ஒரு எதிர்வினை
எந்திரன் பற்றி வருகிற எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கும் குறைகளும், அவற்றின் மீதான என் பார்வையும்
1. லாஜிக் இல்லாத அபத்தமான கதை - ஷங்கர் + ரஜினி படங்களில் உலகத்தரமான கதை + லாஜிக் எதிர்பார்த்து போகும் இவர்களை என்னவென்று சொல்வது. 10 வருடம் அல்ல 100 வருடக் கனவு படம் என்றாலும் ஷங்கரால் இதைத் தாண்டி கதை சொல்ல முடியாது. ஷங்கர் படத்துக்குப் போய் ஷங்கரைத் தேடுங்கள் கிம்கிடுக்கை அல்ல.
2. கொசு பிடிக்கும் காட்சி - பலரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. டாக்டர் புருனோ நர்சிம் இடுகையின் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இது குழந்தைகளுக்காக. ஆங்கிலப் படம் போல குழந்தைகளுக்காக, பெரியவர்களுக்காக, ஆக்ஷன் விரும்பிகளுக்காக, ரொமான்ஸ் விரும்பிகளுக்காக என்று தனித்தனியே எதிர்பார்ப்பவனல்ல தமிழ் ரசிகன். அவனுக்கு இலை போட்டு 4 வகைக் கூட்டு, சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, மோர் கடைசியாக ஒரு கரண்டி பாயாசம் என்று அத்தனையையும் சேர்த்துப் படைக்க வேண்டும். அதில் உங்களுக்கு காய் பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கிவிட்டு சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அதை விடுத்து அந்தக் காயினால் சாப்பாடே கெட்டுப் போய்விட்டது என்று கூப்பாடு போடாதீர்கள். “பசங்க” படத்திலும் காதல் எதிர்பார்ப்போம், “காதல்” படத்திலும் காமெடி எதிர்பார்ப்போம்.
3. விளம்பரங்களில் இது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல், இதுவரை வெளிவராத புது முயற்சி என்றெல்லாம் சீன் போடும் அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை. - இதெல்லாம் விளம்பரம் பாஸ். புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் சூர்யா வந்து SUPERல் S for Service என்று சொல்கிறார். அதை நாம் ஒரு புன்னகையுடன் கடந்து போவதில்லை?
4. சன் டிவியில் அரைமணிக்கொரு முறை விளம்பரம் போட்டு கொல்கிறார்கள் - அவர்கள் இதை எந்திரனுக்கு மட்டுமா செய்கிறார்கள்? அவர்களின் முதல் மொக்கைப் படமான காதலில் விழுந்தேனிலிருந்தே இதைச் செய்து வருகிறார்கள். திடீரென பலருக்கு இப்போதுதான் சன் டிவி என்ற சேனல் இருப்பதும் அதில் எந்திரன் விளம்பரம் போடுவதும் தெரிகிறது.
எந்திரன் பற்றி ரஜினி ரசிகர்கள் எழுதியதை விட ரஜினியை வெறுப்பவர்கள் தான் அதிக இடுகைகளைப் போட்டார்கள். அது கூட ஒரு மாதிரி விளம்பரப் பிரியம் தான்.
ஒரு நன்றி:
நர்சிம் அவர்களிடம் பல நாட்களாகக் கேட்டுக் கேட்டு அவர் செய்யாததால் வெறுத்துப் போய் பின்னூட்டப் போராட்டம் நடத்திய பின்னர் அவர் சச்சின் பற்றி எழுதிவிட்டார். சச்சின் பற்றி யார் எழுதினாலும் படிக்கலாம். ஆனாலும் நர்சிம்மின் டச்சோடு படிக்கலாமே என்று நினைத்துத்தான் அந்தப் போராட்டம்.எதிர்ப்பார்ப்பை 100% பூர்த்தி செய்யவில்லை என்றாலும் எழுதிய வரை ஓக்கே. பரிசல் அண்ணா தானும் ஒரு பாதி எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். அவரையும் எழுதச் சொல்லி போராடிவிட வேண்டியதுதான்.
ஒரு விளம்பரம்
நண்பர் பலா பட்டறை ஷங்கர் - இருங்க இருங்க, அவசரப்படாதீங்க, விவகாரமில்லை.. விஷயம் - ஒரு தளத்தைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்துகிட்டார். உண்மையிலேயே ஒரு களஞ்சியம் அந்தத் தளம் - http://www.chennailibrary.com/ பழந்தமிழ் இலக்கியங்களும், சம கால நாட்டுடமையாக்கப்பட்ட இலக்கியங்களும் மின்னூலாக வைத்திருக்கிறார்கள். சென்று படித்து பயன் பெறுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
ஒரு கொலு
நான் இதுவரை கொலு என்பதை சினிமாவில் மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன். அங்கே என்ன செய்வார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. எங்களை இந்த முறை ஒரு வீட்டில் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள். (சுண்டல் தருவார்கள் என்று சொல்லியிருந்ததால்) தங்கமணி, முகிலனோடு ஆஜர் ஆகிவிட்டோம். வந்தவர்கள் எல்லாரும் ஆளுக்கொரு பாட்டு பாடிவிட்டு சென்றார்கள். என்னையோ தங்கமணியையோ பாடச் சொன்னார்கள். கொலுவிலிருக்கும் விக்ரகங்கள் & பொம்மைகள் எல்லாம் எழுந்து ஓடிவிடும் அபாயம் இருந்ததால புன்னகையோடு மறுத்துவிட்டு சுண்டலையும் டீயையும் குடித்துவிட்டு வீடு திரும்பினோம். தங்கமணிக்கும் கொலு வைக்கும் ஆசை வந்துவிட்டது.. :(((
முகிலன் அப்டேட்ஸ்
முகிலன் இப்போது ஆங்கில எழுத்துக்கள் 26ஐயும் (கேப்பிடல் மற்றும் ஸ்மால்) அடையாளம் கண்டுகொள்கிறார். "L" எழுதினால் நேராகப் பார்த்து எல் எனவும் தலைகீழாகத் திருப்பி செவன் எனவும் சொல்கிறார் (M & Wவுக்கும் இப்படியே). ஒரே ஒரு நாள் ஒன்றிலிருந்து ஆரம்பித்து டென் வரைக்கும் அவராகவே எண்ணினார். அதன் பிறகு பலமுறை முயன்றும் டூவிலிருந்து ஆரம்பிக்கிறாரே ஒழிய ஒன் சொல்வதே இல்லை.
அடுத்த கட்டமாக தமிழ் எழுத்துகள் அறிமுகம் துவங்கியிருக்கிறது. அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அனாவுக்கு அடுத்து இனாவுக்குப் போய்விடுகிறார். கூடிய விரைவில் கற்றுக் கொள்வார்.
இந்த விஜயதசமிக்கு வித்யாரம்பம் செய்தாகிவிட்டது. தமிழகத்தில் இருந்த வரை அப்படியென்றால் என்னவென்றே தெரியாமலிருந்தேன். இங்கே உள்ள கோவிலில் வருடா வருடம் விஜயதசமியன்று குழந்தையை மடியில் வைத்து அரிசியில் அ அல்லது ஓம் எழுதி நாவில் தேன் தடவி நடனம் பயில ஆசைப் படுவோருக்கு சலங்கையும், பாட்டு படிக்க ஆசைப்படுவோருக்கு தாளமும் தருவார்கள். இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து மதியொளி சரஸ்வதி என்பவர் வருகை புரிந்திருந்ததால் அவர் கையால் (மூன்று வயதிலிருந்து 21 வயதுடைவர்களுக்கு) வித்யாரம்பம் செய்து வைத்தார். (பள்ளிக்குப் போக ஆரம்பித்து விட்டவர்களுக்கு வித்யாரம்பம் ஏன் என்று புரியவில்லை).
அண்ணா, அக்கா, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று மற்றவர்களை அழைக்க முகிலனுக்குச் சொல்லிக் கொடுத்தது அவனுக்கு பயங்கரமாக ரெஜிஸ்டராகிவிட்டது. சிறுவயதினரை அக்கா, அண்ணா, இளைய மற்றும் நடுத்தர வயதினரை அத்தை, மாமா, வயதானவர்களைத் தாத்தா பாட்டி என்று அவனாகவே அழைக்கத் தொடங்கிவிட்டான். நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.
Showing posts with label பிதற்றல்கள். Show all posts
Showing posts with label பிதற்றல்கள். Show all posts
Tuesday, October 19, 2010
Thursday, September 30, 2010
பிதற்றல்கள் - 9/30/2010
இன்று பாபர் மசூதி/ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. எந்தக் கலவரமும் வெடிக்காமல் அமைதியாக முடிய அல்லாவையும் ராமரையும் வேண்டிக் கொள்கிறேன்.
***********************************************************************
நாளை எந்திரன் ரிலீஸ். ராச்செஸ்டரில் ரஜினி/கமல் படங்கள் ரீலீஸாகும் வாரத்தின் சனி அல்லது ஞாயிறு ஒரே ஒரு காட்சி மட்டும் தான் போடுவார்கள். வழக்கமாக படத்தை ஸ்கீரின் செய்யும் நிறுவனத்துக்கு போன வாரம் தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, டிஸ்ட்ரிப்யூட்டர் அதிக பணம் கேட்பதாகவும் இந்த முறை இரண்டு வாரம் கழித்துத்தான் எந்திரன் வரும் என்றும் சொன்னார்கள். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
இந்த வாரம் திங்கட்கிழமை எங்கள் ஊரில் இருக்கும் சினிமார்க் (cinemark theaters) தியேட்டர்ஸில் ஒரு வாரம் எந்திரன் - The Robot போடப்போவதாக (ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள்) விளம்பரம் பார்த்ததும் முதல் வேளையாக டிக்கெட் புக் செய்துவிட்டேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஏழு நாள் திரையிடும் அளவுக்கு ராச்செஸ்டரில் தமிழ்க்கூட்டம் இல்லையே? எந்த தைரியத்தில் போடுகிறார்கள்?
ஆனால், நியூ யார்க் மாகாணத்தில் நியூ யார்க் சிட்டியிலும் ராச்செஸ்டர் சிட்டியிலும் மட்டுமே திரையிடப்படுகிறது. அதனால் பக்கத்து ஊர் மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பாயிருக்கலாம். யாருக்காவது விசயம் தெரியாமல் இருந்தால் இங்கே போய் தெரிந்து கொள்ளுங்கள்.
*****************************************************************************
கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வரும் அந்தப் பிரச்சனையில் என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள். நானாக யாரையும் போய்ப் பார்த்து என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று விளக்கிக் கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று என் பக்கம் நின்றதற்கு கோடி நன்றிகள்.
தலைவர் பாணியில சொல்லணும்னா - இது “சேத்த” கூட்டமில்லை. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.
இதோட அவ்வளவுதான். மீண்டும் சைலண்ட் மோடுக்குப் போகிறேன்.
******************************************************************************
பரிசல் கிருஷ்ணாவும், ஆதி/தாமிராவும் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டியைப் பற்றி தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். இருந்தாலும் ஒரு விளம்பரம். அதற்கான அறிவிப்பை பரிசல் பக்கத்துக்கே போய் பாருங்க.
எல்லாரும் எழுதுங்க. எதையாவது எழுதுங்க. நானே ரெண்டு கதை எழுதியிருக்கேன்னா பாருங்களேன்? மூன்று சிறந்த கதைகளுக்கு ரூ.1000/- மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாம். புத்தகத்துக்காகவாவது எழுதுங்க.
********************************************************************************
முகிலன் அப்டேட்ஸ்:
ரஜினியை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டார். ரங்கா திரைப்படத்தில் வரும் ரஜினியில் இருந்து எந்திரன் புரமோசனில் வரும் ரஜினி வரை அனாயாசமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார். பிடித்ததும் அப்பா ரஜ்ஜி, அம்மா ரஜ்ஜி என்று இருவரையும் அழைத்து கைத்தட்டல் பெறும் வரை காட்டிக்கொண்டே இருக்கிறார்.
சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல ரஜினி புகைப்படங்களை வைத்து பத்மப்ரியா ஆடிய - ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் முகிலனின் ரஜினிப் பசிக்கு ஏற்ற தீனி. முதல்முறையாக தியேட்டரில் ஒரு தமிழ்ப் படம் பார்க்கப் போகிறார். என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.
கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் (ரெட்), கீன்(க்ரீன்), பூ(ப்ளூ), பாக்(ப்ளாக்), யெய்யோ (யெல்லோ)ஆகியவற்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார். ப்ரவுன், பிங்க், வொயிட் ஆகியவற்றை சொல்லத் தெரியாது, ஆனால் எதுப்பா பிரவுன் கலர் என்று கேட்டால் காட்டத்தெரியும்.
சில நாட்களாக கலரையும் பொருளையும் சேர்த்து - எட் ச்சூச்சூ, யெய்யோ டக் (யெல்லோ ட்ரக்) என்று சொல்லப் பழகியிருக்கிறார்.
பேப்பரும் பேனாவும் கொடுத்தால் கொஞ்ச நேரம் எதாவது கிறுக்குவார். பின் என்னையோ அம்மாவையோ அழைத்து எங்கள் கையில் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்வார்.
முதலில் ஏப்பேன் - ஏரோப்ளேன் வரைய வேண்டும்.
அடுத்து ஃபிஷ் (சில நேரம் மீனா, சில நேரம் ஃபிஷ் அவர் மூடைப் பொறுத்து). ஃபிஷ் வரைந்ததும் அதைச் சுற்றி தண்ணினா( தண்ணீர்) வரைய வேண்டும். தண்ணீர் வரைந்ததும் அதன் மீது போட் ஒன்று விடவேண்டும். மீண்டும் ஏப்பேன், அடுத்து ஃபிஷ், அடுத்து தண்ணினா, அடுத்து போட், மீண்டும் ஏப்பேன்..
இப்படி ஒரு நாளைக்கு நானும் தங்கமணியும் சேர்ந்து ஒரு 100 ஏப்பேனாவது போட்டு விடுவோம்.
என்னவோ தெரியலை, சரியாக வெளியே இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போது ஒரு புக்கையோ பேப்பர்/பேனாவையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்கிவிடுகிறார். (இந்த சமயத்தில் நான் ஏ, பி, சி, டி எழுத வேண்டும் அவர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்).
தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட்டே ஆக வேண்டும். ஐ-பாடில் போட்டு அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். அவராக ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து அதே பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பார். கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம்.
***********************************************************************
நாளை எந்திரன் ரிலீஸ். ராச்செஸ்டரில் ரஜினி/கமல் படங்கள் ரீலீஸாகும் வாரத்தின் சனி அல்லது ஞாயிறு ஒரே ஒரு காட்சி மட்டும் தான் போடுவார்கள். வழக்கமாக படத்தை ஸ்கீரின் செய்யும் நிறுவனத்துக்கு போன வாரம் தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, டிஸ்ட்ரிப்யூட்டர் அதிக பணம் கேட்பதாகவும் இந்த முறை இரண்டு வாரம் கழித்துத்தான் எந்திரன் வரும் என்றும் சொன்னார்கள். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
இந்த வாரம் திங்கட்கிழமை எங்கள் ஊரில் இருக்கும் சினிமார்க் (cinemark theaters) தியேட்டர்ஸில் ஒரு வாரம் எந்திரன் - The Robot போடப்போவதாக (ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள்) விளம்பரம் பார்த்ததும் முதல் வேளையாக டிக்கெட் புக் செய்துவிட்டேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஏழு நாள் திரையிடும் அளவுக்கு ராச்செஸ்டரில் தமிழ்க்கூட்டம் இல்லையே? எந்த தைரியத்தில் போடுகிறார்கள்?
ஆனால், நியூ யார்க் மாகாணத்தில் நியூ யார்க் சிட்டியிலும் ராச்செஸ்டர் சிட்டியிலும் மட்டுமே திரையிடப்படுகிறது. அதனால் பக்கத்து ஊர் மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பாயிருக்கலாம். யாருக்காவது விசயம் தெரியாமல் இருந்தால் இங்கே போய் தெரிந்து கொள்ளுங்கள்.
*****************************************************************************
கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வரும் அந்தப் பிரச்சனையில் என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள். நானாக யாரையும் போய்ப் பார்த்து என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று விளக்கிக் கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று என் பக்கம் நின்றதற்கு கோடி நன்றிகள்.
தலைவர் பாணியில சொல்லணும்னா - இது “சேத்த” கூட்டமில்லை. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.
இதோட அவ்வளவுதான். மீண்டும் சைலண்ட் மோடுக்குப் போகிறேன்.
******************************************************************************
பரிசல் கிருஷ்ணாவும், ஆதி/தாமிராவும் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டியைப் பற்றி தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். இருந்தாலும் ஒரு விளம்பரம். அதற்கான அறிவிப்பை பரிசல் பக்கத்துக்கே போய் பாருங்க.
எல்லாரும் எழுதுங்க. எதையாவது எழுதுங்க. நானே ரெண்டு கதை எழுதியிருக்கேன்னா பாருங்களேன்? மூன்று சிறந்த கதைகளுக்கு ரூ.1000/- மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாம். புத்தகத்துக்காகவாவது எழுதுங்க.
********************************************************************************
முகிலன் அப்டேட்ஸ்:
ரஜினியை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டார். ரங்கா திரைப்படத்தில் வரும் ரஜினியில் இருந்து எந்திரன் புரமோசனில் வரும் ரஜினி வரை அனாயாசமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார். பிடித்ததும் அப்பா ரஜ்ஜி, அம்மா ரஜ்ஜி என்று இருவரையும் அழைத்து கைத்தட்டல் பெறும் வரை காட்டிக்கொண்டே இருக்கிறார்.
சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல ரஜினி புகைப்படங்களை வைத்து பத்மப்ரியா ஆடிய - ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் முகிலனின் ரஜினிப் பசிக்கு ஏற்ற தீனி. முதல்முறையாக தியேட்டரில் ஒரு தமிழ்ப் படம் பார்க்கப் போகிறார். என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.
கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் (ரெட்), கீன்(க்ரீன்), பூ(ப்ளூ), பாக்(ப்ளாக்), யெய்யோ (யெல்லோ)ஆகியவற்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார். ப்ரவுன், பிங்க், வொயிட் ஆகியவற்றை சொல்லத் தெரியாது, ஆனால் எதுப்பா பிரவுன் கலர் என்று கேட்டால் காட்டத்தெரியும்.
சில நாட்களாக கலரையும் பொருளையும் சேர்த்து - எட் ச்சூச்சூ, யெய்யோ டக் (யெல்லோ ட்ரக்) என்று சொல்லப் பழகியிருக்கிறார்.
பேப்பரும் பேனாவும் கொடுத்தால் கொஞ்ச நேரம் எதாவது கிறுக்குவார். பின் என்னையோ அம்மாவையோ அழைத்து எங்கள் கையில் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்வார்.
முதலில் ஏப்பேன் - ஏரோப்ளேன் வரைய வேண்டும்.
அடுத்து ஃபிஷ் (சில நேரம் மீனா, சில நேரம் ஃபிஷ் அவர் மூடைப் பொறுத்து). ஃபிஷ் வரைந்ததும் அதைச் சுற்றி தண்ணினா( தண்ணீர்) வரைய வேண்டும். தண்ணீர் வரைந்ததும் அதன் மீது போட் ஒன்று விடவேண்டும். மீண்டும் ஏப்பேன், அடுத்து ஃபிஷ், அடுத்து தண்ணினா, அடுத்து போட், மீண்டும் ஏப்பேன்..
இப்படி ஒரு நாளைக்கு நானும் தங்கமணியும் சேர்ந்து ஒரு 100 ஏப்பேனாவது போட்டு விடுவோம்.
என்னவோ தெரியலை, சரியாக வெளியே இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போது ஒரு புக்கையோ பேப்பர்/பேனாவையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்கிவிடுகிறார். (இந்த சமயத்தில் நான் ஏ, பி, சி, டி எழுத வேண்டும் அவர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்).
தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட்டே ஆக வேண்டும். ஐ-பாடில் போட்டு அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். அவராக ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து அதே பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பார். கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம்.
Tuesday, September 7, 2010
பிதற்றல்கள் - 9/7/2010
உலகமே மே முதல் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடி மகிழும் போது, அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். காலக் கொடுமை.
மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடக் காரணம் என்ன? 1886ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக (அதற்கு முன் அப்படி கட்டுப்பாடு எதுவும் இல்லை) வேண்டும் என்று கோரி ஊர்வலம் வந்துகொண்டிருந்த போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பல தொழிலாளர்களும் சில போலீஸ் அதிகாரிகளும் மரணம் அடைந்தார்கள். அதை நினைவு கூறும் வண்ணமே மே முதல் தேதி மே தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த கறுப்புச் சரித்திரத்தை மறைக்கவே வேறொரு நாளில் கொண்டாடுகிறதோ?
எப்படியோ ஒரு லாங் வீக்கெண்ட் கிடைத்தால் சரி.
இந்த லாங் வீக்கெண்டில் இரண்டு தமிழ்ப் படங்கள் பார்க்க நேர்ந்தது. முதல் படம் நான் மகான் அல்ல. பையாவுக்குப் பிறகு கார்த்திக்கு மற்றுமொரு மசாலாப் படம். மசாலாப் படம் என்றால் அக்மார்க் மசாலா. மசாலாப் படங்களுக்கான இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தி இருந்த படம். முதல் பாதி நகைச்சுவையாகப் போய் அடுத்த பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றி கடைசியில் மசாலாப் படங்களுக்கேயுரிய சினிமாத்தனத்தோடு முடித்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன். முதல் படத்தை மென்மையாகக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தை அதிரடியாகக் கொடுத்ததில் லிங்குசாமியின் வாரிசாகி விட்டார். (என்ன பொருத்தம் பாருங்கள். கார்த்தியின் முந்தைய படம் லிங்குசாமி டைரக்ஷன்). வழக்கம்போல ஏதாவது கண்ணாடியைப் போட்டுப் பார்ப்பவர்கள் இந்தப் படத்தில் அரசுக் கல்லூரி மாணவர்களை வில்லன்களாக்கி விட்டார்கள். அதில் ஒருவர் முஸ்லிம் சிறுவன் என்றெல்லாம் பேசத் துவங்கிவிட்டார்கள். அந்த முஸ்லிம் பாத்திரம் ஒன்றும் திணிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மற்றபடி வன்முறையையும் வக்கிரத்தையும் அள்ளித் தெளித்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் அதையெல்லாம் காட்டாமலே உணர்த்திய சுசீந்திரனுக்கு மற்றுமொரு சல்யூட்.
இன்னொரு படம் வம்சம். இதுவும் ஒரு மசாலாப் படமே. ஆச்சரியம் தரும் வகையில் சுனைனா நன்றாக நடித்திருந்தார். பாண்டிராஜின் சின்னச் சின்ன ஐடியாக்கள் அவரது முதல் படம் போலவே ஆங்காங்கே ரசிக்க வைத்தது. “முடிய நீளமா வச்சிருக்கிறவ, குடும்பத்தையும் அதே மாதிரி பத்திரமா பாத்துக்குவா” என்று கதாநாயகனின் தாய் சிலாகித்துக் கொண்டே போக இங்கே சுனைனா சவரியைப் பிரித்து தலையைக் கோதுகிறார்.
செல்ஃபோனை மரத்தின் மீது கட்டிவிட்டு, போன் பேசவேண்டுமென்றால் மரமேறிப் பேசுவது, சுனைனா வீட்டிலோ, மேலே இருக்கும் செல்ஃபோனில் இருந்து நீஈஈஈஈளமான ஹெட் ஃபோன் மூலம் கீழிருந்த படியே பேசுகிறார்.
கிளைமாக்ஸும் வித்தியாசமாக இருந்தது. பெண்களைத் தாக்குவதில்லை என்பதும், சத்தியம் செய்து விட்டால் அதற்குக் கட்டுப்படுவதும் என்றும் வாழும் இந்தச் சமூகத்தின் மீது வன்முறை/அராஜகத்தைத் தாண்டிப் பார்த்தால் ஒரு மரியாதை வரும்போல. எப்படியோ பாண்டிராஜ் மீண்டும் ஒரு செஞ்சுரி போட்டுவிட்டார்.
ஜெயப் பிரகாஷ் அதகளப்படுத்தியிருக்கிறார். பக்கத்து ஊர்த் தலைவரைக் கொன்றுவிட்டு பன்னிக்கறியும் பட்டை சாராயமும் சாப்பிடும் போது அவர் அடிக்கும் டயலாகும் அதன் டெலிவரியும் அசத்தல். இவருக்காகவே இன்னுமொருமுறை பார்க்கவேண்டும்.
“கண்ணாடி” போட்டுப் பார்ப்பவர்களுக்கு: இந்தப் படத்தில் ஜெயப்ரகாஷின் மகனாக வருபவர் பல காட்சிகளில் சிவப்புச் சட்டை போட்டு வருகிறார்.
இரண்டரையாவதாகவும் ஒரு படம் பார்த்தேன். பீப்ளி லைவ். முழுதும் பார்த்துவிட்டு என் கருத்தை (ரொம்ப முக்கியம்) அடுத்த பிதற்றல்களில் தருகிறேன்.
பஸ்ஸில் கார்த்திகா வாசுதேவன் சும்மானாச்சுக்கும் ஒரு தமிழ் குவிஸ் வைத்திருந்தார். நானும் என் மூளையைக் கசக்கி கூகுளாண்டவர் துணையோடு அந்த ஐந்துக் கேள்விகளுக்கு விடையை அளித்திருந்தேன். (இதுல நான் சொல்லிக் குடுத்த மாதிரியே சொன்னதுக்கு நன்றின்னு தளபதி நசரேயன் கமெண்டு வேற). சரி பதிலை சொல்லியாச்சே. எதாவது பரிசு உண்டாவென்று கேட்டால், அனுப்பி வைக்கிறார்கள் ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் பி.டி.எஃப் பிரதியை. தமிழில் குவிஸ் நடத்தி, தமிழ் இலக்கியத்திலிருந்து கேள்வி கேட்டு, அதற்கு தமிழில் பதில் கொடுத்தால் எனக்குப் புரியாத ஆங்கிலத்தில் புத்தகம் அனுப்பினால் எப்படி? நீங்களே சொல்லுங்கள். இது நியாயமா?
இதில் புத்தகம் அனுப்பியதைப் பற்றி விளம்பரம் போடவில்லையென்று கவலை வேறு...:))
உங்களுக்காக அந்தக் கேள்விகள் இதோ:
1 .ஐம்பெருங்காப்பியங்க ள் எவை?
2 . ஐஞ்சிறுகாப்பியங்கள் எவை ?
3 . இதிகாசங்கள் எவைஎவை?
4 .புராணம் இதிகாசம் ஒரே வரியில் வேறுபடுத்திக் காட்டுக?
5 .பெருந்திணை ,கைக்கிளை ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும்
எச்சரிக்கை: இந்தக் கேள்விகளுக்குப் பின்னூட்டத்தில் பதில் அளிப்பவர்களுக்கு அந்தப் புத்தகம் அனுப்பிவைக்கப் படும்.
முகிலன் அப்டேட்ஸ்
பூச்சாண்டி ஒரே மாதத்தில் புஸ்ஸாண்டி ஆகிவிட்டது. இப்போது அவர் எங்களை பூச்சாண்டியைக் காட்டி பயமுறுத்துகிறார். என்ன சொல்ல?
ஆங்கில எழுத்துக்கள் - A, B, C, F, G, I, N, O, P, Q, R, S, T, U, W, Y, Z - ஆகியவற்றை அடையாளம் கண்டுபிடிக்கப் பழகிவிட்டார். இப்போது அந்த எழுத்துக்களை எங்கே பார்த்தாலும், அப்பா டபியூ, அம்மா டபியூ என்று இருவரையும் அழைத்துக் காட்டி கை தட்டும் வரை விடமாட்டேன் என்கிறார்.
மூன்று பேர் உட்காரும் சோஃபாவில் இடது ஓரம் அம்மா சீட், நடுவில் அப்பா சீட், வலது ஓரம் தம்பி சீட். மாறி உட்கார்ந்தால் எழுப்பி விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார். இதில் கொடுமை, ஓர சீட்டுகள் இரண்டும் ரெக்லைனர்கள். நடு சீட் அப்பாவுக்கு. என்ன ஒரு வில்லத்தனம்?
எந்திரன் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. (அப்புறம் விடாம போட்டுக்கிட்டே இருந்தா, பிடிக்காதா என்ன?). காரில் ஏறியதும் கையில் ஐ பாடைக் கொடுத்து விட்டால் எந்திரன் பாடல் கேட்டுக் கொண்டு அமைதியாக வருகிறார்.
கொசுறு: ரஜினியை டிவியிலோ செல்ஃபோனிலோ பார்த்தால் ரஜிதாத்தா என்று சொல்கிறார்.
மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடக் காரணம் என்ன? 1886ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக (அதற்கு முன் அப்படி கட்டுப்பாடு எதுவும் இல்லை) வேண்டும் என்று கோரி ஊர்வலம் வந்துகொண்டிருந்த போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பல தொழிலாளர்களும் சில போலீஸ் அதிகாரிகளும் மரணம் அடைந்தார்கள். அதை நினைவு கூறும் வண்ணமே மே முதல் தேதி மே தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த கறுப்புச் சரித்திரத்தை மறைக்கவே வேறொரு நாளில் கொண்டாடுகிறதோ?
எப்படியோ ஒரு லாங் வீக்கெண்ட் கிடைத்தால் சரி.
இந்த லாங் வீக்கெண்டில் இரண்டு தமிழ்ப் படங்கள் பார்க்க நேர்ந்தது. முதல் படம் நான் மகான் அல்ல. பையாவுக்குப் பிறகு கார்த்திக்கு மற்றுமொரு மசாலாப் படம். மசாலாப் படம் என்றால் அக்மார்க் மசாலா. மசாலாப் படங்களுக்கான இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தி இருந்த படம். முதல் பாதி நகைச்சுவையாகப் போய் அடுத்த பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றி கடைசியில் மசாலாப் படங்களுக்கேயுரிய சினிமாத்தனத்தோடு முடித்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன். முதல் படத்தை மென்மையாகக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தை அதிரடியாகக் கொடுத்ததில் லிங்குசாமியின் வாரிசாகி விட்டார். (என்ன பொருத்தம் பாருங்கள். கார்த்தியின் முந்தைய படம் லிங்குசாமி டைரக்ஷன்). வழக்கம்போல ஏதாவது கண்ணாடியைப் போட்டுப் பார்ப்பவர்கள் இந்தப் படத்தில் அரசுக் கல்லூரி மாணவர்களை வில்லன்களாக்கி விட்டார்கள். அதில் ஒருவர் முஸ்லிம் சிறுவன் என்றெல்லாம் பேசத் துவங்கிவிட்டார்கள். அந்த முஸ்லிம் பாத்திரம் ஒன்றும் திணிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மற்றபடி வன்முறையையும் வக்கிரத்தையும் அள்ளித் தெளித்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் அதையெல்லாம் காட்டாமலே உணர்த்திய சுசீந்திரனுக்கு மற்றுமொரு சல்யூட்.
இன்னொரு படம் வம்சம். இதுவும் ஒரு மசாலாப் படமே. ஆச்சரியம் தரும் வகையில் சுனைனா நன்றாக நடித்திருந்தார். பாண்டிராஜின் சின்னச் சின்ன ஐடியாக்கள் அவரது முதல் படம் போலவே ஆங்காங்கே ரசிக்க வைத்தது. “முடிய நீளமா வச்சிருக்கிறவ, குடும்பத்தையும் அதே மாதிரி பத்திரமா பாத்துக்குவா” என்று கதாநாயகனின் தாய் சிலாகித்துக் கொண்டே போக இங்கே சுனைனா சவரியைப் பிரித்து தலையைக் கோதுகிறார்.
செல்ஃபோனை மரத்தின் மீது கட்டிவிட்டு, போன் பேசவேண்டுமென்றால் மரமேறிப் பேசுவது, சுனைனா வீட்டிலோ, மேலே இருக்கும் செல்ஃபோனில் இருந்து நீஈஈஈஈளமான ஹெட் ஃபோன் மூலம் கீழிருந்த படியே பேசுகிறார்.
கிளைமாக்ஸும் வித்தியாசமாக இருந்தது. பெண்களைத் தாக்குவதில்லை என்பதும், சத்தியம் செய்து விட்டால் அதற்குக் கட்டுப்படுவதும் என்றும் வாழும் இந்தச் சமூகத்தின் மீது வன்முறை/அராஜகத்தைத் தாண்டிப் பார்த்தால் ஒரு மரியாதை வரும்போல. எப்படியோ பாண்டிராஜ் மீண்டும் ஒரு செஞ்சுரி போட்டுவிட்டார்.
ஜெயப் பிரகாஷ் அதகளப்படுத்தியிருக்கிறார். பக்கத்து ஊர்த் தலைவரைக் கொன்றுவிட்டு பன்னிக்கறியும் பட்டை சாராயமும் சாப்பிடும் போது அவர் அடிக்கும் டயலாகும் அதன் டெலிவரியும் அசத்தல். இவருக்காகவே இன்னுமொருமுறை பார்க்கவேண்டும்.
“கண்ணாடி” போட்டுப் பார்ப்பவர்களுக்கு: இந்தப் படத்தில் ஜெயப்ரகாஷின் மகனாக வருபவர் பல காட்சிகளில் சிவப்புச் சட்டை போட்டு வருகிறார்.
இரண்டரையாவதாகவும் ஒரு படம் பார்த்தேன். பீப்ளி லைவ். முழுதும் பார்த்துவிட்டு என் கருத்தை (ரொம்ப முக்கியம்) அடுத்த பிதற்றல்களில் தருகிறேன்.
பஸ்ஸில் கார்த்திகா வாசுதேவன் சும்மானாச்சுக்கும் ஒரு தமிழ் குவிஸ் வைத்திருந்தார். நானும் என் மூளையைக் கசக்கி கூகுளாண்டவர் துணையோடு அந்த ஐந்துக் கேள்விகளுக்கு விடையை அளித்திருந்தேன். (இதுல நான் சொல்லிக் குடுத்த மாதிரியே சொன்னதுக்கு நன்றின்னு தளபதி நசரேயன் கமெண்டு வேற). சரி பதிலை சொல்லியாச்சே. எதாவது பரிசு உண்டாவென்று கேட்டால், அனுப்பி வைக்கிறார்கள் ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் பி.டி.எஃப் பிரதியை. தமிழில் குவிஸ் நடத்தி, தமிழ் இலக்கியத்திலிருந்து கேள்வி கேட்டு, அதற்கு தமிழில் பதில் கொடுத்தால் எனக்குப் புரியாத ஆங்கிலத்தில் புத்தகம் அனுப்பினால் எப்படி? நீங்களே சொல்லுங்கள். இது நியாயமா?
இதில் புத்தகம் அனுப்பியதைப் பற்றி விளம்பரம் போடவில்லையென்று கவலை வேறு...:))
உங்களுக்காக அந்தக் கேள்விகள் இதோ:
1 .ஐம்பெருங்காப்பியங்க
2 . ஐஞ்சிறுகாப்பியங்கள் எவை ?
3 . இதிகாசங்கள் எவைஎவை?
4 .புராணம் இதிகாசம் ஒரே வரியில் வேறுபடுத்திக் காட்டுக?
5 .பெருந்திணை ,கைக்கிளை ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும்
எச்சரிக்கை: இந்தக் கேள்விகளுக்குப் பின்னூட்டத்தில் பதில் அளிப்பவர்களுக்கு அந்தப் புத்தகம் அனுப்பிவைக்கப் படும்.
முகிலன் அப்டேட்ஸ்
பூச்சாண்டி ஒரே மாதத்தில் புஸ்ஸாண்டி ஆகிவிட்டது. இப்போது அவர் எங்களை பூச்சாண்டியைக் காட்டி பயமுறுத்துகிறார். என்ன சொல்ல?
ஆங்கில எழுத்துக்கள் - A, B, C, F, G, I, N, O, P, Q, R, S, T, U, W, Y, Z - ஆகியவற்றை அடையாளம் கண்டுபிடிக்கப் பழகிவிட்டார். இப்போது அந்த எழுத்துக்களை எங்கே பார்த்தாலும், அப்பா டபியூ, அம்மா டபியூ என்று இருவரையும் அழைத்துக் காட்டி கை தட்டும் வரை விடமாட்டேன் என்கிறார்.
மூன்று பேர் உட்காரும் சோஃபாவில் இடது ஓரம் அம்மா சீட், நடுவில் அப்பா சீட், வலது ஓரம் தம்பி சீட். மாறி உட்கார்ந்தால் எழுப்பி விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார். இதில் கொடுமை, ஓர சீட்டுகள் இரண்டும் ரெக்லைனர்கள். நடு சீட் அப்பாவுக்கு. என்ன ஒரு வில்லத்தனம்?
எந்திரன் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. (அப்புறம் விடாம போட்டுக்கிட்டே இருந்தா, பிடிக்காதா என்ன?). காரில் ஏறியதும் கையில் ஐ பாடைக் கொடுத்து விட்டால் எந்திரன் பாடல் கேட்டுக் கொண்டு அமைதியாக வருகிறார்.
கொசுறு: ரஜினியை டிவியிலோ செல்ஃபோனிலோ பார்த்தால் ரஜிதாத்தா என்று சொல்கிறார்.
Sunday, August 22, 2010
பிதற்றல்கள் 08 / 22 / 2010
மெகா சீரியல் பாக்கிற ஆட்களை கிண்டல் செய்வது என் வழக்கம். இப்போது நானே நாதஸ்வரம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டேன். வழக்கமான சீரியல் அழுகை/செண்டிமெண்ட் இதில் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. அதனால் பார்க்க முடிகிறது. கோபியும் மலரும் அந்த அறைக்குள் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் மகா என்ன பேயாட்டம் ஆடப் போகிறார் என்று கவலையாக இருக்கிறது.
இதில் வரும மகா போலவே ஒரு பாத்திரம் என் வாழ்விலும் வந்து போயுள்ளது. மகாவின் செயல்கள் ஒவ்வொன்றும் எனக்கு அந்த நபரையே நினைவு படுத்துகிறது. ஒரு வேளை நான் இந்தத் தொடரைப் பார்ப்பதற்கும் அது ஒரு காரணமா தெரியவில்லை.
போன வாரம் முழுக்க புரச்சி செய்து ஓய்ந்து போய் விட்டேன். அதற்கு ஒரு புரச்சி நண்பர் தன் பாணியில் எதிர் வினை ஆற்றி இருக்கிறார். அதற்காக நான் வருத்தப் படவில்லை. அவருக்குத் தெரிந்த முறை இதுதான். என்ன செய்ய பாவம்.
முகிலன் இப்போதெல்லாம் பேப்பர் எடுத்து எதையாவது கிறுக்க ஆசைப் படுறார். சும்மா இல்லாமல் ஒருநாள் அவங்கம்மா என்ன தம்பி வரையிற என்று கேட்டதற்கு அவர் பதில் - ஏப்பேன்(ஏரோ ப்ளேன்) இன்னொரு கிறுக்கலைக் காட்டி டாக்கி(doggy) என்று சொல்லி இருக்கிறார். இன்று வெளியே சாப்பிடப் போனோம். அந்த இந்தியன் ரெஸ்டாரண்டில் முதலில் அப்பளம் வைப்பார்கள். அதைப் பிய்த்து என்னிடம் காட்டி கீகீ என்றார். அந்தத் துண்டு எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு puzzle-ன் கிளித் துண்டு போலவே இருந்தது. அதை கொஞ்சம் வாயில் போட்டு விட்டு கையில் மிச்சம் இருந்த சின்னத் துண்டைக் காட்டி பொட்டு என்றார்.
அவர் இரவில் தூங்க அடம் பிடித்தால் அவங்கம்மா உபயோகப் படுத்தும் வித்தை பூச்சாண்டி. பூச்சாண்டி வந்துடுவான் என்றால் சகலமும் அடங்கி படுக்கையில் படுத்துக் கொள்கிறார். கார் சீட்டில் உக்கார மாட்டேன் என்று அடம் பிடித்து டிரைவர் சீட்டுக்குப் போனவரை பூச்சாண்டி வந்துடுவான் என்று சொன்னதும் தாவி வந்து கார் சீட்டில் உக்கார்ந்து கொண்டார்.
இந்த இரண்டு விசயங்களையும் வைத்துப் பார்க்கும் போது பூச்சாண்டி என்று சொல்லி பயமுறுத்துவது தவறோ என்று படுகிறது. அவர் பாட்டுக்கு பூச்சாண்டி என்று யாரையாவது கற்பனை செய்து பயந்து போய் விடுவாரோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது. யாராவது இது சரியா தவற என்று சொன்னால் நல்லது.
எபிக் பிரவுசர் உபயோகிக்கத் துவங்கி உள்ளேன். நன்றாகத் தான் உள்ளது. என்ன என்.எச்.எம் இதில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. firefox க்கான தமிழ் தட்டச்சு add -on சேர்த்த பின் அதிலே தட்டச்சியதே இது. தீம்ஸ் மாற்றுவது எப்படி என்பதைப் பார்க்க வேண்டும்.
இதில் வரும மகா போலவே ஒரு பாத்திரம் என் வாழ்விலும் வந்து போயுள்ளது. மகாவின் செயல்கள் ஒவ்வொன்றும் எனக்கு அந்த நபரையே நினைவு படுத்துகிறது. ஒரு வேளை நான் இந்தத் தொடரைப் பார்ப்பதற்கும் அது ஒரு காரணமா தெரியவில்லை.
போன வாரம் முழுக்க புரச்சி செய்து ஓய்ந்து போய் விட்டேன். அதற்கு ஒரு புரச்சி நண்பர் தன் பாணியில் எதிர் வினை ஆற்றி இருக்கிறார். அதற்காக நான் வருத்தப் படவில்லை. அவருக்குத் தெரிந்த முறை இதுதான். என்ன செய்ய பாவம்.
முகிலன் இப்போதெல்லாம் பேப்பர் எடுத்து எதையாவது கிறுக்க ஆசைப் படுறார். சும்மா இல்லாமல் ஒருநாள் அவங்கம்மா என்ன தம்பி வரையிற என்று கேட்டதற்கு அவர் பதில் - ஏப்பேன்(ஏரோ ப்ளேன்) இன்னொரு கிறுக்கலைக் காட்டி டாக்கி(doggy) என்று சொல்லி இருக்கிறார். இன்று வெளியே சாப்பிடப் போனோம். அந்த இந்தியன் ரெஸ்டாரண்டில் முதலில் அப்பளம் வைப்பார்கள். அதைப் பிய்த்து என்னிடம் காட்டி கீகீ என்றார். அந்தத் துண்டு எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு puzzle-ன் கிளித் துண்டு போலவே இருந்தது. அதை கொஞ்சம் வாயில் போட்டு விட்டு கையில் மிச்சம் இருந்த சின்னத் துண்டைக் காட்டி பொட்டு என்றார்.
அவர் இரவில் தூங்க அடம் பிடித்தால் அவங்கம்மா உபயோகப் படுத்தும் வித்தை பூச்சாண்டி. பூச்சாண்டி வந்துடுவான் என்றால் சகலமும் அடங்கி படுக்கையில் படுத்துக் கொள்கிறார். கார் சீட்டில் உக்கார மாட்டேன் என்று அடம் பிடித்து டிரைவர் சீட்டுக்குப் போனவரை பூச்சாண்டி வந்துடுவான் என்று சொன்னதும் தாவி வந்து கார் சீட்டில் உக்கார்ந்து கொண்டார்.
இந்த இரண்டு விசயங்களையும் வைத்துப் பார்க்கும் போது பூச்சாண்டி என்று சொல்லி பயமுறுத்துவது தவறோ என்று படுகிறது. அவர் பாட்டுக்கு பூச்சாண்டி என்று யாரையாவது கற்பனை செய்து பயந்து போய் விடுவாரோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது. யாராவது இது சரியா தவற என்று சொன்னால் நல்லது.
எபிக் பிரவுசர் உபயோகிக்கத் துவங்கி உள்ளேன். நன்றாகத் தான் உள்ளது. என்ன என்.எச்.எம் இதில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. firefox க்கான தமிழ் தட்டச்சு add -on சேர்த்த பின் அதிலே தட்டச்சியதே இது. தீம்ஸ் மாற்றுவது எப்படி என்பதைப் பார்க்க வேண்டும்.
Friday, August 13, 2010
பிதற்றல்கள் - 08/12/2010
“இலங்கைக் கடற்படைக்குள் எல்லை மீறிப் போகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது” என்று அறிக்கை விட்டிருக்கிறார் இலங்கை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. ஒரு நாட்டுக்குப் போய் அங்க குடிமகன்களாகவே ஆகிப் போன சீக்கியர்கள் டர்பன் கட்டுவதற்கு ஃப்ரான்ஸ் நாடு போட்ட சட்டம் தடை போட்டுவிடுமோ என்று இந்தியப் பிரதமரே போய் ஃப்ரான்ஸ் பிரதமரைப் பார்த்து பேசி விட்டு வருவாராம். இங்கே கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றுகொண்டிருக்கிறான் சிங்களன். அவனைக் கேள்வி இல்லை, ஒரு கோரிக்கை கூட விடுக்காமல் கை கழுவி விடுவதுதான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பணியா? இவரெல்லாம் பதவியிலிருப்பதற்கு அழகிரி சும்மா இருப்பதே பரவாயில்லை போல.
இவருக்கு மேல் ஒருவர், இந்திய உள்துறை அமைச்சர். இவ்வளவு நாள் ரூம் போட்டு யோசித்திருப்பார் போல. இன்று பேசியிருக்கிறார், யூனியன் கார்பைடு சேர்மன் ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்மராவ்தான் காரணமாம். யாரெல்லாம் அப்போது அமைச்சர்களாக இருந்தார்கள், அதில் யாரெல்லாம் இப்போது உயிரோடு இல்லை என்று உளவுத்துறையிடம் (இதுக்குத்தான இருக்கு) கணக்குக் கேட்டிருப்பார்கள் போல. ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் என்று பதில் வந்திருக்கும். ராஜீவின் மீது புகார் சொல்ல முடியுமா (அதிலும் சிதம்பரம் தமிழர்)? அதனால் நரசிம்மராவின் மீது விடிந்து விட்டது.
இதில் பெரிய காமெடி அப்போதைய பிரதமருக்கே தெரியாதாம், ஆண்டர்சன் வெளியேறியது. முழுப் பொறுப்பும் நரசிம்மராவினுடையதாம்.
மேலும் போபால் வழக்கு தீவிரப்படுத்தப் படாததற்கு 1984-இல் இருந்து மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகளின் மெத்தனமே காரணமாம். 26 வருடங்களில் காங்கிரஸ் மட்டும் 16 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறது என்பதை மறந்து விட்டார் போல. சரி மற்றவர்கள் செய்திருக்க வேண்டாம், இவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறாரே. இவர் என்ன கிழித்து விட்டார். பேசாமல் இவர் கலைஞரிடம் முழுசாக ட்ரெயினிங் எடுத்திருக்கலாம். செர்னோபில்லில் விபத்து நடந்த போது இத்தனை பேர் உயிரிழந்தார்கள், கைஷ்டிமில் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்றெல்லாம் புள்ளிவிபரம் கொடுத்திருக்கலாம்.
பேசுவது என்றதும் நேற்றைய வீடியோவில் என் குரலைக் கேட்டுவிட்டு நண்பர் பின்னோக்கி எனக்கு கமாண்டிங் வாய்ஸ் என்று பின்னூட்டம் போட்டது நினைவுக்கு வருகிறது (நாங்க மட்டும் வாசகர் கடிதம் மாதிரி சொல்ல மாட்டோமா?). எனக்கு மேடையில் பேசுவது என்றாலே மிகவும் பிடிக்கும். ஒருமுறை எங்கள் கல்லூரியில் ஜூனியர்களுக்குக் கொடுத்த வரவேற்பு விழாவில் “மதங்கள் - தோற்றமும் மூடநம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் பேசினேன். பல புத்தகங்களையும் செய்திகளையும் படித்து தகவல்தொகுத்து வழங்கினேன். மூட நம்பிக்கைகளில் சாமியார்களை அல்லது கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்களைப் பற்றிப் பேசும்போது இந்து மத சாமியார்கள் இருவரையும், கிறிஸ்தவ மதப் பிரசாரகர் ஒருவரையும் உதாரணம் காட்டிப் பேசினேன்.
நான் பேசி முடித்து கீழே இறங்கியதும் என்னுடைய தோழிகளில் இருவர் என்னிடம் கடுமையாகச் சண்டை போட்டார்கள் - “உனக்கு பைபிளையும் கிறிஸ்டியானிட்டியையும் பற்றி என்ன தெரியும்? நீ எப்படி அவரை பற்றி அப்படியெல்லாம் பேசலாம்”. நான் சொன்னேன். “என் தலையெழுத்து பிறப்பால் இந்துவாகிப் போனேன். என் அப்பா அம்மா மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் நீங்கள் என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.”
நல்ல வேளை பெரியார் பிறந்த தமிழகத்தில் நானும் பிறந்தேன். இல்லையென்றால் அன்றைக்கு நான் மேடையிலிருந்து இறங்கியிருக்கவே முடியாது.
மேடைப் பேச்சு என்றது நினைவுக்கு வரும் இன்னொரு விசயம். நான் எஸ்.எஃப்.ஐயில் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யூ போன்ற அமைப்புகளுடன் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது அருப்புக்கோட்டை கோமதி தியேட்டர் முன்பு நான் வீர உரை(ம்க்கும்)யாற்றிக் கொண்டிருந்ததைக் கேட்ட என் தந்தையின் நண்பர் அவரிடம் போய் “உங்க பையன் நல்லா பேசறான் சார்” என்று சொல்லிவிட்டார். அதிலிருந்து என் தந்தைக்கு பெருமை பிடிபடவில்லை. நல்ல அப்பா.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய செட்டிநாடு ஓட்டலும் ஆயாக்கடை இட்டிலியும், பொதுவாகப் பார்த்தால் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு எதிரானதாகத் தெரிந்திருக்கும். ரஜினி/ஷங்கரின் ரசிகர்களுக்கு வேறு மாதிரி தெரிந்திருக்கும். நான் இரண்டாவதான ஒரு பார்வையிலிருந்தே எழுதினேன். எழுதி வாசித்ததும் என்னுள் இருந்த முதலாமவன் விழித்துக்கொண்டான். தவறாகப் பட்டுவிடுமே என்று அந்த இடுகையை நீக்கிவிட்டேன். வானம்பாடி பாலா சார் சும்மா போடுங்க என்று சொன்னதால் போட்டேன். நான் பயந்த மாதிரியே ராஜசுந்தரராஜன் ஐயாவும், கார்த்திகைப் பாண்டியனும் இன்னும் பலரும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.
நான் சொல்ல வந்தது இதுதான் - ஷங்கர் படம் - செட்டிநாடு ஓட்டலின் மட்டன் பிரியாணி. சத்யஜித் ரேயின் படம் ஆயா கடை இட்டிலி. எல்லோராலும் ஆயா கடை இட்டிலியைச் சாப்பிட்டு விட முடியாது. எல்லோருக்கும் மட்டன் பிரியாணி செரித்து விடாது. அதே போல செட்டி நாட்டு ஓட்டல் குக்கிற்கு ஆயாவைப்போல் மல்லிகைப்பூ இட்டிலி சுடத் தெரியாது. ஆயாவுக்கு செட்டிநாட்டு ஸ்டைலில் மட்டன் பிரியாணி செய்யத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய பாணி. அதில் இதைச் செய்யாதவன் முட்டாள் அதைச் செய்பவன் மேதை என்று சொல்வது ஹி ஹி ஹி..
அதே போல சேட்டு வீட்டில் வந்து பிறந்ததைத் தவிர அந்த குதிரை மீது வரும் மாப்பிள்ளை செய்த தவறென்ன? இல்லை அந்த நாய் குலைத்ததால் தான் அவன் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிடப் போகிறானா? இது யாரைச் சொல்கிறேன் என்று புரியாவிட்டால் நீங்கள் இதுவரை என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.
ஒரு க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். முதல் எழுத்து ர கடைசி எழுத்து னி. என்னது நடு எழுத்தா? என்னஜி இதுக்கு மேலயும் க்ளூ கேக்குறீங்க?
என்னவோ போடா மாதவா (நன்றி விதூஷ்).
இவருக்கு மேல் ஒருவர், இந்திய உள்துறை அமைச்சர். இவ்வளவு நாள் ரூம் போட்டு யோசித்திருப்பார் போல. இன்று பேசியிருக்கிறார், யூனியன் கார்பைடு சேர்மன் ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்மராவ்தான் காரணமாம். யாரெல்லாம் அப்போது அமைச்சர்களாக இருந்தார்கள், அதில் யாரெல்லாம் இப்போது உயிரோடு இல்லை என்று உளவுத்துறையிடம் (இதுக்குத்தான இருக்கு) கணக்குக் கேட்டிருப்பார்கள் போல. ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் என்று பதில் வந்திருக்கும். ராஜீவின் மீது புகார் சொல்ல முடியுமா (அதிலும் சிதம்பரம் தமிழர்)? அதனால் நரசிம்மராவின் மீது விடிந்து விட்டது.
இதில் பெரிய காமெடி அப்போதைய பிரதமருக்கே தெரியாதாம், ஆண்டர்சன் வெளியேறியது. முழுப் பொறுப்பும் நரசிம்மராவினுடையதாம்.
மேலும் போபால் வழக்கு தீவிரப்படுத்தப் படாததற்கு 1984-இல் இருந்து மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகளின் மெத்தனமே காரணமாம். 26 வருடங்களில் காங்கிரஸ் மட்டும் 16 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறது என்பதை மறந்து விட்டார் போல. சரி மற்றவர்கள் செய்திருக்க வேண்டாம், இவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறாரே. இவர் என்ன கிழித்து விட்டார். பேசாமல் இவர் கலைஞரிடம் முழுசாக ட்ரெயினிங் எடுத்திருக்கலாம். செர்னோபில்லில் விபத்து நடந்த போது இத்தனை பேர் உயிரிழந்தார்கள், கைஷ்டிமில் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்றெல்லாம் புள்ளிவிபரம் கொடுத்திருக்கலாம்.
பேசுவது என்றதும் நேற்றைய வீடியோவில் என் குரலைக் கேட்டுவிட்டு நண்பர் பின்னோக்கி எனக்கு கமாண்டிங் வாய்ஸ் என்று பின்னூட்டம் போட்டது நினைவுக்கு வருகிறது (நாங்க மட்டும் வாசகர் கடிதம் மாதிரி சொல்ல மாட்டோமா?). எனக்கு மேடையில் பேசுவது என்றாலே மிகவும் பிடிக்கும். ஒருமுறை எங்கள் கல்லூரியில் ஜூனியர்களுக்குக் கொடுத்த வரவேற்பு விழாவில் “மதங்கள் - தோற்றமும் மூடநம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் பேசினேன். பல புத்தகங்களையும் செய்திகளையும் படித்து தகவல்தொகுத்து வழங்கினேன். மூட நம்பிக்கைகளில் சாமியார்களை அல்லது கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்களைப் பற்றிப் பேசும்போது இந்து மத சாமியார்கள் இருவரையும், கிறிஸ்தவ மதப் பிரசாரகர் ஒருவரையும் உதாரணம் காட்டிப் பேசினேன்.
நான் பேசி முடித்து கீழே இறங்கியதும் என்னுடைய தோழிகளில் இருவர் என்னிடம் கடுமையாகச் சண்டை போட்டார்கள் - “உனக்கு பைபிளையும் கிறிஸ்டியானிட்டியையும் பற்றி என்ன தெரியும்? நீ எப்படி அவரை பற்றி அப்படியெல்லாம் பேசலாம்”. நான் சொன்னேன். “என் தலையெழுத்து பிறப்பால் இந்துவாகிப் போனேன். என் அப்பா அம்மா மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் நீங்கள் என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.”
நல்ல வேளை பெரியார் பிறந்த தமிழகத்தில் நானும் பிறந்தேன். இல்லையென்றால் அன்றைக்கு நான் மேடையிலிருந்து இறங்கியிருக்கவே முடியாது.
மேடைப் பேச்சு என்றது நினைவுக்கு வரும் இன்னொரு விசயம். நான் எஸ்.எஃப்.ஐயில் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யூ போன்ற அமைப்புகளுடன் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது அருப்புக்கோட்டை கோமதி தியேட்டர் முன்பு நான் வீர உரை(ம்க்கும்)யாற்றிக் கொண்டிருந்ததைக் கேட்ட என் தந்தையின் நண்பர் அவரிடம் போய் “உங்க பையன் நல்லா பேசறான் சார்” என்று சொல்லிவிட்டார். அதிலிருந்து என் தந்தைக்கு பெருமை பிடிபடவில்லை. நல்ல அப்பா.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய செட்டிநாடு ஓட்டலும் ஆயாக்கடை இட்டிலியும், பொதுவாகப் பார்த்தால் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு எதிரானதாகத் தெரிந்திருக்கும். ரஜினி/ஷங்கரின் ரசிகர்களுக்கு வேறு மாதிரி தெரிந்திருக்கும். நான் இரண்டாவதான ஒரு பார்வையிலிருந்தே எழுதினேன். எழுதி வாசித்ததும் என்னுள் இருந்த முதலாமவன் விழித்துக்கொண்டான். தவறாகப் பட்டுவிடுமே என்று அந்த இடுகையை நீக்கிவிட்டேன். வானம்பாடி பாலா சார் சும்மா போடுங்க என்று சொன்னதால் போட்டேன். நான் பயந்த மாதிரியே ராஜசுந்தரராஜன் ஐயாவும், கார்த்திகைப் பாண்டியனும் இன்னும் பலரும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.
நான் சொல்ல வந்தது இதுதான் - ஷங்கர் படம் - செட்டிநாடு ஓட்டலின் மட்டன் பிரியாணி. சத்யஜித் ரேயின் படம் ஆயா கடை இட்டிலி. எல்லோராலும் ஆயா கடை இட்டிலியைச் சாப்பிட்டு விட முடியாது. எல்லோருக்கும் மட்டன் பிரியாணி செரித்து விடாது. அதே போல செட்டி நாட்டு ஓட்டல் குக்கிற்கு ஆயாவைப்போல் மல்லிகைப்பூ இட்டிலி சுடத் தெரியாது. ஆயாவுக்கு செட்டிநாட்டு ஸ்டைலில் மட்டன் பிரியாணி செய்யத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய பாணி. அதில் இதைச் செய்யாதவன் முட்டாள் அதைச் செய்பவன் மேதை என்று சொல்வது ஹி ஹி ஹி..
அதே போல சேட்டு வீட்டில் வந்து பிறந்ததைத் தவிர அந்த குதிரை மீது வரும் மாப்பிள்ளை செய்த தவறென்ன? இல்லை அந்த நாய் குலைத்ததால் தான் அவன் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிடப் போகிறானா? இது யாரைச் சொல்கிறேன் என்று புரியாவிட்டால் நீங்கள் இதுவரை என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.
ஒரு க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். முதல் எழுத்து ர கடைசி எழுத்து னி. என்னது நடு எழுத்தா? என்னஜி இதுக்கு மேலயும் க்ளூ கேக்குறீங்க?
என்னவோ போடா மாதவா (நன்றி விதூஷ்).
Friday, August 6, 2010
பிதற்றல்கள் - 08/06/2010
எந்திரன் படப் பாடல்கள் வெளியாகிவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் தலைவர் படமாததால், ஓசி டவுன்லோடு செய்யாமல், ஐ-ட்யூன்ஸில் வரும் வரைக் காத்திருந்து வாங்கி, ஐ-ஃபோனில் கேட்டேன். எல்லாப் பாட்டுகளுமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஷங்கரின் திரைப்படங்களில் பாடல்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர் ஒரு பேட்டர்ன் வைத்திருப்பார். அந்தப் பேட்டர்னிலேயே இந்தப் பாடல்களும் இருப்பதால் பலருக்கு எங்கோ கேட்டதைப் போல இருக்கிறது. மூன்று பாடல்கள் கண்டிப்பாக இந்த வருடத்தின் ஹிட்டாகப் போவது உறுதி.
படம் செப்டம்பர் மூன்றாம் தேதி ரிலீசாம். நான்காம் தேதி அல்லது ஐந்தாம் தேதி ராச்சஸ்டரில் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கண்டிப்பாக டிக்கெட் $15க்குக் குறையாமல் இருக்கும். க்ரோசரி ஸ்டோர் போகும்போது முன்பதிவு செய்து வைக்க வேண்டும்.
ரஜினிக்கு ஒரு அசாத்திய கவர்ச்சி இருக்கிறது. ஐந்து வயது சிறுவர்கள் முதல் ஐம்பது வயது இளைஞர்கள் (பாலா சார் சந்தோசமா?) வரை கவர்ந்து இழுத்துவிடுகிறார். பாட்சா வந்த புதிதில் நான் ஒரு தடவை சொன்னா என்று சொல்லித்திரியாத சிறுவர்களையே பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடுவார்.
என் நண்பரின் (மலையாளி) மகள், சிவாஜி வந்த போது அவளுக்கு 4 வயது, அது வரை தமிழ்ப்படங்கள் பார்த்து பழக்கப் படாதவள். ரஜினியை யாரென்றே தெரியாது. சிவாஜி படம் (தியேட்டரில்) பார்த்ததில் இருந்து அவள் ரஜினியை சிவாஜி என்றே அழைக்க ஆரம்பித்து விட்டாள்.
நாங்கள் சிவாஜி படம் ராச்சஸ்டரில் பார்த்த போது ஒரு தமிழ்க்குடும்பம் - கணவன், மனைவி, ஒரு 2 அல்லது 3 வயதுப் பெண் குழந்தை - படம் போட்டு சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தார்கள். இருட்டைப் பார்த்ததும் அந்தக் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்துவிட்டது. அவர்கள் தட்டுத்தடுமாறி அவர்களின் நண்பர்கள் அமர்ந்திருந்த எங்கள் பின்வரிசையில் அமர்ந்தனர். கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது (ரஜினியைப் பார்த்ததும் பயந்து நிறுத்திவிட்டது என்று யாராவது கமெண்ட் போட்டால் மாடரேட் செய்யப்படும், சொல்லிப்புட்டேன்). பாருங்கள் ரஜினி படத்தை ஒரு 3 வயது குழந்தை கூட அழுகையை நிறுத்தி ரசிக்கிறது என்று சொல்ல வரவில்லை. வெளிச்சமும் பெரும் திரையில் ஓடும் கலர்ஃபுல் காட்சிகளும் அந்தக்குழந்தையின் அழுகையை நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் இண்டர்வெல்லில் அந்தக் குழந்தை அவள் தந்தையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள் பாருங்கள் “நீ ஏம்பா விசிலே அடிக்க மாட்டேங்குற?”. இது காட்டும் அந்தப் பெண் சினிமாவில் ஆழ்ந்துதான் அழுகையை நிறுத்தியிருக்கிறாள் என்று. இதுதான் ரஜினியின் பவர்.
ஏனோ வலையுலகில் ரஜினியை ரசிக்கும் சிலர் கூட தாங்கள் ரஜினியை ரசிக்கிறோம் என்று சொல்ல பயப்படுகிறார்கள். எனக்கு அந்த பயமெல்லாம் இல்லை. நான் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமையே.
ஜூனியர் முகிலன் வளர்ந்துவிட்டான். ஒரிரு வார்த்தைகளில் நம்மோடு உரையாடவும் விரும்புகிறான். நல்ல நினைவாற்றலும் இருக்கிறது. என்னையும் தங்கமணியையும் அப்பா அம்மா என்றழைப்பதை விட பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறான் (நானும் தங்கமணியும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைப்பதால் இருக்கலாம்). திஸ் என்று எனக்குப் பெயர் வைத்துள்ளான். மனைவிக்கு கயிதா. அவனுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு ஃபேமிலி ஆல்பத்தை எடுத்து அதில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆச்சி, தாத்தா, மாமா(இது மட்டும் பெரிய சத்தமாக இருக்கும்), மாயினி (மாலினி), ஹஷ் (ஹாஷினி), ஜாவு(மன்னர் ஜவஹர்), பாட்டி, நிஷ்(நிஷாந்த்), பிதுபிதுபிது(பிரதீப்), பீபா(தீபா), கும்மா(குமார்), ராஜ் (ராஜன்), சீன்னூ(செங்குட்டுவன்) என்று அடையாளம் காட்டுவது.
சன் டிவியின் புண்ணியத்தில் சன் பிக்சர்ஸார் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்தின் அலுக்கச்செய்யும் விளம்பரங்கள் எல்லாம் பார்த்து விடுகிறான். இதுவரை வந்த விளம்பரங்களில் அவனை மிகவும் கவர்ந்தது வேட்டைக்காரன் விளம்பரம் தான். எங்கே விளையாடிக் கொண்டிருந்தாலும் வேட்டைக்காரன் விளம்பரம் கேட்டதும் ஓடி வந்து டிவியில் அதை பார்த்துவிட்டு விளம்பரம் முடிந்ததும் திரும்ப தன் விளையாட்டைத் தொடரச் சென்று விடுவான் (சுறா, சிங்கம் எல்லாம் அவனை இழுக்கவில்லை). இப்போது சனி மற்றும் ஞாயிறு அன்று, மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் பாடல் வெளியீடு ஒளிபரப்பு விளம்பரம் அவனை கவர்கிறது. அதிலும் கடைசியில் ரோபோ ரஜினி நிற்க எந்திரன் என்று போடும் காட்சியில் ரஜினியைச் சுட்டிச் சுட்டிக் காட்டுகிறான் (என் ஐபோனில் எந்திரன் பாட்டு ஓடும்போதும் அதே போஸ்டர் தெரிவதால் என்று நினைக்கிறேன்). ரஜினி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் சொல்லிவிடுவான் என்று எதிர்பார்க்கிறேன். சொன்னதும் வீடியோ எடுத்துப் போடுகிறேன். பார்த்துத் தொலைய வேண்டிய தலையெழுத்து உங்களுக்கு.
ஹமாம் விளம்பரத்தில் ஆட்டோல போகும்போது என்று வரும் வரியை தூசி கீசி ஒட்டியிருக்கும் என்று மாற்றியிருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது. ஆனால் இப்போது டிவியில் சிகப்பழகு தரும் க்ரீம்களின் விளம்பரம் அதிக எண்ணிக்கையில் வருவது போல உள்ளது. எல்லா விளம்பரங்களிலும் கறுப்பாக இருப்பவர்களுக்கு கான்ஃபிடன்ஸ் இருக்காது. சிகப்பாக இருந்தால் தான் வெற்றியடைய முடியும் என்பதே மையக்கருவாக இருக்கிறது. ஏன் இப்படி ஒரு எண்ணத்தை புகுத்தி கறுப்பாக இருப்பவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும் விளம்பரங்களுக்கு எதிராக யாரும் தடை வாங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினியைப் பார்த்த பிறகுமா தமிழர்கள் சிவப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று எண்ணுகிறார்கள்?
(ஒருவழியா இன்னைக்கி எல்லா செய்தியிலயும் ரஜினி பேரை நுழைச்சாச்சி)
ஷங்கரின் திரைப்படங்களில் பாடல்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர் ஒரு பேட்டர்ன் வைத்திருப்பார். அந்தப் பேட்டர்னிலேயே இந்தப் பாடல்களும் இருப்பதால் பலருக்கு எங்கோ கேட்டதைப் போல இருக்கிறது. மூன்று பாடல்கள் கண்டிப்பாக இந்த வருடத்தின் ஹிட்டாகப் போவது உறுதி.
படம் செப்டம்பர் மூன்றாம் தேதி ரிலீசாம். நான்காம் தேதி அல்லது ஐந்தாம் தேதி ராச்சஸ்டரில் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கண்டிப்பாக டிக்கெட் $15க்குக் குறையாமல் இருக்கும். க்ரோசரி ஸ்டோர் போகும்போது முன்பதிவு செய்து வைக்க வேண்டும்.
ரஜினிக்கு ஒரு அசாத்திய கவர்ச்சி இருக்கிறது. ஐந்து வயது சிறுவர்கள் முதல் ஐம்பது வயது இளைஞர்கள் (பாலா சார் சந்தோசமா?) வரை கவர்ந்து இழுத்துவிடுகிறார். பாட்சா வந்த புதிதில் நான் ஒரு தடவை சொன்னா என்று சொல்லித்திரியாத சிறுவர்களையே பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடுவார்.
என் நண்பரின் (மலையாளி) மகள், சிவாஜி வந்த போது அவளுக்கு 4 வயது, அது வரை தமிழ்ப்படங்கள் பார்த்து பழக்கப் படாதவள். ரஜினியை யாரென்றே தெரியாது. சிவாஜி படம் (தியேட்டரில்) பார்த்ததில் இருந்து அவள் ரஜினியை சிவாஜி என்றே அழைக்க ஆரம்பித்து விட்டாள்.
நாங்கள் சிவாஜி படம் ராச்சஸ்டரில் பார்த்த போது ஒரு தமிழ்க்குடும்பம் - கணவன், மனைவி, ஒரு 2 அல்லது 3 வயதுப் பெண் குழந்தை - படம் போட்டு சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தார்கள். இருட்டைப் பார்த்ததும் அந்தக் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்துவிட்டது. அவர்கள் தட்டுத்தடுமாறி அவர்களின் நண்பர்கள் அமர்ந்திருந்த எங்கள் பின்வரிசையில் அமர்ந்தனர். கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது (ரஜினியைப் பார்த்ததும் பயந்து நிறுத்திவிட்டது என்று யாராவது கமெண்ட் போட்டால் மாடரேட் செய்யப்படும், சொல்லிப்புட்டேன்). பாருங்கள் ரஜினி படத்தை ஒரு 3 வயது குழந்தை கூட அழுகையை நிறுத்தி ரசிக்கிறது என்று சொல்ல வரவில்லை. வெளிச்சமும் பெரும் திரையில் ஓடும் கலர்ஃபுல் காட்சிகளும் அந்தக்குழந்தையின் அழுகையை நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் இண்டர்வெல்லில் அந்தக் குழந்தை அவள் தந்தையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள் பாருங்கள் “நீ ஏம்பா விசிலே அடிக்க மாட்டேங்குற?”. இது காட்டும் அந்தப் பெண் சினிமாவில் ஆழ்ந்துதான் அழுகையை நிறுத்தியிருக்கிறாள் என்று. இதுதான் ரஜினியின் பவர்.
ஏனோ வலையுலகில் ரஜினியை ரசிக்கும் சிலர் கூட தாங்கள் ரஜினியை ரசிக்கிறோம் என்று சொல்ல பயப்படுகிறார்கள். எனக்கு அந்த பயமெல்லாம் இல்லை. நான் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமையே.
ஜூனியர் முகிலன் வளர்ந்துவிட்டான். ஒரிரு வார்த்தைகளில் நம்மோடு உரையாடவும் விரும்புகிறான். நல்ல நினைவாற்றலும் இருக்கிறது. என்னையும் தங்கமணியையும் அப்பா அம்மா என்றழைப்பதை விட பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறான் (நானும் தங்கமணியும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைப்பதால் இருக்கலாம்). திஸ் என்று எனக்குப் பெயர் வைத்துள்ளான். மனைவிக்கு கயிதா. அவனுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு ஃபேமிலி ஆல்பத்தை எடுத்து அதில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆச்சி, தாத்தா, மாமா(இது மட்டும் பெரிய சத்தமாக இருக்கும்), மாயினி (மாலினி), ஹஷ் (ஹாஷினி), ஜாவு(மன்னர் ஜவஹர்), பாட்டி, நிஷ்(நிஷாந்த்), பிதுபிதுபிது(பிரதீப்), பீபா(தீபா), கும்மா(குமார்), ராஜ் (ராஜன்), சீன்னூ(செங்குட்டுவன்) என்று அடையாளம் காட்டுவது.
சன் டிவியின் புண்ணியத்தில் சன் பிக்சர்ஸார் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்தின் அலுக்கச்செய்யும் விளம்பரங்கள் எல்லாம் பார்த்து விடுகிறான். இதுவரை வந்த விளம்பரங்களில் அவனை மிகவும் கவர்ந்தது வேட்டைக்காரன் விளம்பரம் தான். எங்கே விளையாடிக் கொண்டிருந்தாலும் வேட்டைக்காரன் விளம்பரம் கேட்டதும் ஓடி வந்து டிவியில் அதை பார்த்துவிட்டு விளம்பரம் முடிந்ததும் திரும்ப தன் விளையாட்டைத் தொடரச் சென்று விடுவான் (சுறா, சிங்கம் எல்லாம் அவனை இழுக்கவில்லை). இப்போது சனி மற்றும் ஞாயிறு அன்று, மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் பாடல் வெளியீடு ஒளிபரப்பு விளம்பரம் அவனை கவர்கிறது. அதிலும் கடைசியில் ரோபோ ரஜினி நிற்க எந்திரன் என்று போடும் காட்சியில் ரஜினியைச் சுட்டிச் சுட்டிக் காட்டுகிறான் (என் ஐபோனில் எந்திரன் பாட்டு ஓடும்போதும் அதே போஸ்டர் தெரிவதால் என்று நினைக்கிறேன்). ரஜினி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் சொல்லிவிடுவான் என்று எதிர்பார்க்கிறேன். சொன்னதும் வீடியோ எடுத்துப் போடுகிறேன். பார்த்துத் தொலைய வேண்டிய தலையெழுத்து உங்களுக்கு.
ஹமாம் விளம்பரத்தில் ஆட்டோல போகும்போது என்று வரும் வரியை தூசி கீசி ஒட்டியிருக்கும் என்று மாற்றியிருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது. ஆனால் இப்போது டிவியில் சிகப்பழகு தரும் க்ரீம்களின் விளம்பரம் அதிக எண்ணிக்கையில் வருவது போல உள்ளது. எல்லா விளம்பரங்களிலும் கறுப்பாக இருப்பவர்களுக்கு கான்ஃபிடன்ஸ் இருக்காது. சிகப்பாக இருந்தால் தான் வெற்றியடைய முடியும் என்பதே மையக்கருவாக இருக்கிறது. ஏன் இப்படி ஒரு எண்ணத்தை புகுத்தி கறுப்பாக இருப்பவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும் விளம்பரங்களுக்கு எதிராக யாரும் தடை வாங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினியைப் பார்த்த பிறகுமா தமிழர்கள் சிவப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று எண்ணுகிறார்கள்?
(ஒருவழியா இன்னைக்கி எல்லா செய்தியிலயும் ரஜினி பேரை நுழைச்சாச்சி)
Monday, July 19, 2010
பிதற்றல்கள் - 07/18/2010
இன்று செய்திகளில் பா.ஜ.க நடத்தும் போராட்டம் பற்றி பார்த்தேன். மத்திய அரசு ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறதாம். அதை சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதால் மாணவர்கள் மத்தியில் மத உணர்வு தூண்டப்படுமாம். ஆகவே எல்லா மத மாணவர்களுக்கும் வழங்க வேண்டுமாம்.
மத உணர்வு தூண்டப்படுவதைப் பற்றி பா.ஜ.க பேசுவதைக் கேட்டால் என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
மாருதி சுசுகியின் கார்களுக்கு வரும் இரண்டு விளம்பரங்களை மிகவும் ரசித்தேன். முதல் விளம்பரத்தில் ஒரு பெரிய யாட்(yatch) ஒன்றில் உள்ள வசதிகளை ஒருவர் விளக்கிக் கொண்டே வருவார். கடைசியில் நம்மூர்க்காரர் அவரிடம் ஒரு கேள்வி கேட்பார். இன்னொரு விளம்பரத்தில் ஸ்பேஸ் கிராஃப்ட் ஒன்றை விஞ்ஞானி ஒருவர் விளக்கிவிட்டு எனி க்வெஸ்டின்ஸ் என்று கேட்பார். அதற்கு நம்மூர்க்காரர் அதே கேள்வியைக் கேட்பார்.
“(லிட்டருக்கு) எவ்வளவு (மைலேஜ்) கொடுக்கும்?”
அடுத்து மாருதியின் பஞ்ச் லைன் - “மைலேஜே குறியாக இருக்கும் நாட்டுக்காக தயாரிக்கப்பட்டது”
அருமையான விளம்பரம்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த போது நான்கு படங்களை திரையரங்குகளில் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. சிங்கம்(பி.வி.ஆர்), முரட்டு சிங்கம் (சத்யம்), களவாணி (மாயாஜால்) மற்றும் ராவணன் (மதுரை மணி இம்பாலா).
இதில் சத்யம் தவிர மற்ற மூன்று தியேட்டர்களுக்கும் நான் சென்றதே இல்லை. பிவிஆர் நன்றாக இருந்தது. மாயாஜால் வார நாட்களில் போனதாலோ என்னவோ கூட்டமில்லாமல் இருந்தது. மணி இம்பாலாவைப் பற்றி கடைசியில் சொல்கிறேன்.
சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா தியேட்டர்களுக்குமே ஆன்லைனில் டிக்கெட் வாங்கப்பட்டது. வாங்கித் தந்தது என் மைத்துனன் செங்குட்டுவன் ராஜா.
நான்கு படங்களில் நான் மிகவும் ரசித்தது களவாணி. என் மைத்துனன் செங்குட்டுவன் - என் பதிவுகளையும் என் வலைப்பூ மூலம் பற்ற பதிவுகளையும் படிப்பவன் - இண்டெர்வெலிலும் படம் முடிந்த பின்னும் விடாமல் ஆற்றாமையால் புலம்பிக் கொண்டே இருந்தான் - ‘இந்த படத்துக்கு ஏன் நல்லா இல்லைன்னு கேபிள் சங்கர் விமர்சனம் எழுதினாரு?’. உடன் இருந்த நண்பர், பதிவர் பிரபாகர் “நான் நாளைக்கே கேபிளுக்கு ஃபோன் போட்டுக் கேக்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டாரா தெரியவில்லை.
மணி இம்பாலா அவர்களது வெப் சைட்டில் மதுரையின் முதல் மல்டிப்ளெக்ஸ் என்று விளம்பரம் தருகிறார்கள். ப்ரியா காம்ப்ளெக்ஸ், மாப்பிள்ளை விநாயகர்- மாணிக்க விநாயகர், அம்பிகா காம்ப்ளெக்ஸ் எல்லாம் மல்டிப்ளெக்ஸில் வராதா என்று தெரியவில்லை. மேலும் தியேட்டரில் தமிழ்நாட்டின் முதல் ஐ-மேக்ஸ் த்ரி-டி என்று போட்டிருக்கிறார்கள். உள்ளே 70 எம் எம் ஸ்கீரின் கூட இல்லை. இதுவா உங்க ஐமேக்ஸ்? மற்றபடி வழக்கமான மதுரை தியேட்டர்கள் போல பாதியில் ஏ.சியை ஆஃப் செய்யாமல் கடைசிவரை போட்டிருந்தார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
இந்தியா வந்த போது நான்கு பதிவர்களை சந்தித்தேன் - பாலா சார், பலாபட்டறை சங்கர், எறும்பு ராஜகோபால் மற்றும் சிங்கை சிங்கம் பிரபாகர். ஒருவரோடு தொலைபேசியில் கதைத்தேன் - விதூஷ் வித்யா.
பாலா சாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அவரது அலுவலகத்தின் வரலாறையும் மற்ற சிறப்புகளையும் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவுக்கு பேசிக் கொண்டே இருந்தார். நானும் பலா பட்டறையும் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். அங்கே கழித்த 2 மணி நேரங்களில் நிறைய தெரிந்து கொண்டேன். மீண்டும் ஒரு முறை அவரை அதே அலுவலகத்தில் தங்கமணியுடன் சந்தித்தேன். அப்போது பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்துப் போட்ட பேட் ஒன்றை பாலா சார் எனக்குக் கொடுத்தார். நன்றி பாலா சார். நெக்ஸ்ட் டைம் சச்சின் ஆட்டோகிராஃப். :)
பலா பட்டறை சங்கரையும், எறும்பு ராஜகோபாலையும் அடையார்-இந்திரா நகர் தோஸா காலிங்க் ரெஸ்டாரண்டில் சந்தித்தேன். மழையோடு நடந்த அந்த சந்திப்பும் மகிழ்ச்சியாகவே நிகழ்ந்தது. எறும்பு விதூஷை தொலைபேசியில் அழைத்துக் கொடுத்தார். பேசினேன்.
பிரபாகரோடு மாயா ஜாலுக்கு திரைப்படம் பார்க்கச் சென்றோம். அங்கே சாப்பிட்டது, படம் பார்த்தது, என்று நான்கு மணி நேரம் மிகவும் மகிழ்ச்சியாகக் கழிந்தது. சோகத்தில் இருந்த பிரபாகருக்கு ஒரு மாற்றாக அந்த சந்திப்பு இருந்திருக்கும் என்று நம்புகிறேன். (எடுத்த ஃபோட்டோவை பப்ளிஷ் செய்யுங்க பிரபா).
மத உணர்வு தூண்டப்படுவதைப் பற்றி பா.ஜ.க பேசுவதைக் கேட்டால் என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
மாருதி சுசுகியின் கார்களுக்கு வரும் இரண்டு விளம்பரங்களை மிகவும் ரசித்தேன். முதல் விளம்பரத்தில் ஒரு பெரிய யாட்(yatch) ஒன்றில் உள்ள வசதிகளை ஒருவர் விளக்கிக் கொண்டே வருவார். கடைசியில் நம்மூர்க்காரர் அவரிடம் ஒரு கேள்வி கேட்பார். இன்னொரு விளம்பரத்தில் ஸ்பேஸ் கிராஃப்ட் ஒன்றை விஞ்ஞானி ஒருவர் விளக்கிவிட்டு எனி க்வெஸ்டின்ஸ் என்று கேட்பார். அதற்கு நம்மூர்க்காரர் அதே கேள்வியைக் கேட்பார்.
“(லிட்டருக்கு) எவ்வளவு (மைலேஜ்) கொடுக்கும்?”
அடுத்து மாருதியின் பஞ்ச் லைன் - “மைலேஜே குறியாக இருக்கும் நாட்டுக்காக தயாரிக்கப்பட்டது”
அருமையான விளம்பரம்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த போது நான்கு படங்களை திரையரங்குகளில் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. சிங்கம்(பி.வி.ஆர்), முரட்டு சிங்கம் (சத்யம்), களவாணி (மாயாஜால்) மற்றும் ராவணன் (மதுரை மணி இம்பாலா).
இதில் சத்யம் தவிர மற்ற மூன்று தியேட்டர்களுக்கும் நான் சென்றதே இல்லை. பிவிஆர் நன்றாக இருந்தது. மாயாஜால் வார நாட்களில் போனதாலோ என்னவோ கூட்டமில்லாமல் இருந்தது. மணி இம்பாலாவைப் பற்றி கடைசியில் சொல்கிறேன்.
சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா தியேட்டர்களுக்குமே ஆன்லைனில் டிக்கெட் வாங்கப்பட்டது. வாங்கித் தந்தது என் மைத்துனன் செங்குட்டுவன் ராஜா.
நான்கு படங்களில் நான் மிகவும் ரசித்தது களவாணி. என் மைத்துனன் செங்குட்டுவன் - என் பதிவுகளையும் என் வலைப்பூ மூலம் பற்ற பதிவுகளையும் படிப்பவன் - இண்டெர்வெலிலும் படம் முடிந்த பின்னும் விடாமல் ஆற்றாமையால் புலம்பிக் கொண்டே இருந்தான் - ‘இந்த படத்துக்கு ஏன் நல்லா இல்லைன்னு கேபிள் சங்கர் விமர்சனம் எழுதினாரு?’. உடன் இருந்த நண்பர், பதிவர் பிரபாகர் “நான் நாளைக்கே கேபிளுக்கு ஃபோன் போட்டுக் கேக்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டாரா தெரியவில்லை.
மணி இம்பாலா அவர்களது வெப் சைட்டில் மதுரையின் முதல் மல்டிப்ளெக்ஸ் என்று விளம்பரம் தருகிறார்கள். ப்ரியா காம்ப்ளெக்ஸ், மாப்பிள்ளை விநாயகர்- மாணிக்க விநாயகர், அம்பிகா காம்ப்ளெக்ஸ் எல்லாம் மல்டிப்ளெக்ஸில் வராதா என்று தெரியவில்லை. மேலும் தியேட்டரில் தமிழ்நாட்டின் முதல் ஐ-மேக்ஸ் த்ரி-டி என்று போட்டிருக்கிறார்கள். உள்ளே 70 எம் எம் ஸ்கீரின் கூட இல்லை. இதுவா உங்க ஐமேக்ஸ்? மற்றபடி வழக்கமான மதுரை தியேட்டர்கள் போல பாதியில் ஏ.சியை ஆஃப் செய்யாமல் கடைசிவரை போட்டிருந்தார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
இந்தியா வந்த போது நான்கு பதிவர்களை சந்தித்தேன் - பாலா சார், பலாபட்டறை சங்கர், எறும்பு ராஜகோபால் மற்றும் சிங்கை சிங்கம் பிரபாகர். ஒருவரோடு தொலைபேசியில் கதைத்தேன் - விதூஷ் வித்யா.
பாலா சாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அவரது அலுவலகத்தின் வரலாறையும் மற்ற சிறப்புகளையும் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவுக்கு பேசிக் கொண்டே இருந்தார். நானும் பலா பட்டறையும் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். அங்கே கழித்த 2 மணி நேரங்களில் நிறைய தெரிந்து கொண்டேன். மீண்டும் ஒரு முறை அவரை அதே அலுவலகத்தில் தங்கமணியுடன் சந்தித்தேன். அப்போது பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்துப் போட்ட பேட் ஒன்றை பாலா சார் எனக்குக் கொடுத்தார். நன்றி பாலா சார். நெக்ஸ்ட் டைம் சச்சின் ஆட்டோகிராஃப். :)
பலா பட்டறை சங்கரையும், எறும்பு ராஜகோபாலையும் அடையார்-இந்திரா நகர் தோஸா காலிங்க் ரெஸ்டாரண்டில் சந்தித்தேன். மழையோடு நடந்த அந்த சந்திப்பும் மகிழ்ச்சியாகவே நிகழ்ந்தது. எறும்பு விதூஷை தொலைபேசியில் அழைத்துக் கொடுத்தார். பேசினேன்.
பிரபாகரோடு மாயா ஜாலுக்கு திரைப்படம் பார்க்கச் சென்றோம். அங்கே சாப்பிட்டது, படம் பார்த்தது, என்று நான்கு மணி நேரம் மிகவும் மகிழ்ச்சியாகக் கழிந்தது. சோகத்தில் இருந்த பிரபாகருக்கு ஒரு மாற்றாக அந்த சந்திப்பு இருந்திருக்கும் என்று நம்புகிறேன். (எடுத்த ஃபோட்டோவை பப்ளிஷ் செய்யுங்க பிரபா).
Sunday, May 16, 2010
பிதற்றல்கள் 5/16/2010
இன்று நடந்த ஐ.சி.சி 20-20 உலகக் கோப்பைப்..
ஹலோ இருங்க இருங்க கல்லெடுக்காதீங்க. நான் சொல்ல வர்றது கிரிக்கெட் மேட்டர் இல்லை. ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா..
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வெற்றி எஃப்.எம்-இல் தனித் தமிழில் நேரடி வர்ணனை செய்யப்படப் போவதாக அதில் பணி புரியும் அண்ணன் லோஷன் சொல்லியிருந்தார். அவரும் அதில் பங்குபெறப் போவதாகவும் சொன்னார்.
தனித் தமிழ் என்று சொன்னதால் சிறிது பயமாக இருந்தது. “டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக்கால் திசையில் அடிக்க முற்பட்ட கெவின் பீட்ட்ர்சனின் துடுப்பின் தலைமை ஓரத்தில் பட்டு பந்து மூன்றாம் மனிதனின் திசையில் பிடிக்குச் செல்வது போல பறந்தது. ஆழப் புள்ளி நிலையில் நின்று கொண்டிருந்த டேவிட் ஹஸ்ஸி ஓடிச் சென்று அந்தப் பந்தை பிடிக்கக் கரணம் அடித்தார் ஆனால் பந்து அவருக்குப் பிடிபடாமல் எல்லைக் கோட்டை எட்டிப் பிடித்தது” - இப்படி வர்ணனை செய்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெற்றி எஃப்.எம்மின் வலைத் தளத்துக்குச் சென்று கேட்டேன். பரவாயில்லை நான் எதிர்பார்த்தது போல இல்லாமல் கிரிக்கெட் சொல்லாடல்களை ஆங்கிலத்திலேயே சொன்னார்கள்.
முதலில் இப்படி ஒரு முயற்சிக்குப் பிடியுங்கள் பாராட்டுகளை. நான் இந்த வர்ணனையை ரசித்துக் கேட்டேன். என் டிவியின் வால்யூமைக் குறைத்துவிட்டு இவர்கள் அளித்த வர்ணனையையேக் கேட்டேன்.
இடையில் பாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றையும் நேயர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் வாசித்தார்கள். ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் இங்கிலாந்து வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியதை நடுவர் கண்டும் காணாமல் இருந்ததைப் பற்றி ஒருவர் அடித்த கமெண்ட் - ஐ.சி.சி நடுவர்களுக்கு தமிழ், இந்தி, உருது, சிங்களம் தவிர வேறு பாஷை தெரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். ரசித்தேன்.
இன்னொரு கமெண்ட் ஷான் டெயிட் வீசிய பந்து க்யீஸ்வெட்டரின் தலைக்கும் தோளுக்கும் இடையில் பறந்தது. வர்ணனையாளர் ஒருவர் கேட்டர். அந்த பந்து க்யீஸ்வெட்டரின் தலையில் பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? அவர் தலை தேர்ட் மேனிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.
நான் கேட்ட வரை எனக்குப் பட்ட ஒரு சில குறைகள்.
1. வர்ணனை செய்த இரண்டு பேரில் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகராகவும்(லோஷன்?), இன்னொருவர் இங்கிலாந்து ரசிகராகவும் இருந்ததாகப் பட்டது. அதானால் கமெண்டரியில் ஒருமுகமாக சில இடங்களில் கமெண்ட் செய்ததாக எனக்குப் (எனக்கு மட்டும் !?) பட்டது.
2. பெரும்பாலான இடங்களில் விகாரமாகத் தமிழ்ப் படுத்தாமல் நல்ல முறையில் தமிழ்ப்படுத்தியும், ஃபீல்டிங் பொசிசன்ஸ் எல்லாம் ஆங்கிலத்திலேயும் சொன்னார்கள். ஆனால் ஒருவர் அடுத்ததாக முகம் கொடுக்க வருவது <பேட்ஸ்மென் பெயர்> என்று அடிக்கடி சொன்னார். அது is going to face the next ball என்பதன் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். முகம் கொடுக்க என்பதை விட எதிர்கொள்ள என்பது கேட்க நன்றாக இருக்கிறது.
தொடருங்கள் உங்கள் பணியை.
************************
தமிழ்ப் படுத்துகிறேன் என்று படுத்தி எடுக்கிறார்கள் சில நேரங்களில். உதாரணமாக சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளருக்கான கழிவறையை - மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.
முன்பொருமுறை எதோ ஒரு பதிவில் சைபர் கிரைம் என்பதை சுழிய குற்றம் என்று மக்கள் தொலைக்காட்சியில் சொல்வதாகப் (நான் மக்கள் தொலைக்காட்சி பார்த்ததில்லை) படித்தேன். சுழியம் என்றால் ZERO. சைபர் - என்றால் zeroவா? Cipher - என்றால் zero. Cyber Crime அல்லவா? Cipher Crime இல்லையே?
அதே போல பலர் பரவலாக ஃபேஸ்புக்கை மூஞ்சிப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கிறேன். ஃபேஸ்புக் என்பது ஒரு பெயர்ச்சொல். அதைத் தமிழ்ப்படுத்துவது சரியா? விண்டோஸ்-7ஐ சன்னல்கள் என்று அழைப்பீர்களா? பில் கேட்ஸை விலைப்பட்டியல் வாசல்கள் என்று அழைப்பீர்களா?
ஃபேஸ்புக் என்பது ஒரு Social Networking கான சாதனம். Social Networkingஐத் தமிழ்ப் படுத்துங்கள். ஃபேஸ்புக்கை இல்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
******************************
குஷ்பு திமுகவில் சேர்ந்துவிட்டார். குஷ்புவுக்குத் தமிழகத்தில் கோவில் கட்டினார்கள். அதை வைத்துப் பார்க்கும் போது குஷ்பு கடவுளாகிறார். கடவுள் மறுப்பை முதல் கொள்கையாகக் கொண்ட திமுக எப்படி குஷ்புவை ஏற்றுக் கொண்டது?
ஒரு வேளை வல்லமை தாராயோ பட ஒலித்தட்டு வெளியீட்டு விழாவில் செருப்புக் காலை சாமி படங்களின் முன்னால் போட்டிருந்ததால் அவரையும் கடவுள் மறுப்பாளாராகப் பார்க்கின்றார்களோ?
எது எப்படியோ? ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது.
*******************************
அண்ணன் அழகிரி பாராளுமன்றத்துக்குப் போகாமல் நாடு சுற்றிப் பார்ப்பது இப்போது பெரும் பிரச்சனையாகியிருக்கிறது. அழகிரி செய்வது ஒரு புறம் இருக்கட்டும்.
18 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் ஒரு நாட்டில் அமைச்சர் ஒருவர் தன் தாய்மொழியில் பேச பாராளுமன்ற நடைமுறைகள் அனுமதிப்பதில்லை என்பது எந்த விதத்தில் நியாயம்? அவர் பேசுவதை On-the-Fly மொழிபெயர்க்க நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா என்ன?
கேள்விகளுக்குப் பயந்து ஒரு அமைச்சர் ஓடி ஒளிகிறார் என்றால் அது அமைச்சரின் தவறு. இந்தியிலோ ஆங்கிலத்திலோ பேச முடியாததால் ஓடி ஒளிகிறார் என்றார் அது பாராளுமன்றத்தின் தவறு.
*******************************
1996ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்காக பிரச்சாரம் செய்த நடிகை மனோரமா, திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை பொதுக்கூட்ட மேடைகளில் மெண்டல் என்றும் பைத்தியம் என்றும் (முன்பொரு காலத்தில் பத்திரிக்கைகள் எழுதியதை வைத்து) கேலி செய்து பேசினார். பின்னாளில் அவர் அதற்கு வருத்தம் தெரிவித்ததும் ரஜினி பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டதும் வரலாறு.
ஆனால் இப்போது அதே அம்பு அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. உலகம் உருண்டைதான்.
ஆனாலும் ஒரு வயது முதிர்ந்த சீனியர் நடிகையைப் பற்றி இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதும் பத்திரிகைகளின் மீதான் எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
ஹலோ இருங்க இருங்க கல்லெடுக்காதீங்க. நான் சொல்ல வர்றது கிரிக்கெட் மேட்டர் இல்லை. ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா..
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வெற்றி எஃப்.எம்-இல் தனித் தமிழில் நேரடி வர்ணனை செய்யப்படப் போவதாக அதில் பணி புரியும் அண்ணன் லோஷன் சொல்லியிருந்தார். அவரும் அதில் பங்குபெறப் போவதாகவும் சொன்னார்.
தனித் தமிழ் என்று சொன்னதால் சிறிது பயமாக இருந்தது. “டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக்கால் திசையில் அடிக்க முற்பட்ட கெவின் பீட்ட்ர்சனின் துடுப்பின் தலைமை ஓரத்தில் பட்டு பந்து மூன்றாம் மனிதனின் திசையில் பிடிக்குச் செல்வது போல பறந்தது. ஆழப் புள்ளி நிலையில் நின்று கொண்டிருந்த டேவிட் ஹஸ்ஸி ஓடிச் சென்று அந்தப் பந்தை பிடிக்கக் கரணம் அடித்தார் ஆனால் பந்து அவருக்குப் பிடிபடாமல் எல்லைக் கோட்டை எட்டிப் பிடித்தது” - இப்படி வர்ணனை செய்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெற்றி எஃப்.எம்மின் வலைத் தளத்துக்குச் சென்று கேட்டேன். பரவாயில்லை நான் எதிர்பார்த்தது போல இல்லாமல் கிரிக்கெட் சொல்லாடல்களை ஆங்கிலத்திலேயே சொன்னார்கள்.
முதலில் இப்படி ஒரு முயற்சிக்குப் பிடியுங்கள் பாராட்டுகளை. நான் இந்த வர்ணனையை ரசித்துக் கேட்டேன். என் டிவியின் வால்யூமைக் குறைத்துவிட்டு இவர்கள் அளித்த வர்ணனையையேக் கேட்டேன்.
இடையில் பாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றையும் நேயர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் வாசித்தார்கள். ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் இங்கிலாந்து வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியதை நடுவர் கண்டும் காணாமல் இருந்ததைப் பற்றி ஒருவர் அடித்த கமெண்ட் - ஐ.சி.சி நடுவர்களுக்கு தமிழ், இந்தி, உருது, சிங்களம் தவிர வேறு பாஷை தெரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். ரசித்தேன்.
இன்னொரு கமெண்ட் ஷான் டெயிட் வீசிய பந்து க்யீஸ்வெட்டரின் தலைக்கும் தோளுக்கும் இடையில் பறந்தது. வர்ணனையாளர் ஒருவர் கேட்டர். அந்த பந்து க்யீஸ்வெட்டரின் தலையில் பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? அவர் தலை தேர்ட் மேனிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.
நான் கேட்ட வரை எனக்குப் பட்ட ஒரு சில குறைகள்.
1. வர்ணனை செய்த இரண்டு பேரில் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகராகவும்(லோஷன்?), இன்னொருவர் இங்கிலாந்து ரசிகராகவும் இருந்ததாகப் பட்டது. அதானால் கமெண்டரியில் ஒருமுகமாக சில இடங்களில் கமெண்ட் செய்ததாக எனக்குப் (எனக்கு மட்டும் !?) பட்டது.
2. பெரும்பாலான இடங்களில் விகாரமாகத் தமிழ்ப் படுத்தாமல் நல்ல முறையில் தமிழ்ப்படுத்தியும், ஃபீல்டிங் பொசிசன்ஸ் எல்லாம் ஆங்கிலத்திலேயும் சொன்னார்கள். ஆனால் ஒருவர் அடுத்ததாக முகம் கொடுக்க வருவது <பேட்ஸ்மென் பெயர்> என்று அடிக்கடி சொன்னார். அது
தொடருங்கள் உங்கள் பணியை.
************************
தமிழ்ப் படுத்துகிறேன் என்று படுத்தி எடுக்கிறார்கள் சில நேரங்களில். உதாரணமாக சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளருக்கான கழிவறையை - மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.
முன்பொருமுறை எதோ ஒரு பதிவில் சைபர் கிரைம் என்பதை சுழிய குற்றம் என்று மக்கள் தொலைக்காட்சியில் சொல்வதாகப் (நான் மக்கள் தொலைக்காட்சி பார்த்ததில்லை) படித்தேன். சுழியம் என்றால் ZERO. சைபர் - என்றால் zeroவா? Cipher - என்றால் zero. Cyber Crime அல்லவா? Cipher Crime இல்லையே?
அதே போல பலர் பரவலாக ஃபேஸ்புக்கை மூஞ்சிப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கிறேன். ஃபேஸ்புக் என்பது ஒரு பெயர்ச்சொல். அதைத் தமிழ்ப்படுத்துவது சரியா? விண்டோஸ்-7ஐ சன்னல்கள் என்று அழைப்பீர்களா? பில் கேட்ஸை விலைப்பட்டியல் வாசல்கள் என்று அழைப்பீர்களா?
ஃபேஸ்புக் என்பது ஒரு Social Networking கான சாதனம். Social Networkingஐத் தமிழ்ப் படுத்துங்கள். ஃபேஸ்புக்கை இல்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
******************************
குஷ்பு திமுகவில் சேர்ந்துவிட்டார். குஷ்புவுக்குத் தமிழகத்தில் கோவில் கட்டினார்கள். அதை வைத்துப் பார்க்கும் போது குஷ்பு கடவுளாகிறார். கடவுள் மறுப்பை முதல் கொள்கையாகக் கொண்ட திமுக எப்படி குஷ்புவை ஏற்றுக் கொண்டது?
ஒரு வேளை வல்லமை தாராயோ பட ஒலித்தட்டு வெளியீட்டு விழாவில் செருப்புக் காலை சாமி படங்களின் முன்னால் போட்டிருந்ததால் அவரையும் கடவுள் மறுப்பாளாராகப் பார்க்கின்றார்களோ?
எது எப்படியோ? ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது.
*******************************
அண்ணன் அழகிரி பாராளுமன்றத்துக்குப் போகாமல் நாடு சுற்றிப் பார்ப்பது இப்போது பெரும் பிரச்சனையாகியிருக்கிறது. அழகிரி செய்வது ஒரு புறம் இருக்கட்டும்.
18 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் ஒரு நாட்டில் அமைச்சர் ஒருவர் தன் தாய்மொழியில் பேச பாராளுமன்ற நடைமுறைகள் அனுமதிப்பதில்லை என்பது எந்த விதத்தில் நியாயம்? அவர் பேசுவதை On-the-Fly மொழிபெயர்க்க நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா என்ன?
கேள்விகளுக்குப் பயந்து ஒரு அமைச்சர் ஓடி ஒளிகிறார் என்றால் அது அமைச்சரின் தவறு. இந்தியிலோ ஆங்கிலத்திலோ பேச முடியாததால் ஓடி ஒளிகிறார் என்றார் அது பாராளுமன்றத்தின் தவறு.
*******************************
1996ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்காக பிரச்சாரம் செய்த நடிகை மனோரமா, திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை பொதுக்கூட்ட மேடைகளில் மெண்டல் என்றும் பைத்தியம் என்றும் (முன்பொரு காலத்தில் பத்திரிக்கைகள் எழுதியதை வைத்து) கேலி செய்து பேசினார். பின்னாளில் அவர் அதற்கு வருத்தம் தெரிவித்ததும் ரஜினி பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டதும் வரலாறு.
ஆனால் இப்போது அதே அம்பு அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. உலகம் உருண்டைதான்.
ஆனாலும் ஒரு வயது முதிர்ந்த சீனியர் நடிகையைப் பற்றி இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதும் பத்திரிகைகளின் மீதான் எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
Wednesday, March 31, 2010
பிதற்றல்கள் - 03/31/2010
சர்வதேசப் பதிவர் சங்கமம்
நடக்காத/நடக்கப்போகாத ஒன்றை வைத்து நான் இதுவரை இரண்டு மொக்கைப் பதிவுகள் தேற்றிவிட்டேன். இனி இதை உங்கள் கைவசம் விட்டுவிடுகிறேன். இந்தக் கற்பனை சங்கமத்துக்கு வருகை தரும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்துப் பதிவர்களும் நிகழ்வைச் சிலாகித்தோ, திட்டியோ குட்டியோ சில பல பதிவுகளை எழுதுங்கள். பிட் அடிக்க ஈரோடு பதிவர் சங்கமம் பற்றி எழுதிய பதிவுகளை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள். (சென்னை வேண்டாம்... நல்லால்ல)
கலக்குங்கள் தோழர்களே..
தமிழ்த்திரையுலக ரசிகர்கள்
இவர்களின் தலைவிதி இப்படியா இருக்கும்.விஜய், உதயநிதி ஸ்டாலின், ஜீவா இவர்களுடன் இணைந்து த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இனி நாம் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாமாம்.
அய்யோ சாமி! நினைச்சிப் பாக்கக்கூட முடியலப்பா..
_____ பிதற்றல்கள்
என்னுடைய அந்த இன்னொரு வலைப்பூவில் சமீபத்தில் நடக்கும் அந்தப் போட்டித் தொடரைப் பற்றி இனி எழுத மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் ரசிகக் கண்மணிகள் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறார்கள். சிலர் வீட்டுக்குமுன் தீக்குளிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். பலா பட்டறை ஷங்கர் ஒரு படி மேலே போய் எனக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கிறார். அடுத்த வாரத்திலிருந்து திரும்பவும் என் பிதற்றலைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.
அங்காடித் தெரு
திரைப்படத்தைப் பற்றி கலவையாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன. எனக்கு வசந்த பாலனின் இரண்டாவது படம் மிகவும் பிடித்திருந்தது. எங்கள் ஊர்க்காரர் என்ற பாசம் வேறு. நான் வசிக்கும் பாழாய்ப்போன இந்த ஊரில் தியேட்டரில் சென்று பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்காது. ஆகவே டி.வி.டி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். (மே மாதம் இந்தியா வரும் வரை ஓடிக்கொண்டிருந்தால் அங்கேயும் பார்க்கலாம்).
பாஸ்டன்
பழமை பேசியண்ணன் பாணியில் பாசுடன் நகரத்துக்கு நாளை விஜயம். இங்கிருந்து 6 1/2 மணி நேரம் கார் பயணம். இதுவரைக்கும் சுற்றிப் பார்ப்பதற்காகப் போனதேயில்லை. இதுவே முதல் முறை. டக் டூர்ஸ் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி. அதோடு அக்வேரியமும் நன்றாக இருக்குமாம். போய்ப் பார்த்துவிட்டு வந்து விரிவாக ஒரு பதிவு போட்டுவிடலாம்.
பாஸ்டன் நகரில் என் பதிவர்கள் யாரும் - பாஸ்டன் ஸ்ரீராம் இருக்கிறார் ஆனால் அவருடன் பரிச்சயம் இல்லை - இருந்தால் ஒரு மாலை வேளை காஃபி வித் முகிலன் போடலாம்.
பதிவு
எண்ணிக்கை குறைந்து போனதற்குக் காரணம் நான் அந்தப் வலைப்பூவில் எழுதி வந்ததே. அதை எழுத வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும். மீண்டும் மிரட்டலைத் தொடர்வோம்.
நடக்காத/நடக்கப்போகாத ஒன்றை வைத்து நான் இதுவரை இரண்டு மொக்கைப் பதிவுகள் தேற்றிவிட்டேன். இனி இதை உங்கள் கைவசம் விட்டுவிடுகிறேன். இந்தக் கற்பனை சங்கமத்துக்கு வருகை தரும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்துப் பதிவர்களும் நிகழ்வைச் சிலாகித்தோ, திட்டியோ குட்டியோ சில பல பதிவுகளை எழுதுங்கள். பிட் அடிக்க ஈரோடு பதிவர் சங்கமம் பற்றி எழுதிய பதிவுகளை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள். (சென்னை வேண்டாம்... நல்லால்ல)
கலக்குங்கள் தோழர்களே..
தமிழ்த்திரையுலக ரசிகர்கள்
இவர்களின் தலைவிதி இப்படியா இருக்கும்.விஜய், உதயநிதி ஸ்டாலின், ஜீவா இவர்களுடன் இணைந்து த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இனி நாம் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாமாம்.
அய்யோ சாமி! நினைச்சிப் பாக்கக்கூட முடியலப்பா..
_____ பிதற்றல்கள்
என்னுடைய அந்த இன்னொரு வலைப்பூவில் சமீபத்தில் நடக்கும் அந்தப் போட்டித் தொடரைப் பற்றி இனி எழுத மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் ரசிகக் கண்மணிகள் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறார்கள். சிலர் வீட்டுக்குமுன் தீக்குளிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். பலா பட்டறை ஷங்கர் ஒரு படி மேலே போய் எனக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கிறார். அடுத்த வாரத்திலிருந்து திரும்பவும் என் பிதற்றலைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.
அங்காடித் தெரு
திரைப்படத்தைப் பற்றி கலவையாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன. எனக்கு வசந்த பாலனின் இரண்டாவது படம் மிகவும் பிடித்திருந்தது. எங்கள் ஊர்க்காரர் என்ற பாசம் வேறு. நான் வசிக்கும் பாழாய்ப்போன இந்த ஊரில் தியேட்டரில் சென்று பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்காது. ஆகவே டி.வி.டி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். (மே மாதம் இந்தியா வரும் வரை ஓடிக்கொண்டிருந்தால் அங்கேயும் பார்க்கலாம்).
பாஸ்டன்
பழமை பேசியண்ணன் பாணியில் பாசுடன் நகரத்துக்கு நாளை விஜயம். இங்கிருந்து 6 1/2 மணி நேரம் கார் பயணம். இதுவரைக்கும் சுற்றிப் பார்ப்பதற்காகப் போனதேயில்லை. இதுவே முதல் முறை. டக் டூர்ஸ் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி. அதோடு அக்வேரியமும் நன்றாக இருக்குமாம். போய்ப் பார்த்துவிட்டு வந்து விரிவாக ஒரு பதிவு போட்டுவிடலாம்.
பாஸ்டன் நகரில் என் பதிவர்கள் யாரும் - பாஸ்டன் ஸ்ரீராம் இருக்கிறார் ஆனால் அவருடன் பரிச்சயம் இல்லை - இருந்தால் ஒரு மாலை வேளை காஃபி வித் முகிலன் போடலாம்.
பதிவு
எண்ணிக்கை குறைந்து போனதற்குக் காரணம் நான் அந்தப் வலைப்பூவில் எழுதி வந்ததே. அதை எழுத வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும். மீண்டும் மிரட்டலைத் தொடர்வோம்.
Friday, March 12, 2010
பிதற்றல்கள் - 03/12/2010
கடந்த ஒரு வாரமாக நித்தியானந்தரும், மகளிர் தினமும் 33% இடஒதுக்கீடு மசோதாவும் பத்திகளை நிரப்பிக் கொண்டிருக்க, தினமணி நாளிதழின் தலையங்கத்தில் நான் பார்த்த அந்த தலையங்கம் என்னை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது.
இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கை, அந்நிய நாட்டு முதலீடு, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத செயலைச் செய்வார்கள் இந்த மன்மோகன்சிங்குகள் என்று தெரியவில்லை. இதே அந்நிய நாட்டு முதலாளிகள் அமெரிக்க/ஐரோப்பிய/ஆஸ்திரேலிய நாடுகளில் இப்படி ஒரு சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா?
*****************************************************************
சமீபத்தில் நான் எழுதிய பூ-வலி கதையில் பலர் நியாபகம் வைத்துக் கேட்ட கேள்வி, ஏன் உறவுகளை இன்னும் தொடரவில்லை என்று.
நான் உறவுகள் என்ற அந்தக் கதையைத் தொடங்கியது, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு அந்தக் காலகட்டத்தில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும், அதை மாமியார் என்ற ஒருவரால் 100% நிறைவேற்ற முடியுமா? அப்படி முடியாத பட்சத்தின் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றி சொல்லவே. இதில் வரும் பிரச்சனைகள் பல உணவு சம்மந்தமாகவே இருப்பதாக பலர் கடிந்து/சலித்துக் கொண்டனர். ஆனால் என்ன செய்வது, உணவுக்காகத் தானே வாழ்கிறோம்?
அதோடு கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு நாக்குக்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்பது தானே (குழந்தைக்கும் சேர்த்து) பிரதானமாக இருக்கும்?
ஆனாலும் வேறு பிரச்சனை எதையாவது யோசித்து விட்டே கதையைத் தொடர வேண்டும் என்பதால் தான் இந்த நீஈஈஈஈஈஈண்ட இடைவெளி. விரைவில் தொடர்வேன்.
*******************************************************************
விண்ணைத் தாண்டி வருவாயா நான் பார்க்கவில்லை. மச்சான்ஸ் என்ற இந்த வலைப்பூவில் நான் பார்த்த இந்த வீடியோவில் அருமையாக பண்டோராவையும், வி.தா.வ வையும் மிக்ஸியிருக்கிறார்கள். நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
********************************************************************
நூறாவது மகளிர் தினத்தன்று முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற கேத்தரின் பிகலோவுக்கு வாழ்த்துகள்.
சினிமாத்துறையில் நடிப்பு, பின்னணி பாடகர் போன்ற துறைகளில் பெண்கள் பெருமளவில் இருந்தாலும், திரைக்குப் பின்னால் அவர்களின் பங்களிப்பு கோலிவுட்டோ ஹாலிவுட்டோ மிகவும் சொற்பமாகவே இருந்து வந்திருக்கிறது. சினிமாத்துறை ஆணாதிக்கத் துறையாக இருந்து வருவது அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த ஆஸ்கர் வெற்றி அந்தக் குறையைப் போக்கி பல பெண் இயக்குநர்களையும், மற்ற behind-the-screen கலைகளில் ஈடுபடுபவர்களையும் கொண்டு வரும் என்று நம்புவோம்.
*********************************************************************
வானம்பாடிகள் சார் இங்க சொன்ன மாதிரி புது வருசத்துல இருந்து யார் கவிதைக்கும் உரை எழுதுறத செய்யக்கூடாதுன்னு தீர்மானம் எடுத்திருந்தேன். ஆனாலும் ரசிகப் பெருமக்கள் விரும்பி வேண்டி கேட்டுக்கிட்டதால....
(மன்னிச்சிருங்க யக்காவ்)
இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கை, அந்நிய நாட்டு முதலீடு, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத செயலைச் செய்வார்கள் இந்த மன்மோகன்சிங்குகள் என்று தெரியவில்லை. இதே அந்நிய நாட்டு முதலாளிகள் அமெரிக்க/ஐரோப்பிய/ஆஸ்திரேலிய நாடுகளில் இப்படி ஒரு சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா?
*****************************************************************
சமீபத்தில் நான் எழுதிய பூ-வலி கதையில் பலர் நியாபகம் வைத்துக் கேட்ட கேள்வி, ஏன் உறவுகளை இன்னும் தொடரவில்லை என்று.
நான் உறவுகள் என்ற அந்தக் கதையைத் தொடங்கியது, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு அந்தக் காலகட்டத்தில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும், அதை மாமியார் என்ற ஒருவரால் 100% நிறைவேற்ற முடியுமா? அப்படி முடியாத பட்சத்தின் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றி சொல்லவே. இதில் வரும் பிரச்சனைகள் பல உணவு சம்மந்தமாகவே இருப்பதாக பலர் கடிந்து/சலித்துக் கொண்டனர். ஆனால் என்ன செய்வது, உணவுக்காகத் தானே வாழ்கிறோம்?
அதோடு கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு நாக்குக்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்பது தானே (குழந்தைக்கும் சேர்த்து) பிரதானமாக இருக்கும்?
ஆனாலும் வேறு பிரச்சனை எதையாவது யோசித்து விட்டே கதையைத் தொடர வேண்டும் என்பதால் தான் இந்த நீஈஈஈஈஈஈண்ட இடைவெளி. விரைவில் தொடர்வேன்.
*******************************************************************
விண்ணைத் தாண்டி வருவாயா நான் பார்க்கவில்லை. மச்சான்ஸ் என்ற இந்த வலைப்பூவில் நான் பார்த்த இந்த வீடியோவில் அருமையாக பண்டோராவையும், வி.தா.வ வையும் மிக்ஸியிருக்கிறார்கள். நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
********************************************************************
நூறாவது மகளிர் தினத்தன்று முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற கேத்தரின் பிகலோவுக்கு வாழ்த்துகள்.
சினிமாத்துறையில் நடிப்பு, பின்னணி பாடகர் போன்ற துறைகளில் பெண்கள் பெருமளவில் இருந்தாலும், திரைக்குப் பின்னால் அவர்களின் பங்களிப்பு கோலிவுட்டோ ஹாலிவுட்டோ மிகவும் சொற்பமாகவே இருந்து வந்திருக்கிறது. சினிமாத்துறை ஆணாதிக்கத் துறையாக இருந்து வருவது அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த ஆஸ்கர் வெற்றி அந்தக் குறையைப் போக்கி பல பெண் இயக்குநர்களையும், மற்ற behind-the-screen கலைகளில் ஈடுபடுபவர்களையும் கொண்டு வரும் என்று நம்புவோம்.
*********************************************************************
வானம்பாடிகள் சார் இங்க சொன்ன மாதிரி புது வருசத்துல இருந்து யார் கவிதைக்கும் உரை எழுதுறத செய்யக்கூடாதுன்னு தீர்மானம் எடுத்திருந்தேன். ஆனாலும் ரசிகப் பெருமக்கள் விரும்பி வேண்டி கேட்டுக்கிட்டதால....
(மன்னிச்சிருங்க யக்காவ்)
பன்னாட.. வெண்பா...
தலைப்புலயே தெரிஞ்சிருச்சி, நளவெண்பா - பன்னாட வெண்பா ஆனதுனால இதுல நளனத்தான் பன்னாடன்னு திட்டப் போறாங்கன்னு.
தமயந்தியிடம்...
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
இது தூது போன அன்னப் பறவை தமயந்தியிடம் நளனைப் பற்றி சொன்னது. மங்கையர்கள் தம்மனத்தை வாங்கும் தடந்தோளன்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
இது அதே அன்னம் தமயந்தியோட குணங்களா நளனிடம் சொன்னது (அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம் ஆகிய நான்கு குணங்களும் நான்கு படைகளாகவும், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் ஆகிய ஐந்து புலன்களை ஐந்து அமைச்சர்களாகவும் பெற்றிருக்கும் பேரரசி தமயந்தி)
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
இது அதே அன்னம் தமயந்தியோட குணங்களா நளனிடம் சொன்னது (அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம் ஆகிய நான்கு குணங்களும் நான்கு படைகளாகவும், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் ஆகிய ஐந்து புலன்களை ஐந்து அமைச்சர்களாகவும் பெற்றிருக்கும் பேரரசி தமயந்தி)
தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா... இப்பிடி நளனுக்கும் தமயந்திக்கும் தூது(தரகர்) வேலைக்குச் சென்றே உன் புத்தியெல்லாம் தீர்ந்து போச்சா?
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு... அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்து உண்ணும் என்று சங்ககாலத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கவிதையில் சொல்லப்படும் அன்னப் பறவை, வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சி தண்ணிய மட்டும் குடிச்சிக் குடிச்சி வீங்கி போச்சு
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு... அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்து உண்ணும் என்று சங்ககாலத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கவிதையில் சொல்லப்படும் அன்னப் பறவை, வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சி தண்ணிய மட்டும் குடிச்சிக் குடிச்சி வீங்கி போச்சு
அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
சேரக் கூடாதவுங்களோட சேந்து தன்னையும் எரிச்சி பிரிச்ச பால சுண்டக்காச்சுது.
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
சேரக் கூடாதவுங்களோட சேந்து தன்னையும் எரிச்சி பிரிச்ச பால சுண்டக்காச்சுது.
பன்னாட... பன்னாட...
இது அந்த பறவையைத் திட்டும் வார்த்தை.. அன்னம் ஒரு விசயத்தில் உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விடும் செயலுக்கு உதாரணம்/உருவகம். பன்னாடை என்னும் சல்லடையோ நல்ல விசயங்களை விட்டு விட்டு கசடுகளை மட்டுமே தன்னகத்தே கொள்ளும் செயலுக்கு உ.தா. தன்னியல்பை செய்யாமல் எதிர்மறையாக செய்கிறது.
இந்தக் கவிதை ஒரு அப்ஸ்ட்ராக்ட். படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் மனநிலையைப் பொறுத்து அர்த்தம் தோன்றுகிறது. நான் நான்கு மனநிலையில் இருந்து இதைப் பார்த்தேன்.
1. ஈழத்தமிழர் - நம்மை வேட்டையாடிய கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன் கூட்டத்தாரோடு பிரச்சனை என்று வந்ததும் அவன் பின்னால் போய் அணி சேர்ந்து நிற்கிறார்களே? என்ற ஆதங்கம்.
2. நித்யானந்தத்தின் பக்தர் - சினிமா நடிகைகளையும் பார்ட்டிகளில் சுற்றித் திரியும் நடிகைகளுடன் சேர்ந்து ஆன்மிகத்தை விட்டு விட்டு இப்படி அசிங்கத்தில் இறங்கிவிட்டாயே நித்யானந்தம்? அந்த நடிகைக்கு இதெல்லாம் சாதாரணமாய் இருக்கலாம். ஆனால் உலகம் உன்னையல்லவா ஏளனம் செய்கிறது?
3. ரஞ்சிதாவின் ரசிகர் - கட்டிய கணவனை விட்டுப் பிரிந்த துக்கத்தை மறக்க ஆன்மிகம் தான் வழியென்றால் அதற்கு இந்த நித்தியானந்தத்திடம் போய் உறவு கொள்ளும் அளவுக்கா ஆன்மிகத்தில் ஈடுபடுவது? அந்த ஆளின் சாயத்தை வெளுக்க உன் அந்தரங்கத்தை அல்லவா நாறடிக்கிறார்கள்?
4. சாருவின் விசிறி - எத்தனையோ நல்ல விசயங்கள் உலகத்தில் இருக்கும் போது இந்த சாமியாருடன் சேர்ந்து அவருக்குப் போய் சொம்பு தூக்கினீரே? இப்போது அதே சாமியாருடன் சேர்ந்து உன்னையும் தானே இந்த உலகம் கும்முகிறது?
இதுதான் ஒரு கவிதையின் பலம். எழுதியவர் மேலே உள்ள எந்த நிகழ்வையும், இல்லை வேறு ஏதாவது ஒரு நிகழ்வைக்கூட மனதில் வைத்து எழுதியிருக்கலாம். ஆனால் ஊற்றப்படும் பாத்திரத்துக்கு ஏற்ப வடிவம் மாறும் நீரைப் போல படிப்பவரின் மனநிலைக்கேற்ப அர்த்தம் விளங்கும் இது மாதிரி கவிதைகள் எனக்கு எழுத வரவில்லையே என்ற வருத்தத்தை எனக்குள் தோற்றுவிக்கிறது இக்கவிதை.
சாலையில் ஒரு மரத்துண்டு கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.அதைப் பார்க்கும்
ஒரு சிற்பிக்கு அந்த மரத்தில் ஒரு நல்ல சிற்பம் வடிக்கத் தோன்றும்.
ஒரு தச்சனுக்கு முக்காலி ஒன்று செய்யத் தோன்றும்
ஒரு விறகு வியாபாரிக்கு உடைத்து அதை விறகாக்கி விற்கத் தோன்றும்
ஒரு கிரிக்கெட் வீரனுக்கு அந்த மரத்தில் மட்டையும் ஸ்டம்புகளும் செய்து விளையாடத் தோன்றும்
ஒரு சுற்றுச் சூழல் பாதுகாவலனுக்கு, ஐயோ எந்த மரத்தை துண்டாக்கினாரோ என்ற வருத்தம் தோன்றும்
ஒரு சிலருக்கு கீழே குப்பை கிடக்கிறது என்றும் தோன்றும்.
இந்தக் கவிதை ஒரு அப்ஸ்ட்ராக்ட். படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் மனநிலையைப் பொறுத்து அர்த்தம் தோன்றுகிறது. நான் நான்கு மனநிலையில் இருந்து இதைப் பார்த்தேன்.
1. ஈழத்தமிழர் - நம்மை வேட்டையாடிய கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன் கூட்டத்தாரோடு பிரச்சனை என்று வந்ததும் அவன் பின்னால் போய் அணி சேர்ந்து நிற்கிறார்களே? என்ற ஆதங்கம்.
2. நித்யானந்தத்தின் பக்தர் - சினிமா நடிகைகளையும் பார்ட்டிகளில் சுற்றித் திரியும் நடிகைகளுடன் சேர்ந்து ஆன்மிகத்தை விட்டு விட்டு இப்படி அசிங்கத்தில் இறங்கிவிட்டாயே நித்யானந்தம்? அந்த நடிகைக்கு இதெல்லாம் சாதாரணமாய் இருக்கலாம். ஆனால் உலகம் உன்னையல்லவா ஏளனம் செய்கிறது?
3. ரஞ்சிதாவின் ரசிகர் - கட்டிய கணவனை விட்டுப் பிரிந்த துக்கத்தை மறக்க ஆன்மிகம் தான் வழியென்றால் அதற்கு இந்த நித்தியானந்தத்திடம் போய் உறவு கொள்ளும் அளவுக்கா ஆன்மிகத்தில் ஈடுபடுவது? அந்த ஆளின் சாயத்தை வெளுக்க உன் அந்தரங்கத்தை அல்லவா நாறடிக்கிறார்கள்?
4. சாருவின் விசிறி - எத்தனையோ நல்ல விசயங்கள் உலகத்தில் இருக்கும் போது இந்த சாமியாருடன் சேர்ந்து அவருக்குப் போய் சொம்பு தூக்கினீரே? இப்போது அதே சாமியாருடன் சேர்ந்து உன்னையும் தானே இந்த உலகம் கும்முகிறது?
இதுதான் ஒரு கவிதையின் பலம். எழுதியவர் மேலே உள்ள எந்த நிகழ்வையும், இல்லை வேறு ஏதாவது ஒரு நிகழ்வைக்கூட மனதில் வைத்து எழுதியிருக்கலாம். ஆனால் ஊற்றப்படும் பாத்திரத்துக்கு ஏற்ப வடிவம் மாறும் நீரைப் போல படிப்பவரின் மனநிலைக்கேற்ப அர்த்தம் விளங்கும் இது மாதிரி கவிதைகள் எனக்கு எழுத வரவில்லையே என்ற வருத்தத்தை எனக்குள் தோற்றுவிக்கிறது இக்கவிதை.
சாலையில் ஒரு மரத்துண்டு கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.அதைப் பார்க்கும்
ஒரு சிற்பிக்கு அந்த மரத்தில் ஒரு நல்ல சிற்பம் வடிக்கத் தோன்றும்.
ஒரு தச்சனுக்கு முக்காலி ஒன்று செய்யத் தோன்றும்
ஒரு விறகு வியாபாரிக்கு உடைத்து அதை விறகாக்கி விற்கத் தோன்றும்
ஒரு கிரிக்கெட் வீரனுக்கு அந்த மரத்தில் மட்டையும் ஸ்டம்புகளும் செய்து விளையாடத் தோன்றும்
ஒரு சுற்றுச் சூழல் பாதுகாவலனுக்கு, ஐயோ எந்த மரத்தை துண்டாக்கினாரோ என்ற வருத்தம் தோன்றும்
ஒரு சிலருக்கு கீழே குப்பை கிடக்கிறது என்றும் தோன்றும்.
Sunday, February 28, 2010
பிதற்றல்கள் - 02/28/2010
பல வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கிரிக்கெட் சம்மந்தப்பட்ட பதிவுகள் இந்த வலைப்பூவுக்கு மாற்றப்பட்டுள்ளது. உங்கள் மேலான ஆதரவை அங்கேயும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கிரிக்கெட் பிதற்றல்கள்
=======================
ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக்காத ஒருத்தர் இனிமே நீ கிரிக்கெட் பத்தி எழுதினா உன் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். ஸ்விட்சர்லாந்திலயே இருந்திருவேன்னு சொன்னதால, வேற வழியே இல்லாம என்னோட கிரிக்கெட் அரிப்பைத் தணிச்சிக்கிறதுக்காக கிரிக்கெட் பதிவுகளை தனியா ஒரு ப்ளாக்ல போட்டுட்டேன் - கிரிக்கெட் பிதற்றல்கள் .
இனிமே என்னோட கிரிக்கெட் பத்தின இடுகைகளைப் பாக்க வேண்டாம் அப்பிடின்னு நினைக்கிறவங்க இங்கயே நின்னுக்கலாம். கிரிக்கெட் இடுகைக்கு மட்டும் தான் வர்றோம்னு சொல்றவங்க அங்க மட்டும் நின்னுக்கலாம். ரெண்டுமே பாப்போம்னு சொல்றவங்க வேற வழியில்ல ரெண்டு வீட்டுக்கும் வந்து தான் ஆகணும். ரெண்டுமே வேணாம்டான்னு சொல்றவங்க வேற நல்ல ப்ளாக் பாத்து போங்க.. :)) இப்ப நான் எழுதுற இந்த கிரிக்கெட் தான் இந்த ப்ளாக்ல நான் கடைசியா எழுதுற அந்த விளையாட்டப் பத்தின வார்த்தை.
இந்தியா - பாகிஸ்தான்
======================
ரொம்ப சந்தோசம்ங்க. இந்தியா இன்னிக்கி பாகிஸ்தானை தோறகடிச்சிருச்சி. அதான் கிரிக்கெட் பத்தி எழுத மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. இது ஹாக்கி மேட்டர். 4-1 அப்பிடிங்கிற கோல் கணக்குல வெற்றிக்கனியைத் தட்டிப் பறிச்சிருக்கு. இதே வேகத்தோட உலகக் கோப்பையையும் பிடிங்கிட்டு வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்.
அனோமா பொன்சேகா
======================
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு இந்தம்மா பேரை எழுதி அந்தப் பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி எறிஞ்சேன். அப்புறம் என்னங்க. அந்தாளு செயில்ல இருந்துக்கிட்டே தேர்தல்ல நிக்கிறதுக்கு மனு தாக்கல் செஞ்சாராம். காந்தி, மண்டேலாவுக்கு அப்புறம் இவருக்குத்தான் அந்தக் குடுப்பினை கெடச்சிருக்காம். யார யாரு கூட கம்ப்பேர் பண்றதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்? இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.
த்ரீ இடியட்ஸ்
=============
ஓப்பனிங் சீன். காலேஜ்ல சீனியர்ஸ் எல்லாம் ஜூனியர்ஸ ராக்கிங் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்ப ஜூனியர்ஸ் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுறாங்க. ஒருத்தர் சொல்றாரு “இதை எல்லாம் யாரு கேக்கப்போறாங்க?”
“அதுக்குன்னு ஒருத்தன் பொறந்திருப்பான்”
உடனே கட் பண்ணி வெளிய காட்டுறாங்க. ஷூ போட்ட ரெண்டு கால் மட்டும் வேகமா ஓடி வருது. அப்பிடியே மேல கேமரா போகுது. முதுகுல ஒரு பேக்பாக் மாட்டிக்கிட்டு ஒரு உருவம் வேகமா ஒடுது. அப்பிடியே ஓடி ஒரு பஸ்ஸை ஓவர் டேக் பண்ணி திரும்பி அந்த டிரைவரைப் பாத்து ஒரு லுக்கு விடுது. அப்பிடியே அந்த பஸ்ஸோட கண்ணாடி வழியாக் காட்டுறாங்க. கையச் சுழட்டி ஒரு சல்யூட் வக்கிது. அப்பிடியே ஒரு குத்து ஓப்பனிங் சாங்.
அப்புறம் அந்தக் காலேஜுக்குள்ள நுழையிறாரு. சீனியர்ஸ் அவரையும் ராக்கிங் பண்ணப் பாக்குறாங்க. அப்ப சொல்றாரு - “என்ன ராக்கிங்க் பண்ணனும்னா நானா பண்ணிக்கிட்டாத்தான் உண்டு. வேற வேற வேற எவனாலயும் பண்ண முடியாது”
இப்பிடித்தான் இருக்கப் போவுது தமிழ்ல.. ஏன்னா அதுல விஜய் நடிக்கப்போறாராம். இந்த விசயம் கேள்விப் பட்டதுல இருந்து சரியா தூக்கமே வர மாட்டேங்குது. தமிழ் கூறும் நல்லுலகம் இன்னும் என்ன எல்லாம் சோதனைய அனுபவிக்கனுமோ தெரியலை.
பனிப் பொழிவு
==============
கடந்த நாலு நாளா இங்க சரியான பனிப் பொழிவு. வீட்டச் சுத்தி ஒரே பனி. நம்ம ஜூனியர் இதுவரைக்கும் பல தடவை பனிப் பொழிவைப் பாத்திருந்தாலும், இதுவரைக்கும் அதுல விளையாடினது இல்ல. இந்தத் தடவை கொஞ்சம் அதிகமாவே இருக்கவும் அவருக்கு ஸ்னோ ஜாக்கெட் போட்டு விட்டு வெளிய இறக்கி விட்டோம். நல்லா எஞ்சாய் செஞ்சாரு. அதுக்கப்புறம் அடிக்கடி வெளிய போகணும்னு அடம்புடிக்க ஆரம்பிச்சிட்டாரு.
கிரிக்கெட் பிதற்றல்கள்
=======================
ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக்காத ஒருத்தர் இனிமே நீ கிரிக்கெட் பத்தி எழுதினா உன் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். ஸ்விட்சர்லாந்திலயே இருந்திருவேன்னு சொன்னதால, வேற வழியே இல்லாம என்னோட கிரிக்கெட் அரிப்பைத் தணிச்சிக்கிறதுக்காக கிரிக்கெட் பதிவுகளை தனியா ஒரு ப்ளாக்ல போட்டுட்டேன் - கிரிக்கெட் பிதற்றல்கள் .
இனிமே என்னோட கிரிக்கெட் பத்தின இடுகைகளைப் பாக்க வேண்டாம் அப்பிடின்னு நினைக்கிறவங்க இங்கயே நின்னுக்கலாம். கிரிக்கெட் இடுகைக்கு மட்டும் தான் வர்றோம்னு சொல்றவங்க அங்க மட்டும் நின்னுக்கலாம். ரெண்டுமே பாப்போம்னு சொல்றவங்க வேற வழியில்ல ரெண்டு வீட்டுக்கும் வந்து தான் ஆகணும். ரெண்டுமே வேணாம்டான்னு சொல்றவங்க வேற நல்ல ப்ளாக் பாத்து போங்க.. :)) இப்ப நான் எழுதுற இந்த கிரிக்கெட் தான் இந்த ப்ளாக்ல நான் கடைசியா எழுதுற அந்த விளையாட்டப் பத்தின வார்த்தை.
இந்தியா - பாகிஸ்தான்
======================
ரொம்ப சந்தோசம்ங்க. இந்தியா இன்னிக்கி பாகிஸ்தானை தோறகடிச்சிருச்சி. அதான் கிரிக்கெட் பத்தி எழுத மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. இது ஹாக்கி மேட்டர். 4-1 அப்பிடிங்கிற கோல் கணக்குல வெற்றிக்கனியைத் தட்டிப் பறிச்சிருக்கு. இதே வேகத்தோட உலகக் கோப்பையையும் பிடிங்கிட்டு வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்.
அனோமா பொன்சேகா
======================
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு இந்தம்மா பேரை எழுதி அந்தப் பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி எறிஞ்சேன். அப்புறம் என்னங்க. அந்தாளு செயில்ல இருந்துக்கிட்டே தேர்தல்ல நிக்கிறதுக்கு மனு தாக்கல் செஞ்சாராம். காந்தி, மண்டேலாவுக்கு அப்புறம் இவருக்குத்தான் அந்தக் குடுப்பினை கெடச்சிருக்காம். யார யாரு கூட கம்ப்பேர் பண்றதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்? இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.
த்ரீ இடியட்ஸ்
=============
ஓப்பனிங் சீன். காலேஜ்ல சீனியர்ஸ் எல்லாம் ஜூனியர்ஸ ராக்கிங் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்ப ஜூனியர்ஸ் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுறாங்க. ஒருத்தர் சொல்றாரு “இதை எல்லாம் யாரு கேக்கப்போறாங்க?”
“அதுக்குன்னு ஒருத்தன் பொறந்திருப்பான்”
உடனே கட் பண்ணி வெளிய காட்டுறாங்க. ஷூ போட்ட ரெண்டு கால் மட்டும் வேகமா ஓடி வருது. அப்பிடியே மேல கேமரா போகுது. முதுகுல ஒரு பேக்பாக் மாட்டிக்கிட்டு ஒரு உருவம் வேகமா ஒடுது. அப்பிடியே ஓடி ஒரு பஸ்ஸை ஓவர் டேக் பண்ணி திரும்பி அந்த டிரைவரைப் பாத்து ஒரு லுக்கு விடுது. அப்பிடியே அந்த பஸ்ஸோட கண்ணாடி வழியாக் காட்டுறாங்க. கையச் சுழட்டி ஒரு சல்யூட் வக்கிது. அப்பிடியே ஒரு குத்து ஓப்பனிங் சாங்.
அப்புறம் அந்தக் காலேஜுக்குள்ள நுழையிறாரு. சீனியர்ஸ் அவரையும் ராக்கிங் பண்ணப் பாக்குறாங்க. அப்ப சொல்றாரு - “என்ன ராக்கிங்க் பண்ணனும்னா நானா பண்ணிக்கிட்டாத்தான் உண்டு. வேற வேற வேற எவனாலயும் பண்ண முடியாது”
இப்பிடித்தான் இருக்கப் போவுது தமிழ்ல.. ஏன்னா அதுல விஜய் நடிக்கப்போறாராம். இந்த விசயம் கேள்விப் பட்டதுல இருந்து சரியா தூக்கமே வர மாட்டேங்குது. தமிழ் கூறும் நல்லுலகம் இன்னும் என்ன எல்லாம் சோதனைய அனுபவிக்கனுமோ தெரியலை.
பனிப் பொழிவு
==============
கடந்த நாலு நாளா இங்க சரியான பனிப் பொழிவு. வீட்டச் சுத்தி ஒரே பனி. நம்ம ஜூனியர் இதுவரைக்கும் பல தடவை பனிப் பொழிவைப் பாத்திருந்தாலும், இதுவரைக்கும் அதுல விளையாடினது இல்ல. இந்தத் தடவை கொஞ்சம் அதிகமாவே இருக்கவும் அவருக்கு ஸ்னோ ஜாக்கெட் போட்டு விட்டு வெளிய இறக்கி விட்டோம். நல்லா எஞ்சாய் செஞ்சாரு. அதுக்கப்புறம் அடிக்கடி வெளிய போகணும்னு அடம்புடிக்க ஆரம்பிச்சிட்டாரு.
Saturday, February 20, 2010
பிதற்றல்கள் - 2/21/2010
மறுபடியும் ஒரு குண்டு வெடிப்பு. இந்த முறை புனே. ஜெர்மன் பேக்கரி என்ற ஒரு முக்கியமான வெளிநாட்டவர் கூடும் இடத்தை குறிவைத்துத் தாக்கியிருக்கிறார்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர். இவர்கள் தாலிபனுக்கு ஆதராவாக இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்கிறது மீடியா. வெளிநாட்டவரைத் தாக்குவதன் மூலம் இந்தியாவுக்குக் கெட்ட பெயரையும், வெளிநாட்டவருக்கு எச்சரிக்கையையும் விடுக்கும் வண்ணம் செய்திருக்கலாம் என்கின்றனர்.
குண்டு வெடிப்பில் மரணமடைந்த/காயமுற்றவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல்கள்.
எனக்கு எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்ற எண்ணம் உண்டு. அதை மீண்டும் நிரூபித்தது கல்கத்தாவில் நடந்த இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி.
20-20 போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு அணி தவறு செய்து விட்டால் அதை திருத்த அவர்களுக்கு நேரம் கிடைக்காது. அதே போல ஒரு அணி டாமினேட் செய்யத் துவங்கிவிட்டால் அதற்கு அணை போட நேரமிருக்காது. ஆனால் டெஸ்ட் போட்டி அப்படியல்ல. செய்த தவறை திருத்திக் கொள்ள நேரம் இருக்கும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு டாமினேட் செய்வதும் சுலபமான காரியம் இல்லை.
இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி இந்தப் போட்டியை வென்றதன் மூலம் தொடரைச் சமன் செய்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது மேலும் சிறப்பு. கடைசி நிமிடம் வரை சீட்டின் நுனியில் (மெத்தையின் ?!) உட்கார்ந்து என் எந்த விரலிலும் நகமே இல்லை.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், கடைசி நாளில் சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் சிங், மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கும் வாழ்த்துகள்.
அஜித் முதல்வரின் பாராட்டு விழாவில் பேசினாலும் பேசினார், அந்த அரசியல் வெப்பத்தில் குளிர் காய பலர் புறப்பட்டு விட்டனர். குறிப்பாக ஜாக்குவார் தங்கம். இவர் அஜீத்தை ஒருமையில் பேசி மிரட்டியதும், ரஜினி ஒரு ஜோக்கர் என்று தாக்கியதும் எதற்காக? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடிகையைக் கற்பழித்த வழக்கில் கிடைத்த கெட்ட பெயரைப் போக்கிக் கொள்ளவா?
இது இப்படி இருக்க வி.சி.குகநாதன் ஊரோடு ஒத்து வாழாவிட்டால் மிரட்டத்தான் செய்வோம் என்று சொல்லியிருப்பது அநாகரீகத்தின் உச்சம். தனி மனிதனுக்கு சுதந்திரமே இல்லையா?
கம்பராமாயணத்தில் ரெயின் - செக் பதிவில் ஸ்ரீ என்று ஒருவர் பின்னூட்டம் போட்டு, அது எப்பிடி ரெயின் செக் ஆகும், தசரதன் தான் ஸ்டாக் இல்லைன்னு சொல்லலையே என்று கேட்டிருந்தார். அமெரிக்கர்கள் சாதாரணமாக பேசும்போது நிறைய துறை (குறிப்பாக விளையாட்டு) சார்ந்த வார்த்தைகளை உபயோகிப்பார்கள். பால் பார்க் எஸ்டிமேட், பிட்ச், ஹோம் ரன், ரன் அப், டச் டவுன் இப்படி. அதில் ஒன்று இந்த ரெயின் செக். யாருக்காவது நீங்கள் காஃபி வாங்கித் தருவதாக சொல்கிறீர்கள். அந்நபர் அப்போதைக்கு காஃபி அருந்த மனமில்லை, ஆனால் நீங்கள் வாங்கித் தருவதாக சொன்னதையும் விட முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் அவர் - “I am not interested to have a coffee now, but let me take a rain check" என்று சொல்வார். இந்த கோணத்தில் தான் அந்தப் பதிவை எழுதினேன். இதே சம்பவத்தையே எழுதியிருக்க முடியும், ஆனால் தங்கமணியை எப்படி உள்ளே நுழைப்பது? அதனால்தான் ஆஃபிஸ் மேக்ஸ்.
இந்திய ஆங்கிலத்துக்கும், பிரித்தானிய ஆங்கிலத்துக்கும், அமெரிக்க ஆங்கிலத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை நம்மில் பலர் அறிவோம்.
குறிப்பாக நம்மிடம் இருக்கும் பல உறவுகளுக்கு அவர்களிடத்தில் பெயர்கள் இல்லை. கீழே ???? குறியிட்ட உறவுகளுக்கு ஆங்கிலத்தில் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
மனைவியின் தங்கை - மைத்துனி - sister-in-law
மனைவியின் தங்கையின் கணவர் - சகலை - ???
கணவரின் தம்பி - கொழுந்தன் - Brother -in - law
கணவரின் தம்பி மனைவி - ஓரகத்தி - ???
நாம் இந்திய ஆங்கிலத்தில் உறவுகளுக்கு இல்லாத பல வார்த்தைகளைச் சேர்த்து புதிய வார்த்தைகளை உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு சித்தி, அத்தை இரண்டுமே ஆங்கிலத்தில் aunty தான். அத்தையின் மகளை - கசின் cousin - என்றும், சித்தியின் மகளை - கசின் சிஸ்டர் - cousin sister - என்றும் சொல்கிறோம். உண்மையில் சித்தி/சித்தப்பா/பெரியம்மா/பெரியப்பாவின் மகனோ/மகளோ அல்லது அத்தை/மாமா/மாமியின் மகனோ/மகளோ தான்.
இப்படி நாம் உருவாக்கிய இன்னும் சில வார்த்தைகள் கோ-பிரதர், லவ்-அஃபயர் போன்றவை. உங்களுக்குத் தெரிந்த இப்படிப்பட்ட வார்த்தைகள் சிலவற்றை பட்டியலிடுங்களேன்?
பிறகு பார்க்கலாம்.
குண்டு வெடிப்பில் மரணமடைந்த/காயமுற்றவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல்கள்.
எனக்கு எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்ற எண்ணம் உண்டு. அதை மீண்டும் நிரூபித்தது கல்கத்தாவில் நடந்த இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி.
20-20 போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு அணி தவறு செய்து விட்டால் அதை திருத்த அவர்களுக்கு நேரம் கிடைக்காது. அதே போல ஒரு அணி டாமினேட் செய்யத் துவங்கிவிட்டால் அதற்கு அணை போட நேரமிருக்காது. ஆனால் டெஸ்ட் போட்டி அப்படியல்ல. செய்த தவறை திருத்திக் கொள்ள நேரம் இருக்கும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு டாமினேட் செய்வதும் சுலபமான காரியம் இல்லை.
இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி இந்தப் போட்டியை வென்றதன் மூலம் தொடரைச் சமன் செய்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது மேலும் சிறப்பு. கடைசி நிமிடம் வரை சீட்டின் நுனியில் (மெத்தையின் ?!) உட்கார்ந்து என் எந்த விரலிலும் நகமே இல்லை.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், கடைசி நாளில் சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் சிங், மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கும் வாழ்த்துகள்.
அஜித் முதல்வரின் பாராட்டு விழாவில் பேசினாலும் பேசினார், அந்த அரசியல் வெப்பத்தில் குளிர் காய பலர் புறப்பட்டு விட்டனர். குறிப்பாக ஜாக்குவார் தங்கம். இவர் அஜீத்தை ஒருமையில் பேசி மிரட்டியதும், ரஜினி ஒரு ஜோக்கர் என்று தாக்கியதும் எதற்காக? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடிகையைக் கற்பழித்த வழக்கில் கிடைத்த கெட்ட பெயரைப் போக்கிக் கொள்ளவா?
இது இப்படி இருக்க வி.சி.குகநாதன் ஊரோடு ஒத்து வாழாவிட்டால் மிரட்டத்தான் செய்வோம் என்று சொல்லியிருப்பது அநாகரீகத்தின் உச்சம். தனி மனிதனுக்கு சுதந்திரமே இல்லையா?
கம்பராமாயணத்தில் ரெயின் - செக் பதிவில் ஸ்ரீ என்று ஒருவர் பின்னூட்டம் போட்டு, அது எப்பிடி ரெயின் செக் ஆகும், தசரதன் தான் ஸ்டாக் இல்லைன்னு சொல்லலையே என்று கேட்டிருந்தார். அமெரிக்கர்கள் சாதாரணமாக பேசும்போது நிறைய துறை (குறிப்பாக விளையாட்டு) சார்ந்த வார்த்தைகளை உபயோகிப்பார்கள். பால் பார்க் எஸ்டிமேட், பிட்ச், ஹோம் ரன், ரன் அப், டச் டவுன் இப்படி. அதில் ஒன்று இந்த ரெயின் செக். யாருக்காவது நீங்கள் காஃபி வாங்கித் தருவதாக சொல்கிறீர்கள். அந்நபர் அப்போதைக்கு காஃபி அருந்த மனமில்லை, ஆனால் நீங்கள் வாங்கித் தருவதாக சொன்னதையும் விட முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் அவர் - “I am not interested to have a coffee now, but let me take a rain check" என்று சொல்வார். இந்த கோணத்தில் தான் அந்தப் பதிவை எழுதினேன். இதே சம்பவத்தையே எழுதியிருக்க முடியும், ஆனால் தங்கமணியை எப்படி உள்ளே நுழைப்பது? அதனால்தான் ஆஃபிஸ் மேக்ஸ்.
இந்திய ஆங்கிலத்துக்கும், பிரித்தானிய ஆங்கிலத்துக்கும், அமெரிக்க ஆங்கிலத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை நம்மில் பலர் அறிவோம்.
குறிப்பாக நம்மிடம் இருக்கும் பல உறவுகளுக்கு அவர்களிடத்தில் பெயர்கள் இல்லை. கீழே ???? குறியிட்ட உறவுகளுக்கு ஆங்கிலத்தில் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
மனைவியின் தங்கை - மைத்துனி - sister-in-law
மனைவியின் தங்கையின் கணவர் - சகலை - ???
கணவரின் தம்பி - கொழுந்தன் - Brother -in - law
கணவரின் தம்பி மனைவி - ஓரகத்தி - ???
நாம் இந்திய ஆங்கிலத்தில் உறவுகளுக்கு இல்லாத பல வார்த்தைகளைச் சேர்த்து புதிய வார்த்தைகளை உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு சித்தி, அத்தை இரண்டுமே ஆங்கிலத்தில் aunty தான். அத்தையின் மகளை - கசின் cousin - என்றும், சித்தியின் மகளை - கசின் சிஸ்டர் - cousin sister - என்றும் சொல்கிறோம். உண்மையில் சித்தி/சித்தப்பா/பெரியம்மா/பெரியப்பாவின் மகனோ/மகளோ அல்லது அத்தை/மாமா/மாமியின் மகனோ/மகளோ தான்.
இப்படி நாம் உருவாக்கிய இன்னும் சில வார்த்தைகள் கோ-பிரதர், லவ்-அஃபயர் போன்றவை. உங்களுக்குத் தெரிந்த இப்படிப்பட்ட வார்த்தைகள் சிலவற்றை பட்டியலிடுங்களேன்?
பிறகு பார்க்கலாம்.
Monday, February 8, 2010
பிதற்றல்கள் - 2/9/2010
இட்லி வடையில் கொஞ்ச நாள் முன்பு வரை ஒரு கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது - “என்ன சார், வருசம் பிறந்து ஏழெட்டு நாள் ஆயிடுச்சி, இன்னும் முதல்வருக்கு ஒரு பாராட்டு விழாக்கூட எடுக்காம இருக்கோமே” என்று தமிழ்த்திரையுலகினர் (கோலிவுட்னு சொல்லாதீங்க தமிழ்த்திரையுலகம்னு சொல்லுங்கன்னு கமல் சொல்லியிருக்காராமே?) வருத்தப்படுவது போல. அதை யாரோ பார்த்துவிட்டார்கள். மறுபடியும் அதே நேரு உள்விளையாட்டு அரங்கம், அதே திரையுலகினர் அதே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், அதே ஐஸ் பேச்சு. அன்றைய தினம் சென்னையில் காக்காய்களே காணப்படவில்லையாமே உண்மையா??
அந்த விழாவில் அஜித் தைரியமாகவும் பரபரப்பாகவும் பேசியிருக்கிறார். அவர் பேச்சின் சாராம்சம் இதுவே - “எல்லா கூட்டங்களுக்கும் வரும்படி கட்டாயப் படுத்தி அழைக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் இல்லையென்றால் நீங்கள் (முதல்வர்) பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஏன் கூட்டம் போட வேண்டும்?”. நல்ல கேள்விதான். ரஜினி மாதிரி ஆட்கள் இதைப் பேசியிருந்தால் கன்னடன், மராட்டி, தமிழினத் துரோகி என்று சத்யராஜ், பாரதிராஜா முதலானோர் ஏசி(அவர்களுக்குப் பேசத் தெரியாது) இருப்பார்கள்.
சினிமாத் தொழிலை மற்ற தொழில்கள் போல நடத்திக் கொண்டு போயிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. சினிமாவைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வது, அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று சொல்லி அவர்களை உசுப்பேத்துவது என்று சில நடிகர்கள் திரையில் செய்வதால் தான் பொதுப் பிரச்சனைகளில் அவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்பது ஒரு சாராரின் வாதம். சரிதான், ஆனால் அதை ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்? நடிகனுக்கு விருப்பம் இல்லையென்றால் விடவேண்டியதுதானே? ரெட் கார்டு போடுவோம் என்ற மிரட்டல் எதற்கு? சரி, அப்படி வந்த நடிகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர் சங்கமோ இல்லை அரசாங்கமோ பின்னால் நிற்கிறதா? இல்லையே?
அஜித் உட்பட எல்லாரும் முதல்வரை ஐஸ் மழையில் நனைய வைத்துவிட்டனர். கலைஞர் டி.வி பார்க்க வசதியிருப்பவர்கள், நயன்தாரா பிரபுதேவா ஆட்டத்தைப் பார்த்து ரசியுங்கள்.
குட்டி திரைப்படம் பார்த்தேன். தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் கூட பரவாயில்லை. இந்தப் படத்தில் ஷ்ரியா படம் முழுக்கவே தனுஷுக்கு பெரியம்மா மாதிரி இருக்கிறார். இன்னொரு நாயகனாக வருபவர் (பெயர் தெரியவில்லை) நன்றாகவே நடித்திருக்கிறார். புதுமுகம் போலத் தெரியவேயில்லை. கமர்சியலாக வெற்றி பெறுமா தெரியவில்லை ஆனால் படம் போரடிக்காமல் ஜாலியாக இருந்தது.
இதில் தனுஷுடன் பல குட்டிக் குழந்தைகள் நடித்துள்ளனர். அப்படி ஒரு காட்சியின் தங்கமணியின் கமெண்ட் - “இதுல எத்தன பேரு பின்னாடி தனுஷ் கூட ஜோடியா நடிக்கப்போறாங்களோ தெரியல”
கோவா திரைப்படமும் பார்த்தேன். எனக்குக் கலவையான அனுபவம். சில இடங்களில் சிரித்தேன். சில இடங்களில் ரசித்தேன், சில இடங்களில் கொட்டாவி விட்டேன், சில இடங்களில் ‘அடப்பாவிகளா’ என்று திட்டினேன். மொத்தத்தில் பார்க்கலாம் ரகம். முக்கியமாக Gay ரிலேஷன்ஷிப்பை தமிழில் முதல்முதலாகக் காட்டியதற்காக வெங்கட் பிரபுவைப் பாராட்டலாம்.
நான் ரசித்த இடங்கள் - பஞ்சாயத்து காட்சி, ஃப்ளாஷ் பேக் வரும்போதெல்லாம் எழுபதுகளின் ஃபீட்பேக்கோடு ஓடும் படச்சுருள் போன்ற காட்சியமைப்பு. தியானம் செய்வது போல குறட்டை விட்டு தூங்கும் பிரேம்ஜி.
பியா அழகாக இருக்கிறார். அந்த வெள்ளைக்காரப் பெண் அழகாக வெட்கப் படுகிறார். சினேகா வந்து போகிறார். சொல்லிக்கொள்ளும்படியாக வேறு ஒன்றும் இல்லை.
எங்கள் ஊரில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடும் நபரிடம் தமிழ்ப்படத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறேன். திரையிட்டால் பார்த்துவிட வேண்டும். மேலே சொன்ன இரு படங்களையும் பெரிய திரையில்(40 இன்ச் பெரிய திரை இல்லை தானே) பார்க்கவில்லை.
ஜெயராம் மலையாளிகளின் இயல்பைக் காட்டிவிட்டார் - பேட்டியில் கறுப்பான தடித்த தமிழத்தி என்று தன் வீட்டு வேலைக்காரியைச் சொன்னதைச் சொல்கிறேன். நாம் தமிழர் இயக்கத்தினர் அதற்காக அவர் வீட்டைச் சூறையாடியது அவர் பேசியதை விட பெரிய தவறு. சில நேரங்களில் நாம் எடுக்கும் அதிகப்படியான நடவடிக்கை தவறு செய்தவர்களை நியாயவான்களாக்கிவிடும். காந்தி இதே காரணத்திற்காகத்தான் சவுரி-சவுரா சம்பவத்திற்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினாரோ? ஆமாம் தமிழ்த்திரையுலகினர் இதற்கெல்லாம் ரெட் கார்டு போட மாட்டார்களா?
கடைசியாக வந்த செய்தி - இலங்கையில் சரத் பொன்சேகா கைது. அவரை(னை?!)ப் பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனராம். அய்யோ கொல்றாங்களே
கொல்றாங்களே என்று கத்தியிருப்பாரா?
எச்சரிக்கை: டீன்-ஏஜ் கொசுவத்தி சுத்த சின்ன அம்மிணி அழைத்துள்ளார். அடுத்த பதிவு அதுதான்.
அந்த விழாவில் அஜித் தைரியமாகவும் பரபரப்பாகவும் பேசியிருக்கிறார். அவர் பேச்சின் சாராம்சம் இதுவே - “எல்லா கூட்டங்களுக்கும் வரும்படி கட்டாயப் படுத்தி அழைக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் இல்லையென்றால் நீங்கள் (முதல்வர்) பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஏன் கூட்டம் போட வேண்டும்?”. நல்ல கேள்விதான். ரஜினி மாதிரி ஆட்கள் இதைப் பேசியிருந்தால் கன்னடன், மராட்டி, தமிழினத் துரோகி என்று சத்யராஜ், பாரதிராஜா முதலானோர் ஏசி(அவர்களுக்குப் பேசத் தெரியாது) இருப்பார்கள்.
சினிமாத் தொழிலை மற்ற தொழில்கள் போல நடத்திக் கொண்டு போயிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. சினிமாவைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வது, அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று சொல்லி அவர்களை உசுப்பேத்துவது என்று சில நடிகர்கள் திரையில் செய்வதால் தான் பொதுப் பிரச்சனைகளில் அவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்பது ஒரு சாராரின் வாதம். சரிதான், ஆனால் அதை ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்? நடிகனுக்கு விருப்பம் இல்லையென்றால் விடவேண்டியதுதானே? ரெட் கார்டு போடுவோம் என்ற மிரட்டல் எதற்கு? சரி, அப்படி வந்த நடிகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர் சங்கமோ இல்லை அரசாங்கமோ பின்னால் நிற்கிறதா? இல்லையே?
அஜித் உட்பட எல்லாரும் முதல்வரை ஐஸ் மழையில் நனைய வைத்துவிட்டனர். கலைஞர் டி.வி பார்க்க வசதியிருப்பவர்கள், நயன்தாரா பிரபுதேவா ஆட்டத்தைப் பார்த்து ரசியுங்கள்.
குட்டி திரைப்படம் பார்த்தேன். தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் கூட பரவாயில்லை. இந்தப் படத்தில் ஷ்ரியா படம் முழுக்கவே தனுஷுக்கு பெரியம்மா மாதிரி இருக்கிறார். இன்னொரு நாயகனாக வருபவர் (பெயர் தெரியவில்லை) நன்றாகவே நடித்திருக்கிறார். புதுமுகம் போலத் தெரியவேயில்லை. கமர்சியலாக வெற்றி பெறுமா தெரியவில்லை ஆனால் படம் போரடிக்காமல் ஜாலியாக இருந்தது.
இதில் தனுஷுடன் பல குட்டிக் குழந்தைகள் நடித்துள்ளனர். அப்படி ஒரு காட்சியின் தங்கமணியின் கமெண்ட் - “இதுல எத்தன பேரு பின்னாடி தனுஷ் கூட ஜோடியா நடிக்கப்போறாங்களோ தெரியல”
கோவா திரைப்படமும் பார்த்தேன். எனக்குக் கலவையான அனுபவம். சில இடங்களில் சிரித்தேன். சில இடங்களில் ரசித்தேன், சில இடங்களில் கொட்டாவி விட்டேன், சில இடங்களில் ‘அடப்பாவிகளா’ என்று திட்டினேன். மொத்தத்தில் பார்க்கலாம் ரகம். முக்கியமாக Gay ரிலேஷன்ஷிப்பை தமிழில் முதல்முதலாகக் காட்டியதற்காக வெங்கட் பிரபுவைப் பாராட்டலாம்.
நான் ரசித்த இடங்கள் - பஞ்சாயத்து காட்சி, ஃப்ளாஷ் பேக் வரும்போதெல்லாம் எழுபதுகளின் ஃபீட்பேக்கோடு ஓடும் படச்சுருள் போன்ற காட்சியமைப்பு. தியானம் செய்வது போல குறட்டை விட்டு தூங்கும் பிரேம்ஜி.
பியா அழகாக இருக்கிறார். அந்த வெள்ளைக்காரப் பெண் அழகாக வெட்கப் படுகிறார். சினேகா வந்து போகிறார். சொல்லிக்கொள்ளும்படியாக வேறு ஒன்றும் இல்லை.
எங்கள் ஊரில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடும் நபரிடம் தமிழ்ப்படத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறேன். திரையிட்டால் பார்த்துவிட வேண்டும். மேலே சொன்ன இரு படங்களையும் பெரிய திரையில்(40 இன்ச் பெரிய திரை இல்லை தானே) பார்க்கவில்லை.
ஜெயராம் மலையாளிகளின் இயல்பைக் காட்டிவிட்டார் - பேட்டியில் கறுப்பான தடித்த தமிழத்தி என்று தன் வீட்டு வேலைக்காரியைச் சொன்னதைச் சொல்கிறேன். நாம் தமிழர் இயக்கத்தினர் அதற்காக அவர் வீட்டைச் சூறையாடியது அவர் பேசியதை விட பெரிய தவறு. சில நேரங்களில் நாம் எடுக்கும் அதிகப்படியான நடவடிக்கை தவறு செய்தவர்களை நியாயவான்களாக்கிவிடும். காந்தி இதே காரணத்திற்காகத்தான் சவுரி-சவுரா சம்பவத்திற்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினாரோ? ஆமாம் தமிழ்த்திரையுலகினர் இதற்கெல்லாம் ரெட் கார்டு போட மாட்டார்களா?
கடைசியாக வந்த செய்தி - இலங்கையில் சரத் பொன்சேகா கைது. அவரை(னை?!)ப் பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனராம். அய்யோ கொல்றாங்களே
கொல்றாங்களே என்று கத்தியிருப்பாரா?
எச்சரிக்கை: டீன்-ஏஜ் கொசுவத்தி சுத்த சின்ன அம்மிணி அழைத்துள்ளார். அடுத்த பதிவு அதுதான்.
Tuesday, February 2, 2010
பிதற்றல்கள் - 2/2/2010
ஏ.ஆர்.ரஹ்மானின் கிரீடத்தில் மற்றுமொரு வைரமாக கிராமி விருதுகள் வந்து சேர்ந்திருக்கிறது. பண்டிட் ரவிசங்கர், ஜாக்கிர் உசேன், விக்கு விநாயக் ராம் ஆகியோரைத் தொடர்ந்து கிராமி விருதை வென்றிருக்கும் நான்காவது இந்தியர் இவர்.
வழக்கம்போல பல ஜாம்பவான்களோடு போட்டியிட்டு வெற்றிக்கனியைப் பறித்துவந்திருக்கிறார். ஆஸ்கர் விருதைப் போலவே சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கும் சிறந்த திரைப்படப் பாடலுக்குமாக இரண்டு விருதுகள்.
கமலஹாசன்கள் “கிராமி விருது என்பது அமெரிக்கர்கள் ரசிக்கும் அமெரிக்க இசைக்கு அமெரிக்கர்கள் கொடுக்கும் விருது. அது ஒன்றும் உலக விருது அல்ல” என்றும், பிற இசையமைப்பாளர்கள் “விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துகள், நானெல்லாம் விருதுக்கு அப்பாற்பட்டவன்” என்றும் வாழ்த்துகளை வழங்கத் துவங்கிவிடுவர்.
பாகிஸ்தான் அணியின் அஃப்ரிதி மறுபடி ஒரு கேவலமான செயலைச் செய்துள்ளார். நான்கு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை கோட்டை விட்ட பாகிஸ்தான் கடைசி போட்டியில் வென்று மானத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று பந்தைப் பல்லால் கடித்து சிதைத்திருக்கிறார்.
ஏற்கனவே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வென்ற பின் அந்த அணித் தலைவர் இம்ரான் கான் தான் சோடா பாட்டில் மூடியை வைத்து பந்தை சிதைத்ததை ஒத்துக் கொண்டார். இப்போது அஃப்ரிடி. அதிலும் ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி செய்தேன். பந்தை சிதைப்பது எல்லோரும் செய்வதுதான். அதை வெளியே தெரியும்படி செய்ததே தவறு என்று பொருள் படும்படியாகப் பேசி இருக்கிறார். குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதால் இரண்டு T-20 போட்டிகள் விளையாட மட்டும் தடையோடு தப்பித்துவிட்டார்.
அவதார் திரைப்படம் 2 பில்லியன் டாலர் வசூல் என்ற உச்சத்தை எட்டிவிட்டது. இதற்கு முன் டைட்டானிக் படம் 1.8 பில்லியன் வசூல் செய்ததுதான் சாதனையாக இருந்து வந்தது. அதை அவதார் முறியடித்துவிட்டது. தன் வசூல் சாதனையை தானே முறியடிக்கும் விசயத்தில் ஜேம்ஸ் காமரூன் ஹாலிவுட் ரஜினி.
நாணயம் திரைப்படம் பார்த்தேன். ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பது போல விறுவிறுப்புடன் இருந்தது. பாவம் சிபிதான் அல்லக்கையாகிவிட்டார். படத்தின் புரமோஷன்களில் பிரசன்னாவுக்கும் சிபிக்கும் இணையான பாத்திரம் என்றெல்லாம் கதை விட்டார்கள். படம் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. பிரசன்னாவே எல்லாம் செய்கிறார். சிபியின் அடியாள் வரும் அளவுக்குக் கூட அவர் வருவதில்லை படத்தில். எஸ்.பி.பிக்கு ஒரு வித்தியாசமான வேடம். என் மனைவி அவர் இந்த வேடத்தில் நடித்திருக்கக் கூடாது என்று சொன்னார். நான் அவர் இந்த வேடத்தில் நடித்திருந்ததால் தான் கடைசியில் நல்ல ட்விஸ்டாக இருந்தது, வேறு யாராவது என்றால் நாம் யூகித்திருப்போம் என்றேன்.
குடுகுடுப்பை தன் சொந்தக் கட்சி கு.ஜ.மு.கவில் அவரைத் தவிர யாரும் உறுப்பினாராக முடியாத படி கட்சியின் கொள்கை அமைந்துவிட்ட படியாலும், உறுப்பினராக சேர விருப்பக் கடிதம் அனுப்பும் தொண்டர்களின் எண்ணிக்கை பல கேடியை ச்சீ கோடியைத் தாண்டிவிட்டபடியாலும் புதிதாக திராவிட கு.ஜ.மு.க என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார்.
இப்போதைக்கு அவரே கட்சியின் பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும் என்று தாய்க்கழகத்தின் பொதுக்குழு கூடி ஜனநாயக முறையில் முடிவெடுத்துள்ளது. புதிய கட்சியின் மாணவரணித் தலைவராக திரு.வானம்பாடிகள் அவர்களும்(அவரது புகைப்படத்தை பார்த்ததும் எடுக்கப்பட்ட முடிவு), இலக்கிய (!?) அணித்தலைவராக நானும் (என் இலக்கியச் செறிவு வாய்ந்த பதிவுகளைப் படித்ததன் விளைவு), கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயனும் (நல்ல காதலுக்கு துண்டு பலபோட்டும் அமையாததன் காரணத்தால்), சட்ட அவைத் தலைவராக அது சரியும் (இது தான் எதுக்குன்னே தெரியலை) நியமிக்கப் பட்டுள்ளனர். மற்ற பதவிகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். (அதுவரை தொண்டர்கள் அமைதி காக்கவும்). 2011ல் கழக ஆட்சி அமைப்போம். (2013ல் அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்றுவோம்).
வழக்கம்போல பல ஜாம்பவான்களோடு போட்டியிட்டு வெற்றிக்கனியைப் பறித்துவந்திருக்கிறார். ஆஸ்கர் விருதைப் போலவே சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கும் சிறந்த திரைப்படப் பாடலுக்குமாக இரண்டு விருதுகள்.
கமலஹாசன்கள் “கிராமி விருது என்பது அமெரிக்கர்கள் ரசிக்கும் அமெரிக்க இசைக்கு அமெரிக்கர்கள் கொடுக்கும் விருது. அது ஒன்றும் உலக விருது அல்ல” என்றும், பிற இசையமைப்பாளர்கள் “விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துகள், நானெல்லாம் விருதுக்கு அப்பாற்பட்டவன்” என்றும் வாழ்த்துகளை வழங்கத் துவங்கிவிடுவர்.
பாகிஸ்தான் அணியின் அஃப்ரிதி மறுபடி ஒரு கேவலமான செயலைச் செய்துள்ளார். நான்கு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை கோட்டை விட்ட பாகிஸ்தான் கடைசி போட்டியில் வென்று மானத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று பந்தைப் பல்லால் கடித்து சிதைத்திருக்கிறார்.
ஏற்கனவே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வென்ற பின் அந்த அணித் தலைவர் இம்ரான் கான் தான் சோடா பாட்டில் மூடியை வைத்து பந்தை சிதைத்ததை ஒத்துக் கொண்டார். இப்போது அஃப்ரிடி. அதிலும் ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி செய்தேன். பந்தை சிதைப்பது எல்லோரும் செய்வதுதான். அதை வெளியே தெரியும்படி செய்ததே தவறு என்று பொருள் படும்படியாகப் பேசி இருக்கிறார். குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதால் இரண்டு T-20 போட்டிகள் விளையாட மட்டும் தடையோடு தப்பித்துவிட்டார்.
அவதார் திரைப்படம் 2 பில்லியன் டாலர் வசூல் என்ற உச்சத்தை எட்டிவிட்டது. இதற்கு முன் டைட்டானிக் படம் 1.8 பில்லியன் வசூல் செய்ததுதான் சாதனையாக இருந்து வந்தது. அதை அவதார் முறியடித்துவிட்டது. தன் வசூல் சாதனையை தானே முறியடிக்கும் விசயத்தில் ஜேம்ஸ் காமரூன் ஹாலிவுட் ரஜினி.
நாணயம் திரைப்படம் பார்த்தேன். ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பது போல விறுவிறுப்புடன் இருந்தது. பாவம் சிபிதான் அல்லக்கையாகிவிட்டார். படத்தின் புரமோஷன்களில் பிரசன்னாவுக்கும் சிபிக்கும் இணையான பாத்திரம் என்றெல்லாம் கதை விட்டார்கள். படம் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. பிரசன்னாவே எல்லாம் செய்கிறார். சிபியின் அடியாள் வரும் அளவுக்குக் கூட அவர் வருவதில்லை படத்தில். எஸ்.பி.பிக்கு ஒரு வித்தியாசமான வேடம். என் மனைவி அவர் இந்த வேடத்தில் நடித்திருக்கக் கூடாது என்று சொன்னார். நான் அவர் இந்த வேடத்தில் நடித்திருந்ததால் தான் கடைசியில் நல்ல ட்விஸ்டாக இருந்தது, வேறு யாராவது என்றால் நாம் யூகித்திருப்போம் என்றேன்.
குடுகுடுப்பை தன் சொந்தக் கட்சி கு.ஜ.மு.கவில் அவரைத் தவிர யாரும் உறுப்பினாராக முடியாத படி கட்சியின் கொள்கை அமைந்துவிட்ட படியாலும், உறுப்பினராக சேர விருப்பக் கடிதம் அனுப்பும் தொண்டர்களின் எண்ணிக்கை பல கேடியை ச்சீ கோடியைத் தாண்டிவிட்டபடியாலும் புதிதாக திராவிட கு.ஜ.மு.க என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார்.
இப்போதைக்கு அவரே கட்சியின் பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும் என்று தாய்க்கழகத்தின் பொதுக்குழு கூடி ஜனநாயக முறையில் முடிவெடுத்துள்ளது. புதிய கட்சியின் மாணவரணித் தலைவராக திரு.வானம்பாடிகள் அவர்களும்(அவரது புகைப்படத்தை பார்த்ததும் எடுக்கப்பட்ட முடிவு), இலக்கிய (!?) அணித்தலைவராக நானும் (என் இலக்கியச் செறிவு வாய்ந்த பதிவுகளைப் படித்ததன் விளைவு), கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயனும் (நல்ல காதலுக்கு துண்டு பலபோட்டும் அமையாததன் காரணத்தால்), சட்ட அவைத் தலைவராக அது சரியும் (இது தான் எதுக்குன்னே தெரியலை) நியமிக்கப் பட்டுள்ளனர். மற்ற பதவிகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். (அதுவரை தொண்டர்கள் அமைதி காக்கவும்). 2011ல் கழக ஆட்சி அமைப்போம். (2013ல் அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்றுவோம்).
Sunday, January 24, 2010
பிதற்றல்கள் - 1/23/2010
இந்த தொடர்பதிவுக் கதை யோசனையை முதலில் வைத்தது நண்பர் விசா. ஆரம்பத்தில் நான், விசா, கலகலப்ரியா மற்றும் அதுசரி மட்டுமே எழுதுவதாக இருந்தது (வேற யாரும் முன்வரலைங்கறதுதான் உண்மை). ஆகவே பெரிதாக விதிமுறைகள் எல்லாம் வகுக்கவில்லை.
ஆனால், நான் முதல் பாகத்தை போட்ட வேகத்தில் பலா பட்டறை, பிரபாகர் இரண்டாவது மூன்றாவது பாகத்தை வேகமாக எழுதிவிட்டனர். ஆகவே விதிமுறைகள் வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டோம்.
எப்படியோ இது சுவாரசியமாக செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று விமர்சகர்களின் (முகத்தில் அறைந்த என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் நான் இன்னும் பின்னவீனத்துவவாதி ஆகாத காரணத்தால்) விமர்சனங்களுக்கு பதில் சொன்ன பாலாவுக்கு பாராட்டுகள்.
சேது படத்திலேயேவோ இல்லை பிதாமகன் படத்திலாவது வந்திருக்க வேண்டிய விருது இது. கொஞ்சம் லேட்டாக வந்தாலும் நான் கடவுளுக்குக் கிடைத்திருப்பதும் நல்லதே.
பாலாவின் அடுத்த படம் என்ன என்பதை விட எப்போது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் கடவுள் படத்தின் மேக்கப் மேன் மூர்த்திக்கும் விருது கிடைத்துள்ளது. அவருக்கும் வாழ்த்துகள்.
தமிழுக்குக் கிடைத்த மூன்றாவது விருது வாரணம் ஆயிரம் படத்துக்கு. இதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்நேரம் மதுரையில் என்ன என்ன போஸ்டர் ஒட்டியிருப்பார்கள் என்று நினைக்கையிலேயே சிரிப்பு வருகிறது.
சேவாக் சொன்ன “பங்களாதேஷ் ஒரு ஆர்டினரி டீம். அவர்களால் 20 இந்திய விக்கெட்டுகளை எடுக்க முடியாது” என்று சொன்னது பெரும் சர்ச்சைக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதே. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய மாதிரி ஆனது. எல்லா ஊடகவியலாளர்களும் இந்திய அணியில் யாரைப் பார்த்தாலும் இதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வேளை இந்தியா அதிக ரன்களை எடுத்திருந்தால் யாரும் இதைப் பற்றி பேசியே இருக்கமாட்டார்கள். நல்ல வேளை இந்தியா வெற்றி பெற்றது.
தோனி இரண்டாவது போட்டிக்கு முன் கொடுத்த பேட்டியில் மிகவும் நாகரீகமாகப் பேசியிருக்கிறார். இந்தியா என்ன கிழிக்கிறது என்று பார்ப்போம்.
சன் டிவியில் இன்று மாலை ஒளிபரப்பிய அதே நேரம் அதே இடம் பார்த்தேன். இந்தப் படம் ஓடாது என்று கதாநாயகன் ஜெய் பேட்டியில் சொன்னதாக பரபரப்பைக் கிளப்பிய படம். பெரும்பாலான காட்சிகளில் நடிகர்கள் எழுதி ஒப்பித்தது போல வசனம் பேசியது எரிச்சலாக இருந்தது. எப்படா முடியும் என்றிருந்தேன். (நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்).
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று சன் செய்திகளில் தமிழ்நாட்டுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தேவை இல்லை என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அங்கிருந்தெல்லாம் சரியாகக் கமிஷன் வருவதில்லை போலும்.
மே மாதத்தின் இடையில் இந்தியா வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போலத் தெரிகிறது. முடிந்தால் சக பதிவர்களை சந்திக்க விருப்பம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
ஆனால், நான் முதல் பாகத்தை போட்ட வேகத்தில் பலா பட்டறை, பிரபாகர் இரண்டாவது மூன்றாவது பாகத்தை வேகமாக எழுதிவிட்டனர். ஆகவே விதிமுறைகள் வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டோம்.
எப்படியோ இது சுவாரசியமாக செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று விமர்சகர்களின் (முகத்தில் அறைந்த என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் நான் இன்னும் பின்னவீனத்துவவாதி ஆகாத காரணத்தால்) விமர்சனங்களுக்கு பதில் சொன்ன பாலாவுக்கு பாராட்டுகள்.
சேது படத்திலேயேவோ இல்லை பிதாமகன் படத்திலாவது வந்திருக்க வேண்டிய விருது இது. கொஞ்சம் லேட்டாக வந்தாலும் நான் கடவுளுக்குக் கிடைத்திருப்பதும் நல்லதே.
பாலாவின் அடுத்த படம் என்ன என்பதை விட எப்போது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் கடவுள் படத்தின் மேக்கப் மேன் மூர்த்திக்கும் விருது கிடைத்துள்ளது. அவருக்கும் வாழ்த்துகள்.
தமிழுக்குக் கிடைத்த மூன்றாவது விருது வாரணம் ஆயிரம் படத்துக்கு. இதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்நேரம் மதுரையில் என்ன என்ன போஸ்டர் ஒட்டியிருப்பார்கள் என்று நினைக்கையிலேயே சிரிப்பு வருகிறது.
சேவாக் சொன்ன “பங்களாதேஷ் ஒரு ஆர்டினரி டீம். அவர்களால் 20 இந்திய விக்கெட்டுகளை எடுக்க முடியாது” என்று சொன்னது பெரும் சர்ச்சைக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதே. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய மாதிரி ஆனது. எல்லா ஊடகவியலாளர்களும் இந்திய அணியில் யாரைப் பார்த்தாலும் இதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வேளை இந்தியா அதிக ரன்களை எடுத்திருந்தால் யாரும் இதைப் பற்றி பேசியே இருக்கமாட்டார்கள். நல்ல வேளை இந்தியா வெற்றி பெற்றது.
தோனி இரண்டாவது போட்டிக்கு முன் கொடுத்த பேட்டியில் மிகவும் நாகரீகமாகப் பேசியிருக்கிறார். இந்தியா என்ன கிழிக்கிறது என்று பார்ப்போம்.
சன் டிவியில் இன்று மாலை ஒளிபரப்பிய அதே நேரம் அதே இடம் பார்த்தேன். இந்தப் படம் ஓடாது என்று கதாநாயகன் ஜெய் பேட்டியில் சொன்னதாக பரபரப்பைக் கிளப்பிய படம். பெரும்பாலான காட்சிகளில் நடிகர்கள் எழுதி ஒப்பித்தது போல வசனம் பேசியது எரிச்சலாக இருந்தது. எப்படா முடியும் என்றிருந்தேன். (நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்).
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று சன் செய்திகளில் தமிழ்நாட்டுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தேவை இல்லை என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அங்கிருந்தெல்லாம் சரியாகக் கமிஷன் வருவதில்லை போலும்.
மே மாதத்தின் இடையில் இந்தியா வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போலத் தெரிகிறது. முடிந்தால் சக பதிவர்களை சந்திக்க விருப்பம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
Sunday, January 17, 2010
பிதற்றல்கள் 01/17/2010
சமீபத்தில் 3 இடியட்ஸ் படம் பார்த்தேன். அமீர் கலக்கியிருக்கிறார். மார்ச் மாதம் 45 வயதை கடக்கப் போகிறவர் மாதிரியே இல்லை. ஒரு கல்லூரி மாணவனின் உடல்மொழி அனாயாசமாய் வருகிறது. ஒரு சில காட்சிகளில் கரீனா கபூர் அமீர்கானை விட வயதானவராகத் தெரியும் அளவுக்கு அநியாயத்துக்கு இளமையாயிருக்கிறார்.
மூன்று இளைஞர்களின் கல்லூரி வாழ்வை சொல்வதன் மூலம் இந்திய கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் மனதாரப் பாராட்டலாம்.
படத்தின் உள்குத்து தென்னிந்தியர்களைக் கிண்டல் அடித்திருப்பது. இன்னொரு - ஃபர்ஹான், சதுர், ராஜூ மூவரும் சிம்லாவுக்குள் நுழையும் - காட்சியில் ஒரு 5 முஸ்லிம் பெண்கள் கண்கள் மட்டும் தெரியும் அளவுக்கு பர்தா அணிந்து கொண்டு ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷன் முன் புகைப்படம் எடுத்துக்கொள்வது போல வருகிறது. இது உள்குத்தா தெரியவில்லை.
இந்தப் படத்தை தமிழில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எடுத்தால் நடிகர்களுக்கு என் சாய்ஸ் - சூர்யா (அமிர்), மாதவன் (மாதவன்), பாய்ஸ்-சித்தார்த் (ராஜூ).
இந்தியா-பங்களாதேஷ் இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்கிவிட்டது. போட்டிக்கு முந்தைய நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேவாக் பங்களாதேஷின் பந்து வீச்சு சாதாரணமானது. அவர்களால் இந்திய அணியின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாது என்று சொன்னார். அதற்கு பதிலடி தருவது போல ஒரே நாளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி விட்டது பங்களாதேஷ், வெறும் 218 ரன்கள் மட்டும் கொடுத்து.
கிரிக்கெட் கடவுள் சச்சின் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்று அவர் சதமடிக்கக் கூடும். அப்படி அடித்தால் அவரது விமர்சகர்கள் பங்களாதேஷுக்கு எதிராகத்தான் சச்சினால் சதம் அடிக்க முடியும் என்று பே(ஏ)சுவார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சதம் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.
வேட்டைக்காரன் நியூஸ் போடாமல் நான் இந்தப் பிதற்றல்களை முடித்தால் உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுமாதலால், இந்த இரண்டு படங்களை (நோ ஜிம்மிக்ஸ், எல்லாம் ஒரிஜினல்) மட்டும் போட்டுவிடுகிறேன்.
படம் வெளியானது டிசம்பர் 18, இன்று ஜனவரி 18, ஆனால் இவர்களுக்கு மட்டும் 40 நாள் ஆகிவிட்டதாம்?!!!
கீழே உள்ள படம் அதை விட கொடுமை. இப்படியெல்லாம் படத்தை ஓட்டவேண்டுமென்று என்ன கட்டாயம்?
நேற்று எழுதிய கதைப்புதிருக்கு நான் எதிர்பார்த்த அளவு பதில்கள் வரவில்லை. பல மக்கள் அலுவலகத்தில் தான் ப்ளாக்குகளைப் படிப்பதாலும் நேற்று ஞாயிறு என்பதாலும் இன்னொரு நாள் விட்டுப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். முடிவை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். நாளை கண்டிப்பாக வெளியிடுவேன்.
இதுவரை பதில் பின்னூட்டமிட்டவர்களில் பலர் சரியான பதிலை சொல்லியிருந்தாலும் அவர்கள் ஏன் அந்த நபர் கொலை செய்திருக்கலாம் என்று தான் நினைப்பதற்கான காரணத்தை எழுதவில்லை. யாராவது சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படி யாரும் சொல்லவில்லை என்றால் யார் கிட்டத்தட்ட சொல்கிறார்களோ அவர்களுக்கு புத்தகம் நிச்சயம்.
மூன்று இளைஞர்களின் கல்லூரி வாழ்வை சொல்வதன் மூலம் இந்திய கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் மனதாரப் பாராட்டலாம்.
படத்தின் உள்குத்து தென்னிந்தியர்களைக் கிண்டல் அடித்திருப்பது. இன்னொரு - ஃபர்ஹான், சதுர், ராஜூ மூவரும் சிம்லாவுக்குள் நுழையும் - காட்சியில் ஒரு 5 முஸ்லிம் பெண்கள் கண்கள் மட்டும் தெரியும் அளவுக்கு பர்தா அணிந்து கொண்டு ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷன் முன் புகைப்படம் எடுத்துக்கொள்வது போல வருகிறது. இது உள்குத்தா தெரியவில்லை.
இந்தப் படத்தை தமிழில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எடுத்தால் நடிகர்களுக்கு என் சாய்ஸ் - சூர்யா (அமிர்), மாதவன் (மாதவன்), பாய்ஸ்-சித்தார்த் (ராஜூ).
இந்தியா-பங்களாதேஷ் இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்கிவிட்டது. போட்டிக்கு முந்தைய நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேவாக் பங்களாதேஷின் பந்து வீச்சு சாதாரணமானது. அவர்களால் இந்திய அணியின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாது என்று சொன்னார். அதற்கு பதிலடி தருவது போல ஒரே நாளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி விட்டது பங்களாதேஷ், வெறும் 218 ரன்கள் மட்டும் கொடுத்து.
கிரிக்கெட் கடவுள் சச்சின் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்று அவர் சதமடிக்கக் கூடும். அப்படி அடித்தால் அவரது விமர்சகர்கள் பங்களாதேஷுக்கு எதிராகத்தான் சச்சினால் சதம் அடிக்க முடியும் என்று பே(ஏ)சுவார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சதம் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.
வேட்டைக்காரன் நியூஸ் போடாமல் நான் இந்தப் பிதற்றல்களை முடித்தால் உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுமாதலால், இந்த இரண்டு படங்களை (நோ ஜிம்மிக்ஸ், எல்லாம் ஒரிஜினல்) மட்டும் போட்டுவிடுகிறேன்.
கீழே உள்ள படம் அதை விட கொடுமை. இப்படியெல்லாம் படத்தை ஓட்டவேண்டுமென்று என்ன கட்டாயம்?
நேற்று எழுதிய கதைப்புதிருக்கு நான் எதிர்பார்த்த அளவு பதில்கள் வரவில்லை. பல மக்கள் அலுவலகத்தில் தான் ப்ளாக்குகளைப் படிப்பதாலும் நேற்று ஞாயிறு என்பதாலும் இன்னொரு நாள் விட்டுப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். முடிவை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். நாளை கண்டிப்பாக வெளியிடுவேன்.
இதுவரை பதில் பின்னூட்டமிட்டவர்களில் பலர் சரியான பதிலை சொல்லியிருந்தாலும் அவர்கள் ஏன் அந்த நபர் கொலை செய்திருக்கலாம் என்று தான் நினைப்பதற்கான காரணத்தை எழுதவில்லை. யாராவது சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படி யாரும் சொல்லவில்லை என்றால் யார் கிட்டத்தட்ட சொல்கிறார்களோ அவர்களுக்கு புத்தகம் நிச்சயம்.
Friday, January 15, 2010
பிதற்றல்கள் 1/15/2009
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்
வருடாந்திர கணக்கு முடிக்கவேண்டியிருப்பதால் எங்கள் அலுவலகத்தின் ஃபைனான்ஸ் பிரிவு அவர்கள் க்யூபிக்கிளின் வெளியே ஒரு நோட்டிஸ் - YEAR END IN PROGRESS. PLEASE BE QUIET - ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்த்து கடுப்பான எங்கள் நெட்வொர்க் ஸ்பெஷலிஸ்ட் அவர் க்யூபிக்கிளின் வெளியே இப்படி ஒரு நோட்டிஸ் ஒட்டி விட்டார் - Shh.. QUIET PLEASE. INFORMATION TECHNOLOGY WORKS ALL YEAR -
(நன்றி: ரீடர்ஸ் டைஜஸ்ட்)
**********************************************************************************
போன வருடம் தமிழக அரசு தை ஒண்ணாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்கள். எத்தனை பேர் அதை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படிப் பின்பற்றுபவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.
எல்லோரும் பொங்கல் வைத்தோ, கரும்பு சாப்பிட்டோ, மாட்டைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து அதற்கு பொங்கல் ஊட்டியோ, ஜல்லிக்கட்டில் மாட்டை அடக்கியோ, அதை வேடிக்கைப் பார்த்தோ, முட்டாள் பெட்டியின் முன் உட்கார்ந்தோ, திரையரங்கிற்குப் போய் படம் பார்த்தோ பொங்கல் கொண்டாடி முடித்திருப்பீர்கள். நாங்களும் குக்கரில் பொங்கல் வைத்து சாப்பிட்டும் சாப்பிடாமலும் அலுவலகம் போய் அங்கு நண்பர்களுடன் பொங்கலைப் பகிர்ந்து கொண்டாடிவிட்டோம்.
***************************************************************************************
சமீபத்தில் படித்த இரண்டு விஷயங்கள் மனதை மிகவும் பாதித்தது. மதுரையில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க மறுத்திருக்கிறார்கள். கடைசியில் அந்தப் பெண்ணுக்கு சுயபிரசவம் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஆகியிருக்கிறது. அதன் பின் வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு போய் குளிப்பாட்டி குழந்தையைக் கொடுப்பதற்கு ரூ.1500/- கேட்டிருக்கிறார்கள். கொடுக்க காசில்லை என்று சொன்னதற்கு தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்கள். மருத்துவத் தொழில் புனிதமானது. அதை சேவை என்று நினைத்து செய்யக்கூடியவர்கள் அதிகமானால் தான் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல்கள் தொடராது.
இன்னொரு கொடுமையான சம்பவம் - மனநிலை சரியில்லாததால் எண்ணை என்று நினைத்து விஷத்தை ஊற்றி தோசை சுட்டு மரணமடைந்த சம்பவம். வேதாரண்யம் அருகில் ஒரு கிராமத்தில் ஒரே வீட்டில் நான்கு குழந்தைகளுக்கும் பிறவியிலிருந்தே மன நிலை சரியில்லையாம் - அநேகமாக ஆட்டிஸம்? - நான்கு பேரும் வாலிப வயதை எட்டினாலும் மனதால் குழந்தையாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களின் அம்மாவும் மறைந்த பின்னர் அப்பா மட்டுமே அவர்களை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்.
சம்பவ தினத்தன்று அவர் ஏதோ வேலையாகச் சென்று விட்டிருக்கிறார். மூத்த மகள் உடன் பிறந்தவர்களுக்கு தோசை சுட்டுத்தர எண்ணெய் என்று நினைத்து பயிருக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை உபயோகப் படுத்தி இருக்கிறார். இதனால் அவரும் இன்னொரு சகோதரரும் மரணம் அடைந்த்துவிட்டார்கள். மற்ற இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்குப் பிறகு பேக் செய்து தர ஆயிரம் ரூபாய் பேரம் பேசியிருக்கிறார்கள் பிணவறை ஊழியர்கள். ஊர்க்காரர்கள் சேர்ந்து அந்தக் காசைக் கொடுத்தபின் தான் உடல்களைப் பெற முடிந்திருக்கிறது
இவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.
*************************************************************************************
ஃபாலோ-அப்: தினமலர் வீடியோ உண்மையா இல்லையா என்று கண்டுபிடித்துச் சொல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருப்பதாக வானம்பாடிகள் சொல்லிவிட்டதால் இந்த ஃபாலோ-அப். அமைச்சர்கள் மற்றும் அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகள் சொல்வது என்னவென்றால் - ஆம்புலன்ஸ் வந்தால் அதில் முதலுதவிக்கான வசதிகள் இருக்கும் என்பதால் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தார்களாம். அதுவர லேட்டாகும் என்று தெரிந்ததும் அமைச்சரின் காவலுக்கு வந்திருந்த ஒரு வேனில் ஏற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் முதலுதவி செய்துவிட்டு பாளையங்கோட்டை ஜி.எச்சுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 4:00 மணி சுமாருக்கு உயிர் பிரிந்திருக்கிறது.
இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், அமைச்சர்கள் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களின் மேல் தவறு இருக்கிறது என்றாலும், அதை மீடியா ஊதிப் பெரிதாக்கிவிட்டிருக்கிறது. அதிலும் வட இந்திய மீடியாக்களுக்கு - வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரியாகிவிட்டது. கோவை அருகே ராணுவ வாகனத்தைத் தாக்கிய சம்பவத்தை கவர் செய்த என்.டி.டி.வி செய்தியை நினைவில் கொள்ளுங்கள். இதில் கொடுமை என்னவென்றால், வளைத்து வளைத்து படமாக்கிய அந்த கேமராமேன் உதவி செய்யாததைப் பற்றி ஒருவரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். அவரும் தானே குற்றவாளியாகிறார்?
*********************************************************************************
நான் இந்தியாவில் லைப்ரரிக்கு அவ்வளவாகப் போனதே இல்லை. சிறு வயதில் ஆர்வக் கோளாரில் ஸ்கூல் லைப்ரரியில் டின் டின் காமிக் புக் எடுத்து ஒரு வருடமாகத் திருப்பி தராமல் போனதால் கட்டிய ஃபைன் காரணமோ தெரியவில்லை. கல்லூரியில் ஒவ்வொரு வருடக் கடைசியிலும் லைப்ரரியனிடம் நோ ட்யூ சர்டிஃபிக்கேட் பெற போயிருக்கிறேன். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது எக்ஸாம் எழுதப் போயிருக்கிறேன். மற்ற படி லைப்ரரி பக்கம் போனதில்லை.
அமெரிக்கா வந்த பின் என்னுடன் வேலை பார்த்த அக்கட பூமிக்காரன் லைப்ரரியில் டி.வி.டி ஃப்ரீயாக ரெண்ட் எடுக்கலாம் என்று சொன்னதால் போய்ப் பார்த்தேன். என் தாத்தா காலப் படங்களாக இருந்ததால் வெறும் கார்டு மட்டும் விண்ணப்பித்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால் ஒரு வருடம் தினமும் காலையில் 90 மைல் மாலையில் 90 மைல் பயணம் செய்ய வேண்டி இருந்த போது ஆடியோ-புக் லைப்ரரியில் எடுத்து கேட்டுக் கொண்டே செல்வது வழக்கமாகிப் போன போது லைப்ரரி போகும் பழக்கம் அதிகமானது. அந்தப் பயணம் தேவை இல்லாமல் ஆனபோது லைப்ரரிக்கு வழியும் மறந்து போனது.
ஆனால் இந்த புதன்கிழமை இங்கே லோக்கல் லைப்ரரியில் குழந்தைகளுக்கு ஸ்டோரி டெல்லிங்க் என்று ஒரு (ஃப்ரீ தான்) ப்ரொக்ராம் இருப்பதாகத் தெரிய வந்ததும் தங்கமணி படுத்தியதால் போனோம். உள்ளே நுழைந்ததும் ஆனந்த அதிர்ச்சி. ஒரு பலகையில் பல மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். அதில் தமிழும் இருந்தது. இனி அடிக்கடி அந்த லைப்ரரிக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
வருடாந்திர கணக்கு முடிக்கவேண்டியிருப்பதால் எங்கள் அலுவலகத்தின் ஃபைனான்ஸ் பிரிவு அவர்கள் க்யூபிக்கிளின் வெளியே ஒரு நோட்டிஸ் - YEAR END IN PROGRESS. PLEASE BE QUIET - ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்த்து கடுப்பான எங்கள் நெட்வொர்க் ஸ்பெஷலிஸ்ட் அவர் க்யூபிக்கிளின் வெளியே இப்படி ஒரு நோட்டிஸ் ஒட்டி விட்டார் - Shh.. QUIET PLEASE. INFORMATION TECHNOLOGY WORKS ALL YEAR -
(நன்றி: ரீடர்ஸ் டைஜஸ்ட்)
**********************************************************************************
போன வருடம் தமிழக அரசு தை ஒண்ணாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்கள். எத்தனை பேர் அதை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படிப் பின்பற்றுபவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.
எல்லோரும் பொங்கல் வைத்தோ, கரும்பு சாப்பிட்டோ, மாட்டைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து அதற்கு பொங்கல் ஊட்டியோ, ஜல்லிக்கட்டில் மாட்டை அடக்கியோ, அதை வேடிக்கைப் பார்த்தோ, முட்டாள் பெட்டியின் முன் உட்கார்ந்தோ, திரையரங்கிற்குப் போய் படம் பார்த்தோ பொங்கல் கொண்டாடி முடித்திருப்பீர்கள். நாங்களும் குக்கரில் பொங்கல் வைத்து சாப்பிட்டும் சாப்பிடாமலும் அலுவலகம் போய் அங்கு நண்பர்களுடன் பொங்கலைப் பகிர்ந்து கொண்டாடிவிட்டோம்.
***************************************************************************************
சமீபத்தில் படித்த இரண்டு விஷயங்கள் மனதை மிகவும் பாதித்தது. மதுரையில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க மறுத்திருக்கிறார்கள். கடைசியில் அந்தப் பெண்ணுக்கு சுயபிரசவம் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஆகியிருக்கிறது. அதன் பின் வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு போய் குளிப்பாட்டி குழந்தையைக் கொடுப்பதற்கு ரூ.1500/- கேட்டிருக்கிறார்கள். கொடுக்க காசில்லை என்று சொன்னதற்கு தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்கள். மருத்துவத் தொழில் புனிதமானது. அதை சேவை என்று நினைத்து செய்யக்கூடியவர்கள் அதிகமானால் தான் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல்கள் தொடராது.
இன்னொரு கொடுமையான சம்பவம் - மனநிலை சரியில்லாததால் எண்ணை என்று நினைத்து விஷத்தை ஊற்றி தோசை சுட்டு மரணமடைந்த சம்பவம். வேதாரண்யம் அருகில் ஒரு கிராமத்தில் ஒரே வீட்டில் நான்கு குழந்தைகளுக்கும் பிறவியிலிருந்தே மன நிலை சரியில்லையாம் - அநேகமாக ஆட்டிஸம்? - நான்கு பேரும் வாலிப வயதை எட்டினாலும் மனதால் குழந்தையாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களின் அம்மாவும் மறைந்த பின்னர் அப்பா மட்டுமே அவர்களை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்.
சம்பவ தினத்தன்று அவர் ஏதோ வேலையாகச் சென்று விட்டிருக்கிறார். மூத்த மகள் உடன் பிறந்தவர்களுக்கு தோசை சுட்டுத்தர எண்ணெய் என்று நினைத்து பயிருக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை உபயோகப் படுத்தி இருக்கிறார். இதனால் அவரும் இன்னொரு சகோதரரும் மரணம் அடைந்த்துவிட்டார்கள். மற்ற இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்குப் பிறகு பேக் செய்து தர ஆயிரம் ரூபாய் பேரம் பேசியிருக்கிறார்கள் பிணவறை ஊழியர்கள். ஊர்க்காரர்கள் சேர்ந்து அந்தக் காசைக் கொடுத்தபின் தான் உடல்களைப் பெற முடிந்திருக்கிறது
இவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.
*************************************************************************************
ஃபாலோ-அப்: தினமலர் வீடியோ உண்மையா இல்லையா என்று கண்டுபிடித்துச் சொல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருப்பதாக வானம்பாடிகள் சொல்லிவிட்டதால் இந்த ஃபாலோ-அப். அமைச்சர்கள் மற்றும் அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகள் சொல்வது என்னவென்றால் - ஆம்புலன்ஸ் வந்தால் அதில் முதலுதவிக்கான வசதிகள் இருக்கும் என்பதால் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தார்களாம். அதுவர லேட்டாகும் என்று தெரிந்ததும் அமைச்சரின் காவலுக்கு வந்திருந்த ஒரு வேனில் ஏற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் முதலுதவி செய்துவிட்டு பாளையங்கோட்டை ஜி.எச்சுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 4:00 மணி சுமாருக்கு உயிர் பிரிந்திருக்கிறது.
இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், அமைச்சர்கள் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களின் மேல் தவறு இருக்கிறது என்றாலும், அதை மீடியா ஊதிப் பெரிதாக்கிவிட்டிருக்கிறது. அதிலும் வட இந்திய மீடியாக்களுக்கு - வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரியாகிவிட்டது. கோவை அருகே ராணுவ வாகனத்தைத் தாக்கிய சம்பவத்தை கவர் செய்த என்.டி.டி.வி செய்தியை நினைவில் கொள்ளுங்கள். இதில் கொடுமை என்னவென்றால், வளைத்து வளைத்து படமாக்கிய அந்த கேமராமேன் உதவி செய்யாததைப் பற்றி ஒருவரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். அவரும் தானே குற்றவாளியாகிறார்?
*********************************************************************************
நான் இந்தியாவில் லைப்ரரிக்கு அவ்வளவாகப் போனதே இல்லை. சிறு வயதில் ஆர்வக் கோளாரில் ஸ்கூல் லைப்ரரியில் டின் டின் காமிக் புக் எடுத்து ஒரு வருடமாகத் திருப்பி தராமல் போனதால் கட்டிய ஃபைன் காரணமோ தெரியவில்லை. கல்லூரியில் ஒவ்வொரு வருடக் கடைசியிலும் லைப்ரரியனிடம் நோ ட்யூ சர்டிஃபிக்கேட் பெற போயிருக்கிறேன். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது எக்ஸாம் எழுதப் போயிருக்கிறேன். மற்ற படி லைப்ரரி பக்கம் போனதில்லை.
அமெரிக்கா வந்த பின் என்னுடன் வேலை பார்த்த அக்கட பூமிக்காரன் லைப்ரரியில் டி.வி.டி ஃப்ரீயாக ரெண்ட் எடுக்கலாம் என்று சொன்னதால் போய்ப் பார்த்தேன். என் தாத்தா காலப் படங்களாக இருந்ததால் வெறும் கார்டு மட்டும் விண்ணப்பித்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால் ஒரு வருடம் தினமும் காலையில் 90 மைல் மாலையில் 90 மைல் பயணம் செய்ய வேண்டி இருந்த போது ஆடியோ-புக் லைப்ரரியில் எடுத்து கேட்டுக் கொண்டே செல்வது வழக்கமாகிப் போன போது லைப்ரரி போகும் பழக்கம் அதிகமானது. அந்தப் பயணம் தேவை இல்லாமல் ஆனபோது லைப்ரரிக்கு வழியும் மறந்து போனது.
ஆனால் இந்த புதன்கிழமை இங்கே லோக்கல் லைப்ரரியில் குழந்தைகளுக்கு ஸ்டோரி டெல்லிங்க் என்று ஒரு (ஃப்ரீ தான்) ப்ரொக்ராம் இருப்பதாகத் தெரிய வந்ததும் தங்கமணி படுத்தியதால் போனோம். உள்ளே நுழைந்ததும் ஆனந்த அதிர்ச்சி. ஒரு பலகையில் பல மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். அதில் தமிழும் இருந்தது. இனி அடிக்கடி அந்த லைப்ரரிக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
Saturday, January 9, 2010
பிதற்றல்கள் - 1/9/2010
நண்பர் கார்க்கியின் பதிவில் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு தினமலரில் போய் காணொளியையும் பார்த்தேன். வேதனையாக இருந்தது. ஒரு சக மனிதன் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான், அத்தனை வாகனங்களை வைத்துக் கொண்டு அத்தனை பேரும் ஆம்புலன்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் தண்ணீர் கொடுக்க முயற்சி செய்தவர் கொடுக்காமலே இருந்திருக்கலாம் - ரத்தம் பட்டுவிடக்கூடாது என்று தூரத்தில் இருந்து வாயில் ஊற்றியதற்குப் பதில்.
சுகாதாரத்துறை அமைச்சர் காஜா மைதீன் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டுதான் இருக்கிறாரே ஒழிய எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு வேளை கலைஞர் தந்த 108 ஆம்புலன்சால் சரியான நேரத்தில் எஸ்.ஐ யைக் காப்பாற்றி விட்டோம் பாருங்கள் என்று விளம்பரம் செய்து தலைவரிடம் பாராட்டு வாங்க நினைத்தாரோ என்னவோ. அதை விட அந்த மனிதனைத் தொட்டுத் தூக்கி ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி உயிரைக் காப்பாற்றி ரத்தக் கறை படிந்த சட்டையோடு போய் மக்கள் முன் நின்றிருந்தால் மக்களிடம் பாராட்டு வாங்கியிருக்கலாம்.
அவரைச் சுற்றி இருந்த காவலர்கள் கூட சக காவல்துறை பணியாளருக்காக ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை சாதாரணக் குடிமகன் போல கோர்ட்டு கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அவர்களும் நினைத்தார்களோ?
அதையெல்லாம் விட அந்தக் காவலர் துடித்ததை ஒரு நிமிடம் விடாமல் படமாக்கிவிட்டு, அவரைக் காப்பாற்ற ஒரு முயற்சியும் செய்யாமல் “கோல்டன் ஹவர்” பற்றி வகுப்பெடுக்க தினமலர் நிருபர்களுக்கு எப்படி மனம் வருகிறது? இது பல முறை விவாதிக்கப்பட்ட விசயம் தான் என்றாலும், பத்திரிக்கைகளுக்கு நடந்த நிகழ்வை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய பத்திரிக்கை தர்மம் இருந்த போதிலும் சக மனிதனைக் காப்பாற்ற வேண்டிய மனித நேயத்தை விடவா பத்திரிக்கை தர்மம் பெரிது? தினமலரே முயற்சி செய்து அந்த மனிதரைக் காப்பாற்றி இருந்தால் இன்னும் பெயர் வாங்கியிருக்கலாமே, முதல்வன் அர்ஜூன் மாதிரி?
என்னவோ இதையெல்லாம் பார்க்கும் போது “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” என்று பி.எஸ்.வீரப்பா போல கத்தத் தோன்றுகிறது.
*****************************************************************************************
என் கார் பனிச்சறுக்கி அடிபட்டு நான் அதை பாடி ஷாப்பில் விட்டுவிட்டு வந்த அன்று குடுகுடுப்பை அவர்களுடன் தொலைபேசியில் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் அவரிடம் இருந்து மின்னஞ்சல். அவர் காரும் விபத்துக்குள்ளாகிவிட்டதென்று. அடுத்த நாள் இடுகையும் இட்டுவிட்டார் - அவர் கார் விபத்துக்கு என்னையும் பட்டர்ஃப்ளை எஃபக்டையும்.
நான் உட்கார்ந்து யோசித்ததில் என் துப்பறியும் மூளைக்கு (நன்றி: வானம்பாடிகள் சார்) உதித்தது இதுதான்: இந்த விபத்திற்குக் காரணம் ரோலண்ட் எம்மெரிச் (Director: The Day After Tomorrow), பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் பாடம் மற்றும் கார் ஓட்டும் அனைவரும்.
ரோலண்ட் எம்மெரிச் - இவர்தான் தி டே ஆஃப்டர் டுமாரோ படத்தில் பூமி சூடாவதால் வெப்பமான இடங்களில் கூட பனிப்பொழிவு இருக்கும் என்றார். அதனால் டல்லாஸில் பனி விழுந்ததற்கு பூமி சூடானது காரணம்.
பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் - கார்பன் - டை - ஆக்சைடு வெப்பக் கதிர்களை (இன்ஃப்ரா ரெட்) பிரதிபலிக்கும். பூமிக்குள் வரும் வெப்பக் கதிர்களை வெளியே செல்ல விடாமல் காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு திரும்பத்திரும்ப பிரதிபலிக்கிறது. இதனால் பூமியின் வெப்பம் கூடுகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபக்ட் என்று கூறுகிறார்கள்.
கார் ஓட்டும் அனைவரும்: நாம் ஓட்டும் கார் வெளிப்படுத்தும் கார்பன் - டை - ஆக்ஸைடு காற்று மண்டலத்தில் கலந்து காற்றில் கார்பன் - டை- ஆக்சைடின் அளவை அதிகப் படுத்துகிறது.
ஆக, என் ஒருவனை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு. பட்டர் ஃப்ளை எஃபக்டை நமக்கு அறிமுகப் படுத்திய கமல்ஹாசனும், ரவிக்குமாரும் கூட குற்றவாளிகளே. (யப்பா எப்பிடி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு)
**********************************************************************************
வேட்டைக்காரன் படம் தமிழ்நாட்டில் ஓடுகிறதா இல்லையா? ஏனென்றால் எங்கள் வீட்டில் சன் டிவி மட்டும் தான் இருக்கிறது. அதில் வேட்டைக்காரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சொல்கிறார்கள். அதே நேரம் படத்தை புரமோட் செய்வதற்காக, டீலா நோ டீலா நிகழ்ச்சியில் வேட்டைக்காரன் சிறப்பு எபிசோட் வைத்து கண்டிப்பாக 25,000/- ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வேட்டைக்காரன் படத்தைப் பார்த்து கேள்விகளுக்குப் பதில் அனுப்பச் சொல்கிறார்கள்.
விட்டால் படம் பார்ப்பவர்கள் வீட்டிற்கு விஜய் டெய்லி தினகரன் பேப்பரை தன் கையால் ஒரு மாதத்திற்கு போடுவார் என்று சொல்வார்கள் போல.
சுகாதாரத்துறை அமைச்சர் காஜா மைதீன் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டுதான் இருக்கிறாரே ஒழிய எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு வேளை கலைஞர் தந்த 108 ஆம்புலன்சால் சரியான நேரத்தில் எஸ்.ஐ யைக் காப்பாற்றி விட்டோம் பாருங்கள் என்று விளம்பரம் செய்து தலைவரிடம் பாராட்டு வாங்க நினைத்தாரோ என்னவோ. அதை விட அந்த மனிதனைத் தொட்டுத் தூக்கி ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி உயிரைக் காப்பாற்றி ரத்தக் கறை படிந்த சட்டையோடு போய் மக்கள் முன் நின்றிருந்தால் மக்களிடம் பாராட்டு வாங்கியிருக்கலாம்.
அவரைச் சுற்றி இருந்த காவலர்கள் கூட சக காவல்துறை பணியாளருக்காக ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை சாதாரணக் குடிமகன் போல கோர்ட்டு கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அவர்களும் நினைத்தார்களோ?
அதையெல்லாம் விட அந்தக் காவலர் துடித்ததை ஒரு நிமிடம் விடாமல் படமாக்கிவிட்டு, அவரைக் காப்பாற்ற ஒரு முயற்சியும் செய்யாமல் “கோல்டன் ஹவர்” பற்றி வகுப்பெடுக்க தினமலர் நிருபர்களுக்கு எப்படி மனம் வருகிறது? இது பல முறை விவாதிக்கப்பட்ட விசயம் தான் என்றாலும், பத்திரிக்கைகளுக்கு நடந்த நிகழ்வை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய பத்திரிக்கை தர்மம் இருந்த போதிலும் சக மனிதனைக் காப்பாற்ற வேண்டிய மனித நேயத்தை விடவா பத்திரிக்கை தர்மம் பெரிது? தினமலரே முயற்சி செய்து அந்த மனிதரைக் காப்பாற்றி இருந்தால் இன்னும் பெயர் வாங்கியிருக்கலாமே, முதல்வன் அர்ஜூன் மாதிரி?
என்னவோ இதையெல்லாம் பார்க்கும் போது “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” என்று பி.எஸ்.வீரப்பா போல கத்தத் தோன்றுகிறது.
*****************************************************************************************
என் கார் பனிச்சறுக்கி அடிபட்டு நான் அதை பாடி ஷாப்பில் விட்டுவிட்டு வந்த அன்று குடுகுடுப்பை அவர்களுடன் தொலைபேசியில் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் அவரிடம் இருந்து மின்னஞ்சல். அவர் காரும் விபத்துக்குள்ளாகிவிட்டதென்று. அடுத்த நாள் இடுகையும் இட்டுவிட்டார் - அவர் கார் விபத்துக்கு என்னையும் பட்டர்ஃப்ளை எஃபக்டையும்.
நான் உட்கார்ந்து யோசித்ததில் என் துப்பறியும் மூளைக்கு (நன்றி: வானம்பாடிகள் சார்) உதித்தது இதுதான்: இந்த விபத்திற்குக் காரணம் ரோலண்ட் எம்மெரிச் (Director: The Day After Tomorrow), பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் பாடம் மற்றும் கார் ஓட்டும் அனைவரும்.
ரோலண்ட் எம்மெரிச் - இவர்தான் தி டே ஆஃப்டர் டுமாரோ படத்தில் பூமி சூடாவதால் வெப்பமான இடங்களில் கூட பனிப்பொழிவு இருக்கும் என்றார். அதனால் டல்லாஸில் பனி விழுந்ததற்கு பூமி சூடானது காரணம்.
பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் - கார்பன் - டை - ஆக்சைடு வெப்பக் கதிர்களை (இன்ஃப்ரா ரெட்) பிரதிபலிக்கும். பூமிக்குள் வரும் வெப்பக் கதிர்களை வெளியே செல்ல விடாமல் காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு திரும்பத்திரும்ப பிரதிபலிக்கிறது. இதனால் பூமியின் வெப்பம் கூடுகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபக்ட் என்று கூறுகிறார்கள்.
கார் ஓட்டும் அனைவரும்: நாம் ஓட்டும் கார் வெளிப்படுத்தும் கார்பன் - டை - ஆக்ஸைடு காற்று மண்டலத்தில் கலந்து காற்றில் கார்பன் - டை- ஆக்சைடின் அளவை அதிகப் படுத்துகிறது.
ஆக, என் ஒருவனை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு. பட்டர் ஃப்ளை எஃபக்டை நமக்கு அறிமுகப் படுத்திய கமல்ஹாசனும், ரவிக்குமாரும் கூட குற்றவாளிகளே. (யப்பா எப்பிடி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு)
**********************************************************************************
வேட்டைக்காரன் படம் தமிழ்நாட்டில் ஓடுகிறதா இல்லையா? ஏனென்றால் எங்கள் வீட்டில் சன் டிவி மட்டும் தான் இருக்கிறது. அதில் வேட்டைக்காரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சொல்கிறார்கள். அதே நேரம் படத்தை புரமோட் செய்வதற்காக, டீலா நோ டீலா நிகழ்ச்சியில் வேட்டைக்காரன் சிறப்பு எபிசோட் வைத்து கண்டிப்பாக 25,000/- ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வேட்டைக்காரன் படத்தைப் பார்த்து கேள்விகளுக்குப் பதில் அனுப்பச் சொல்கிறார்கள்.
விட்டால் படம் பார்ப்பவர்கள் வீட்டிற்கு விஜய் டெய்லி தினகரன் பேப்பரை தன் கையால் ஒரு மாதத்திற்கு போடுவார் என்று சொல்வார்கள் போல.
Sunday, December 27, 2009
பிதற்றல்கள் - 12/27/2009
விளையாட்டில் அரசியல்
சிங்களவர்கள் மட்டுமே (முரளி நீங்கலாக) பங்கெடுக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணியைப் பின்பற்றும் பல புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை எனக்குத் தெரியும். இலங்கையில் இவ்வளவு நடந்த பின்னும் விடாமல் பின்பற்றுவார்கள். இவர்கள் விளையாட்டையும் அரசியலையும் வெவ்வேறாகப் பார்ப்பவர்கள்.
ஆனால், இலங்கையில் ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டி நடக்கும்போதும் அதில் அரசியலைக் கலக்க சிங்களப் பேரினவாத அரசு தவறுவதே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் 100 அல்லது 200 காயமடைந்த - கால் இழந்த. கை இழந்த - ராணுவ வீரர்களுக்கு இலவச பாஸ் வழங்கி, போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வரிசையாக நடத்தி அழைத்து வந்து அமர வைப்பார்கள். இதன் மூலம் உலகிற்கு விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் எனவும், அவர்களால் இலங்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது போலவும் காட்டி பரிதாபத்தைத் தேடிக்கொள்ளும் நோக்கமே.
சரி இது கேடு கெட்ட அரசியல்வாதிகளிடம்தான் விளையாட்டு வீரர்கள் அப்படி இருக்கமாட்டார்கள் என்று தான் நம்பியிருந்தேன், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இலங்கை அணியின் வாகனத்தைத் தாக்கியது வரை. அப்போதைய இலங்கை அணித்தலைவர் மகேள ஜயவர்த்தனே அந்த தாக்குதலைப் பற்றி சொல்லும்போது - எங்கள் நாட்டிலும் தீவிரவாதிகள் இருப்பதால் அந்த நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்று சொன்னார். எத்தனை முறை புலிகள் இலங்கை அணியைத் தாக்க முயற்சி செய்தனரோ அது ஜயவர்த்தனேவுக்கே வெளிச்சம். ஒருவேளை ஜயவர்த்தனே என்ற பெயர் வைத்தவர்களே இப்படித்தானோ?
அதெல்லாம் சரி, இப்போது எதற்கு இதைப் பற்றி பேசுகிறேன்? காரணம் இருக்கிறது. நான் அரசியலையும் விளையாட்டையும் வெவ்வேறாகப் பார்ப்பவனாதலால், சர்வதேச கிரிக்கெட்டில் இருபது வருடங்களைப் பூர்த்தி செய்த சனத் ஜெயசூர்யவுக்கு என் வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். அவர் இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரராக அவர் பேரனுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்டும் என்பது என் ஆசை.
அரசியல் விளயாட்டு
நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி. பணத்தைக் கொடுத்து வெற்றியை வாங்கி விடலாம் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்து விட்டார். மக்களும் வாங்கி வாங்கிப் பழகி விட்டனர். காசு கொடுத்து பழக்கமில்லாத கம்யூனிஸ்ட்கள் போன்ற கட்சிகளுக்கு இனி திண்டாட்டம் தான். வாக்குக் கேட்டுப் போகக்கூட முடியாது போல.
பேசாமல் தேர்தல் ஆணையம் செலவு செய்து இப்படித் தேர்தல்கள் நடத்துவதை விட அந்தத் தொகுதிகளை ஏலம் விட்டு அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடலாம். தேர்தல் செலவும் மிஞ்சும், நல்ல காசும் கிடைக்கும். வேட்பாளர்களும் பயந்து பயந்து பணப்பட்டுவாடாவும், ஏதேதோ பெயர் சொல்லி பிரியாணி போடுவதையும் விட்டுவிடலாம். அப்படி ஏலம் எடுக்கும் பணத்துக்கு வரி விலக்கு கூட அளிக்கலாம். பொதுத் தேர்தல்களில் இம்முறையை அமுல் படுத்த முடியாவிட்டால் கூட இடைத்தேர்தல்களிலாவது இந்த முறையைப் பயன்படுத்தலாம். யோசிப்பார்களா?
விளையாட்டே அரசியல்
(கிரிக்கெட்) விளையாட்டில் அதிக அரசியல் செய்யும் அணி எது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் - ஆஸ்திரேலியா என்று. ஒரு அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் புறப்படும்போதே அங்குள்ள பத்திரிக்கைகள் அரசியலை ஆரம்பித்து விடும். வரும் அணியின் சிறந்த ஆட்டக்காரரைப் பற்றி அவதூறாக எதாவது எழுத ஆரம்பித்துவிடுவார்கள். இது மனோதத்துவ ரீதியான முதல் தாக்குதல்.
பின் அந்த அணி வந்து இறங்கியதும் ஆஸ்திரேலிய அணி ஆட்டக்காரர் - கேப்டன் இல்லை - ஒருவர் எதிரணியின் வீரர் ஒருவரைப் பற்றி எதாவது பற்ற வைப்பார். உதாரணத்திற்கு - டிராவிட்க்கு வயசாகி விட்டது. அவரது ஆட்டத்திறன் குறைந்து வருகிறது. அவர் ஓய்வு பெற்றுவிடுவது உத்தமம் என்று. இது இரண்டாவது தாக்குதல்.
அடுத்து ஆட்டக்களத்தில் - ஸ்லெட்ஜிங் - என்று அழைக்கப் படும் மோசமான தாக்குதல். தனிப்பட்ட முறையில் ஆட்டக்காரர்களைப் பற்றி தரக்குறைவாக அவருக்கு கோபம் வரும் வண்ணம் பேசுதல், லேசாகக் கோபப்படும் பந்துவீச்சாளரை மேலும் கோபமூட்டும்படி எதாவது சொல்லி தூண்டுதல் ஆகியன மூன்றாவதுத் தாக்குதல்.
கடைசியாக யாரையாவது உச்சக்கட்டமாகக் கோபமூட்டி எதாவது கைகலப்பில் ஈடுபட வைத்து அவரை சஸ்பெண்டு ஆக வைப்பது. ஐ.சி.சி விதிகளின் படி தூண்டுபவர்களுக்கு தண்டனை குறைவு. கைகலப்பில் முதலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை. ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை இன்னும் குறைந்துவிடும். ஆக இவ்வளவையும் செய்துவிட்டு தப்பை ஒத்துக் கொண்டு குறைந்த பட்ச தண்டனையோடு தப்பிவிடுவார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.
அவர்களின் தலைவர் இருக்கிறாரே ரிக்கி பாண்டிங். அவர் இதில் ஆஸ்திரேலிய அழகிரி. ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.
பாவம், மேற்கிந்திய அணி வீரர் பென். ஹாட்டினும் ஜான்சனும் வீசிய தூண்டிலில் மாட்டி பாவம் இரண்டு ஒருநாள் போட்டி விளையாடத் தடை என்னும் தண்டனை அடைந்துள்ளார். அவரது துரதிருஷ்டம் அவர் இந்திய அணியில் இல்லாதது. இந்திய வீரர் யாருக்காவது இது நடந்திருந்தால் பி.சி.சி.ஐ மேட்ச் ரெஃப்ரி க்ரிஸ் ப்ராடை மண்டி போட வைத்திருக்கும்,
சிங்களவர்கள் மட்டுமே (முரளி நீங்கலாக) பங்கெடுக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணியைப் பின்பற்றும் பல புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை எனக்குத் தெரியும். இலங்கையில் இவ்வளவு நடந்த பின்னும் விடாமல் பின்பற்றுவார்கள். இவர்கள் விளையாட்டையும் அரசியலையும் வெவ்வேறாகப் பார்ப்பவர்கள்.
ஆனால், இலங்கையில் ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டி நடக்கும்போதும் அதில் அரசியலைக் கலக்க சிங்களப் பேரினவாத அரசு தவறுவதே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் 100 அல்லது 200 காயமடைந்த - கால் இழந்த. கை இழந்த - ராணுவ வீரர்களுக்கு இலவச பாஸ் வழங்கி, போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வரிசையாக நடத்தி அழைத்து வந்து அமர வைப்பார்கள். இதன் மூலம் உலகிற்கு விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் எனவும், அவர்களால் இலங்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது போலவும் காட்டி பரிதாபத்தைத் தேடிக்கொள்ளும் நோக்கமே.
சரி இது கேடு கெட்ட அரசியல்வாதிகளிடம்தான் விளையாட்டு வீரர்கள் அப்படி இருக்கமாட்டார்கள் என்று தான் நம்பியிருந்தேன், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இலங்கை அணியின் வாகனத்தைத் தாக்கியது வரை. அப்போதைய இலங்கை அணித்தலைவர் மகேள ஜயவர்த்தனே அந்த தாக்குதலைப் பற்றி சொல்லும்போது - எங்கள் நாட்டிலும் தீவிரவாதிகள் இருப்பதால் அந்த நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்று சொன்னார். எத்தனை முறை புலிகள் இலங்கை அணியைத் தாக்க முயற்சி செய்தனரோ அது ஜயவர்த்தனேவுக்கே வெளிச்சம். ஒருவேளை ஜயவர்த்தனே என்ற பெயர் வைத்தவர்களே இப்படித்தானோ?
அதெல்லாம் சரி, இப்போது எதற்கு இதைப் பற்றி பேசுகிறேன்? காரணம் இருக்கிறது. நான் அரசியலையும் விளையாட்டையும் வெவ்வேறாகப் பார்ப்பவனாதலால், சர்வதேச கிரிக்கெட்டில் இருபது வருடங்களைப் பூர்த்தி செய்த சனத் ஜெயசூர்யவுக்கு என் வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். அவர் இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரராக அவர் பேரனுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்டும் என்பது என் ஆசை.
அரசியல் விளயாட்டு
நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி. பணத்தைக் கொடுத்து வெற்றியை வாங்கி விடலாம் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்து விட்டார். மக்களும் வாங்கி வாங்கிப் பழகி விட்டனர். காசு கொடுத்து பழக்கமில்லாத கம்யூனிஸ்ட்கள் போன்ற கட்சிகளுக்கு இனி திண்டாட்டம் தான். வாக்குக் கேட்டுப் போகக்கூட முடியாது போல.
பேசாமல் தேர்தல் ஆணையம் செலவு செய்து இப்படித் தேர்தல்கள் நடத்துவதை விட அந்தத் தொகுதிகளை ஏலம் விட்டு அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடலாம். தேர்தல் செலவும் மிஞ்சும், நல்ல காசும் கிடைக்கும். வேட்பாளர்களும் பயந்து பயந்து பணப்பட்டுவாடாவும், ஏதேதோ பெயர் சொல்லி பிரியாணி போடுவதையும் விட்டுவிடலாம். அப்படி ஏலம் எடுக்கும் பணத்துக்கு வரி விலக்கு கூட அளிக்கலாம். பொதுத் தேர்தல்களில் இம்முறையை அமுல் படுத்த முடியாவிட்டால் கூட இடைத்தேர்தல்களிலாவது இந்த முறையைப் பயன்படுத்தலாம். யோசிப்பார்களா?
விளையாட்டே அரசியல்
(கிரிக்கெட்) விளையாட்டில் அதிக அரசியல் செய்யும் அணி எது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் - ஆஸ்திரேலியா என்று. ஒரு அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் புறப்படும்போதே அங்குள்ள பத்திரிக்கைகள் அரசியலை ஆரம்பித்து விடும். வரும் அணியின் சிறந்த ஆட்டக்காரரைப் பற்றி அவதூறாக எதாவது எழுத ஆரம்பித்துவிடுவார்கள். இது மனோதத்துவ ரீதியான முதல் தாக்குதல்.
பின் அந்த அணி வந்து இறங்கியதும் ஆஸ்திரேலிய அணி ஆட்டக்காரர் - கேப்டன் இல்லை - ஒருவர் எதிரணியின் வீரர் ஒருவரைப் பற்றி எதாவது பற்ற வைப்பார். உதாரணத்திற்கு - டிராவிட்க்கு வயசாகி விட்டது. அவரது ஆட்டத்திறன் குறைந்து வருகிறது. அவர் ஓய்வு பெற்றுவிடுவது உத்தமம் என்று. இது இரண்டாவது தாக்குதல்.
அடுத்து ஆட்டக்களத்தில் - ஸ்லெட்ஜிங் - என்று அழைக்கப் படும் மோசமான தாக்குதல். தனிப்பட்ட முறையில் ஆட்டக்காரர்களைப் பற்றி தரக்குறைவாக அவருக்கு கோபம் வரும் வண்ணம் பேசுதல், லேசாகக் கோபப்படும் பந்துவீச்சாளரை மேலும் கோபமூட்டும்படி எதாவது சொல்லி தூண்டுதல் ஆகியன மூன்றாவதுத் தாக்குதல்.
கடைசியாக யாரையாவது உச்சக்கட்டமாகக் கோபமூட்டி எதாவது கைகலப்பில் ஈடுபட வைத்து அவரை சஸ்பெண்டு ஆக வைப்பது. ஐ.சி.சி விதிகளின் படி தூண்டுபவர்களுக்கு தண்டனை குறைவு. கைகலப்பில் முதலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை. ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை இன்னும் குறைந்துவிடும். ஆக இவ்வளவையும் செய்துவிட்டு தப்பை ஒத்துக் கொண்டு குறைந்த பட்ச தண்டனையோடு தப்பிவிடுவார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.
அவர்களின் தலைவர் இருக்கிறாரே ரிக்கி பாண்டிங். அவர் இதில் ஆஸ்திரேலிய அழகிரி. ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.
பாவம், மேற்கிந்திய அணி வீரர் பென். ஹாட்டினும் ஜான்சனும் வீசிய தூண்டிலில் மாட்டி பாவம் இரண்டு ஒருநாள் போட்டி விளையாடத் தடை என்னும் தண்டனை அடைந்துள்ளார். அவரது துரதிருஷ்டம் அவர் இந்திய அணியில் இல்லாதது. இந்திய வீரர் யாருக்காவது இது நடந்திருந்தால் பி.சி.சி.ஐ மேட்ச் ரெஃப்ரி க்ரிஸ் ப்ராடை மண்டி போட வைத்திருக்கும்,
Subscribe to:
Posts (Atom)