Sunday, January 31, 2010

திரௌபதியின் அட்சய பாத்திரம்

“முகிலன் சாப்பாடு ரெடி. சாப்புட வரலாம்” - வலையுலகில் இருந்த என்னை தங்கமணியின் குரல் பூவுலகுக்கு அழைத்து வந்தது.


படியிறங்கி வரும்போதே வறுத்த உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைத்தது. 


"என்ன சாப்பாடுமா?”


“சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்” தங்கமணி ஜூனியர் முகிலனுக்கு பருப்பு சாதம் பிசைந்து கொண்டே பதில் சொன்னார்.


நான் போய் கழுவி அடுக்கியிருந்ததில் ஒரு தட்டை எடுத்து அதில் சோறையும் சாம்பாரையும் சரி பங்கு ஊற்றி, அதில் பாதி அளவுக்கு உருளைக்கிழங்கு வறுவலை வைத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன்.


எதிரே தங்கமணி ஜூ.முகிலனுக்கு சோறை ஊட்டிக்கொண்டே, “முகிலன், உனக்கு மகாபாரதம் தெரியுமா?” 


“தெரியுமான்னா? பாத்திருக்கேன். டிவில மஹாஆஆஆஆஅபாரதம்னு.. போடுவாங்களே?”


“அதுல ஒரு கிளைக்கதையிருக்கு. கேள்விப் பட்டிருக்கியா?”


சுவாரசியமாகி பிசைய ஆரம்பித்த கையை எடுத்து ஒவ்வொரு விரலாக சப்பிக் கொண்டே “என்ன கதை?”


“கௌரவர்கள்கிட்ட சூதாட்டத்துல தோத்துப் போன பாண்டவர்கள், 12 வருசம் காட்டுல இருந்தாங்களா?”


“ஆமா. அது சரி, இந்த மகாபாரதமும் ராமாயணமும் ஆரிய-திராவிட போரையும், ஆரியர்கள் இந்தியாவுல பரவுனதையும் தான் சொல்லுதுன்னு ஒரு ப்ளாக்ல படிச்சேனே? அது உண்மையா?”


“உண்மையா இருக்கலாம். ஆரியர்களை எல்லாம் தேவர்களாவும், திராவிடர்களையெல்லாம் ராட்சசர்களாவும் காட்டியிருக்காங்கன்னு சில பேர் சொல்லி கேட்டிருக்கேன். ஆனா இப்போ அது நம்ம கதைக்குத் தேவையில்லை”


“ஓ யெஸ். ஓக்கே. மேல சொல்லு”


“அப்பிடி அவங்க காட்டுல இருந்தப்போ அவங்க கிட்ட ஒரு அட்சயப்பாத்திரம் இருந்திச்சி. திரௌபதி அதில இருந்து அறுசுவை உணவையும் வரவழச்சி பாண்டியர்கள் ச்சீ, பாண்டவர்கள் எல்லாம் சாப்புட்டு வந்தாங்க. அதோட இல்லாதவங்களுக்கும் அன்னதானம் குடுத்துட்டு வந்தாங்க”


“இங்க பாத்தியா? ஆரியப்பசங்களுக்கு மட்டும் காட்டுல இருந்தாலும் அறுசுவை உணவு கேக்குது. நான் திராவிடனா பொறந்துட்டதால, அமெரிக்கால இருந்தாக்கூட ரெண்டு சுவைக்கு மேல தேற மாட்டேங்குது”


“மறுபடியும் ட்ராக் மாத்துற”


“ஓ சாரி சாரி. நீ சொல்லு”


“அந்த அட்சயப் பாத்திரத்துல ஒரே ஒரு லிமிட்டேஷன்”


“என்ன?”

“ஒரு தடவை கழுவி கவுத்தியாச்சின்னா அடுத்த நாள் தான் அதை யூஸ் பண்ண முடியும். நடுவுல அது வெறும் பாத்திரமா தான் இருக்கும்”



“அதான சும்மா வருவாளா சுகுமாரி?”


“இப்பிடி இவங்க காட்டுக்குப் போனப்பறமும் சுகமா சாப்புடுறதக் கேள்விப்பட்ட துரியோதனன், இதைக் கவுக்க எதாவது செய்யணும்னு முடிவு பண்ணான்”


“அடப்பாவி. என்ன பண்ணான்?” தட்டில் சாப்பாடு இருப்பதையே மறந்து போனேன். 


“ஒரு நாள் துர்வாச முனிவரைக் கூப்புட்டு, நல்லா விருந்து வச்சான். அவரு சிஷ்ய கோடிகளோட சாப்புட்டு முடிஞ்சதும் அவர் கிட்ட பாண்டவர்கள் வீட்டுக்கும் நீங்க போய் சாப்புடணும் அப்பிடின்னு கோரிக்கை வச்சான். அவரும் சரின்னு எல்லா சிஷ்யர்களையும் கூப்பிட்டுக்கிட்டு கிளம்பி பாண்டவர்கள் குடிலுக்குப் போனாரு”


“நம்ம சாமியார்களுக்கு அப்ப இருந்தே சோறு கண்ட இடம் சொர்க்கம் போல”


“அய்யோ பாவம், அவரு அங்க ரீச் ஆறதுக்கு கொஞ்ச நேரம் முன்னால தான் திரௌபதி அட்சயப் பாத்திரத்த கழுவி கவுத்திட்டா?”


“அய்யோ.. துர்வாசர் தான மூக்கு மேல கோவம் வர்ற முனிவர்?”


“அட கரெக்டா சொல்ற? இதெல்லாம் எப்பிடித் தெரியும்?”


“அதான் எனக்கு கோவம் வர்றப்ப எல்லாம் நீ சொல்லி சொல்லி காட்டுறியே. மேல சொல்லு?” ஜூனியர் முகிலன், சாப்பிட்டு முடித்துவிட்டு என் தட்டில் இருக்கும் சோறை எடுக்க வந்தவனை, மடக்கி மடியில் உட்கார வைத்தேன்.


“அவரு வந்து நானும் என் சிஷ்யர்களும் சாப்புட வந்திருக்கோம். போய் குளிச்சிட்டு வர்றோம் நல்ல விருந்து ரெடி பண்ணுன்னு சொல்லிட்டு போயிட்டார். பாண்டவர்களுக்கோ என்ன பண்றதுன்னு தெரியலை. திரௌபதி டக்குன்னு கிருஷ்ணா அப்பிடின்னு கூப்பிட்டா. அவ குரல் கேட்டதும் ஓடோடி வந்தாரு கிருஷ்ணர்”


“தினம் தினம் கோடிக்கணக்கானவுங்க சாப்புட எதுவும் இல்லாம கஷ்டப்படுறாங்க. அவங்க கூப்புடுறதெல்லாம் இந்தக் கிருஷ்ணன் காதுல விழாது. இது மட்டும் விழுந்திருச்சா?”


“என்ன விஷயம்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு திரௌபதியக் கூப்பிட்டு, அந்த அட்சயப் பாத்திரத்தை எடுத்துட்டு வர சொன்னாரு. திரௌபதியும் எடுத்துட்டு வந்தா”


“எதோ மேஜிக் பண்ணி அதை வொர்க் பண்ண வச்சிட்டாராக்கும்?”


“குறுக்க குறுக்க பேசாம கதையக் கேளு”


“சரி சரி. சொல்லு”


“அந்தப் பாத்திரத்தை திரௌபதி சரியாக் கழுவாம உள்ள ஒரே ஒரு பருக்கை மட்டும் ஒட்டியிருந்தது. கிருஷ்ணர் அதை எடுத்து அவர் வாயில போட்டுக்கிட்டாரு”


“அப்புறம்?”


“அவர்தான் உலகையே ரட்சிக்கிறவர் ஆச்சே”


“ரட்சிக்கிறவர் இயேசு இல்லையா?”


“அய்யோ, இவரும் தான்”


“சரி. ஓக்கே. மேல சொல்லு”


“அதுனால அவரு அந்தப் பருக்கைய சாப்புட்டதும் உலகத்துல உள்ள எல்லா ஜீவராசிகளோட பசியும் அடங்கிருச்சி.”


“இப்பல்லாம் வைகுண்டத்துலயே அரிசிப் பஞ்சமோ? கிருஷ்ணர் அரிசியே சாப்புடுறது இல்ல போல”


“இந்த பின்னூட்டம் போடுறதையெல்லாம் ப்ளாகோட நிறுத்திக்கோ. எனக்குப் போடாத”


“சரி சரி. நீ சொல்லு”


“உலகத்துல துர்வாசரும் அவரோட சிஷ்யப்புள்ளைங்களும் அடக்கம் தான?”


“ஆமா”


“சோ அவங்களுக்கும் பசி அடங்கிருச்சி. அவங்க சாப்புடாமலே போயிட்டாங்க. பாண்டவர்களும் சாபத்துல இருந்து தப்பிச்சிட்டாங்க”


“ம்ஹ்ம்”


“இந்தக் கதையில இருந்து உனக்கு என்ன தெரியுது?”


“பாண்டவர்களுக்கு என்ன கஷ்டம்னாலும் உதவறதுக்கு கிருஷ்ணன் இருந்திருக்கான். இப்ப நமக்கு யாருமே இல்லைன்னு தெரியுது”


“அய்யோ மண்டு. சில நேரங்கள்ல பாத்திரத்தை சரியா கழுவலைன்னா கூட நன்மைதான் விளையும்னு தெரியுதா?”


“அட ஆமால்ல. அது கூட ஒரு பாயிண்ட் தான். ஆமா இந்தக் கதைய இப்ப எதுக்கு சொன்ன?”


“நீ சாப்புடுற தட்டு சரியாக் கழுவாம ஒரு ஓரத்துல ஒரு பருக்கை ஒட்டியிருக்கு பாரு அதை எடுத்து போட்டுட்டு சாப்புடு” என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் நடந்தார் தங்கமணி.


‘அடப் பாவிங்களா. புராணத்தை எதுக்கெல்லாம் துணைக்கிக் கூப்புடுறாய்ங்க’ என்று நினைத்துக் கொண்டு (அப்புறம் சத்தமாவ சொல்ல முடியும்) அந்தக் பருக்கையை எடுத்து சைட் ப்ளேட்டில் வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.


கை கழுவும்போது திடீரென தோன்றியது அந்த யோசனை. பக்கத்தில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த தங்கமணியைப் பார்த்து - “இன்னிக்கி நீ சொன்ன கதையால எனக்கு ஒரே ஒரு நன்மை தான்”


“என்னது?”


“இன்னிக்கி ப்ளாக்ல ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்திட்டேன். தேங்க்ஸ்”

24 comments:

Anonymous said...

//இந்த பின்னூட்டம் போடுறதையெல்லாம் ப்ளாகோட நிறுத்திக்கோ. எனக்குப் போடாத”//

அதானே. ஆமாம். ம். சரி

இதைத்தவிர வேற சொல்லறதா? எம்புட்டு தைரியம் :)

vasu balaji said...

இந்தக் கதையில இருந்து உனக்கு என்ன தெரியுது?”//

முகிலன் ப்ளேட் கழுவறப்போ கூட ப்ளாக்குக்கு என்ன தேத்தலாம்னு யோசனையிலயே கழுவறது தெரியுது.
அதே யோசனையில், சாப்பிடுமுன் ப்ளேட் கழுவாம சாப்பாடு வெச்சிக்கறதும் தெரியுது. இந்த இடுகை டைப் பண்றப்போ எதுக்கோ நசரேயன் கவனம் வந்திருக்கார்னு
//(அப்புறம் சத்தமாவ சொல்ல முடியும்)// இதைப் பார்த்தா தெரியுது:))

துளசி கோபால் said...

அச்சச்சோ......நான் எப்பவும் நினைக்குற கதை இது!

அப்படி அட்சயபாத்திரம் ஒன்னு இருந்தாக் கவலைப்படாம எழுதிக்கிட்டு இருக்கலாம்லே:-)

ஆமாம். என்ன சோம்பேறிப்பா இந்த த்ரௌபதி? இருக்கறது ஒரே ஒரு பாத்திரம். அதைச் சுத்தமாக் கழுவக்கூடத் தெரியலையா?

சின்னதா ஒரு திருத்தம். ஒட்டிக்கிட்டு இருந்தது பருக்கை இல்லையாம். ஒரு கீரைத் துணுக்கு!

குடுகுடுப்பை said...

நானும் இன்னிக்கு பிரியாணி, வில்லன் வீட்டு பிரியாணி விரைவில் பதிவாக

Unknown said...

//சின்ன அம்மிணி said...
//இந்த பின்னூட்டம் போடுறதையெல்லாம் ப்ளாகோட நிறுத்திக்கோ. எனக்குப் போடாத”//

அதானே. ஆமாம். ம். சரி

இதைத்தவிர வேற சொல்லறதா? எம்புட்டு தைரியம் :)//

யப்பா, உங்க கூட எல்லாம் தங்கமணியை சேரவிடாமப் பாத்துக்கணும்.. :)

Unknown said...

//வானம்பாடிகள் said...
இந்தக் கதையில இருந்து உனக்கு என்ன தெரியுது?”//

முகிலன் ப்ளேட் கழுவறப்போ கூட ப்ளாக்குக்கு என்ன தேத்தலாம்னு யோசனையிலயே கழுவறது தெரியுது.
அதே யோசனையில், சாப்பிடுமுன் ப்ளேட் கழுவாம சாப்பாடு வெச்சிக்கறதும் தெரியுது.
//

:))

//
இந்த இடுகை டைப் பண்றப்போ எதுக்கோ நசரேயன் கவனம் வந்திருக்கார்னு
//(அப்புறம் சத்தமாவ சொல்ல முடியும்)// இதைப் பார்த்தா தெரியுது:))
//

இது என்னவோ நசரேயன் மட்டும் தான் தங்கமணிக்கு பயப்படுற மாதிரியும் நீங்க எல்லாம் ரெம்ப தைரியசாலிமாதிரியும் சொல்ற மாதிரி இருக்கே..

நசரேயன்.. ஸ்டார்ட் த மீஜிக்..

Unknown said...

//துளசி கோபால் said...
அச்சச்சோ......நான் எப்பவும் நினைக்குற கதை இது!

அப்படி அட்சயபாத்திரம் ஒன்னு இருந்தாக் கவலைப்படாம எழுதிக்கிட்டு இருக்கலாம்லே:-)
//
அது சரி :)

//
ஆமாம். என்ன சோம்பேறிப்பா இந்த த்ரௌபதி? இருக்கறது ஒரே ஒரு பாத்திரம். அதைச் சுத்தமாக் கழுவக்கூடத் தெரியலையா?
//
அதானே.. ஒண்ணுக்கு அஞ்சி ரங்கமணி இருந்தும் ஒருத்தரக் கூட வேலை வாங்கத் தெரியலையே? என்ன பொம்பளை இவ?

//சின்னதா ஒரு திருத்தம். ஒட்டிக்கிட்டு இருந்தது பருக்கை இல்லையாம். ஒரு கீரைத் துணுக்கு!//

தெரியும் டீச்சர். எங்க வீட்டுல காலைல கீரை வைக்கலை.. அதான் சோத்துப் பருக்கைன்னு எழுதினேன் (எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. உஷ் அப்பா...)

Unknown said...

// குடுகுடுப்பை said...
நானும் இன்னிக்கு பிரியாணி, வில்லன் வீட்டு பிரியாணி விரைவில் பதிவாக
//

வெறும் பிரியாணியா? இல்ல முன்னாடி பின்னாடி எதாவது தாக சாந்தி?? :))

கண்ணா.. said...

//கை கழுவும்போது திடீரென தோன்றியது அந்த யோசனை. பக்கத்தில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த தங்கமணியைப் பார்த்து - “இன்னிக்கி நீ சொன்ன கதையால எனக்கு ஒரே ஒரு நன்மை தான்”


“என்னது?”


“இன்னிக்கி ப்ளாக்ல ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்திட்டேன். தேங்க்ஸ்” //

அடப்பாவிகளா......!!!!

:))

பித்தனின் வாக்கு said...

கதையும் உரையாடலும் மிக அருமை. நல்ல வசன நடை. ஆமா உங்களுக்குத்தான் எவ்வளே பெருந்தன்மை.கஸ்டப்பட்டு சமைச்சுப் போட்டு,தங்கமணிக்கு கிரடீட் கொடுக்கறீங்க. வெறும் சாம்பாரும் உருளையும்தான் உங்களுக்கு சமைக்கத் தெரியும்ன்னு அண்ணி ஏற்கனவே சொல்லிட்டாங்க. நன்றி.

Bavan said...

//“இப்பல்லாம் வைகுண்டத்துலயே அரிசிப் பஞ்சமோ? கிருஷ்ணர் அரிசியே சாப்புடுறது இல்ல போல”//

ஹாஹா... இருக்கும் .இருக்கும்..

இங்கதான் ஒருத்தர் கல்கி அவதாரம் எண்டு திரியுறாரே?? அவர் கிருஷ்ரில்லையா..:p

நன்றி கதைப்பகிர்வுக்கு, சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க...;)

vasu balaji said...

இது என்னவோ நசரேயன் மட்டும் தான் தங்கமணிக்கு பயப்படுற மாதிரியும் நீங்க எல்லாம் ரெம்ப தைரியசாலிமாதிரியும் சொல்ற மாதிரி இருக்கே..

நசரேயன்.. ஸ்டார்ட் த மீஜிக்.. //

தோடா. உங்க இடுகையில முதல் வாட்டி spello. அதுக்கு சொன்னேன்.:))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தக் கதையை கொஞ்சம் மாத்திப் போட்டு எங்க கிட்ட சொல்லி இருக்காங்க..,

கலகலப்ரியா said...

ssssabaa.. mudiyala..!

KarthigaVasudevan said...

இதான் கே.டி வில வெள்ளி இல்லனா செவ்வாய் கிழமை போடறான்ல மாசத்துக்கு ரெண்டு வாட்டி.பார்க்கலையா நீங்க? தங்கமணி சொல்லித் தான் தெரிஞ்சுக்கனுமா? சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
:)

Unknown said...

@கண்ணா - :))

@பித்தனின் வாக்கு - வூட்டுக்குள்ள நடக்குற விசயத்த எல்லாம் இப்பிடி பப்பிளிக்குல சொல்லப்படாது ஆமா..

@பவன் - வாங்க பவன்.. வருகைக்கு நன்றி

@வானம்பாடி - பத்தவைக்க விடமாட்டேன்றீங்களே?

@சுரேஷ் - :)

@கலகலப்ரியா - உடம்பு சரியாயிடுச்சா?

@கார்த்திகாவாசுதேவன் - கே.டிவில என்ன போடுறான்? நான் அதுல சினிமா தவிர வேற எதுவும் பாத்ததில்லை.. :(

நசரேயன் said...

எப்படிஎல்லாம் தேத்துறாரு முகிலன்

Chitra said...

இந்த பின்னூட்டம் போடுறதையெல்லாம் ப்ளாகோட நிறுத்திக்கோ. எனக்குப் போடாத”


...............ha,ha,ha,ha.....பல் தேய்க்கும் போது கூட ப்லாக் எழுத மேட்டர் தேடுவீங்க போல.....

ப்ரியமுடன் வசந்த் said...

:)))

இன்னும் என்ன என்ன ப்லாக்ல போடலாம்ன்னு தங்கமணிகிட்டயே கேட்ருக்கலாமே....

புலவன் புலிகேசி said...

:)

மாதேவி said...

சுவாரஸ்யமான பதிவு.

Unknown said...

@நசரேயன் - :)

@சித்ரா - கரெக்டா சொன்னிங்க

@வசந்த் - கேட்டேன், ஒன்னொன்னா சொல்றேன்னு சொல்லியிருக்காங்க.. :)

@புலவன் புலிகேசி - :)

@மாதேவி - வருகைக்கு நன்றி..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

“இந்த பின்னூட்டம் போடுறதையெல்லாம் ப்ளாகோட நிறுத்திக்கோ. எனக்குப் போடாத”

ஹா ஹா..

எல் கே said...

//யப்பா, உங்க கூட எல்லாம் தங்கமணியை சேரவிடாமப் பாத்துக்கணும்.. :) //

Nanum amothikaren,.. appuram oru velai sorum kidaikathu