சர்வதேசப் பதிவர் சங்கமம்
நடக்காத/நடக்கப்போகாத ஒன்றை வைத்து நான் இதுவரை இரண்டு மொக்கைப் பதிவுகள் தேற்றிவிட்டேன். இனி இதை உங்கள் கைவசம் விட்டுவிடுகிறேன். இந்தக் கற்பனை சங்கமத்துக்கு வருகை தரும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்துப் பதிவர்களும் நிகழ்வைச் சிலாகித்தோ, திட்டியோ குட்டியோ சில பல பதிவுகளை எழுதுங்கள். பிட் அடிக்க ஈரோடு பதிவர் சங்கமம் பற்றி எழுதிய பதிவுகளை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள். (சென்னை வேண்டாம்... நல்லால்ல)
கலக்குங்கள் தோழர்களே..
தமிழ்த்திரையுலக ரசிகர்கள்
இவர்களின் தலைவிதி இப்படியா இருக்கும்.விஜய், உதயநிதி ஸ்டாலின், ஜீவா இவர்களுடன் இணைந்து த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இனி நாம் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாமாம்.
அய்யோ சாமி! நினைச்சிப் பாக்கக்கூட முடியலப்பா..
_____ பிதற்றல்கள்
என்னுடைய அந்த இன்னொரு வலைப்பூவில் சமீபத்தில் நடக்கும் அந்தப் போட்டித் தொடரைப் பற்றி இனி எழுத மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் ரசிகக் கண்மணிகள் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறார்கள். சிலர் வீட்டுக்குமுன் தீக்குளிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். பலா பட்டறை ஷங்கர் ஒரு படி மேலே போய் எனக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கிறார். அடுத்த வாரத்திலிருந்து திரும்பவும் என் பிதற்றலைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.
அங்காடித் தெரு
திரைப்படத்தைப் பற்றி கலவையாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன. எனக்கு வசந்த பாலனின் இரண்டாவது படம் மிகவும் பிடித்திருந்தது. எங்கள் ஊர்க்காரர் என்ற பாசம் வேறு. நான் வசிக்கும் பாழாய்ப்போன இந்த ஊரில் தியேட்டரில் சென்று பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்காது. ஆகவே டி.வி.டி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். (மே மாதம் இந்தியா வரும் வரை ஓடிக்கொண்டிருந்தால் அங்கேயும் பார்க்கலாம்).
பாஸ்டன்
பழமை பேசியண்ணன் பாணியில் பாசுடன் நகரத்துக்கு நாளை விஜயம். இங்கிருந்து 6 1/2 மணி நேரம் கார் பயணம். இதுவரைக்கும் சுற்றிப் பார்ப்பதற்காகப் போனதேயில்லை. இதுவே முதல் முறை. டக் டூர்ஸ் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி. அதோடு அக்வேரியமும் நன்றாக இருக்குமாம். போய்ப் பார்த்துவிட்டு வந்து விரிவாக ஒரு பதிவு போட்டுவிடலாம்.
பாஸ்டன் நகரில் என் பதிவர்கள் யாரும் - பாஸ்டன் ஸ்ரீராம் இருக்கிறார் ஆனால் அவருடன் பரிச்சயம் இல்லை - இருந்தால் ஒரு மாலை வேளை காஃபி வித் முகிலன் போடலாம்.
பதிவு
எண்ணிக்கை குறைந்து போனதற்குக் காரணம் நான் அந்தப் வலைப்பூவில் எழுதி வந்ததே. அதை எழுத வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும். மீண்டும் மிரட்டலைத் தொடர்வோம்.
Wednesday, March 31, 2010
விழா
“ஏய் இந்தாப்பா. மேடை போட்டாச்சா?”
“போட்டாச்சிண்ணே”
“மைக் செட்டு, சோடா?”
“சொல்லியாச்சிண்ணே”
“மாலை?”
“பெங்களூர்லருந்து ஆள் வந்து கட்டிக்கிட்டே இருக்காய்ங்கண்ணே”
“பேச்சாளர்களை டேசன்லருந்து கூட்டியார வண்டி போயிருக்கா?”
“அப்பவே போயிருச்சிண்ணே. நம்ம தங்கராசுதான் ஓட்டிக்கிட்டு போயிருக்கான்”
“சரி கூட்டத்துக்கு ஆளு?”
“நாலு லாரி அனுப்பியிருக்குண்ணே... ஆளுக்கு அம்பது ரூவாயும் கோழி பிரியாணியும் குடுக்கச் சொல்லியிருக்கேன்”
“எலேய் என்னலே அம்பது ரூவாங்குற? எங்கிட்டா எழுவத்தஞ்சின்னு சொன்னான்”
“யாருண்ணே சொன்னது?...”
“சரி விடு. அவன நாம்பாத்துக்குறேன். எந்தக் கொறையும் இருக்கப்படாதுலே.. அப்புறந் தலவருக்கு கோவம் வந்துரும்”
“அதெல்லாம் பிரச்சனையிருக்காதுண்ணே. நான் கூட இருந்து பாத்துக்கறேன்”
“சரி தலவரக் கூப்புட ஏர்ப்போர்ட்டுக்கு நானே போயிருதேன். என் வண்டிக்கிப் பெட்ரோல் போட்டுட்டு வந்துரு”
“சரிண்ணே”
“இங்க பாருப்பா. சும்மா இல்ல. நம்ம தலைவருக்கு விருது கிடைச்சிருக்கு. அதைக் கொண்டாடனும்னா தடபுடலா இருக்கணும் விழா சரியா?”
“சரிண்ணே”
...
...
...
எதற்கு இந்த தடபுடல் விழா? எல்லாம் இதற்குத்தான்..
“போட்டாச்சிண்ணே”
“மைக் செட்டு, சோடா?”
“சொல்லியாச்சிண்ணே”
“மாலை?”
“பெங்களூர்லருந்து ஆள் வந்து கட்டிக்கிட்டே இருக்காய்ங்கண்ணே”
“பேச்சாளர்களை டேசன்லருந்து கூட்டியார வண்டி போயிருக்கா?”
“அப்பவே போயிருச்சிண்ணே. நம்ம தங்கராசுதான் ஓட்டிக்கிட்டு போயிருக்கான்”
“சரி கூட்டத்துக்கு ஆளு?”
“நாலு லாரி அனுப்பியிருக்குண்ணே... ஆளுக்கு அம்பது ரூவாயும் கோழி பிரியாணியும் குடுக்கச் சொல்லியிருக்கேன்”
“எலேய் என்னலே அம்பது ரூவாங்குற? எங்கிட்டா எழுவத்தஞ்சின்னு சொன்னான்”
“யாருண்ணே சொன்னது?...”
“சரி விடு. அவன நாம்பாத்துக்குறேன். எந்தக் கொறையும் இருக்கப்படாதுலே.. அப்புறந் தலவருக்கு கோவம் வந்துரும்”
“அதெல்லாம் பிரச்சனையிருக்காதுண்ணே. நான் கூட இருந்து பாத்துக்கறேன்”
“சரி தலவரக் கூப்புட ஏர்ப்போர்ட்டுக்கு நானே போயிருதேன். என் வண்டிக்கிப் பெட்ரோல் போட்டுட்டு வந்துரு”
“சரிண்ணே”
“இங்க பாருப்பா. சும்மா இல்ல. நம்ம தலைவருக்கு விருது கிடைச்சிருக்கு. அதைக் கொண்டாடனும்னா தடபுடலா இருக்கணும் விழா சரியா?”
“சரிண்ணே”
...
...
...
எதற்கு இந்த தடபுடல் விழா? எல்லாம் இதற்குத்தான்..
விருதை வழங்கிய திவ்யா ஹரிக்கு நன்றி..
இந்த விருதை நான் என் நண்பர்கள் சிலரோடு பகிர்ந்து கொள்கிறேன்.
1. சிங்கை சிங்கம் பிரபாகர் - லவ்வுல ஏப்ரல் ஃபூல் ஆனதுக்கு இது ஆறுதல்
2. தன் உயிரையும் துச்சமென மதித்து தமிழ்ப் பதிவர்களைக் காக்கும் ஜெட்லீ
3. பதிவர் சங்கமத்துக்கு விளக்கெண்ணெய் லாரியில் வர இருக்கும் பட்டா பட்டி
4. கிரிக்கெட் பிதற்றல்கள் என்ற வலைப்பூவில் அந்த விளையாட்டைப் பற்றிய அரிய பல தகவல்களை அள்ளி வழங்கும் அந்த வலைப்பதிவருக்கு (கலைஞர் மட்டும் தான் அண்ணா விருது வாங்கிக்குவாரா?)
Subscribe to:
Posts (Atom)
