின் பிரதிநிதிகளை அலறியடித்துக் கொண்டு ஓடிவரச் செய்ய வேண்டிய இந்திய அரசு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறதாம். அவர் போய் மன்னிப்புக்கடித்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வருவாரா? இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா? இலங்கையுடனான நட்பை முறித்துக் கொண்டிருக்க வேண்டாமா? முதுகெலும்பில்லாத அரசாகிவிட்டதே மன்மோகன் அரசு?

அமைச்சர் பதவிகள் எத்தனை வேண்டும் என்று பேச தனிவிமானம் ஏறிப் போவாராம். கூட்டணி பற்றிப் பேசவும் விமானம் பிடிப்பாராம். மீனவன் செத்தால் தந்தி அடிப்பாராம். கடிதம் எழுதுவாராம். இவரெல்லாம் தமிழினத் தலைவராம்? இனத்தையே அழித்துவிட்டால் பிறகு எங்கிருந்து தலைவராக முடியும்? 

இந்திய ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கின்றன. இந்து பத்திரிகை ஒரு படி மேலே போய் சிங்கள அரசுக்கு பலத்த ஜால்ரா அடிக்கிறது. 

மத்திய மாநில அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கவும், இருட்டடிப்பு செய்யும் ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசவும், இந்த விவாகரத்துக்கு வெளிச்சம் கொண்டு வரவும் தமிழ் வலையாளர்கள் டிவிட்டர் தளத்தில் ஒரு புதுமைப் போராட்டம் ஒன்றைக் கையெடுத்திருக்கிறார்கள். #tnfisherman என்ற டேகுடன் ட்விட் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வலைத் தொடர்பு கொண்ட தமிழர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். எனக்குப் பிரச்சனை இல்லாதவரை கவலையில்லை என்ற மனப்போக்கை கை விட்டு அனைவரும் நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். 

ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெளியேயும் நம் போராட்டத்தைத் தொடர்வோம். 

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்போம். வெளிநாடுகளில் வாழ்வோர் கடைகளில் இலங்கைப் பொருட்களை வாங்கி பின்னர் அதை இலங்கைப் பொருட்கள் என்பதால் திருப்பித் தருவதாகச் சொல்லி திருப்பித் தருவோம். (இந்தியாவில் வாங்கிய பின் திருப்பித் தருவதென்பது நடக்காத காரியம் அதனால் தான் வெளிநாட்டுத் தமிழர்கள்).

கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம். 

இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம். 

இரண்டு இலங்கை வீரர்களைத் தேர்ந்தெடுத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியையும் புறக்கணிப்போம். அவர்களை நீக்கும் வரை சென்னை சூப்பர் கிங்க்ஸின் போட்டிகளைப் புறக்கணிப்போம். 

இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களைப் புறக்கணிப்போம். இப்போது மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வந்துவிட்டதால் ஏர்டெல் தொடர்புகளைத் துண்டிப்போம். 

இலங்கை இனவாத அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை, கட்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வரை நம் போராட்டம் தொடரவேண்டும். 

Tuesday, February 23, 2010

கிரிக்கெட் - ஸ்லெட்ஜிங்

இது கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் பதிவு அல்ல..

சில நாட்களுக்கு முன் இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்கிறார்கள் என்பதைப் பற்றி யாரோ எழுதியிருந்தார்கள். இதைப் பற்றி யூ ட்யூபில் தேடிக் கொண்டிருந்த போது சில பல வீடியோக்கள் சிக்கின. ஆஸ்திரேலியர்கள்/இங்கிலாந்து வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்வது எல்லாருக்கும் தெரியும். அவர்களது வீடியோ தேவையில்லை. இது நாம் எதிர்பார்க்காத சில நபர்கள் செய்யும் ஸ்லெட்ஜிங்.

1. தென்னாப்ரிக்காவின் மார்க் பவுச்சர் - ஜிம்பாப்வேயின் தாய்புவை - சப்டைட்டிலோடு இருக்கிறது.



2. இலங்கையின் குமார சங்கக்கர - தென்னாப்ரிக்காவின் ஷான் பொல்லாக்கை



3. இலங்கையின் ரோஷன் மகானமா - ஆஸ்திரேலியாவின் இயன் ஹீலியை.
இதில் ட்ராப் வைத்தது ஹீலி, விழுந்தது மகானமா. விழுந்துவிட்டார் என்பது அடுத்த பந்திலேயே தெரிகிறது.



4. தென்னாப்ரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ் - பாகிஸ்தானிகளை மிகவும் மோசமான வார்த்தைகளால்..

கிரிக்கெட் தொடர் பதிவு

பவன் இதை ஆரம்பித்த போதே படித்தேன். நமக்கு மிகவும் பிடித்த விளையாட்டில், மிகவும் பிடித்த விளையாட்டு வீரர்களைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு என்று நினைத்தேன். நான் பவனுடன் சில முறை கிரிக்கெட் சம்மந்தமான வாதத்தில் ஈடுபட்டதால் எனக்குப் பிடிக்காத பிரிவுகளில் அவருக்குப்பிடித்த இலங்கை வீரர்களைச் சேர்த்துவிடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ :), அவர் என்னைத் தொடர அழைக்கவில்லை. அவர் அழைத்த ஆட்களுக்கும் எனக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாததால் என்னை யாரும் அழைக்கமாட்டார்கள் என்று (நிஜம்மா) ஏங்கிப் போயிருந்தேன்.


ஆனால் நர்சிம் அழைப்பார் என்பதை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி நர்சிம். சென்னை வரும்போது உங்களுக்கு ஸ்பெசலாக ஏதாவது வாங்கி வருகிறேன்(சும்மா லுல்லலாயிக்கி).


இத்தொடர்பதிவின் விதிமுறைகள்


1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
*******

1.பிடித்த கிரிக்கெட் வீரர்

சச்சின் – கிரிக்கெட் கடவுள்
சிறு வயதில் (3 வயதில்) டென்னிஸ் ராக்கெட்டைத்தான் தூக்கிக்கொண்டே சுற்றுவாராம் இவர். பின்னாளில் தான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் வந்ததாம்.

கபில் தேவ் –இந்திய அணியின் ஒரே உலகக் கோப்பையை பெற்றுத் தந்ததற்காக.
அந்த உலகக்கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை இவர் 175 அடித்து தூக்கிவிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி பி.பி.சியின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பதிவு செய்யப்படாமலே போயிற்று.

சனத் ஜெயசூரிய – ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற அணிகளைப் போலப் பார்க்கப்பட்டு வந்த இலங்கை அணியை தனது பேட்டிங்கால் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்குக் கொண்டு சென்றதற்காக.
இவர் அணியில் பந்து வீச்சாளராக சேர்க்கப் பட்டவர், பின்னால் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு சாதனை பல புரிந்தார்.

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் –

ஆஸ்திரேலிய அணியின் சீருடையை (டெஸ்ட் போட்டி என்றால் பச்சைத் தொப்பியை) அணிந்திருக்கும் எந்த வீரரும்.

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் –

அக்ரம் – அக்ரம் கடைசி ஓவர் ஸ்பெசலிஸ்ட் – ஆறு டெலிவரிகளை ஏழு விதங்களில் போடுவதில் வல்லவர் (அதென்ன ஏழு மாதிரி, சில நேரம் வேண்டுமென்றே ஒரு ஒய்ட் போடுவார், அதையும் சேர்த்து)
ஒரு நாள் போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக்குகளும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக்குகளும் எடுத்த ஒரே பவுலர் இவர்தான். அதிலும் இவரது டெஸ்ட் ஹாட்ரிக்குகள் ஒரே (இலங்கை அணிக்கு எதிரான) தொடரில் அடுத்தடுத்து எடுக்கப்பட்டவை.

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்

மனோஜ் பிரபாகர் – அசாருதீன் ஐந்து ஃபீல்டர்களை ஆஃப் சைடில் நிறுத்தி, ட்ராப் செட் செய்வார். நம்ம அண்ணன் அழகாக பந்தை லெக் சைடில் போடுவார்.
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக இவர் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்.

க்ளென் மெக்ரா - மேற்கிந்தியத் தீவு வீரர் சர்வனைப் பார்த்து - “How is Lara's d**k?" என்று கேட்டு, அதற்கு அவர் - “Ask your wife" என்று சொல்லிவிட பாய்ந்து சர்வனின் சட்டையைப் பிடித்தார். (மெக்ராவின் மனைவி கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார்). இந்த சம்பவத்தினால் அவரை எனக்குப் பிடிக்காது. (கடைசியில் அபராதம் கட்டியதென்னவோ சர்வன் தான்).

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர்

ஷேன் வார்னே – சுழல் பந்தின் மன்னன். இவர் வீசிய பால் ஆஃப் த சென்ச்சுரி மறக்க முடியாதது.
இவரை Best Captain Australia Never had என்று சொல்வார்கள். ஸ்டீவ் வாவின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியின் தலைமைக்கு வந்திருக்க வேண்டியவர், கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக தலைமைப் பதவிக்கு வர இயலாமலே போய் விட்டது.

சச்சின் டெண்டுல்கர் – டைட்டன் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஓவர், கொச்சியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த ஐந்து விக்கெட்டுகள், இவை போதாது இவரை இந்த லிஸ்டில் சேர்ப்பதற்கு?

அனில் கும்ப்ளே – தாடையில் பந்து பட்டு சேதமடைந்திருந்த போதிலும் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தலையையும் தாடையையும் சேர்த்து கட்டுப் போட்டுக்கொண்டு பந்து வீச வந்த ஆர்வம்.
டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்க்ஸில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையைப் பாராட்டும் வண்ணம் பெங்களூருவில் எம்.ஜி ரோடு, செயிண்ட் மார்க்ஸ் ரோடு, கஸ்தூரி பா ரோடு இணையும் சந்திப்புக்கு அனில் கும்ப்ளே சர்க்கிள் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது கர்னாடக அரசு.

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர்

ஆஷ்லே கைல்ஸ் – நெகட்டிவ் லைன் பவுலிங் போட்டு வெறுப்பேற்றியதால்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 271 இன்னிங்க்ஸ்களில் 242 முறை அவுட் ஆகியுள்ளார். இந்த 242 முறைகளில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தது ஒரே முறைதான். அப்படி இவரை ஆட்டமிழக்கச் செய்த பெருமை கைல்ஸ்ஸுக்கே.

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் –

சச்சின் – கடவுளைச் சொல்லாமல் இருக்க முடியுமா?

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் – வெறும் தொப்பி மட்டும் போட்டுக் கொண்டு அசால்டாக பந்துகளை சிக்சருக்கும் ஃபோருக்கும் அனுப்பிக் கொண்டிருப்பார்
இவருக்கும் இந்திய நடிகை நீனா குப்தாவுக்கும் (சோளி கே பீச்சே கியா ஹை) ஏற்பட்ட குறுகிய கால தொடர்புக்கு அடையாளமாக நீனாவுக்கு மசாபா என்ற மகள் இருக்கிறார்.

வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் – ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனம்
தனது முதல் ஒரு நாள் போட்டியிலும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் டக் அவுட் ஆன பெருமை இவருக்கு உண்டு. 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்து வந்தாலும் ஒரு உலகக்கோப்பை போட்டித் தொடரில் கூட விளையாடியதில்லை.

சமீபத்தில் – ஹஷிம் ஆம்லா.
இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் நடை பெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் (கமெண்டேட்டர்) இவரை டெரரிஸ்ட் என்று அழைத்து தன் கமெண்டேட்டர் வேலையை இழந்தார்.

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர்

க்றிஸ் மார்ட்டின் – நியூசிலாந்தைச் சேர்ந்தவர். “how to bat like Chris Martin” வீடியோவை யூ-ட்யூபில் பாருங்கள்.
ஐம்பத்தி நாலே போட்டிகளில் 27 முட்டைகள் வாங்கிய வீரர் இவர்தான். கூடிய விரைவில் வால்ஷின் (43) சாதனையை முறியடிப்பார் என்று எண்ணுகிறேன்.

9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்

சவுரவ் கங்குலி – இவரது ஆஃப் ட்ரைவ்களுக்கும், ஸ்பின்னரை இறங்கி வந்து சிக்ஸருக்கு அனுப்பும் ஷாட்டிற்கும் நான் ரசிகன்
1992/93 ஆம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாத போது, ட்ரிங்க்ஸ் எடுத்துச் செல்ல மறுத்த காரணத்தால் அணியை விட்டு நீக்கப் பட்டார். 

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்

லாரா – சிறந்த வீரர் என்றாலும், சுய சாதனைகளுக்காக(400 ரன்கள்), வெற்றி பெற வேண்டிய போட்டியை (சமன் செய்ய வேண்டிய தொடரை) டிரா செய்து தொடரை இழந்தவர்.
2006ம் ஆண்டு இந்தியாவோடு ஆண்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி அடித்த பந்தை டேரன் கங்கா பிடித்தார். ஆனால் அந்த கேட்சை அவர் சரியாகப் பிடித்ததற்கான சரியான சான்று இல்லை. சாதாரணமாக இப்படிப் பட்ட நேரத்தில் பேட்ஸ்மேனுக்கே சாதகமாக தீர்ப்பு வழங்கப்படுவது வழமை. இங்கேயும் அவ்வாறே. ஆனால் லாரா அம்பயர்களோடு கடுமையாக சண்டை போட்டு கடைசியில் தோனியிடம் கிரவுண்டை விட்டு வெளியேறச் சொன்னார். தோனியும் வெளியேறினார்.

ஜிம்மி (பே)ஆடம்ஸ் – இவரைப் பார்த்துத்தான் உள்ளே திரும்பும் பந்துகளை பேட்டில் வாங்கினால் கால் ஸ்டம்புக்கு வெளியே இருந்தாலும் அவுட் கொடுக்கலாம் என்று விதியைத் திருத்தினார்கள் என்று நினைக்கும் அளவுக்கு பேடாலேயே விளையாடியவர்.
கீப்பராக ஆடத்துவங்கி, பின் பந்து வீசவும் செய்தவர். 

11. பிடித்த களத்தடுப்பாளர்

ஜாண்டி ரோட்ஸ் –பாகிஸ்தானுடனான 1992/93 உலககோப்பைப் போட்டியில் பறந்து வந்து ஸ்டம்பைத் தட்டி ரன் அவுட்டாக்கியதை மறக்க முடியுமா?
இவர் தென்னாப்ரிக்க ஹாக்கி அணியிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் ஜடேஜா – இந்தியர்களாலும் ஸ்டம்பை குறி வைத்து எறிய முடியும் என்று நம்ப வைத்தவர்.
இவர் நவநகர் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். ரஞ்சித்சிங்ஜி (ரஞ்சி கோப்பை), துலிப்சிங்ஜி (துலிப் ட்ராபி போட்டிகள்) ஆகியோர் இவர் பரம்பரைதான். 

மற்றும் இன்னும் பலர்.

12. பிடிக்காத களத்தடுப்பாளர்

அனில் கும்ப்ளே – இவர் பந்து வீச்சில் இவரே பிடிக்க வேண்டிய கேட்சுகளை மட்டும் பறந்து பறந்து பிடிப்பார்.

13. பிடித்த ஆல்ரவுண்டர் –

கபில்தேவ் – ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட இவரது 175, ஆலன் டொனால்டின் புயல் வேகப் பந்து வீச்சுக்கு எதிராக ஒட்டு மொத்த இந்திய அணியே திணறிக் கொண்டிருக்கும்போது இவர் அடித்த 129, ஃபாலோ ஆனைத் தவிர்க்க 24 ரன்கள் தேவை என்றிருக்கும்போது நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர் பறக்கவிட்ட வேகம், இந்திய அணியிலும் (மித?) வேகப் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று உலகுக்குக் காட்டிய இவரது வேகம், 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்லக் காரணமான அந்த விசேஷ கேட்ச், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இம்ரான் கான் – பந்து வீச்சு, பேட்டிங், தலைமைப் பொறுப்பு – மூன்றிலும் கில்லி அடித்தவர். இன்று வரை பாகிஸ்தானின் சிறந்த கேப்டன்.

1992/93 உலகக் கோப்பை இறுதியாட்டத்துக்குத் தேர்வு பெற்றதும் அணியுடன் சேர்ந்து இவர் கொடுத்த பேட்டியில் இன்சமாம் உல் ஹக் அடித்த 50ஐப் பற்றிக் கேட்ட கேள்விக்கு இவர் பதில் – “நன்றாக விளையாடுகிறான். இன்று அடித்த 50 இவன் தலைக்குப் போய்விடாமல் இருக்க வேண்டும்”.


கேட்ட நிருபர் – “என்ன நீங்கள் அவரை வைத்துக் கொண்டே இப்படி சொல்கிறீர்கள்?”


“பயப்படாதீர்கள் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது” – தெரிந்திருந்தாலும் இன்சமாம் இவரைக் கோபித்திருக்கமாட்டார்.

14. பிடிக்காத ஆல்ரவுண்டர்

இர்ஃபான் படான் – இவர் பவுலராக மட்டுமே இருந்திருக்கலாம். அடுத்த கபில் என்று இவரை ஏற்றி விட்டு உள்ள பவுலிங்கும் போச்சுட நொள்ளக்கண்ணா என்றாகிவிட்டது
இவருக்கும் யூசுப் படானுக்கும் தந்தை ஒன்று தாய் வேறு.

15. பிடித்த நடுவர்

ஷெப்பர்ட் – 111, 222, 333 (நெல்சன் நம்பர்) வரும்போது ஒரு காலை உயர்த்தி குண்டு உடம்பைத் தூக்கி இவர் குதிப்பது வேடிக்கையாக இருக்கும்.
அப்படிக் குதிப்பது மூட நம்பிக்கையால் என்று இவரே சொல்லியிருக்கிறார்.

பில்லி பவுடன் – ஆர்த்ரைட்டீஸால் பாதிக்கப்பட்ட இவரால் உடனே தலைக்கு மேல் கையைத் தூக்கி அவுட் கொடுக்க முடியாது. இந்தக் குறையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வித்தியாசமாக சிக்னல் செய்து தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண்டவர்.

16. பிடிக்காத நடுவர்

டேரல் ஹேர், குமார் தர்மசேனா, அசோக டி சில்வா, மார்க் பென்சன், ஒரு சில இந்திய அம்பயர்கள் (பெயர் நினைவில்லை) – இப்படி பலர்.

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர்

ரவி சாஸ்திரி
ஹர்ஷா போக்ளே
டோனி கிரேக்

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்

அருண்லால், ரமீஸ் ராஜா

19. பிடித்த அணி இந்தியா

20. பிடிக்காத அணிஆஸ்திரேலியா

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும்

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – ஆஸ்திரேலியா விளையாடும் மற்றைய நாடுகளுடனான போட்டிகள்

23. பிடித்த அணித் தலைவர்

கங்குலி – அடக்கமாக இருந்த இந்திய அணியை அக்ரசிவ் ஆக மாற்றியவர்

தோனி – வெற்றியோ தோல்வியோ கடைசி நிமிடம் வரை கூலாக இருப்பவர்
இவர் முதல் முதலாக அணித்தலைவர் ஆனது இந்திய அணிக்குத்தான் (அதற்கு முன் தெரு விளையாட்டில் கூட கேப்டனாக இருந்ததில்லையாம் - Managers are born not made).

24. பிடிக்காத அணித் தலைவர்

ரிக்கி பாண்டிங் – காரணம் சொல்லத் தேவையில்லை.

சனத் ஜெயசூர்யா – தெருக் கிரிக்கெட் விளையாடுபவர் போல டாஸ் ஜெயித்ததும் – பிட்ச் எப்படிப்பட்டது என்றெல்லாம் யோசிக்காமல் – பேட்டிங் பேட்டிங் என்று தேர்ந்தெடுப்பவர்

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின், ஷேவாக்-சச்சின், சேவாக்-கம்பீர், ஜெயசூர்யா-கலுவித்தரன

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி

க்ராம் ஸ்மித் – ஹெர்ஷெல் கிப்ஸ் ஜோடி – ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
சுனில் கவாஸ்கர் 
நீங்கள் கரிபியனைச் சேர்ந்த நாற்பது ஐம்பது வயதுக்காரரை சந்திக்க நேரிட்டால், நீங்கள் இந்தியர் என்று தெரிந்தது அவர் கேட்கும் முதல் கேள்வி கவாஸ்கரைப் பற்றியதாகத்தான் இருக்கும் (என் சொந்த அனுபவம்)
ராகுல் ட்ராவிட் - Great Wall of India.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல ஒரு நாள் போட்டிகளிலும் சைட் ஃபிடில் வாசிப்பதில் மன்னன். முதல் இரண்டு highest partnerships in ODI இல் இவர் பெயரும் உண்டு.
டான் ப்ராட்மேன்
இவர் விளையாடிப் பார்த்ததில்லை. ஆனால் 99.98 ஆவரேஜ் வைத்திருக்க வேண்டும் - அதிலும் ஹெல்மெட், க்ரில், தை பேட், ஆர்ம் பேட்  போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இலலாத பாடிலைன் காலங்களிலும் - என்றால் சாதாரண விசயமில்லை.

28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - சச்சின் டெண்டுல்கர்
எத்தனை இன்னிங்க்ஸ்களைச் சொல்வது?

29. பிடித்த போட்டி வகைடெஸ்ட்
கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில் டெஸ்ட் போட்டிகள் என்பது டைம் லெஸ் - குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் வெற்றி தோல்வி கணிக்கப்படும் வரை விளையாடப்படுமாம். 1938-39ல் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியே நீளமான டெஸ்ட் போட்டி. இது 9 நாட்களுக்கு நடை பெற்றதாம். அப்படியிருந்து இது ட்ராவில் முடிவடைந்தது - காரணம், இங்கிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்து செல்ல கப்பலைப் பிடிக்க நேரமாகிவிட்டது. 

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் – சச்சின்.


யாரையாவது தொடர அழைக்க வேண்டுமே?


கார்க்கி - யாருமே கூப்புடலைன்னு வருத்தப்பட்டிங்களே.. இந்தாங்க புடிச்சிக்குங்க.
அண்ணன் பழமை பேசி - அந்தக் கால கிரிக்கெட் வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை
புலவன் புலிகேசி - இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்.
வருண் - ரிலாக்ஸா எழுதுங்க வருண்.
விசா - தொடர் பதிவுக்கெல்லாம் பதில் சொல்லுவிங்களா தெரியல.
எல் போர்ட்.. பீ சீரியஸ் - கூப்டோம்ல கூப்டோம்ல.. :)

Thursday, January 21, 2010

ஐபிஎல்லும் தமிழீழ அரசியலும்

டிஸ்கி: இது கிரிக்கெட் பதிவு அல்ல. ஐபிஎல் லுக்கு நான் ஆதரவாளனும் அல்ல. நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்பது அந்தப் பக்கமிருந்தாலும் ஐபிஎல் உண்மையான கிரிக்கெட் அல்ல என்று நினைப்பவன். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையும் எந்த முதலாளியும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் கடந்த வருடம் T20 உலக சாம்பியன்கள். இது அந்த நாட்டின் வீரர்களையும் அரசியல்வாதிகளையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது போல. வழக்கம்போல ரசிகர்கள் ஐபிஎல்லின் கொடும்பாவியை எரித்திருக்கிறார்கள்.


சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்த ஏலத்தில் இலங்கை வீரர் திஸ்ஸரா பெரேராவை $50,000/-க்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஜஸ்டின் கெம்ப்-ஐ $100,000/- க்கும் எடுத்துள்ளது.

நாம் தமிழர் பேரியக்கம் திஸ்ஸரா பெரேராவை சென்னை அணி வாங்கியதை கண்டித்து அவர்களது வலைதளத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்ய கோரியிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கை கீழே:

Vanakkam Uravugalae,


While we are actively participating in boycott srilanka campaign, our Chennai people have invited our enemy to treat them. Yes, the Chennai Super Kings cricket team has enrolled a new srilankan cricketer to play for their team. They already have quite a few srilankan cricketers signed for Chennai team. Is this not a shame to our people? Is this not a disgrace to our Tamil society? The srilankan people who fired crackers on the fall of Tamil freedom fighters are now invited to share the business in Tamil Nadu.

If you want to show your anger, Tamils please sign up and send in your feedback to Chennai Super Kings stating that Tamils do not like Srilankans here. We can stick to same format given below. Click the link to post.
 
என் கேள்வி இதில் என்ன என்றால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்பது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் கம்பெனி. அதற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்மந்தம்? அதை தமிழர்களின் அணி என்று எப்படி சொல்ல முடியும்? அணியில் மொத்தம் இருக்கும் தமிழர்களே 5 பேர்தான். அதிலும் விளையாடும் 11 பேரில் இரண்டு தமிழர் வந்தால் பெரிய விசயம். அப்படி இருக்க அங்கே போய் சிங்களவனை எடுக்காதே என்று கோரிக்கை வைத்து என்ன பயன்? 
 
இரண்டாவது, 14 சிங்களவர்கள் விளையாடும் அணி ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி. அந்த அணியையே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் யாழ்-கொழும்பு வாழ் தமிழர்களும் ரசிக்கிறார்கள் என்றால் விளையாட்டையும் அரசியலையும் வேறு வேறாக அவர்கள் கருதுகிறார்கள் என்று தானே அர்த்தம்? அவர்களே அப்படி இருக்கும் போது நாம் விளையாட்டை அரசியலாகப் பார்ப்பதில் என்ன பயன்? 
 
தமிழர்கள் நமக்குள்ளே இருக்கும் களைகளை களைவதை விட்டு விட்டு இதற்கெல்லாம் போய் நம் சக்தியை விரயம் செய்ய வேண்டுமா? கொஞ்சம் யோசியுங்கள்.
 
பேசாமல் பால் தாக்கரேயைப் போல இலங்கை வீரர்கள் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) கிரிக்கெட் விளையாட விடமாட்டோம் என்று ஒரு மிரட்டல் அறிக்கை விட்டாலாவது நாடு திரும்பிப் பார்க்கும். வழக்கம் போல என்.டி.டி.வி தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்பது போல ஒரு மாயையை ஒளிபரப்பும்.

Saturday, January 16, 2010

ஃபோட்டோ வித் கமெண்ட்ஸ்

டிஸ்கி: சும்மா நாமளும் ட்ரை பண்ணலாமேன்னு.. ஹி ஹி ஹி







Friday, November 13, 2009

நீண்ட நெடிய இருபது வருடங்கள்

1989ம் வருடம். ஸ்ரீகாந்த் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானின் சுற்றுப் பயணம் செய்கிறது. அந்த அணியில் இடம் பெற்றிருந்தான் பதினாறு வயதே நிரம்பிய அந்தச் சிறுவன். அவனைப் பற்றி கிரிக்கெட்டின் பெரிய ‘தல’ கவாஸ்கர் பெருமையாகச் சொல்லியிருந்தார். முதல் டெஸ்ட் மேட்ச் அவ்வளவாக சோபிக்கவில்லை. கவாஸ்கர் ஊர்ப்பாசத்தில் பேசியிருக்கிறார் என்று தான் நினைத்தோம். பாகிஸ்தானிலும் அச்சிறுவனைக் கேலி செய்யும் வண்ணம் பேனர்கள் வைத்திருந்தார்கள். “பால் குடிக்கும் குழந்தையே, வீட்டுக்குப் போய் பால் குடி” என்று.

இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரு கண்காட்சிப் போட்டி. அதில் முஸ்தாக் அகமதுவின் ஓவரில் இரண்டு சிக்ஸர் விளாசியிருந்தான் அச்சிறுவன். அப்போது உலகின் தலை சிறந்த சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதிர் (முஸ்தாக் அகமதுவின் குரு) அச்சிறுவனை நோக்கி - “ஏன் சிறுவர்களின் பந்து வீச்சை அடிக்கிறாய்? என் பந்தை அடித்துப் பார்?” என்று சவால் விடுத்துவிட்டு பந்து வீச வந்தார். அந்தச் சிறுவனும் அவரது சவாலை ஏற்றுக் கொண்டான். அந்த ஓவர் முடிந்த போது ஸ்கோர் கார்ட் இப்படி இருந்தது - 6 0 4 6 6 6. சச்சின் என்ற பேட்ஸ்மெனை உலகம் கண்டு கொண்டது.

அந்தச் சிறுவன் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 20 வருடங்கள் நிறைவு பெருகின்றன.

இருபது வருடங்கள் ஒரு பணியில் இருப்பது பெரிய விசயமில்லை. ஆனால் அப்பணி விளையாட்டுத் துறையில் விளையாட்டு வீரராக என்றால்? பெரிய விசயம் தான் இல்லையா? அதுவே இருபது வருடங்களாக தலை சிறந்த விளையாட்டு வீரராக? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

சச்சின் ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும் போதும் நூறு கோடி இந்தியர்களும் அவர் மீது வைக்கும் எதிர்பார்ப்பு? அவர் அவுட்டாகிவிட்டால் உடைந்து போகும் இந்திய அணியைப் பின்பற்றுபவர்களும், கூத்தாடும் எதிர் அணியைப் பின்பற்றுபவர்களும் இருபது வருடங்களாக இருக்கத்தானே செய்கிறார்கள்? அன்று முதல் இன்று வரை இந்திய அணியின் மதிப்பு வாய்ந்த விக்கெட்டாகக் கருதப்படுவது சச்சினின் விக்கெட் தானே?

அவரின் திறமைக்குச் சான்றாக எத்தனையோ ஆட்டங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். வயதாகிவிட்டலும் தன் திறமை சற்றும் மங்கவில்லை என்பதைக் காட்டும் வண்ணம் ஹைதராபாத்தில் 175 ரன் எடுத்தாரே? மறக்க முடியுமா?

இந்திய கிரிக்கெட் என்னும் மதத்தின் கடவுளாக விளங்கும் சச்சின் இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பது என் விருப்பம் தான் ஆனால் அதற்கு அவர் உடல் ஒத்துக் கொள்ளுமா என்று தெரியாததால், 2011 உலகக் கோப்பைப் போட்டிகள் வரையாவது அவர் விளையாடி இந்தியாவுக்கு கோப்பையைப் பெற்றுத் தர வேண்டும்.

இன்று இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் சச்சினை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

Wednesday, September 30, 2009

சென்னை சூப்பர் கிங்க்ஸும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸும்

சத்தியமா இது கிரிக்கெட் பத்தின இடுகை இல்லிங்க்ண்ணா

அமெரிக்காவுல நம்மூரு கிரிக்கெட்டு மாதிரியே ஒரு வெள்ளாட்டு வெளாடுறாய்ங்க. அதுக்கு பேரு பேஸ்பாலாம். நம்மூரு கிரிக்கெட்டுக்கும் இந்தூரு பேஸ்பாலுக்கும் சில வித்தியாசம். (அதெல்லாம் என்னன்னு க்ளாஸ் எடுக்கப் போறதும் இல்ல). ரெண்டுக்கும் ஒரு ஒத்துமை என்னன்னா அதுக்கு கிறுக்குப் பிடிச்ச மாதிரி ரசிகனுங்க (வெறியனுங்க) இருக்கிற மாதிரி இங்கயும் பேஸ்பாலுக்கு இருக்கானுக. அவனுங்க பண்ணுற அலும்பு இருக்கே.. யப்பா தாங்க முடியல.



நான் இருக்குற நியூ யார்க்ல நியூ யார்க் யான்க்கீஸ்னு ஒரு பேஸ்பால் டீமு. அவனுங்களோட ரசிகனுங்கள பாக்கனுமே. ஆபிஸ்னு கூட பாக்காம அவனுங்க டெஸ்க் எல்லாம் யான்க்கீஸ் லோகோ போட்ட பொருளா வச்சிருப்பானுங்க. பேஸ்பால் மாட்ச் இருந்ததுன்னா ஒரு ஸ்போர்ட்ஸ் பாருக்குப் போயி தண்ணி அடிச்சிக்கிட்டே மாட்ச் பாப்பானுங்க. அடுத்த நாளு வந்து அந்த மாட்ச்சப் பத்தி அக்கு வேறு ஆணி வேறா அலசுவானுங்க. வூட்டுல தங்கமணி இல்லைன்னா ஃப்ரண்ட்ஸ கூட்டிட்டு வந்து வீட்டுலயே தண்ணி அடிச்சிட்டு மாட்ச் பாப்பானுங்க.







இதெல்லாம் கூட பரவால்லிங்க. பக்கத்துல பாஸ்டன்ல, பாஸ்டன் ரெட் சாக்ஸ்னு ஒரு டீமு. யான்க்கீஸ் ஃபேனுக்கும் ரெட் சாக்ஸ் ஃபேனுக்கும் ஏழாம் பொருத்தம். நம்ம இந்தியா பாகிஸ்தான் மேட்ச் மாதிரி அனல் பறக்கும். இவனுங்களுக்கு நடுவுல நான் ஒரு தடவ மாட்டிக்கிட்டேன். அதப் பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.


நான் பாஸ்டனுக்கு ஆஃபிஸ் விசயமா போக வேண்டி இருந்தது. போய் பாஸ்டன் ஏர்போர்ட்ல இறங்கிட்டேன். இறங்கி நடந்து போனா அங்க இருக்குறவங்க எல்லாம் என்ன ஒரு மாதிரியா பாக்குறாங்க. எனக்கு ஒரே குறு குறுன்னு இருக்கு.. ஒரு வேள ஜிப் கிப்பு போடாம வந்துட்டமோன்னு.. அப்படியே நைசா கை வச்சும் பாத்துட்டேன். அங்கயும் எதுவும் கோளாறு இல்ல. அப்புறம் ஏன் இப்படி பட்டிக்காட்டான் முட்டாய்க்கடய பாக்குற மாதிரி பாக்குறாங்கன்னு தெரியாம முளிச்சிக்கிட்டே ஏர்ப்போர்ட் விட்டு வெளிய வந்தேன் ரெண்ட்டல் கார் ஷட்டில்க்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.



இங்க ஒண்ணு சொல்லியாவணும். பாஸ்டன் ஏர்ப்போர்ட்ல ரெண்ட்டல் கார் பிடிக்கணும்னா வெளியால வந்து காத்துக்கிட்டு இருக்கணும். ஒவ்வொரு ரெண்ட்டல் கம்பெனிக்காரனும் ஒரு பஸ் அனுப்புவான் ஒவ்வொரு டெர்மினலுக்கும். அந்த பஸ்ஸுல ஏறிக்கிட்டோம்னா ரெண்ட்டல் கார் கம்பெனிக்கு கொண்டு போயி விடுவாங்க. அங்க இருந்து கார் எடுத்துட்டு போவலாம்.


அப்பிடி ஒரு ஷட்டிலுக்காக நின்னுட்டு இருந்தேன். ஷட்டில் பஸ்ஸும் வந்துச்சி. அந்த பஸ் டிரைவர் கீழ இறங்கி என் கூட நின்னுட்டு இருந்தவங்களுக்கு எல்லாம் அவங்க லக்கேஜ எடுத்து உள்ள வக்க ஹெல்ப்பு பண்ணான். என்னய மட்டும் ஒரு மொற மொறச்சுட்டு பஸ்ஸுக்குள்ள ஏறிட்டான். நானும் பின்னாடியே ஏறி அவனுக்கு சைடுல இருந்த ஒரு சீட்டுல உக்காந்து என் தலைல போட்டுட்டு இருந்த தொப்பிய கழட்டுனேன். அதப் பாத்த அவன் சொன்னான் - நல்ல வேளை தொப்பிய கழட்டுன. இல்லன்னா உன்ன பஸ்ஸ விட்டு தூக்கி எறிஞ்சிருப்பேன் - எனக்கு திக்குன்னு ஆயிருச்சி. தொப்பிய திருப்பிப் பாக்குறேன் பாழப்போன தொப்பில நியூ யார்க் யான்க்கீஸ் லோகோ. தொப்பிய நாலா எட்டா மடக்கி என் பெட்டிக்குள்ள வச்சிட்டு தான் மறு வேலை. ஆனா அவன் அதோட விட்டானா? ரெண்ட்டல் ஆஃபிஸ் வரவும் - எல்லாருக்கும் இன்றைய நாள் நல்ல நாளா இருக்கட்டும் இந்த நியூ யார்க் யான்க்கீஸ் தொப்பி போட்டவனத் தவிர - அப்பிடின்னு போட்டான் ஒரு போடு. இப்பிடியெல்லாமா கொல வெறியோட ரசிகனுங்க இருப்பாய்ங்க?




அதெல்லாம் சரி இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறீயளா? கூடிய சீக்கிரம் சென்னைல இருந்து பெங்களூரு போற ஒரு பதிவருக்கு மேல சொன்ன அனுபவம் நிகழ 100% வாய்ப்பு இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க?

Wednesday, September 2, 2009

சச்சின் சுயநலவாதியா?

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நண்பரின் இல்லத்தில் விருந்துக்கு அழைத்திருந்தனர். வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆவதற்காக பேசிக் கொண்டிருந்த போது பேச்சு கிரிக்கெட் பக்கம் சென்றது. வந்திருந்த நண்பர்களில் ஒருவர் "டெண்டுல்கர் ஒரு பெரிய சுயநலவாதி. தன் சொந்த சாதனைகளுக்காக மட்டுமே விளையாடுபவர்." என்று வாதத்தை துவக்கி வைத்தார்.

சில நண்பர்கள் - "அப்படி எப்படி சொல்லலாம்?" என்று பதில் வாதம் செய்தனர்.

அவர்களின் வாதத்தை உங்கள் முன் எடுத்து வைக்க வேண்டிய தார்மீகக் கடமை (?!) இருப்பதால் அதை அப்படியே செய்கிறேன்.

டெண்டுல்கர் சுயநலவாதி என்பவர்களின் வாதம்:
டெண்டுல்கர் தொண்ணூறு ரன்களை எட்டி விட்டதும் கட்டையைப் போட ஆரம்பித்து விடுகிறார். சரி, நூறு அடிக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. 97, 98 என்று அவுட்டாகி விடுகிறார். அதற்கு கட்டை போடாமல் அடித்து ஆடி அவுட் ஆகியிருந்தாலாவது அடுத்து வரும் பேட்ஸ்மேன் ரன் எடுத்திருப்பார். இப்படி எத்தனை முறை நடந்திருக்கிறது?

டெண்டுல்கர் சுயநலவாதி இல்லை என்பவர்களின் மறு வாதம்:
சுய சாதனைகளுக்காக ஆடுவது என்பது ஒவ்வொரு ஆட்டக்காரர்களிடமும் இருக்கின்ற ஒரு தன்மை. எந்த ஆட்டக்காரராவது நூறு அடித்ததும் பேட்டைத் தூக்கி பெவிலியனுக்கு காட்டாமல் அடுத்த பந்துக்கு தயாராவது உண்டா? அப்படி இருக்க டெண்டுல்கரை மட்டும் குறை சொல்வது ஏன்? அதோடு ஏதாவது ஒரு ஆட்டம், டெண்டுல்கர் கட்டை போட்டதால் தோற்று விட்டோம் என்று காட்டுங்கள். டெண்டுல்கர் மட்டுமே ஆடியதால் இந்தியா ஜெயித்த ஆட்டங்களை கொஞ்சம் நஞ்சமல்ல"

டெண்டுல்கர் சுயநலவாதி:
ப்ரஷ்ஷர் கேம்களில் டெண்டுல்கர் சோபித்ததே இல்லை. வேகமாக அவுட் ஆகி விடுகிறார். இதனால் எத்தனை ஆட்டங்களை இந்தியா இழந்திருக்கிறது?

டெண்டுல்கர் சுயநலவாதி இல்லை:
எல்லா ப்ரஷ்ஷர் கேம்களிலும் டெண்டுல்கர் வேகமாக ஆட்டமிழந்தது இல்லை. ஷார்ஜாவிலும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் டென்ஷன் ஆட்டங்களில் டெண்டுல்கர் ஆடவில்லையா? 2003 உலக கோப்பையில் ரசிகர்களுக்கு வாக்களித்ததன் படி இந்தியாவை இறுதிப்போட்டி வரை இழுத்துக் கொண்டு செல்லவில்லையா? அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பறக்க விட்ட சிக்ஸர்களை மறக்க முடியுமா? சச்சின் மட்டும் நன்றாக ஆடினால் போதுமா? மற்றவர்கள் ஆட வேண்டாமா? முதுகு வலியோடு சென்னை டெஸ்ட்டில் வெற்றியின் விளிம்பு வரை கொண்டு போனாரே? மூன்று விக்கட்டுகள் இருந்தும் 17 ரன்கள் எடுக்க முடியாமல் மண்ணைக் கவ்வினோமே இதற்கும் சச்சினா காரணம்?

சுயநலவாதி:
அதே 2003 உலகக் கோப்பை போட்டியிலேயே இறுதி ஆட்டத்தில் வேகமாக ஆட்டமிழந்து விடவில்லையா? அது மட்டுமா? 2007 உலகக்கோப்பையில் இலங்கையிடம் வேகமாக ஆட்டமிழக்கவில்லையா? அவர் எப்போதெல்லாம் வேகமாக ஆட்டமிழக்கிறாரோ அன்றெல்லாம் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது.

சுயநலவாதி இல்லை:
எல்லா போட்டியிலும் நன்றாக விளையாட முடியுமா? தவறு நிகழ்வது சகஜம் தானே? ஆனால் டெண்டுல்கரின் டெடிகேஷன் வேறு யாருக்காவது இருக்கிறதா? தன் தந்தை மரணமடைந்த போதிலும் அவர் இறுதிச் சடங்கை முடித்து விட்டு உலகக் கோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்துக்குப் பறந்து செல்லவில்லையா? சுய சாதனைக்காகவா சென்றார்?

சுயநலவாதி:
ஏன் சச்சினால் நல்ல கேப்டனாக இருக்க முடியவில்லை? ப்ரஷ்ஷர் ஹேண்டில் செய்ய முடியாததால் தானே?

இப்படி விவாதம் எல்லையில்லாமல் சென்று கொண்டிருந்தது.

இப்போது நீங்கள் சொல்லுங்கள். சச்சின் சுயநலவாதியா? இல்லையா?

சச்சினைப் பற்றி குறை சொல்ல நினைப்பவர்கள் இங்கே சென்று பார்த்துவிட்டு வரவும்.

(பத்த வச்சிட்டியே பரட்ட)

Tuesday, March 17, 2009

சிறீலங்காவில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெடிக் கிளப்

நான் வழைமையாக மேயும் கிரிக்இன்போ தளத்தில் ஒரு போட்டியின் ஓட்ட அட்டவணையை பார்க்க நேர்ந்தது. போட்டியிடும் இரு அணிகளில் ஒரு அணியின் பெயரைப பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோசம் - தமிழ் யூனியன் கிரிக்கெட் கிளப். அப்போ ஒரு வேளை இவங்க சொல்றதெல்லாம் சும்மாவோ? உண்மையிலயே ஸ்ரீலங்காவில தமிழ்ர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இல்லையோ என்று ஒரு சந்தேகமே வந்து விட்டது. பின் உள்ளே போய் பார்த்தால் தான் தெரிகிறது, பெயரில் மட்டும் தன் தமிழ் யூனியன். உள்ளே இருப்பது எல்லாருமே சிங்களர்கள் - முரளிதரனை தவிர. என்ன ஒரு வில்லத்தனம்?
உங்கள் பார்வைக்கு இங்கே

அஜந்த மேன்டிசும் லசித் மலிங்காவும் எப்போது தமிழ்ர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை??